அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பெற்றோரிடம் ஒப்படைப்பு

m.jpgவவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள், 50 தம்பதிகளும் அடங்கும்.

திருத்தத்திற்கு ஆதரவாக கம்பளையில் பேரணி

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஆதரிக்கும் வகை யில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமையில் நேற்று முற்பகல் கம்பளை நகரில் பேரணி ஒன்று நடை பெற்றது. கம்பளை நகரிலிருந்து நுவ ரெலியா வீதி வழியாக கம்பளை மணிக்கூட்டு கோபுர சந்திவரை இப் பேரணி சென்றது.

இப் பேரணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். அப்துல் காதரும் கலந்து கொண்டிருந்ததுடன் சுமார் ஆயிரம் பேருக்கும் அதிகமா னோர் பங்கு கொண்டிருந்தனர்.

பொறுப்புடன் முடிவெடுப்போம் – அரியநேத்திரன் எம்.பி

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பலம் பொருந்திய கட்சி. தமிழ் மக்கள் நலனில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்சி என்பதால் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, விரிவாக ஆராய்ந்து முடிவு எடுப்போம் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கின்றது என்பதற்காக ஆதரிக்கவும் முடியாது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது என்பதற்காக எதிர்க்கவும் முடியாது. இன்று கூடி முடிவெடுப்போம் என அவர் கூறினார்.

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை: பயிற்சி நிலையம் ஆரம்பம் 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

workers.jpgகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானை யிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாத காலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உணவு, தங்குமிட வசதிகளுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளுக்கமைய இந்த தொழில் வாய்ப்பை வழங்க மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்படவுள்ள துடன் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்திற்கு 50 தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் ஓரிரு தினங்களில் கலந்து ஆலோசித்து இவ்வார இறுதிக்குள் உரிய தீர்வை காணவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஏனையோ ருக்கு கிளிநொச்சியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தொழிற் பயிற்சி வழங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கும் மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள பாடசாலைகள் நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 13 ஆம் திகதியே ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன அறிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் இம்மாதம் 13 ஆம் திகதியே திறக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான பரீட்சகர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரிய இடமாற்றங்களில் தலையிடுவதை அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்- ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஅரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு ஆசிரிய இடமாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் ஆசிரிய இடமாற்றங்களில் தலையிட்டு எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக செயற்படக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்திற்கென புதிதாக 500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

ஆசிரியர்கள் மதத் தலைவர்களுக்கு அடுத்த படியாக சமூக கெளரவத்தையும் மதிப்பை யும் பெற்றுக்கொள்பவர்கள். அந்த கெளரவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொண்டு மாணவர்களுக்கு நண்பர்களாக, சகோதரர்களாக சில வேளைகளில் பெற் றோர்களாகவும் அன்பு காட்டி வழி நடத்துவது முக்கியமாகும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தம்மிடம் கற்கும் மாணவர்களை சமூகத்தின் உயர் பிரஜைகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரிய ஆசிரியைகள் பல்வேறு கட்சிகள், கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். எனினும், பாடசாலையில் அவர்கள் அதனைப் பாராட்டக்கூடாது. சகலரையும் சமமாக வழி நடத்துவதற்கும் சிறந்த நல்லொழுக்க முள்ள பரம்பரையை உருவாக்குவதற்கும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் சமீப காலமாக ஊவாவிற்கு மட்டும் 5000ற்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்துள்ளது. ஊவா மாகாண பாட சாலைகளைப் பொறுத்தவரையில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் கொழும்பில் 21 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரே கற்பித்தலில் ஈடுபடுகின்றனர்.

இந்த வகையில் இங்கு ஆசிரியர் களுக்கான குறைபாடு இருக்க முடியாது. உள்ள ஆசிரியர்களை முறையாகப் பகிர் ந்துகொண்டால் இன்றுள்ள பிரச்சினை களுக்கும் தீர்வு கிட்டும் என்பது எனது நம்பிக்கை.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 45, 000 ஆசிரியர்களை புதிதாக நியமித்துள்ளது. எனினும், நியமனங்கள் கிடைத்து சில மாதங்களிலேயே ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்று விடுகன்றனர். அவர்களுக்கு ஆசிரிய தொழிலின் பெறுமதி தெரிய வில்லை என்றே கருத முடிகிறது.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் கவனமெடுக்க வேண்டும். தமது விருப்பு வாக்குகளை இலக்காகக் கொண்டு ஆசிரியர்களுக்கு மாற்றம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தாம தமாவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கல்வித்துறையை மேம்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் பதவியேற்ற காலத்தில் நாட்டில் 05 வீதமானோரே கணனி அறிவைக் கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 45 வீதமாக அதிகரித்துள்ளது என்றார்

நியூசிலாந்தில் விமான விபத்து: இலங்கை விமானி உட்பட 9 பேர் பலி

நியூசிலாந்தில் நேற்று இடம் பெற்ற விமான விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமிந்த நளின் சேனாதீர என்ற விமானி கொல்லப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ‘ஸ்கெடைவிங்’ என்ற நிறுவன மொன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாயத்திலேயே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பலியான வர்களில் நால்வர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடா நாட்டு மக்களுக்கு ‘புரோட் பேண்ட்’ இணைய சேவை

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே புரோட் பேண்ட் அதி நவீன இணையத்தள வசதிகளை குடாநாட்டிலுள்ள மக்களுக்கும் வேண்டியளவு பயன்படுத்தக் கூடிய விதத் தில் தரைமார்க்கமான ‘ஒப்டிகல் பைபர்’ இணைப்பை ஸ்ரீலங்கா டெலிகொம் வழங்கியுள்ளது.

ஏ-9 பாதையூடாக இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குடா நாட்டை இணைக்கும் பிரதான ஒப்டிகல் பைபர் இணைப்பை கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பாடல் மத்திய நிலையத்தை கிளி நொச்சியில் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் நிறைவேற்று அதிகாரி கிரேக் யங் திறந்து வைத்தார். குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா டெலிகொம் தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

குடாநாட்டு மக்கள் இனிமேல் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி புரோட் பேண்ட் இணையத் தளம், தொலைபேசி இணைப்புகள் பெற முடியும். அத்துடன் ஏனைய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தமது சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் தெரிவிக்கிறது. மன்னார், வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் புரோட்பேண்ட் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

சிறுவனைக் கடத்திய சந்தேக நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி

கப்பம் பெறும் நோக்கில் 9 வயது சிறுவன் ஒருவரைக் கடத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரண மாகியுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி கைக்குண்டொன்றை எறிய முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி 9 வயது சிறுவன் ஒருவனைக் கடத்தி கப்பம் கோரிய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை பொலிஸார் திட்டமிட்டு கைது செய்தனர். சிறுவனை கடத்தி வைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு பணத்தைக் கொண்டு வருமாறு கோரியுள்ளனர். அதற்கிடையே சிறுவனின் கழுத்தை நெறித்து நீர்த் தேக்கப்பகுதிக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.

சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பி யதுடன், பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். கப்பப் பணத்தை பெறுவதற்காக தலாத்துஓயா பகுதிக்கு சந்தேக நபர்கள் வந்தபோது பொலிஸார் கைது செய்துள்ள ஒருவர் தப்பியோடியுள்ளார். கைது செய் யப்பட்ட நபர் கடவத்தை பகுதியில் கைக் குண்டு இருப்பதாக பொலிஸாரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற வேளை கைக்குண்டை பொலிஸார் மீது எறிய எத்தணித்துள்ளர்.

இச்சமயத்தில் பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகை

india.jpgஐந்து நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை வருகிறார்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.

இதேவேளை உயிர்நீத்த, இந்திய சமா தானப் படையினருக்காக பத்தரமுல்லை யில் அமைக்கப்பட்டிருக்கும் ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்து வாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் விஜயகுமார் சிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டும். இதனைத் தொடர்ந்து அவர் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.