தென்மாகாண சபைத் தேர்தல் நாளை – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தல் நாளை (10) நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

தேர்தல் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக அப்பகுதிக்கான தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறினார்.

மூன்று மாவட்டங்களிலும் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 670 வாக்குச்சாவடிகள் அமைக்கப் படுவதுடன் 161 நிலையங்களில் வாக்குகள் கணக்கெடுக்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *