::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வருண் கீதையை சரியாக படிக்க முயற்சிக்க வேண்டும் – பிரியங்கா

23-priyanka.jpgவருண் காந்தி பேசிய பேச்சு வருத்தம் தருகிறது. அவர் முதலில் பகவத் கீதைய சரியாக படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்திரா குடும்பத்தின் பாரம்பரியத்தை சிதைப்பது போல உள்ளது வருணின் பேச்சு என்று வருணின் பெரியம்மா சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார் பிரியங்கா. அங்கு தொகுதி மக்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பக்கத்தில் இருக்கும் தம்பி ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கும் பிரியங்கா செல்கிறார்.

ரேபரேலி வந்த பிரியங்காவிடம், வருண் காந்தி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பிரியங்கா, வருண் காந்தி பேசியது நிச்சயம் இந்திரா குடும்பத்தின் கொள்கைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் உகந்ததல்ல, அவற்றுக்கு முரணானது. வருண் இப்படிப் பேசியிருப்பதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன்.

வருண் பகவத் கீதைய முழுமையாக படித்து, அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நான் அட்வைஸ் செய்கிறேன் என்றார் பிரியங்கா.

அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 17 பேர் பலி

tour.jpgஅமெரிக் காவின் மேற்கு மாகாணமான மான்டனாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சிறார்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேரிட்டது. இதுகுறித்து பெடரல் விமான நிர்வாக செய்தித் தொடர்பாளர் மைக் பெர்குஸ் கூறுகையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜாலி டிரிப் ஆக குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது சோகத்தில் முடிந்துள்ளது. ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் கலிபோர்னியாவின் ஆரோவில் நகரிலிருந்து கிளம்பி, மான்டனாவின் போஸ்மன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பு ஹோலி கிராஸ் கல்லறையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

போஸ்மன் நகருக்கு வரும் திட்டத்தை கடைசி நேரத்தில் விமானி மாற்றியிருக்கிறார். போஸ்மனுக்குப் பதிலாக பட் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார் என்றார். விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. விமானம் தலைகுப்புற விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லறை வளாகத்தில் உள்ள மரங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

ஆங்கிலம் தெரியாதா? பிரஜாவுரிமை இல்லை – கனடா அறிவிப்பு

flag_canadian.jpgபிரஜா வுரிமை பெறுவதற்கு மொழித்தேர்ச்சி அவசியமென்ற அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் கனடிய, குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னேய், குடியேற்றவாசிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சை கற்றிருக்க வேண்டும் அல்லது பிரஜாவுரிமை மறுக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கஸ்சாரியில் இடம்பெற்ற குடிவரவுத்துறை விவகாரம் சம்பந்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜாசன் கென்னேய், புதிய குடியேற்றவாசிகள் இரு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு) ஒன்றை கற்பது அவசியம் என்றும் கனடிய சமூகத்துடன் ஒன்றிணைய அது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மொழிகளையும் கற்பதற்கு குடியேற்றவாசிகள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்பதற்கு உதாரணமொன்றை கூறிய அமைச்சர் கடந்த ஜனவரி இந்தியாவுக்கு தான் சென்றபோது புதுடில்லியில் குடியேற்றம் தொடர்பான சில நேர்முகப்பரீட்சைகளில் கலந்துகொண்டதாகவும் அச்சமயம் 12 வருடமாக கனடியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பெண் ஒருவர் ஆங்கில அறிவு சிறிதும் இல்லாமல் இருந்ததையிட்டு ஆச்சரியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப்பெண் தனது கணவன் கனடாவுக்கு வருவதற்கு “அனுசரணை’ வழங்கியுள்ளார். எனக்கு வியப்பாக இருந்தது கவலையாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரஜாவுரிமை பெற உத்தியோகபூர்வ மொழிகளை அறிந்திருப்பது அவசியமென்ற வகையில் குடிவரவுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் 2 1/2 இலட்சம் பேர் கனடாவுக்குப் புதிய குடியேற்ற வாசிகளாக வருகின்றனர். 66 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்துகொள்ள வருகை தருகின்றனர். குடும்பத்துடன் இணைந்து கொள்வோருக்கு மொழிப்புலமை அவசியமானதல்ல என்ற ஏற்பாடே இருந்து வருகிறது.

அமெரிக்கா நிஜமாக மாறினால் இரானும் மாறும் என்கிறார் கமெனி

_khamenei.jpgஇரானுடனான உறவில் ஒரு புதிய துவக்கத்தை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் ஒபாமா கூறியிருந்தமைக்கு பதில் தரும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இரான் தொடர்பில் அமெரிக்கா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நிஜமாகவே மாற்றிக்கொண்டால், இரானும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

வெறும் வாய் வார்த்தைகள் என்று குறிப்பிட்டு அவை மட்டும் போதாது என்றார் அவர். இரான் மீதான பொருளாதாரத் தடைகளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனைகளற்ற ஆதரவு என்று குறிப்பிட்டு அவ்விவகாரம் போன்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிஜமான மாற்றங்கள் எதனையும் தான் இதுவரைக் கண்டிருக்கவில்லை என்றும் கமேனி கூறியுள்ளார்.

அமெரிக்க இரான் உறவில் முப்பது ஆண்டு காலமாக நீடித்துவரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா வீடியோ உரையில் பேசியிருந்தற்கு அடுத்த நாள் அயதுல்லாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் வன்செயல்; திபெத்திய பிக்குகள் கைது

_china_tibet_.gifசீனாவின் வடமேற்கே குயிங்கை மாகாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து, திபெத்திய பிக்குகள் 6 பேரை தாம் கைதுசெய்துள்ளதாகவும், வேறு 90க்கும் அதிகமானோரின் சரணடைவதற்கான கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்து திபெத்திய பிரிவினை ஆதரவளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தப்பித்ததை அடுத்து, சனிக்கிழமையன்று குறைந்தது 100 பேர் பொலிஸ் நிலையம் ஒன்றை தாக்கியதாக சீன சின்குவா அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த நபரின் நிலைமை குறித்த வெளியான தவறான வதந்திகளால் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாந்து விட்டார்கள் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.ஆனால், ஒரு திபெத்திய பிக்குவான, அந்த நபர் ஒரு ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள திபெத்தியர்களால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று கூறுகிறது.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா செல்வதற்கு ‘தடை’

_dalailama.jpgதிபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திப்போடச்சொல்லி தென்னாப்பிரிக்க அரசாங்கம் கோரியிருப்பதாகவும், தலாய் லாமாவுக்கு அது இதுவரை பயண விசா வழங்கியிருக்கவில்லை என்றும் லாமாவின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2010ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தென்னாப்பிரிக்கா தயாராகிவரும் நிலையில், கால்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இனத்துவேஷத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பும் வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா அங்கு பயணிக்கவிருந்தார். நொபெல் அமைதிப் பரிசு வென்ற வேறு சில பிரமுகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா வருவதை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்காவிடம் சீன அரசு வலியுறுத்தியிருந்ததாக சீன தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னாப்பிரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மடகாஸ்கர் அதிபராக அண்ட்ரி ரஜோலீன் பதவியேற்பு

andry.jpgமட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.

வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.

மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.

ஈழத்தமிழருக்காக தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

kothamangalam-balasundharam.jpgஈழத் தமிழர்களை காக்கக்கோரி மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம பகவான் தெருவைச் சேர்ந்தவர் பால சுந்தரம். 35 வயதான இவர் தேமுதிகவின் கிளைச்செயலாளராக உள்ளார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.

கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.  இன்று (22.03.09) மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டலுக்கு மிரட்டல்

மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டல் ஒன்றிற்கு இ மெயில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அல் குவைதா இயக்கத்தின் பெயரில் வந்த இந்த மிரட்டல் இமெயிலில், மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நவநீதம்பிள்ளை இன்று இந்தியாவுக்கு விஜயம்

navanethem.jpgஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தவுள்ளதாக ஜெனீவாவிலுள்ள அவரின் அலுவலக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் முதற்கட்டமாக கடந்த 17 ஆம் திகதி நவநீதம்பிள்ளை நேபாளத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் பிரசண்டா, ஐ.நா. அலுவலர்கள், மனித உரிமைப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இலங்கையில் மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம், அரசியல் அவதானிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் அயல்நாடும் பிராந்தியத்தில் வல்லரசுமான இந்தியாவுடன் இலங்கையின் மோதல்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் , மனிதாபிமான நெருக்கடி என்பன தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

நேபாளம் தொடர்பாக தனது பிந்திய அறிக்கையில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், “நேபாளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முடியாட்சிக்குப் பதிலாக அங்கு குடியாட்சி மலர்ந்துள்ளது. ஆயினும் சமாதான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விடயத்தில் சவால்கள் உள்ளன. மனித உரிமைகள் விவகாரத்தின் தனது ஈடுபாடுகளை அமுல்படுத்துவதற்குரிய வரலாற்று ரீதியான வாய்ப்பு நேபாளத்திற்கு கிட்டியுள்ளது’ என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.