திருத்தத்திற்கு ஆதரவாக கம்பளையில் பேரணி

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஆதரிக்கும் வகை யில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமையில் நேற்று முற்பகல் கம்பளை நகரில் பேரணி ஒன்று நடை பெற்றது. கம்பளை நகரிலிருந்து நுவ ரெலியா வீதி வழியாக கம்பளை மணிக்கூட்டு கோபுர சந்திவரை இப் பேரணி சென்றது.

இப் பேரணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். அப்துல் காதரும் கலந்து கொண்டிருந்ததுடன் சுமார் ஆயிரம் பேருக்கும் அதிகமா னோர் பங்கு கொண்டிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *