அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்டெடுப்பு

கம்பஹா கலகெடிஹென பகுதியிலுள்ள கிணரொன்றுக்குள்ளிருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

பொது மக்கள் வழங்கிய தகவ லையடுத்தே குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு

260909srilanka.jpgவன்னியில் மீள்குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக கட்டட நிர்மாணப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச வர்த்தக கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட நிறுவனங்களுக்கு இப்பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் மன்னார் அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

வன்னியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, வவுனியாவில் ஏ-9 வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணியில் செய்கையை ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் முதலாம் திகதி ஏர்பூட்டு விழாவொன்றும் நடத்தப்படவுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கட்டுக் கரை குளத்தை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 4000 ஏக்கர் நெற் காணிகளில் செய்கையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் மிதி வெடி, கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் படைத்தரப்பினர் இன்னும் இரண் டொரு தினங்களில் அனுமதியளித்ததும் செய்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அடுத்த பெரும்போகத்தில் வடக்கில் பாரிய விளைச்சலை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்றிலிருந்து நீரை சேகரிக்கும் வேலைகள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் நவம்பர் 15ஆம் திகதி முதல் நானாட்டான், வங்காலை பகுதியில் உள்ள 2000 ஏக்கர் நிலத்திற்கு நீர் திறந்துவிடப்படவுள்ளது. முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்ட இப்பகுதியில் பெரும் போகத் திற்கான விளைச்சல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் கே. சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

கப்டன் அலி நிவாரணம் வன்னி அகதிகளைச் சென்றடைவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

ships000.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் கப்டன் அலியினூடாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சில மாதங்கள் கடந்த நிழலையிலும் இன்னமும் அகதிகளைச் சென்றடையவில்லை. துறைமுகத்தில் அந்தப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களைச் சென்றடைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம்,  இந்த நிவாரணப் பொருட்களில் அதிகமானவை உணவுப் பொருட்களாக இருப்பதனால் பெரும்பாலனவை பழுதடைந்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளோரை மீட்க புதிய கூட்டணி -மங்கல தகவல்

mangala2222.jpgநாட்டைக் காப்பாற்றுவதற்கான கூட்டணியொன்றை விரைவில் அமைத்து இதன் மூலம் முள்வேலிக்குள் சிறைப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமவீர புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என அதில் குறிப்பிடல் வேண்டும் எனவும் தெரிவித்தார். கண்டி டொபெக்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவு?

அரசியலின் பாரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ளதால் யதார்த்தபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதுடன்,  இணைந்து செயல்படுவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் அழைப்பை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும்,  முஸ்லிம் காங்கிரஸ{க்குமிடையில் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸனலி தெரிவித்துள்ளார். 

மீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே : தெரிந்து கொண்டே மரணப்பிடிக்குள் மக்களை தள்ளிவிட முடியாது – பிரதமர்

1509sri-lankan-prime-minister.jpg“இடம் பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக்கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரையாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது, எனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிருந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது. புலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு இயக்கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம். இதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக்களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகின்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்தார்கள்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகிறோம். வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். என்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிடக்கின்றன. தெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மரணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடியாது.

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றியுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.

உலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாகவும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாகவும் இருக்கிறது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்பதன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று நிக்கவரெட்டியில் சோமா குமாரியின் இறுதிக் கிரியை

250909somakumari.jpgவடமேல் மாகாணசபை உறுப்பினர் சோமா குமாரி தென்னக்கோனின் இறுதிக் கிரியை இன்று நிக்கவரெட்டிய பொலிஸ் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவரது பூதவுடல் நிக்கவரெட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் அம்பாந்தோட்டையில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இதயவலி காரணமாக மரணமடைந்தார்.

இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பில் திறமைமிக்க உறுப்பினராகச் செயல்பட்டவராவார். அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் மகளிர் அணியின் வெளிக்களத் தலைவராகவும் கடமையாற்றியவர். வடமேல் மாகாண சபையின் உறுப்பினராக அரசியலில் காலடி எடுத்து வைத்த சோமா குமாரி, நாடாளுமன்ற மட்டத்தில் சேவையற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க ஆங் சான் சூச்சி யோசனை

270909suukyi.jpgபர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது தொடர்பில் பர்மீய இராணுவ தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாக ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு சீரமைப்புகளை கொண்டு வரும் முகமாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக செயற்பட்டார் ஆங் சான் சூச்சி.

முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் பர்மா தொடர்பான தன்னுடைய கொள்கையில் மாற்றம் இருப்பதாக அமெரிக்கா கூறியது.

தாங்கள் விதித்துள்ள தடைகள் போதுமானதாக இல்லை என குறிபிட்ட ஒபாமா அரசு, பர்மிய இராணுவத்துடன் நேரிடையாக பேசப்போவதாக கூறியது.

பெளத்த மத குருக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பர்மிய இராணுவத்தால் அடக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம்

26-corruption.jpgஊழல் கரை படிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. எத்தனை டன் சோப்புப் போட்டாலும் இந்த கரை போகாது என்ற அவல நிலை.

இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் ஊழில் மலிந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகங்களில்தான் பெருமளவில் லஞ்சம் கை மாறுகிறதாம்.  ரஷ்யா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம்  மேற்கொள்ளும் போதுதான் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். மேலும் வேலையை வேகமாக முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் மிக மிகக் குறைவாக புழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பவை பெல்ஜியம், கனடா நாடுகள் தான். இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். இந்த இரு நாடுகளும் லஞ்சம் குறித்த இன்டெக்ஸில் 8.8 புள்ளிகளுடன் உள்ளனர். இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் பொதுவாக லஞ்சம் தருவதில்லையாம்.

இந்த இரு நாடுகளுக்கும் அடுத்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வருகின்றன. இவை 8.7 புள்ளிகளுடன் உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகள் – ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை.உள்ளன

இராணுவத்தினரின் சம்பளத்தில் 1800 ரூபா வெட்டப்படுவது ஏன்? : ஜே.வி.பி. கேள்வி

26parliament.jpgஇலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் மாதாந்த சம்பளத்திலிருந்து 1800 ரூபா வெட்டப்படுவது ஏன் என ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க சபையில்  கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். முன்னதாக எழுந்த அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. இராணுவத்திற்கான விழாவை கொண்டாடுவதற்கு இராணுவத்தினரின் சம்பளத்திலிருந்தே பணம் அறவிடுவது ஏன்? அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

இலங்கை போக்குவரத்து சபை, ‘அபிவெனுவென் அபி’ போன்றவற்றின் மூலமாக நிதி திரட்டப்பட்டது. எனினும் இந்த நிதியின் மூலமாக படையினருக்கு எவ்விதமான சேவைகளும் செய்யப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே இராணுவத்தினரிடமிருந்து தலா 1800 ரூபா சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது.  தேர்தல் காலங்களில் படையினர் தொடர்பில் பிரசார மேடைகளில் கூறுவதனை தவிர அரசாங்கம் வேறொன்றும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்