யாழ். குடா நாட்டு மக்களுக்கு ‘புரோட் பேண்ட்’ இணைய சேவை

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே புரோட் பேண்ட் அதி நவீன இணையத்தள வசதிகளை குடாநாட்டிலுள்ள மக்களுக்கும் வேண்டியளவு பயன்படுத்தக் கூடிய விதத் தில் தரைமார்க்கமான ‘ஒப்டிகல் பைபர்’ இணைப்பை ஸ்ரீலங்கா டெலிகொம் வழங்கியுள்ளது.

ஏ-9 பாதையூடாக இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குடா நாட்டை இணைக்கும் பிரதான ஒப்டிகல் பைபர் இணைப்பை கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பாடல் மத்திய நிலையத்தை கிளி நொச்சியில் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் நிறைவேற்று அதிகாரி கிரேக் யங் திறந்து வைத்தார். குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா டெலிகொம் தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

குடாநாட்டு மக்கள் இனிமேல் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி புரோட் பேண்ட் இணையத் தளம், தொலைபேசி இணைப்புகள் பெற முடியும். அத்துடன் ஏனைய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தமது சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் தெரிவிக்கிறது. மன்னார், வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் புரோட்பேண்ட் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *