தமிழக எம்.பிக்கள் குழுவுடன் கிழக்கு முதல்வர் சந்திப்பு

111009.jpgதமிழக த்திலிருந்து வருகை தந்திரு ந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் குறி த்து ஆராயும் பொருட்டும் உண்மை நிலைகளை கண்டறியும் முகமாகவும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய குழுவினரை முதலமைச்சர் சந்திரகாந்தன், இந்திய இல்லத்தில் சந்தித்தே கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகா ணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக் கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக் குழுவினரிடம் தெளிவாக எடுத்துரை க்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *