கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்று (29) இடம்பெற்றன. வாக்களிப்புகள் சுமுகமாக இடம்பெற்றதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிரி தெரிவித்தார்.

இதேவேளை, தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்பு இன்றும் (30) இடம்பெற உள்ளது. இரு தினங்களிலும் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்களுக்கு இந்த வாரத்திற்குள் வேறொரு தினத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

அமெரிக்க – கியூபா உறவுகளை வலுப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்

கியூபா – அமெரிக்க உறவுகளை கெட்டியான முறையில் வளப்படுத்த அமெரிக்கா வரவேண்டுமென கியூபா வெளிநாட்டமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றிய கியூபா வெளிநாட்ட மைச்சர் ரொட்ரிக் மேலும் கூறியதாவது, அமெரிக்கத் தலைவர்களின் ஐ.நா. உரை கியூபாவுடனான உறவுகளை பல ப்படுத்தும் வகையில் அமையவில்லை என்பது துரதிர்ஷ்டமான விடயம்.

சகல நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையிலான உறவுகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக பணியாற்ற வேண்டும்.

அமெரிக்கா, கியூபாவிடையே ஐம்பது வருடங்களாக நல்லுறவு இல்லை. கியூபா ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ ஓய்வுபெற்ற பின்னர் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாறத் தொடங்கின. சென்ற ஏப்ரல் மாதம் கியூபா மீதான சில தடைகள் தளர்த்தப்பட்டன. அமெரிக்கர்கள் தடை யின்றி கியூபா சென்றனர்.

செய்மதிச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அமெரிக்க கம்பனிகளால் கியூபா வில் நடத்தப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடை யேயும் நல்லுறவுகளை வளப்படுத்த உதவுகின்றன. கியூபா பொருட்கள் சேவைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம் -New Zealand won by 4 wickets (with 137 balls remaining

270909n-s.bmpஇன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான பீ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. பகல், .இரவு ஆட்டமாக இப்போட்டி ஜோஹான்ஸ் பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பீ பிரிவில்  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சொந்த மண்ணில் ஏமாற்றிய தென் ஆபிரிக்க அணி பரிதாபமாக வெளியேறி விட்டது. இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை பெறும். ஒருவேளை தோல்வி அடைந்தால் ஓட்ட விகித அடிப்படையில் இலங்கை அரையிறுதி வாய்ப்பை பெறலாம். எனவே இந்தப்போட்டி நியூசிலாந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுவோ அதே போல இலங்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

England 13/3 (5.1 ov)

New Zealand won the toss and elected to field
ICC Champions Trophy – 10th Match, Group B
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
29 September 2009 – day/night (50-over match)
       
 England innings (50 overs maximum)
 England innings
 AJ Strauss*  c †McCullum b Mills  0
 JL Denly  b Bond  5 
 OA Shah  c †McCullum b Bond  3
 PD Collingwood  c Taylor b Elliott  40 
 EJG Morgan†  c Taylor b Butler  9
 RS Bopara  lbw b Bond  30 
 LJ Wright  c †McCullum b Elliott  4
 SCJ Broad  c & b Elliott  1 
 GP Swann  c †McCullum b Elliott  11
 RJ Sidebottom c Taylor b Vettori 20
 JM Anderson not out 4
 Extras (b 4, lb 4, w 9, nb 2) 19

Total (all out; 43.1 overs) 146 (3.38 runs per over)
Fall of wickets1-0 (Strauss, 0.2 ov), 2-10 (Denly, 3.5 ov), 3-13 (Shah, 5.1 ov), 4-50 (Morgan, 18.2 ov), 5-80 (Collingwood, 23.6 ov), 6-90 (Wright, 25.6 ov), 7-95 (Broad, 27.1 ov), 8-109 (Swann, 31.2 ov), 9-117 (Bopara, 34.6 ov), 10-146 (Sidebottom, 43.1 ov)

Bowling
 KD Mills 10 2 19 1
 SE Bond 10 2 21 3
 JEC Franklin 6 0 31 0
 IG Butler 8 1 34 1
 GD Elliott 8 0 31 4
 DL Vettori 1.1 0 2 1

New Zealand innings (target: 147 runs from 50 overs)
 BB McCullum†  c Bopara b Broad  48 
 MJ Guptill  c Swann b Anderson  53 
 NT Broom  c †Morgan b Sidebottom  17 
 LRPL Taylor  c Swann b Broad  1 
 GD Elliott  c †Morgan b Broad  3 
 GJ Hopkins  c †Morgan b Broad  2
 DL Vettori*  not out  10  
 JEC Franklin  not out  2
 Extras (lb 7, w 4) 11     
      
 Total (6 wickets; 27.1 overs) 147 (5.41 runs per over)
Did not bat KD Mills, SE Bond, IG Butler 
Fall of wickets1-84 (McCullum, 12.3 ov), 2-113 (Guptill, 18.4 ov), 3-114 (Taylor, 19.1 ov), 4-118 (Elliott, 21.4 ov), 5-130 (Hopkins, 23.6 ov), 6-140 (Broom, 26.1 ov) 
        
 Bowling
 JM Anderson 10 0 53 1 
 RJ Sidebottom 6 0 32 1
 SCJ Broad 8.1 1 39 4
PD Collingwood 3 0 16 0 

Player of the match GD Elliott (New Zealand)
 

உலகத் தமிழ் மாநாடு ஜுன் இறுதிக்கு ஒத்திவைப்பு

260909tamilnadugovtlogo.jpgஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவும் வசதியாக 2010 ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 2010 ஜுன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் தேர்தலில் ஏஞ்சலா மேர்கல் வெற்றி

290909jarmani.jpgஜேர்மனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. 622 பாராளு மன்ற ஆசனங்களில் ஏஞ்சலா மேற்கலின் கிறிஸ்தவக் கட்சி 332 ஆசனங்களை வென்றுள்ளது.

55 வயதுடைய ஏஞ்சலா மேர்கல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் அவரின் கிஸ்தவக் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏஞ்சலா மேர்கலின் கட்சி 48 வீதமான ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மன் படைகள் எதிர்கொள்ளும் சங்கடமான சூழல்களால் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்குள்ளான போதும் தேர்தலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான ஆசனங்களை வென்றுள்ளது.

தேர்தலின் மொத்த முடிவுகள் வெளியான பின்னர் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் படவுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளுடனே மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன

இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்ல 2800 பேருக்கு அனுமதி – 5300 ஆக அதிகரிப்பது பற்றி பேச பெளஸி சவூதி விரைவு

இலங்கையில் இருந்து இம்முறை புனித மக்காவுக்கு யாத்திரை செல்வதற்காக 2800 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தக் கோட்டா தொகையை 5300 ஆக அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகச் செயற்படும் அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி சவூதி அரேபியா சென்றுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

ஹஜ் ஏற்பாடு தொடர்பாக அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ் முகவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது ஹஜ் யாத்திரை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் கோட்டா தொகை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரம் யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்வரென எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.  இம்முறை இலங்கையில் இருந்து செல்ல 2800 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகை போதுமானது அல்ல எனவும் இதனால் மேலும் 2500 பேருக்கு மேலதிகமாக அனுமதி பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தபால் மூல வாக்களிப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (29) நாளையும் (30) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குச் சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதம்; 60 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு – வெளிநாட்டு உதவிகளை பிலிப்பைன்ஸ் எதிர்பார்ப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் பலியானோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை மழை ஓய்ந்ததால் வெள்ளம் குறையத் தொங்கியது. இதனால் மீட்புப் பணிகள் தடையின்றித் தொடர்ந்தன.

மீட்கப்பட்டோரில் அறுபதாயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களே அதிகமாகும். ஹெலிகொப்டர்கள், தோணிகளின் உதவியுடன் வெள்ளத்தில் தத்தளித்தோர் காப்பாற்றப்பட்டனர்.

வெள்ளம் முற்றாக வடிந்த பின்னரே சேத விபரங்களின் சரியான தகவல்களை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளத்திலிருந்து தப்பும் பொருட்டு மக்கள் வீட்டுக் கூரைகளின் மேலும் உயரமான இடங்களிலும் ஏறிக் கொண்டனர்.

ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைவிடாது மழை பெய்ததால் இருபது அடி உயரத்தில் வெள்ளம் நின்றது. பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலா உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாற்பது வருடங்களின் பின்னர் இப்பெரு வெள்ளம் பிலிப்பைன்ஸைச் சேதப்படுத்தியது.

மக்களைப் பொறுமையாக இருக்கும்படி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளதுடன், வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர்.

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகை

இஸ்ரேலியப் படைகளுக்கும், பலஸ்தீனர்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்ததுடன் இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களும் காயத்துக்குள்ளாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜெரூஸத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலடியில் இச் சம்பவம் இடம் பெற்றது.

முஸ்லிம்களின் புனிதத் தலங்களுள் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியர்களைத் தடுத்து நிறுத்த பலஸ்தீனர்கள் முயன்றபோதே இச் சம்பவம் ஏற்பட்டது.

இக் கலகத்தை அடக்க மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் கைக்குண்டுகளையும் வீசியது.

இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவும் பொருட்டு கிழக்கு ஜெரூஸலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டட வேலைகளைத் தடுத்து நிறுத்தவே பலஸ்தீனர்கள் திரண்டு வந்தனர். நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். நிலைமைகள் சீரடையும் வரை இப்பகுதியை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

ICC Champions Trophy – 9th match, Group A : Australia v India – No result

Played at SuperSport Park, Centurion (neutral venue)
28 September 2009 – 

Australia innings (50 overs maximum)
 SR Watson  c Harbhajan Singh b Nehra  0 
 TD Paine†  c Harbhajan Singh b Mishra  56 
 RT Ponting*  run out (Gambhir)  65
 MEK Hussey  c Tendulkar b Sharma  67 
 CL White  not out  35
 CJ Ferguson  not out  2 
 Extras (b 1, lb 1, w 7) 9     
      
 Total (4 wickets; 42.3 overs) 234 (5.50 runs per over)
Did not bat JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, PM Siddle 
Fall of wickets1-3 (Watson, 2.2 ov), 2-87 (Paine, 16.4 ov), 3-175 (Ponting, 32.5 ov), 4-227 (Hussey, 40.1 ov) 
        
 Bowling  
 A Nehra 8 1 38 1 
 P Kumar 8 0 34 0 
 I Sharma 7.3 0 53 1 
 A Mishra 9 0 45 1
 Harbhajan Singh 9 0 54 0 
 SK Raina 1 0 8 0  
   
India team    
G Gambhir, SR Tendulkar, R Dravid, SK Raina, MS Dhoni*†, V Kohli, A Mishra, Harbhajan Singh, A Nehra, I Sharma, P Kumar 

Match details
Points Australia 1, India 1
 
Umpires BF Bowden (New Zealand) and IJ Gould (England)
TV umpire Asad Rauf (Pakistan)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire AL Hill (New Zealand