அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கே. பி. யை பிடித்தது உலகத்துக்கே பெரும் வியப்பு’

gotabaya1.jpgநாட்டி லிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள ஜனாதிபதி, புலிகள் அமைப்பின் சர்வதேச தலைவராகவிருந்த கே. பி. யை கைது செய்ததன் மூலம் உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளாரென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாமல் செய்வதாகக் கூறியே 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டாரெனக் கூறிய பாதுகாப்புச் செயலாளர், சமாதானம் முறிவடையும் பட்சத்தில் யுத்த நடவடிக்கைகளில் பிரவேசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென ஜனாதிபதி இந்தியாவுக்கான தனது முதலாவது விஜயத்தின் போது இந்தியத் தலைவர்களிடம் கூறியதனையும் அவர் நினைவுகூர்ந்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் யுத்தத்தை நிர்ப்பந்திக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் (07) ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே மேற்கண்டாறு தெரிவித்தார். சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இந்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

ஜனாதிபதியினால் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை அழிந்து புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கான சதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படுவது இந்த சதியின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி தலைமையில் நானும் முப்படைத் தளபதிகளும் புலிகளை உறுதியான திட்டமிடலின் கீழேயே அழித்தோம்.

ஜனாதிபதி இந்தியாவில் வைத்து தெரிவித்ததைப் போன்றே செய்தும் காட்டி விட்டார். பலர் இது வெறும் வாய் வார்த்தையென்றே நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதனை அத்தோடு நிறுத்திவிடவில்லை. புலிகள் அமைப்பின் சர்வதேச தலைவரான கே. பி.யை கைது செய்து மகத்தான வெற்றியை நிலைநாட்டியதன் மூலம் உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அதனைத் தொடர்ந்து தீவிரவாதத்தை ஒழித்தமையும் பெரும் வெற்றிகளாகும். கைது செய்யப்பட்டிருக்கும் கே. பி.யிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு பார்க்கையில், புலிகளின் வலைப்பின்னல் சர்வதேச நாடுகளிடையே விசாலமாக பரந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களது சொத்து விசாலமானது.

பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளின் போது எமது ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டார் எனவும் அவர் கூறினார்.

சந்திரன் மீது நாசா அனுப்பிய விண்கலம் மோதியது

நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம், சந்திரன் மீது இன்று மோதியது.

சந்திரனின் ஒரு பகுதியில் கோடிக்கணக்கான டன் எடையுள்ள உறை பனி மறைந்து இருப்பதாகவும், அந்த இடத்தை மோதி தகர்த்தால், தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறியலாம் என்ற நாசா விஞ்ஞானிகள் கருதினர்.

இதனையடுத்து 2.2 டன் எடையுள்ள காலி விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி வைத்தனர்.அதனுடன் கலர் கேமராக்கள் இணைந்த `எல்.சி.ஆர்.ஓ.எஸ்.எஸ்’ என்ற செயற்கைக்கோளையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நாசா அனுப்பிவைத்த அந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தின் மீது இன்று மாலை பலமாக மோதியது.

இதனைத் தொடர்ந்து நிலவில் தண்ணீர் உள்ளதா,இல்லையா என்பது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் தெரிய வரும் என நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாரில்லை – ஜனாதிபதி

290909mahinda.jpgஉலக நாடுகளுடன் எமக்கு எந்தவித கோபமும் இல்லை. அதேவேளை அழுத்தங்களுக்கு அடிபணியவோ தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ தயாரில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் சூரியவெவ நகரில் நடைபெற்றபோது இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டைப் பாதுகாப்பது தமது பிரதான பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ நகரில் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் மக்கள் பேரணிக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதம், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் எந்தவொரு அழுத்தமும் இல்லாத கெளரவம் மிக்க நாட்டில் சகல மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது நோக்கம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். நாம் யுத்தத்தைக் காரணங்காட்டி எந்தவொரு அபிவிருத்தியையோ மக்கள் நிவாரணங்களையோ நிறுத்தவில்லை. அரச துறையிலும் ஆட்குறைப்பு செய்யவில்லை.

மாறாக நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள் நிர் மாணிக்கப்படுவது இதுவே முதல் தடவை யாகும் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. எமக்கெதிராக, எமது படை வீரர் களுக்கெதிராக சர்வதேசம் குற்றச்சாட்டுக்களை சுமத்தும்போது எமது எதிர்க்கட்சியினர் அதற்குத் தூபமிடும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். அதற்குச் சாட்சியமாகத் தகவல் சேகரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். ஜீ.எஸ்.பீ. சலுகையை வழங்கவேண்டாமென்று கூறுகின்றனர். அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது எமக்குத் தெரியும்.

நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். விவசாயம், கிராம அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் என சகலதுறைகளிலும் தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது.

கல்வியறிவில் நமது நாடு 90 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது நமக்குப் பெரு மையளிக்கிறது. இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாந்தோட்டையிலிருந்து முதல்தர சித்தி மாணவனும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்மொழி மூல முதல்தர மாணவனும் தெரிவாகியிருப்பது நாம் கல்வித் துறையில் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகவுள்ளது.

நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாத்து, ஐக்கியத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு சகல மக்களினதும் பூரண ஆதரவு அவசியம்.

நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு இத்தகைய பயணத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லவும் சகல சவால்களை வெல்லவும் தென் மாகாண மக்கள் எம்மோடு ஒன்றிணைய வேண்டும். எதிர்வரும் 10ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தென்மாகாண சபைத் தேர்தல் நாளை – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தல் நாளை (10) நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

தேர்தல் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக அப்பகுதிக்கான தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறினார்.

மூன்று மாவட்டங்களிலும் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 670 வாக்குச்சாவடிகள் அமைக்கப் படுவதுடன் 161 நிலையங்களில் வாக்குகள் கணக்கெடுக்கப்படவுள்ளன.

இலங்கை பூராவும் மின்சார விநியோகத்தடை

091009ecb.jpgஇலங் கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணிமுதல் இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் நண்பகல் வரை விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதற்கு பிரதான காரணம் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்க முடிவு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

26parliament.jpg2010ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் முழுமையாக தயாராக இருந்தது. ஆனால் பொருளாதார நிபுணர்களினதும் அரசியல் கட்சித் தலைவர்களினதும் கோரிக்கைகளின் அடிப்படையிலே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது இடைக்கால கணக்கறிக் கையொன்றை முன்வைக்க அரசாங்கம் முடிவு செய்ததாக சபை முதல்வரும் சுகாதார போஷாக்கு அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தினதோ வேறு அழுத்தங்கள் காரணமாகவோ இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டுக்காக இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்திருப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

இடைக்கால கணக்கறிக்கை இந்த மாத முதற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  நவம்பர், டிசம்பர் மாதங்கள் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நடத்தப்படும். குழுநிலை விவாதத்தின் பின்னர் இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்படும்.

அரசியல் யாப்பின் பிரகாரமே அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இலங்கையில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவது இது முதற் தடவையல்ல. 1866 இல் முதன் முதலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் முதற் தடவையாக 1931 இல் முதன் முதலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்காக 1982ல் ஆட்சியில் இருந்த ஐ. தே.க அரசு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்தது.

1994 இல் அன்றிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்காக 1999 நவம்பரில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் ஐ. தே. க அரசு கூட இடைக்கால கணக்கறிக்கை முன்வைத்தது.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவது புதிய விடயமல்ல. 2010ல் தெரிவாகும் புதிய அரசாங்கத்திற்கு தாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வாய்ப்பளிக்கும் வகையிலே வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் அரசு பணிகளை தடையின்றி தொடரவுமே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை முன்வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் 2010ல் தெரிவாகும் புதிய அரசாங்கத்திற்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க, புதிய வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்க வாய்ப்பு ஏற்படும்.

பாராளுமன்றத் தேர்தலின் பின் புதிய அரசாங்கமொன்றும் புதிய அமைச்சரவையொன்றும் தெரிவாக உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது பொருத்தமல்ல. இது குறித்து பொருளாதார நிபுணர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அரசுக்கு தெரியப்படுத்தின என்றார்.

வடபகுதி மக்களை உச்ச பாதுகாப்புடன் மீள்குடியேற்றுவதே அரசின் நோக்கம் – பிரதமர் சபையில் அறிவிப்பு

1509sri-lankan-prime-minister.jpgவடபகுதி மக்களை உச்ச அளவு பாதுகாப்புடன் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரை யாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டு மக்க ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பயங்கரவாதம் இப்போது தோற்கடிக் கப்பட்டுள்ளது. என்றாலும் அதன் நிழலை இன்னும் சமூகமயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதை நாமறிவோம்.

