அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழக எம்.பிக்கள் குழுவுடன் கிழக்கு முதல்வர் சந்திப்பு

111009.jpgதமிழக த்திலிருந்து வருகை தந்திரு ந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் குறி த்து ஆராயும் பொருட்டும் உண்மை நிலைகளை கண்டறியும் முகமாகவும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய குழுவினரை முதலமைச்சர் சந்திரகாந்தன், இந்திய இல்லத்தில் சந்தித்தே கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகா ணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக் கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக் குழுவினரிடம் தெளிவாக எடுத்துரை க்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது.

பொது வைபவங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கொழும்பிலிருந்து கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டம் திரும்பியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று வருடங்களின் பின்னர் தற்போது பொது வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். தமது பாதுகாப்பின் நிமித்தம் கடந்த மூன்று வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ,தங்கேஸ்வரி கதிர்காமர் ,மற்றும் த.கனகசபை ஆகியோர் கடந்த வாரம் மட்டக்களப்பிற்கு திரும்பியிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் வவுணதீவு பிரதேசத்தில் சர்வதேச வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்

மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 16 லட்சம் ரூபா செலவில்கன்னன்குடா, வவுணதீவு , ஈச்சந்தீவு, நாவற்காடு , விளாவெட்டுவான், மகிழவெட்டுவான் மற்றும் நரிப்புல் தோட்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

பிரதேச சபைத் தலைவர் க.சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வுகளில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் ” கடந்த காலத்தை மறந்து அபிவிருத்தியில் சகல தரப்பினரும் இனைந்து செயல்பட வேண்டும் .அபிவிருத்தியைப் பொறுத்த வரை எமது ஒத்துழைப்பு சகலருக்கும் கிடைக்கும் ” என்றார்.  இந் நிகழ்வுகளில் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் து.சத்தியாணந்தி ,வவுணதீவு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் கே.விமலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 

தமிழக எம். பிக்களின் வருகை மலையக அபிவிருத்தியின் ஆரம்பம் – முத்து சிவலிங்கம்

151009sivalingam.jpgதமிழக எம். பிக்களின் வருகை, மலையக அபிவிருத்தியின் நல்லதொரு ஆரம்பமாகுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தில் வாழ்கின்ற மக் களின் உண்மையான வாழ்வாதாரத் தைத் தமிழக பாராளுமன்ற உறுப் பினர்கள் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டுள்ளதால், அந்த மக்களின் மேம்பாட்டுக்கும், பிரதேச அபிவிரு த்திக்கும் தமிழக மாநில மற்றும் இந்திய மத்திய அரசுகளின் உதவி இனிக் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளைத் திட்டமிட முடியுமென்றும் பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

மலையகத்தில் எதிர்காலத்தில் தோட்டத் தொழிற்றுறை அருகி விடு மென்றும், அதனால் மாற்று ஜீவனோபாயத்தினை மக்களுக்குத் தேடிக் கொடுக்க வேண்டுமென்றும் தமிழக பாராளுமன்ற குழுவிடம் கூறியதாக பிரதியமைச்சர் கூறினார்.

பழைமையான “லயன்” வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழித்து கிராம வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாரித்துள்ள பத்து அம்ச திட்டத்தினை இந்திய அரசுக்கும் சமர்ப்பித் துள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிசாந்த முதுஹெட்டிகம, மீது ஒழுங்காற்று நடவடிக்கை

தென்மாகாண சபை தேர்தலின் பின்னர் ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தென் மாகாணசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, நிசாந்த முதுஹெட்டிகம, மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை இன்று தீர்மானித்துள்ளது.
தமக்கு அதிக விருப்பு வாக்குகள் கிடைத்த போதும் மேலிடத்து உத்தரவு காரணமாக தமது வாக்குகள் ஏனையவர்களுக்கும் பகிரப்பட்டதாக முதுஹெட்டிகம குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு காரணமாக கட்சிக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக கூறியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.  இந்த நிலையில், தம்மீது ஒழுங்காற்று விசாரணை நடத்தப்படுமானால் அதற்கு உரிய வகையில் பதிலளிக்கப் போவதாக முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

‘இலங்கை முகாம் வாசிகள் 58 000 பேர் அடுத்த வாரம் விடுதலை’- தமிழக எம்பிக்களிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதி

151009.jpgஇலங்கையில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் ஐம்பத்தெட்டாயிரம் பேர், அடுத்த 15 நாட்களுக்குள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10 ஆம் திகதி இலங்கை சென்றனர். அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் உள்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்கள்.

