வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் கப்டன் அலியினூடாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சில மாதங்கள் கடந்த நிழலையிலும் இன்னமும் அகதிகளைச் சென்றடையவில்லை. துறைமுகத்தில் அந்தப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களைச் சென்றடைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இந்த நிவாரணப் பொருட்களில் அதிகமானவை உணவுப் பொருட்களாக இருப்பதனால் பெரும்பாலனவை பழுதடைந்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
chandran.raja
புலிகளின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதி பொருள் எதுவுமோ ஈழவாழ்மக்களை தமிழ் மக்களை சென்றடையவில்லை. மாறாக புலம்பெயர் தமிழ்மக்களில் சிலரை பலரை கோடீஸ்வர்ராக்கியிருக்கிறது. இதுவே இன்றைய நிலையுள்ள பற்றுசீட்டுள்ள விபரம். நாளை.. இது பற்றி விழிப்பு கொண்டு துயில்யெழுந்தால் மட்டுமே ஏதாவது நாமும் சாதிக்கமுடியும். எமது இனத்திற்கு பயன்யுள்ளவராக முடியும். எது விதியோ?. மறுநாளுக்கு உரிய பற்றுசீட்டை எதிர்பார்போம்.