பாகிஸ் தான், கராய்ச்சி நகரிலுள்ள இலங்கை தூதரக கொன்சியூலர் அலுவலகத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்னஸ் (48) என்ற பெண்ணே மரணமடைந்தவாராவார்.
அவர் தனது விடுதியில் தங்கியிருந்த போது மரணமடைந்துள்ளார். இயற்கை மரணமென பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும் அவரது கணவன் தேடப்படுகிறார். பங்களாதேஷ் பிரஜையான இவரது கணவர் சிராஜூள் ஹக் தலைமறைவாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.