சென்னை திரும்பிய அவர்களை, விமான நிலையம் வரை சென்று தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார். பின்னர், இலங்கைப் பயணம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்கள். அத்துடன், அங்குள்ள நிலவரம் குறித்து முதல்வரிடம் நேரிலும் விளக்கிக் கூறினார்கள்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களில், முதல் கட்டமாக ஐம்பத்தெட்டாயிரம் பேர் அடுத்த 15 தினங்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், அந்தப் பணிகள் நாளை முதல் துவங்கும் என்றும் எம்.பி.க்களிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

போஷாக்கு மாத்திரை உட்கொண்ட பாடசாலை மாணவர் திடீர் மயக்கம் :ஏறாவூர் – மீராக்கேணியில் பதற்றம்; பரபரப்பு

ஏறாவூர் – மீராக்கேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதையடுத்து மாணவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் சுமார் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) அனுமதிக்கப்பட்டனர்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதி காரி அலுவலகத்தினால் பாடசாலை களுக்கு விநியோகிக்கப்பட்ட இரும்புச் சத்து மற்றும் விற்றமின் – சீ மாத்திரைகளே மாணவர்களுக்கு ஆசிரியர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் இவருக்கு முதலில் மயக்க நிலை ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மேலும் பல மாணவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் சுமார் 150 மாணவர்கள் வைத்தியசாலைக்கு பெற்றோர்களினால் அழைத்து வரப்பட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். எம். தாரிக் கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட போஷாக்கு மாத்திரைகள் மாணவர்கள் உணவு உட்கொண்ட பின்னரே வழங்கப்பட வேண்டும் எனவும், உணவு உட்கொள்ளாத நிலையில் இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை மற்றும் மயக்க நிலை போன்றவை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட்டதாகவும், ஏனைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அச்சம் காரணமாகவே வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தரம்-06 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு இந்தப் போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக இந்த போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து ஏறாவூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாடசாலை சென்ற தமது பிள்ளைகளின் நிலைமை பற்றி அறிந்து கொள்வதற்காக பெற்றோர்கள் பாடசாலைக்கும் வைத்திய சாலைக்கும் படையெடுத்ததையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக வைத்திய சாலைக்கு உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். எம். தாரிக் ஒலிபெருக்கி மூலமாக இந்த விடயம் பற்றி பொதுமக்களுக்கு விளக்க மளித்ததையடுத்து ஓரளவு சமுக நிலை ஏற்பட்டது. இதேவேளை இந்த செய்தி எழுதப்படும் வரை 25 மாணவர்கள் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய மாணவர்கள் அனைவரும் சிகிச்சையின் பின்னர் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாலைக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலநிலையில் திடீர் மாற்றம்

021009monsoon-rains.jpgகால நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளைகளில் ‘டொனேடோ’ சுழற்காற்று அல்லது கடும் காற்று ஏற்படலாம் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இடைப் பருவபெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் பாதிப்பு, மற்றும் டொனேடோ சுழற் காற்று, கடும் காற்று குறித்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் துலாரி பெர்னாண்டா நேற்றுத் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மகன் பதவியில் அமர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸியின் மகன் அரசாங்கத்தின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டதற்கெதிராக எதிர்க்கட்சி கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் முதலாவது மனைவியின் மகன் ஜின்சர்கோஸி வயது (22) அரசகூட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை ஜனாதிபதி வழங்கினார். கோடிக்கணக்கான ரூபாக்கள் புழங்கும் இப்பாரிய நிறுவனத்துக்குப் பொருத்தமில்லாத வரை நியமித்தமைக்கு பிரான்ஸின் பிரதான எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சர்கோசியின் மகன் ஜீன் சட்டக் கல்லூரியில் மாணவராக இருக்கிறார். அவர் இந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று எதிர்க்கட்சியான சோஷலிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்னாட் மோன்டேன்பர்க் கூறுகையில், சட்டவிதிகள் இல்லை.

கொள்கை இல்லை. எதையும் செய்யமுடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. முதலில் அவர் படித்து முடிக்கட்டும். படிப்பில் அவர் தன்னை நிரூபிக்கட்டும். பிறகு பதவிக்கு வரலாம் என்று குறிப்பிட்டார்.

சர்கோசியின் கன்சர்வேடிவ் கட்சியினர் கூறுகையில், ஜீன் தன் தந்தையை விட திறமையானவர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

நோர்வேயின் கவனத்திற்கு கடல்கடந்த தமிழீழ விவகாரம்!

rohitha-bogollagama_s.jpgநோர் வேயில் நடைபெற்று வருகின்ற முன்னெடுப்புக்கள் தொடர்பில் நோர்வேயின் கவனத்திற்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கொண்டு வந்துள்ளார்.
 
அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் டோர் ஹெட்ரமுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசின் கவலையயையும் அதிருப்தியையும்  தெரிவித்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துமாறு கோரிகை விடுத்தார்
 

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்

14indonesia.jpgஅவுஸ்தி ரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்)  தாம்  கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.  தம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
 
இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியுள்ளனர்.