சிறுவனைக் கடத்திய சந்தேக நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி

கப்பம் பெறும் நோக்கில் 9 வயது சிறுவன் ஒருவரைக் கடத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரண மாகியுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி கைக்குண்டொன்றை எறிய முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி 9 வயது சிறுவன் ஒருவனைக் கடத்தி கப்பம் கோரிய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை பொலிஸார் திட்டமிட்டு கைது செய்தனர். சிறுவனை கடத்தி வைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு பணத்தைக் கொண்டு வருமாறு கோரியுள்ளனர். அதற்கிடையே சிறுவனின் கழுத்தை நெறித்து நீர்த் தேக்கப்பகுதிக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.

சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பி யதுடன், பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். கப்பப் பணத்தை பெறுவதற்காக தலாத்துஓயா பகுதிக்கு சந்தேக நபர்கள் வந்தபோது பொலிஸார் கைது செய்துள்ள ஒருவர் தப்பியோடியுள்ளார். கைது செய் யப்பட்ட நபர் கடவத்தை பகுதியில் கைக் குண்டு இருப்பதாக பொலிஸாரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற வேளை கைக்குண்டை பொலிஸார் மீது எறிய எத்தணித்துள்ளர்.

இச்சமயத்தில் பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *