தேசிய ஏர்பூட்டு விழா – 2009 நேற்று கந்தளம மேற்கு வயல் பிரதேசத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய பூரண அரச அனுசரணையுடன் நடைபெற்ற இவ் ஏர்பூட்டு விழாவில் கமநல சேவை மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஏர் பூட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நேற்றுக் காலை 10.31 சுபவேளையில் பெளத்த மத வழிபாட்டுடன் ஏர்பூட்டு வைபவம் ஆரம்பமானது. இவ்வைபவத்தையொட்டி கந்தளம குளம் மற்றும் மேற்கு வயல் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.