நியூஸிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிச்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கிறது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு, ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக் கின்றனர். கிறிஸ்ட்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் நிலத்துக் கடியில் சுமார் 16.1 கிலோ மீற்றர் ஆழத் தில் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிர்வினால் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும், பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் அத்தகவல்கள் மேலும் தெரி விக்கின்றன.