அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆப்கானிஸ்தான் தேர்தல் முறைகேடுகளை ஒப்பு கொண்டுள்ளார் ஐ.நா தூதர்

vote.jpgஆப்கானிஸ் தானில் செயற்படும் ஐ.நாவின் தலைவரான கேய் எய்டி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதர்கள் புடை சூழ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தோன்றியுள்ளார். அவருக்கு இருக்கும் சர்வதேச நாடுகளின் ஆதரவை காண்பிப்பதற்காகவே இவ்வாறு தோன்றியதாக பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகளை கேய் எய்டி குறைத்து காண்பித்ததாக, முன்னாள் துணை தலைவராக இருந்த பீட்டர் கால்பிரைத் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தவுடன் பீட்டர் கால்பிரைத் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கேய் எய்டி, தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதை ஒப்பு கொண்டுள்ளார், ஆனால் முறைகேடுகள் தொடர்பான சில தகவல்களை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஐ.நா கொடுத்து விட்டதாகவும் கேய் எய்டி கூட்டத்தில் கூறினார்.

கந்தளமவில் நேற்று ஏர்பூட்டு விழா; வயல் பிரதேசம் கோலாகலம்

தேசிய ஏர்பூட்டு விழா – 2009 நேற்று கந்தளம மேற்கு வயல் பிரதேசத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய பூரண அரச அனுசரணையுடன் நடைபெற்ற இவ் ஏர்பூட்டு விழாவில் கமநல சேவை மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஏர் பூட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நேற்றுக் காலை 10.31 சுபவேளையில் பெளத்த மத வழிபாட்டுடன் ஏர்பூட்டு வைபவம் ஆரம்பமானது. இவ்வைபவத்தையொட்டி கந்தளம குளம் மற்றும் மேற்கு வயல் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்த 82 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்

vau-camp-srilanka.jpgமன்னார் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பப்தாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்..

இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களை சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு கொழும்பில்

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு இம்முறை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 15ம் திகதி கொழும்பு – 7, விஜேராம மாவத்தை இலக்கம் 144, ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும் நிகழ்வில் அனைத்து அமைச்சுக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் முகாமைத்துவ மட்டத்தில் இருநூறு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது – பிரிட்டன் அமெரிக்கா

210909flag.jpgதலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.

ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.

சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு – திறப்பு விழா

கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்கவினால் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கில் 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சைனைக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 250 பட்டதாரிகளுக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் பிரதிக் கல்வி அமைச்சரை அண்மையில் சந்தித்த போது இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் மேல் மாகாண பாடசாலைகளில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு முன்னர்- அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தகவல்

laxman_yapa_abeywardena.jpgஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.

தமது அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த மாதம் 15 ஆம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இத்தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும்.

தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி வழங்கிய பொது மக்களுக்கு அரசாங்கம் நன்றி தெரிவிக்கின்றது. எதிர்கட்சிகள் படுதோல்வியடைந்தன. மக்கள் விடுதலை முன்னணி அதன் கோட்டையான திஸ்ஸமகாராமையில்கூட தோல்வியடைந்தது. ஆனால் பொது மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றது என்றார்

உலக‌த்தை ஏமா‌ற்றவே த‌மிழக எ‌ம்.பி.க்க‌ள் இல‌‌ங்கை பயண‌ம்: வைகோ

16-vaiko.jpgமுள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் தமிழக நாடாளும‌‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் குழு இலங்கை சென்றிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ குற்றம் சா‌ற்‌றியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழக அரசு என் மீது ஒரே குற்றச்சா‌ற்றுக்காக 2 முறை வழக்கு தொடர்ந்திருப்பது விசித்திரமானது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ம.தி.மு.க அற வழியில் எதிர்கொள்ளும். அவற்றை கண்டு கவலைப்பட மாட்டோம்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. சென்னையிலும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி தமிழக அரசு அந்த அறப்போராட்டத்தை ஒடுக்கியது.

இலங்கையில் நடைப்பெற்ற போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. தமிழக சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு ஒப்புக்காகக்கூட போரை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை.

ஏனென்றால், அந்தப் போரை நடத்தியதும், போருக்கு திட்டமிட்டதும், போரை வழிநடத்தியதும் இந்தியாதான். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் சாவுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பாகும். யுத்தத்தை நிறுத்த குரல் கொடுக்காத மத்திய அரசு, தற்போது ஈழத்தமிழர்களின் ரத்தம் தொய்ந்த கரத்தையுடைய ராஜப‌க்சேவின் அழைப்பை ஏற்று தமிழக எ‌ம்.‌பி.‌க்க‌ளி‌ன் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

போருக்கு பிறகு ஐ.நா பார்வையாளர்களும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். முள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் இப்போது தமிழக எ‌ம்.பி.க்க‌ள் குழு இலங்கை சென்றிருக்கின்றனர்.

இவர்களை அங்குள்ள அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிங்கள அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்த குழுவின் பயணத்தால் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை இக்குழுவின் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூ‌றினா‌ர்.

அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Alfred_Nobelபொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலினர் ஆஸ்ட்ராம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஆஸ்ட்ராம், பொருளாதார நிர்வாகம் குறித்த – குறிப்பாக சாமான்ய மக்களுக்கான- ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

அதேபோன்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம்சனுக்கும் பொருளாதார நிர்வாகம் குறித்த – நிறுவனங்களின் எல்லைகள் பற்றிய – ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு தொகையான 1.4 மில்லியன் டாலரை இருவர்ம் பகிர்ந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.