வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட மூவரடங்கிய குழு நியமனம்!

வடக்கில் 30 வருடகால மோதல் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர் தே.சிறிபவன் தலைமையில் மூன்று பேரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறைக் கட்டமைப்பை வடமாகணத்தில் உடன் அமுலுக்குக் கொண்டு வருவதற்கும் நீதி மன்ற நிர்வாகத்தை உடன் அமுல்படுத்துவதற்குமான ஏற்பாடாக இக்குழுவை நியமித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். அரச அதிபர் கே.கணேஸ் உட்பட நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சின் அதிகாரிகள் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *