மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டல் ஒன்றிற்கு இ மெயில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அல் குவைதா இயக்கத்தின் பெயரில் வந்த இந்த மிரட்டல் இமெயிலில், மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.