இது நாட்டினுள் மட்டுமல்லாமல் நாட்டிற்கு வெளியிலும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை இனம் காண்பதே இன்று எமது பணியாக உள்ளது. இதற்கு அவசரகாலச் சட்ட ஏற்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. அண்மையில் புலிகளின் ஆளில்லாத விமானத்தின் பாகங்களை எமது பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அத்தோடு பெருந்தொகை வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். எமது பாதுகாப்பு படையினரிடமுள்ள சகல ஆயுதங்களையும் புலிகள் கொண்டிருந் தனரென்பதையே இவை காட்டுகின்றன. புலிகள் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் மீட் டெடுத்து வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களையும், வெடி பொரு ட்களையும் ஏன் புதைத்து வைத்தார்கள் என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் பின்னொரு சமயத்தில் இவற்றை மீண்டும் பயன்படுத்தும் நோக் கிலேயே புதைத்திருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. அதனால் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இட மளிக்க முடியாது. அதற்கான முடிவை நாம் ஏற்கனவே எடுத்துவிட்டோம்.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து தற்காலிக இடங்களில் தங்கி யுள்ள மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற முறையில் கொலைக் களத்தில் தள்ளிவிட எம்மால் முடியாது. இதனை சிலர் எவ் வளவு தான் கூறினாலும் புரிந்துகொள் கிறார்கள் இல்லை. அதேநேரம், அந்த மக்களை வீணாகத் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்க வைத்து பராமரிக்கவும் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து நாம் செயற்படுகின் றோம். இவ்வாறான நிலையில் மூளை விகாரமடைந்துள்ள ஓரிருவர் அந்த இடங் களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். எந்தப் பயனையும் எதிர்பாராமல் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொள்ளுகின் றார்கள். இதனூடாக பாதுகாப்பு படை யினருக்கும், அரசாங்கத்திற்கும் மாத்திரமல்லாமல் நாட்டின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

இதேநேரம், ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்களது பிர சார இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர். அந்த நாடுகளின் பாராளுமன்றங்களுக்குள்ளும் அவர்களது நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இதற்கு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சில சிங்கள வர்களும் உதவுகின்றனர். இது கவலை தரும் நிலமையாகும்.

இதேவேளை, ஐரோப்பாவிலுள்ள மற்றொரு குழுவினர் ஆயுதக் குழுவொன்றை தயார்படுத்தி வருவதாகத் தகவல் கிடைத் துள்ளது. புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை, அச்சுறுத்துவதே இக்குழுவினரின் நோக்கம். அவர்கள் ஊடகங்களுக்குள் மறைந்திருந்து இவ்வாறு செயற்படுகின்றனர். இந்தத் தகவல்களை அதிகாரிகளும் இனம் கண்டுள்ளனர்.

இவ்வாறான குழுக்கள் தலைதூக்குவது நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இந்நாட்டில் சகலரும் அச்சம், பீதியின்றி வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

அதனால் பயங்கரவாதிகளையும் பாதாள ஆயுதக் குழுக்களையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவது அவசியம். இல்லாவிடில் இந் நாட்டு மக்கள் சுதந்திரத்தை இழந்துவிடுவர்.

இதேவேளை கொழும்புக்கும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் வந்த புலிகள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாக எமது உளவுப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டிருக்கி ன்றன. அதனால், ஆயுதங்கள் குறித்தும், பயங்கரவாதிகள் தொடர்பாகவும் நாம் மேலும் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

பாகிஸ்தான் புலனாய்வு குழு வருகை

210909flag.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்யவென பாகிஸ்தானிய புலனாய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மூன்றாம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இலங்கை சக்திகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து பாகிஸ்தான் குழுவினர் அது பற்றி ஆராய இலங்கை வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய குழு இரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள போதிலும், அது மேலும் நீடிக்கலாமென்றும் மலிக் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்களைப் பகிரங்கப்படுத்துவதென பாகிஸ்தான் குழு தீர்மானித்துள்ளதுடன், துரித விசாரணைகளுக்காக இலங்கையுடனான ஒத்துழைப்பு தொடருமென்றும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான தகவல் பரிமாற்றங்களின் மூலம் விசாரணையை வலுப்படுத்த முடியுமென்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நீடிப்பு 70 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 70 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேறியது. பிரேரணைக்கு எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 82 வாக்குகளும் கிடைத்தன.

ஐ. தே.க.,  ஸ்ரீல. மு. கா.,  ஜே. வி. பி. ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

ஜனாதிபதி தலைமையில் தம்புள்ளையில் ஏர்பூட்டு விழா

290909mahinda.jpgஇவ்வருடம் பெரும்போக வேளாண்மைச் செய்கையை மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கும் நோக்கில் தம்புள்ளையில் எதிர்வரும் 12ஆம் திகதி ஏர்பூட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாத்தளை மாவட்ட அரச அதிபர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் நடைபெறவிருக்கும் இவ்வேர்பூட்டு விழவில் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.