அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முதல் வெற்றியைப் போன்று இரண்டாவதையும் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி

presi_election.jpgமுதல் வெற்றியைப் போன்று இரண்டாவது வெற்றியையும் நிச்சயம்  பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலகத்தில் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முதல் வெற்றியாக யுத்தத்தை வெற்றிகொண்டென். அதேபோன்று இரண்டாவது வெற்றியாக பொருளாதார வெற்றியையும் நிச்சயமாகப் பெறுவேன். நாட்டின் முன்னேற்றத்தக்காவே பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மெலும் தெரிவித்தார்.

அர்ஜூனா ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.

arjuna-ranatunga.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்து – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

dayananda_disanayake.jpgநடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.

இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரம் புலிகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது – ராஜபக்ஷ

mahinda0.jpgநிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தியதாக எவரும் கூற முடியாது.  புலிகளைத் தடை செய்தமை, புலிகளுடனான உடன்படிக்கையை இல்லாதொழித்தமை போன்றவற்றிற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, நாம் திறைசேரியிலிருந்து பெருமளவு நிதியைச் செலவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கே இந்த நிதியைச் செலவிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எந்த முறைமையின் கீழாவது இலவசக் கல்வியையோ, சுகாதாரத்தையோ இல்லாதொழிக்க முற்படவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்று கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திருமதி பேரியல் அஷ்ரப், ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரத்ன ஹேரத், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது, மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட படைவீரர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூற்றுக்கள் சர்வதேச அளவில் பெரும் அசெளகரியங்களுக்கு நாடு முகங்கொடுக்க காரணமாகியுள்ளன.

இதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மட்டுமன்றி முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் ஒரு தவறான கூற்றின் மூலம் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சிலர் முனைகின்றனர்.

இந்தவறான கூற்று காரணமாக 58வது படையணியினர் வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வெளிநாட்டு விசாவும் மறுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் புலிகளுடனான உடன்படிக்கையை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தபோதும், பாராளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரம சிங்கவே புலிகளுடன் உடன்படிக்கையை மேற்கொண்டார். நிறைவேற்று ஜனாதி பதியால் முடியாததை ரணில் விக்கிரமசிங்க செய்தார், ஜனாதிபதியால் வெறுமனே அதனைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடல் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்கும் வகையில் ஐந்து துறைமுகங்கள் ஒரே சமயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எந்தகைய அபிவிருத்தி முன்னேற்றங்களை நாம் எட்ட முடிந்தாலும், நல்லொழுக்க முள்ள இளைய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப முடியாமற் போனால் எதிலும் பயனில்லை.

அதனைக் கருத்திற்கொண்டே நாம் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். எமது கலா சாரத்தை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். சமூகத்தையும், பிள்ளைகளையும் பாது காத்து புதிய யுகமொன்றை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நாம் எந்தளவு நிதியைச் செலவிட்டும் பயனில்லை. தொழில் வாய்ப்புக்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் பயனில்லை. எமது எதிர்கால தலை முறையினர் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கம் மிகுந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான ஒரு வழிமுறையாகவே பொது இடங்களில் புகை பிடித்தல், போதை ஒழிப்பு போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அத்துடன் இவ்வருடத்தை ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப வருடமாகவும் பிரகடனப் படுத்தியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேறுவோரின் வாழ்க்கைத் தரத்ததை உயாத்த அரசு நடவடிக்கை – அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் அறிவிப்பு

gl_pereis.jpgபயங்கர வாதம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும்போது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்துக்கு கொண்டுவர அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் மீள்குடியமர்த்தப்படுவோரின் நன்மை கருதி அப்பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளையும் கடற்றொழில் நடவடிக்கைகளையும் முன்னெப்போதுமில்லாத அளவில் அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாட்டில் பொருளாதாரத்திலும் ஏற்றுமதி வர்த்தகத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் சமூக கலாசாரத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலிலும் ஒரு ஸ்திரமான நிலைக்கு நாம் வந்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.

உலகில் பயங்கரவாத ஒழிப்புக்கு வளைகுடா ஒத்துழைப்பு மாநாடு ஆதரவு. பிராந்தியத்தில் பொது நாணயத்திற்கும் இணக்கம்.

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட் டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதென வளை குடா நாடுகளின் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை க்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதெனவும் குவைத்தில் நடைபெற்ற 30 ஆவது உச்சி மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நிறைவின் பின்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் குவைத் பிரதி பிரதமரும் வெளிநாட்டு அமைச்சருமான ஷேக் கலாநிதி மொகமட் சபா அல்-சலீம் அல்-சபா தெரிவித்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல்-அட்டியாவும் கலந்துகொண்டு கூட்டாக நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் தகவல் தருகையில் :-

உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் அனைத்து எதிர்பார்ப்புகளையும் விஞ்சி நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்தனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கிடையில் கூட்டு மின்சார இணைப்பை ஆரம்பிக்க முடிந்தமை பாரிய வெற்றியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இந்த நாடுகளுக்கிடையில் ரயில்வே போக்குவரத்தை ஆரம்பிக்கவும், பொதுவான நாணயமொன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையைத் தயாரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

குவைத், சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரெய்ன், துபாய், ஓமான் ஆகிய ஆறு நாடுகளின் கூட்டமைப்பான ஜீசிசி உச்சி மாநாடு குவைத் மன்னர் சபா அல்-அஹ்மட் அல்-சபீர் அல்-சபாவின் தலைமையில் பயான் மாளிகையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பிற மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு புதிய ஏற்பாடுகள்

buss.jpgயாழ். குடாநாட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஏ-9 தரைப்பாதை மூலம் பேருந்துகளில் பயணஞ் செய்கின்ற பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற சிரமங்களை நிவர்த்திக்கும் முகமாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை (14) அதிகாலை யாழ். புகையிரத நிலையக் கட்டிடப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்கள் காலை 6.00 மணிக்கு யாழ். சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும் இவர்கள் பயணஞ் செய்யும் பேருந்துகள் காலை 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

இதேநேரம் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இருந்து கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்களை அப்பகுதிகளில் வைத்து பேருந்துகளில் ஏற்றிச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு வருகை தர வேண்டும். பின்னர் 7.00 மணிக்கு இப்பயணிகள் சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனைக் கடமைகள் முடிவுற்றதன் பின்னர் இவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் காலை 8.30 க்கும் 9 மணிக்கும் இடையில் கொழும்பு நோக்கிப் புறப்படும்.

அதே நேரம் தனியார் பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.30 மணிக்கு நேரே சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகளும் 8.30 க்கும் 9.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும் முதலாவது வாகனத் தொடரணியில் கொழும்பு நோக்கிப் புறப்பட இயலும்.

இதனிடையே வவுனியா செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். புகையிரத நிலையக் கட்டிடத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகள் அங்கிருந்து நேரே வவுனியா செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவ்வேற்பாடுகள் நிறைவுறும் வரையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் முறைமை சில நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வாகனத் தொடரணி காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும்.

‘ரணில் யாழ்ப்பாணம் சென்றுவர வழி ஏற்படுத்தியவர் ஜனாதிபதி’

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ள முடியாமலிருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணம் சென்று வர வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

மாத்தறை சென். தோமஸ் கல்லூரியில் திங்களன்று நடந்த நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் கூட அவரால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய முடியவில்லை.

ஐ.தே.கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

honstonindika.jpgஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்களான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
 
இதன்படி குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ அமைச்சரவை அந்தஸ்து உள்ள காணி,  காணி அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் படைவீரர்களின் நலன் காக்கும் அமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, இயற்கை வளத்துறை அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக இந்திக பண்டாரநாயக்காவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தாம் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட மூவரடங்கிய குழு நியமனம்!

வடக்கில் 30 வருடகால மோதல் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர் தே.சிறிபவன் தலைமையில் மூன்று பேரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறைக் கட்டமைப்பை வடமாகணத்தில் உடன் அமுலுக்குக் கொண்டு வருவதற்கும் நீதி மன்ற நிர்வாகத்தை உடன் அமுல்படுத்துவதற்குமான ஏற்பாடாக இக்குழுவை நியமித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். அரச அதிபர் கே.கணேஸ் உட்பட நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சின் அதிகாரிகள் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர