கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

காலநிலை சீர்கேடால் சுரங்கப்பாதை ரயில் சேவைகள் இடை நிறுத்தம் – லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய பயணிகள் அவதி

காலநிலை சீர்கேடு காரணமாக சுரங்கப்பாதையினூடான ரெயில் சேவைகள் சீர்குலைந்தன. இதனால் சுமார் இரண்டாயிரம் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. குறித்த நேரத்துக்கு தங்கள் இடங்களைச் சென்றடைய முடியாது போனதால் ரெயில் நிலையங்களில் இரவைக் கழிக்க நேர்ந்தது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இடங்களுக்கான சுரங்கப்பாதை ரெயில் சேவை கடும் குளிர் காரணமாக சென்ற சனிக்கிழமை சீர்குலைந்தன.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து ரெயில்கள் இயங்க முடியாத நிலைக்கு வந்தன. இதனால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நகரங்களுக்கான சுரங்கப் பாதை ரெயில் சேவைகள் சீர்குலைந்தன.

பயணிகள் இரவை ரெயில் நிலையங்களில் தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கழிக்க வேண்டியேற்பட்டது. சில இடங்களில் ஆங்கில ஒளிபரப்புகள் இடம்பெறவில்லையென பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலமாகையால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய ரெயில் சேவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கடும் குளிரான கால நிலையால் ரெயில் சேவைகள் சில ரத்துச் செய்யப்பட்டன.

பிரதான சேவையில் ஈடுபட்ட ரெயில்களில் ஐந்து இயங்க முடியாதளவுக்குப் பழுதடைந்தன. இது மாத்திரமன்றி விமான சேவைகளும் மோசமான பனிப் பொழிவால் தடைப்பட்டன. படகுகள் போக்குவரத்தும் வெள்ளிக்கிழமை தடைப்பட்டன.

தற்போது ரெயில், விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நஷ்டஈடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் – 01 : பீ.எம். புன்னியாமீன்

sri-lanka.jpg1978ஆம் ஆண்டு 2ம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இதுவரை ஜே.ஆர். ஜயவர்தனா,  ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க , சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க,  மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2005 நவம்பர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும்,  மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது வேண்டுகோளை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31(3) (அ) (1) உறுப்புரை ஜனாதிபதிக்கு அதிகாரத்தை  அளிக்கிறது.  இதன்படி முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றியும்,  ஜனாதிபதி கடமைகள்,  அதிகாரங்கள் பற்றியும் இதுகால வரை இலங்கையில் 1982, 1988, 1994, 1999, 2005 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றியும் ஆராய்வது பயனள்ளதாக இருக்கும். இந்த அடிப்படையில் இக்கட்டுரைத் தொடர் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி ஆட்சி முறையும்,  மந்திரிசபை ஆட்சி முறையும்

இன்றைய ஜனநாயக உலகில் காணப்படும் ஆட்சி முறைகளைப் பிரதானமாகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) சனாதிபதி ஆட்சிமுறை
2) மந்திரிசபை ஆட்சிமுறை (வெஸ்மினிஸ்டர் ஆட்சிமுறை)

ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையினின்றும் தெரிவு செய்யப்படாது சட்டத்துறையுடன் நெருங்கிய தொடர்பற்றுக் காணப்படுமாயின் அத்தகைய ஆட்சி முறையினை சனாதிபதி ஆட்சிமுறை என்று அழைக்கின்றோம். உதாரணமாக எமது இலங்கையில் 1978ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் ஆட்சி முறையைக் குறிப்பிடலாம்)

ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சட்டத்துறையிலிருந்தே தெரிவு செய்யப்படுமாயின் அத்தகைய ஆட்சிமுறையி மந்திரிசபை ஆட்சி முறை  எனப்படுகின்றது. உதாரணமாக 1978ஆம் ஆண்டின் முன்னர் இலங்கையில் காணப்பட்ட ஆட்சிமுறையினைக் குறிப்பிடலாம்.

பொதுவாக இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டினதும் நிர்வாகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே அரசமுறை பெயரிட்டு அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைக்கும் மந்திரிசபை ஆட்சி முறைக்கும் இடையேயுள்ள பிரதான வேறுபாடுகளைப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் சுருக்கமாக நோக்கலாம்.

1. தெரிவுமுறை

மந்திரிசபை ஆட்சி முறையின் தெரிவானது சட்டத்துறைக்குள்ளே இருந்து இடம்பெறும். பொதுவாக மந்திரிசபையின் தலைவராக பிரதமமந்திரி சட்டத்துறையின் உறுப்பினர்களிடமிருந்தே தெரிவு செய்யப்படுவார். (அநேகமாக ஆளும் கட்சியின் தலைவர்) நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான இந்த மந்திரிசபை. சட்டத்துறையினுள்ளிருந்தே பிரதமரால் அமைக்கப்படும். எனவே மந்திரிசபை சட்டத்துறைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதி ஆட்சிமுறையினை எடுத்து நோக்குகையில் நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான ஜனாதிபதி சட்டத்துறையிலில்லாமல் தனிப்பட்ட அலகாகவே தேர்ந்தெடுக்கப்படுவார். உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியை இலங்கை மக்கள் நேரடியாக வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்ந்தெடுப்பர். எனவே சட்டத்துறைக்கு இவர் எவ்விதத்திலும் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை.

2. அதிகாரப் பிரிவினை

ஜனாதிபதி ஆட்சி முறைக்கும்,  மந்திரிசபை முறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு மற்றுமொரு மூல காரணி ஜனாதிபதி ஆட்சிமுறை அதிகாரங்கள் பிரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதேயாகும்.  ஜனாதிபதி ஆட்சிமுறையில் நிர்வாகத்துறை, சட்டத்துறையில் இருந்து பிரிக்கப்படுவதால் நிர்வாகத்துறை தனி அலகாகப் பரிணமிக்கின்றது. ஆனால் மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத்துறை சட்டத்துறைக்குள்ளே அமைந்திருப்பதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை போன்று தனி அலகாகப் பரிணமிப்பதில்லை. அதாவது மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத்துறையின் வாழ்வும்,  சாவும் சட்டத்துறையினால் தீர்மாணிக்கப்படுகிறது. ஏனெனில், சட்டத்துறை கலைந்தால் நிர்வாகத்துறையும் கலைந்துவிடும். ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டத்துறை கலைந்தாலும் நிர்வாகத்துறை கலைய வேண்டும் எவ்வித கட்டாயப்பாடும் இல்லை.

3. சட்டங்களின் தன்மை

மந்திரிசபை ஆட்சிமுறையில் சட்டத்துறையும்,  நிர்வாகத்துறையும் இணைந்திருப்பதனால் சட்டம் ஓரிடத்திலிருந்தே (சட்டசபையிலிருந்தே) பிறப்பிக்கக்கூடிய நிகழ்தகவு உண்டு. ஆனால்,  ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டங்கள் பல திசைகளிலிருந்தும் பிறப்பிக்கப்படலாம். இத்தகைய சட்டங்கள் தொடர்பற்றதாகவும் இயல்பற்றதாகவும் காணப்படக் கூடிய நிகழ்தகழ்வுகள் அதிகம்.

4. நிர்வாகத்துறையின் ஆயுள்காலம்

இவ்விருவகையான ஆட்சி முறைகளிலுமுள்ள வேறுபாடு நிர்வாகத்துறையின் ஆயுங்காலம் சம்பந்தமாகவும் காணப்படுகிறது. ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்பட்ட காலஎல்லை வரை பதவி வகிக்கலாம். உதாரணமாக இலங்கையில் 6 ஆண்டுகள் கொண்ட பதவிக் காலத்திற்கென தெரிவு செய்யப்படுவார். ஆனால் மந்திரிசபை ஆட்சிமுறையில் சட்டசபையின் நம்பிக்கை இழந்ததும் பதவியிலிருந்து நீக்கப்படுவார். நிர்வாகத்துறை,  சட்டத்துறை என்பவற்றின் பதவிக்காலம் யாப்பளவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சட்டத்துறையின் நம்பிக்கையைப் பொறுத்தே நிர்வாகத்துறை உள்ளதென்பது புலனாகிறது. 

மேலும்,  ஜனாதிபதி ஆட்சி நிலவும் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி வகிக்கக் கூடிய கால எல்லைகள் அரசியலமைப்பினூடாக வரையறுக்கப்பட்டிருக்கும்.  உதாரணமாக இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இதன்படி இலங்கை ஜனாதிபதியின் அதிகூடிய பதவிக்காலம்  12 ஆண்டுகளாகும். ஆனால், மந்திரிசபை ஆட்சிமுறையில் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்படுவதில்லை.

மேலும்,  ஜனாதிபதி அரசியல் திட்டத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் காரணமாக தனது பதவியின் உறுதி காரணமாகவும்ää தனது அமைச்சரவையின் எஜமானாகக் காணப்படுவார். ஆனால்ää பிரதமருக்கும்ää அமைச்சரவைக்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படுதில்லை. காரணம் மந்திரியும் அவரது சகாக்களும் மக்களிடமிருந்து ஒரே விதமான அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதனால் அவர்கள் அந்தஸ்துடையவர்களாகவே கருதப்படுவர்.

மந்திரிசபை ஆட்சிமுறையில்,   இலங்கையில் ஜனாதிபதிப் பதவி

பிரித்தானியர் ஆட்சியிலிருந்த எமது இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது முதல் மந்திரிசபை ஆட்சிமுறையே பின்பற்றிவந்தது. 1948இல் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய சுதந்திரத்தைப் பெற்றமையால் இலங்கையின் தலைவராக பிரித்தானிய மகாராணி அல்லது மகாராஜா விளங்கினார். 1947 முதல் 1972 வரை மகாராணியின் நேரடிப் பிரதிநிதியாக மகாதேசாதிபதி எனும் பதவி அலங்காரத் தலைமையாக அமைக்கப்பட்டிருந்தது.

மகாதேசாதிபதி இலங்கைப் பிரதரின் ஆலோசனைப்படி பிரித்தானிய முடியால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இவரின் கடமைகளும், அதிகாரங்களும் பிரதமராலும்,  அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டன. எனவே மகாதேசாதிபதி எனும் பதவியானது இலங்கையில் பெயரளவு நிர்வாகமாகக் (நாம நிர்வாகம்) காணப்பட்டது.

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கைக் குடியரசின் அரசியல்திட்டம் முன்வைக்கப்பட்டது.  இப்புதிய அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டது முதல் ஏற்கனவே காணப்பட்ட அரசியல்திட்டத்தில் கூறப்பட்டிருந்த பிரித்தானியருடனான யாப்பு ரீதியான தொடர்புகள் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டன.  இலங்கையின் தலைவராக இலங்கைப் பிரஜை ஒருவரே விளங்கினார். இவரே ஜனாதிபதியாவார். (பிரித்தானிய முடியின் சார்பில் செயல்பட்ட நாமநிர்வாகமான மகாதேசாதிபதிப் பதவிக்குப் பதிலாக முதலாம் குடியரசு அரசியல் அமைப்பில் நாமநிர்வாகமாக ஜனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது) இவர் பூரண நிறைவேற்று அதிகாரமிக்கவரல்ல. ஜனாதிபதியின் கடமைகளும், அதிகாரங்களும் இலங்கையின் பிரதமராலும்,  அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டமையினால் – ஜனாதிபதி அலங்காரத் தலைவராக, பெயரளவு நிர்வாகியாகக் காணப்பட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியமைப்பின் கீழ் அலங்காரத் தலைவரான ஜனாதிபதியின் தகைமைகள்,  தத்துவங்கள் என்பன பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

அ)  7ம் அத்தியாயம் – 19ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின்  தலைவராவார்.

ஆ) 7ம் அத்தியாயம் – 20ம் உறுப்புரை
ஜனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும்,  ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.

இ) 7ம் அத்தியாயம் – 21ம் உறுப்புரை
 அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும்,  தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும்,  கூட்டத்தொடர்களை நிறுத்தவும்,  கலைக்கவும் அதிகாரமிக்கவர். முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான ஏனைய அமைச்சர்களையும்,  பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பர். மேலும்,  இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக் காப்பில் வைத்திருப்பார்.

குடியரசின் ஜனாதிபதியின் நியமனம்,  அவர் பதவியேற்றலும்  

அரசியலமைப்பின் 25ஆவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரிவு செய்யும் நோக்கத்திக்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம். (இதன்படி ஜனாதிபதியைப் பிரதம மந்திரி தெரிவு செய்வார் என்பது புலனாகிறது. இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு. வில்லியம் கொபல்லாவ அவர்களாவர்)

ஜனாதிபதியின் பதவிக்காலம் பற்றி அரசியமைப்பின் 26ம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும் அக்கால எல்லை கழியினும் கூட அடுத்துவரும் ஜனாதிபதி அவரது பதவியை ஏற்கும்வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து வருதல் வேண்டும்.

தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது. இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கெதிராக வழக்குத் தொடரமுடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்.

1ம் குடியரசு ஜனாதிபதியின் கடமைகளையும்ää அதிகாரங்களையும் அ) சட்டத்துறை சார்ந்தவை ஆ) நிர்வாகத்துறை சார்ந்தவை இ) நீதித்துறை சார்ந்தவை என பிரித்து ஆராய்ந்தாலும் பிரதமரின் (கெபினட்டின்) ஆலோசனைப்படியே புரிய வேண்டியிருந்தமை அவதானிக்கத் தக்கதாகும். ஆகவேதான் ஜனாதிபதி பெயரளவுநிர்வாகியாகவே கருதப்படுவார்.

இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை

1977 ஜுலை 21ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 8ஆவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முன்னெப்போதும் இடம்பெறாத வகையில் 168 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 140 உறுப்பினர்களை வென்றெடுத்து ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் திரு. ஜுனியர் ரிச்சட் ஜயவர்தனா அவர்கள் இலங்கையின் 7ஆவது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஜே.ஆர். அரசாங்கம் 1ம் குடியரசு (1972) அரசியலமைப்பினை மாற்றியமைத்து 1978 பெப்ரவரி 04ம் திகதி 2ஆவது குடியரசு அரசியலமைப்பினை முன்வைத்தது. இந்த அரசியலமைப்பில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அம்சமாவதுää இலங்கையில் 1947 முதல் காணப்பட்டுவந்த மந்திரிசபை (வெஸ்மினிஸ்டர்) ஆட்சிமுறை நீக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமையாகும்.

1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபத்தில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையினை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தைக் கோரியிருந்தது.

1994 செப்டெம்பர் மாதத்தில் ஸ்ரீலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட காமினி திசாநாயக்கா அவர்கள் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை 2ம் குடியரசு யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டமைக்குக் காரணத்தினை விளக்குகையில் 1970 – 1977 வரை அரசாஙகம் இலங்கையில் கடைபிடித்த அரசியல், பொருளாதாரக் கொள்கையினால் இலங்கையில் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரு பலமான நிர்வாகம் தேவை என்பதையும் கருத்திற் கொண்டே ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதித்துவ முறைக்கான அனுமதி கோரப்பட்டது. என்ற கருத்துப்படக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலங்களுக்கு முன்பே ஜே.ஆர். ஜயவர்தனா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்ததை அவதானிக்க முடிகின்றது. 1966இல் இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றிய திரு. ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் விஞ்ஞான அபிவிருத்திற்கான இலங்கை சங்கத்தின் (Ceylon Association for the Advancement of Science) 22ஆவது வருடாந்த மகாநாட்டில் உரையாற்றுகையில் “மக்கள் வாக்குகளின் மூலம் நிர்வாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். J.R. Jayawardana Hon. Minister of State. Inaugural Address; Ceylon Association for the Advancement of Science. Twenty Second Annual Session 14th December 1966. Annual Publication for 1966 Page 61)  இதன் அடிப்படை இலங்கை வெஸ்மனிஸ்டர் முறை மாற்றியமைக்கப்பட்டு,  ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதாகும்.

இது மாத்திரமன்றி 1972 இல் 1ம் குடியரசு யாப்பு விவாதத்தின் போது திரு. ஜயவர்தன அவர்களினால் இக்கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம். மேலும்,  1973இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றபின்னர் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதித்துவ முறைக்கிணங்க அரசியமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததுடன்,  1977 ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபன்திலும் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1977ம் ஆண்டு ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பொன்றை (அரசியலமைப்புத் திருத்தம்) முன்வைக்கப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் மக்களின் அனுமதி கோரப்பட்டதுடன்,  மக்களின் விருப்பத்திற்கிணங்க அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு,  அதிகாரங்களை வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

1977 பொதுத் தேர்தலில் ஐ.தே.க (5/6) பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றமையினால் இலகுவான முறையில்,  குறுகிய காலத்தினுள் முதலாம் குடியரசு யாப்பினை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பினை முன்வைத்தது. 1978.02.04ம் திகதி அமுலுக்கு வந்த இந்த புதிய அரசியலமைப்பின்படி (மக்களின் ஏற்கனவே பெற்ற அனுமதிக்கிணங்க) திரு. ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் 1978.02.04 திகதி முதல் இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

(தொடரும்.)

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனிக்கு தடை

ms-dhoni.bmpநாக்பூரில் நாளை 21ஆம் திகதியும், 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவரான டோனிக்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இவருக்கு பதிலாக இவ்விரு போட்டிகளிலும் தற்காலிகமாக கெளதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட 45 நிமிடம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள் ளது.

இந்திய வீரர்கள் மெதுவாக பந்துவீசியதன் காரணமாகத் தான் நேரம் அதிகமானது என்பது தெரிய வந்ததை தொடர்ந்து மெதுவாக பந்துவீசியதற் காக இந்திய அணி கப்டன் டோனிக்கு 2 ஒருநாள் போட் டிகளில் விளையாட ஐ.சி.சி. நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.

இந்த தடை காரணமாக இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3வது போட்டி (21ந் திகதி), 4வது போட்டிகளில் (24ந் திகதி) தோனி விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த 2 போட் டிக்கும் தற்காலிக கப்டனாக தொடக்க வீரர் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka in India ODI Series – 2nd ODI
India v Sri Lanka
Sri Lanka won by 3 wickets (with 5 balls remaining)
ODI no. 2933 | 2009/10 season
Played at Vidarbha Cricket Association Stadium, Jamtha, Nagpur
18 December 2009 – day/night (50-over match)
       
 India innings (50 overs maximum)
 V Sehwag  c †Sangakkara b Welegedara  4 
 SR Tendulkar  st †Sangakkara b Mendis  43 
 G Gambhir  run out (Mathews)  2 
 V Kohli  lbw b Randiv  54 
 MS Dhoni*†  c Dilshan b Randiv  107
 SK Raina  c Randiv b Mathews  68
 RA Jadeja  not out  12
 Harbhajan Singh  st †Sangakkara b Randiv  0
 Extras (lb 7, w 4) 11     
      
 Total (7 wickets; 50 overs) 301 (6.02 runs per over)
Did not bat P Kumar, Z Khan, A Nehra 
Fall of wickets1-4 (Sehwag, 0.4 ov), 2-19 (Gambhir, 4.1 ov), 3-81 (Tendulkar, 16.5 ov), 4-132 (Kohli, 26.3 ov), 5-258 (Raina, 46.2 ov), 6-300 (Dhoni, 49.3 ov), 7-301 (Harbhajan Singh, 49.6 ov) 
        
 Bowling O M R W Econ  
 UWMBCA Welegedara 9 0 53 1
 AD Mathews 10 1 60 1
 RAS Lakmal 8 0 57 0
 BAW Mendis 10 0 57 1
 S Randiv 10 0 51 3
TM Dilshan 3 0 16 0  
       
 Sri Lanka innings (target: 302 runs from 50 overs)
 WU Tharanga  c Sehwag b Harbhajan Singh  37 
 TM Dilshan  b Nehra  123 
 KC Sangakkara*†  run out (Raina/Khan)  21
 DPMD Jayawardene  c †Dhoni b Khan  39 
 SHT Kandamby  c Kohli b Khan  27 
 AD Mathews  not out  37 
 CK Kapugedera  b Khan  2
 S Randiv  run out (Harbhajan Singh)  5 
 BAW Mendis  not out  2  
 Extras (b 1, lb 5, w 3) 9     
      
 Total (7 wickets; 49.1 overs) 302 (6.14 runs per over)
Did not bat RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-102 (Tharanga, 13.6 ov), 2-147 (Sangakkara, 21.4 ov), 3-213 (Dilshan, 35.5 ov), 4-232 (Jayawardene, 39.1 ov), 5-264 (Kandamby, 44.3 ov), 6-267 (Kapugedera, 44.5 ov), 7-285 (Randiv, 47.2 ov) 
        
 Bowling 
 P Kumar 8 0 48 0
 Z Khan 10 0 63 3
A Nehra 10 0 74 1
Harbhajan Singh 10 0 58 1
RA Jadeja 9.1 0 42 0  
 SK Raina 2 0 11 0 5.50  
 
Match details
Toss India, who chose to bat
Series 5-match series level 1-1

தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக்காத ஜெனரல் சரத் பொன்சேகாவின் கொள்கை பிரகடனம்

sarath-fonseka-election-poll.jpg2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று காலை 11.30 மணிக்கு கண்டி ஸ்ரீ புஷ்பாதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பது பற்றியோ எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் வருமாறு

*இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவேஇ முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று, 
* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு 
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு 
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு 
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

*நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.

*நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

*யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

*முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

*ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

* ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

* நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

*கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும் என கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியில் உப தலைவர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெலங்கானா விவகாரம் மக்களவையில் மீண்டும் புயலைக் கிளப்பியதால் அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

susmaa.jpgதெலங்கானா மக்களவை வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்களுக்கு ஊதியம் மற்றும் படியை உயர்த்தும் மசோதா, உயர் நீதிமன்றங்களில் வர்த்தக வழக்குகளை கையாள தனிப்பிரிவு தொடங்குவது தொடர்பான மசோதா உள்பட 5 மசோதாக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

கேள்வி நேரம் தொடங்கியதும் தனி தெலங்கானா மாநிலத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலத்த குரல் எழும்பியது. தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் தெலங்கானாவை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய அட்டையை பிடித்தவாறும் கோஷம் எழுப்பியவாறும் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கையை சூழ்ந்து கொண்டனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு டிசம்பர் 9-ம் தேதி அறிவித்தது. அந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக கருதுகிறோம்.  இதனால் அந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இவர்களை பின்தொடர்ந்து தெலங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளைவிட்டு எழுந்து அட்டையை கையில் ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து சூழ்ந்து கொண்டனர்.  இவர்களுடன் சேர்ந்து கொண்டு தனி தெலங்கானாவை ஆதரித்து தெலுங்கு தேச எம்.பி. சுரேஷும் குரல் கொடுத்தார்.

அதைப்போல, போடோலாந்து தனி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர் எஸ்.கே.பிவிஸ் முத்தையாரியும் குரல் கொடுத்தார்.  அவரும் தனது இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி – இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

sri_election.jpgஇலங்கை யின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார். இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  மேற்படி மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

 இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசூரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (ஜாதிக சங்வர்தன பெரமுன)
புனாகொட தொன் பிரின்ஸ் சொலமன்
அநுர லியனகே (ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத பெரமுன)
ராஜபக்ஷ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாஹு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம்.இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.ஜீ.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருஹுணு ஜனதா பக்ஷய)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கைஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

உலமா சபையின் செயற்பாடுகளில் அரசியல் சாயம் பூசவேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpgஉலமா சபையின் நடவடிக்கைகளில் அரசியல் சாயம் பூச முனைய வேண்டாமென மெளலவி நியாஸ் முஹம்மத் (கபூரி) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

அண்மையில் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இவ்வாறான விஜயங்கள் ஜனநாயக உரிமையாகும்.  அவரவரின் தெரிவுமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பக்க சார்புகளின்றி நடுநிலைமையாய் சமய, சமயோசித வழியில் வழிநடத்த ப்படும் முஸ்லிம்களுக்கான ஒரு பொது ஸ்தாபனமாகும்.

இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகா வந்துசென்றதை சிலர் தவறாக விமர்சிக்கின்ற கதையும் அரசியலாக்க முனைகின்ற கதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது விடயத்தில் பிழையாக நடந்துகொண்டதாகவும் அதற்காக எதிரணி உலமா சபை ஒன்று உருவாகி உள்ளதாகவும் கதை ஏற்படுத்தி பிரசாரம் செய்வதும் ஒரு வகை அரசியல் இலாபம் ஈட்ட முன¨யும் காரியமாகும்.

உலமா சபை தலைமை பீடத்திற்கு ஜனாதிபதி அபேட்சகராக களமிறங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா வருகை பற்றி கட்சி உணர்வில் உந்தப்பட்டசிலரின் தனிப்பட்ட வித்தியாசமான கருத்துகளின்றி அது மேல் மட்டத்தில் வெளியான கருத்தல்ல. 16.12.2009ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக உலமா சபையின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்திய போது ஜனாதிபதி புன்னகை பூத்தவராக ‘மெளலவி அவர்களே இதுவெல்லாம் யார் சொன்னகதை’ அப்படி நான் கருத்துக்கள் கொண்டவனுமல்ல இதற்கு எதிராக விமர்சனம் செய்பவனுமல்ல.

உலமா சபை என்பது உலமாக்களின் சமயத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் மத ஸ்தாபனமாகும். அங்கு எவரும் வரலாம், வாழ்த்தும் பெறலாம். அவர்களுக்காக ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்த எனக்கு அவர்கள் நன்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்ததும் எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அந்த உலமா சபை தலைமையகத்துக்குச் செல்ல ஆசைதான். பாதுகாப்பு நலன் கருதி நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மூலம் உலமா சபை உலமாக்களை எனது இல்லத்தில் சந்திக்கவும் நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

இது ஒரு பெரிய விவகாரமும் அல்ல. இதை எனது சார்பில் உலமா சபைக்கு அறிவிக்க தாங்களுக்கு அனுமதி தருகிறேன் என ஜனாதிபதி கூறியதை நினைவூட்டி உலமா சபையை பிரிக்க முனைகிறார்கள் என்ற பிரசாரங்களை விளங்கிக் கொள்வது நல்லது என கருதுகிறேன். எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுண்டு. ஆனால் உலமா சபையையும் உலமாக்களையும் அடகு வைக்காமல் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் அவரவரின் அரசியலைத் தொடரட்டும்.’ என அறிவுரை வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியதை நியாஸ் மெளலவி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்து – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

dayananda_disanayake.jpgநடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.

இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.