ஐந்து நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை வருகிறார்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.
இதேவேளை உயிர்நீத்த, இந்திய சமா தானப் படையினருக்காக பத்தரமுல்லை யில் அமைக்கப்பட்டிருக்கும் ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்து வாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் விஜயகுமார் சிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டும். இதனைத் தொடர்ந்து அவர் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.