வடபகுதி மக்களை உச்ச பாதுகாப்புடன் மீள்குடியேற்றுவதே அரசின் நோக்கம் – பிரதமர் சபையில் அறிவிப்பு

1509sri-lankan-prime-minister.jpgவடபகுதி மக்களை உச்ச அளவு பாதுகாப்புடன் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரை யாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டு மக்க ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பயங்கரவாதம் இப்போது தோற்கடிக் கப்பட்டுள்ளது. என்றாலும் அதன் நிழலை இன்னும் சமூகமயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதை நாமறிவோம்.

இது நாட்டினுள் மட்டுமல்லாமல் நாட்டிற்கு வெளியிலும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை இனம் காண்பதே இன்று எமது பணியாக உள்ளது. இதற்கு அவசரகாலச் சட்ட ஏற்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. அண்மையில் புலிகளின் ஆளில்லாத விமானத்தின் பாகங்களை எமது பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அத்தோடு பெருந்தொகை வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். எமது பாதுகாப்பு படையினரிடமுள்ள சகல ஆயுதங்களையும் புலிகள் கொண்டிருந் தனரென்பதையே இவை காட்டுகின்றன. புலிகள் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் மீட் டெடுத்து வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களையும், வெடி பொரு ட்களையும் ஏன் புதைத்து வைத்தார்கள் என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் பின்னொரு சமயத்தில் இவற்றை மீண்டும் பயன்படுத்தும் நோக் கிலேயே புதைத்திருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. அதனால் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இட மளிக்க முடியாது. அதற்கான முடிவை நாம் ஏற்கனவே எடுத்துவிட்டோம்.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து தற்காலிக இடங்களில் தங்கி யுள்ள மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற முறையில் கொலைக் களத்தில் தள்ளிவிட எம்மால் முடியாது. இதனை சிலர் எவ் வளவு தான் கூறினாலும் புரிந்துகொள் கிறார்கள் இல்லை. அதேநேரம், அந்த மக்களை வீணாகத் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்க வைத்து பராமரிக்கவும் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து நாம் செயற்படுகின் றோம். இவ்வாறான நிலையில் மூளை விகாரமடைந்துள்ள ஓரிருவர் அந்த இடங் களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். எந்தப் பயனையும் எதிர்பாராமல் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொள்ளுகின் றார்கள். இதனூடாக பாதுகாப்பு படை யினருக்கும், அரசாங்கத்திற்கும் மாத்திரமல்லாமல் நாட்டின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

இதேநேரம், ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்களது பிர சார இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர். அந்த நாடுகளின் பாராளுமன்றங்களுக்குள்ளும் அவர்களது நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இதற்கு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சில சிங்கள வர்களும் உதவுகின்றனர். இது கவலை தரும் நிலமையாகும்.

இதேவேளை, ஐரோப்பாவிலுள்ள மற்றொரு குழுவினர் ஆயுதக் குழுவொன்றை தயார்படுத்தி வருவதாகத் தகவல் கிடைத் துள்ளது. புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை, அச்சுறுத்துவதே இக்குழுவினரின் நோக்கம். அவர்கள் ஊடகங்களுக்குள் மறைந்திருந்து இவ்வாறு செயற்படுகின்றனர். இந்தத் தகவல்களை அதிகாரிகளும் இனம் கண்டுள்ளனர்.

இவ்வாறான குழுக்கள் தலைதூக்குவது நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இந்நாட்டில் சகலரும் அச்சம், பீதியின்றி வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

அதனால் பயங்கரவாதிகளையும் பாதாள ஆயுதக் குழுக்களையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவது அவசியம். இல்லாவிடில் இந் நாட்டு மக்கள் சுதந்திரத்தை இழந்துவிடுவர்.

இதேவேளை கொழும்புக்கும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் வந்த புலிகள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாக எமது உளவுப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டிருக்கி ன்றன. அதனால், ஆயுதங்கள் குறித்தும், பயங்கரவாதிகள் தொடர்பாகவும் நாம் மேலும் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *