கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

SLDF Calls for National Attention on Demilitarization and a Political Solution

Introduction

Eight months after the end of the war, and despite upcoming national elections, no meaningful action has been taken to address the political problems that have plagued Sri Lanka since independence and that are the root causes of the last twenty-five years of war. Sri Lanka Democracy Forum (SLDF) is deeply concerned that the Rajapaksa government has failed to address the humanitarian plight and political concerns of minorities. Instead, this government has attempted only to cynically consolidate its own power base by continuing the authoritarian and repressive measures that came with the war. In the months since the war ended, Tamils and other minorities have been further alienated; they remain bitter and continue to distrust the State. The polarisation and alienation of Sri Lanka’s communities caused by the physical and social devastation of war can only be addressed through a process of democratisation and a political settlement.

The Government’s victory over the LTTE came at an unacceptable and incalculable cost to civilians because the government single mindedly pursued the defeat of the LTTE. However, in spite of the terrible humanitarian tragedy that marked the final stages of the conflict, the end of the war carried with it a fragile hope for peace, justice, and democracy. At this late stage, the process of building a nation where Sri Lankans from all ethnic and religious communities can live together as equal citizens needs to become the priority. To this end, SLDF demands that this and any future Government:

•immediately address the humanitarian concerns of, and introduce a credible process of resettlement for, all the war-displaced;
•immediately address pressing human rights concerns and end the climate of impunity, which includes repealing the Prevention of Terrorism Act and lifting the state of Emergency;
•begin the process of post-war demilitarisation, including dismantling the High Security Zones, demobilisation, and drastically reducing the size of the armed forces;
•pursue reconstruction and development initiatives in an equitable fashion with local participation, which empowers the people at all levels of society and which gives all Sri Lankans a stake in peace;
•implement the Constitutional provisions in the 13th and 17th Amendments in full;
•move on a permanent political solution to the problems facing the country – and the minorities in particular – through far-reaching state reform and constitutional change. This requires substantial devolution of power to the regions and power-sharing at the centre, and ending the centralised rule embedded in the Executive Presidency and the unitary structure of the state.

Political Reconciliation and a Constitutional Solution

For decades, it has been recognised that only a permanent political solution will redress the grievances of minorities, and create the foundations for a pluralistic, multi-ethnic society. However, in the final years of the conflict, and even after the war ended, the government showed little interest in a constitutional political solution and in fact tried to bury it. The two major candidates in the upcoming presidential elections have been silent, if not regressive, on the issue of a far-reaching political settlement. Promises of ensuring freedom and equality without a credible political process are bound to be empty. Sri Lanka’s post-Independence history reveals the pitfalls of majoritarian democracy and the resulting majoritarian state. Any serious attempt at political reconciliation must focus on the grievances of minorities and the urgent need for fundamental state reform. The confidence and trust inspired by this process is required for the long path towards remedying the nationalist mobilisation, virulent war propaganda and poisonous political rhetoric that have scarred relations between different communities.

SLDF calls for significant constitutional changes. These changes should address the centralisation of power inherent to the unitary structure of the state and the Executive Presidency, both of which have authoritarian tendencies. There needs to be substantial devolution of power to the regions, the independence and non-interference of which can only be ensured under a nonunitary structure of the state. Furthermore, the concerns of the minorities should also be addressed at the centre through due representation in a bicameral legislature.

SLDF also calls for the immediate and full implementation of existing provisions in the constitution that can address the needs of devolution and governance reform. The 17th Amendment, by constituting the Constitutional Council, will help ensure the independent functioning of the National Police Commission, the Judicial Services Commission, the Public Services Commission, and the National Human Rights Commission. Second, the full implementation of the 13th Amendment will be an important first step to begin the process of devolving powers to the region.

Demilitarisation and Democratisation

The Government attributed its increasingly repressive measures to the exigencies of war and the security threat posed by the LTTE. The LTTE has decisively been eliminated, and yet these measures have not abated. The Government should signal a break from the past and immediately repeal the Prevention of Terrorism Act (PTA) and lift the state of emergency. The PTA and
Emergency rule have been in place for over thirty years, and have contributed to the steady erosion of rule of law in Sri Lanka, inhibited reform of the judiciary and police, and resulted in the abuse of state power. Such abuses have had a disproportionate impact on the North and East, and minority communities in particular.

Demilitarisation is an essential pre-requisite to democratisation. To this end, SLDF calls on the Government to dismantle the High Security Zones (HSZs), demobilise and reduce the size of the military, and cut defense spending. Expanding the military is the prerogative of a state in a time of war, and any process of post-war democratisation should prioritize demilitarisation. Political rhetoric in the country about the discipline of the military and its possible role in reconstruction come with the dangers of authoritarianism.

Humanitarian Concerns: Internment and Resettlement

The Government conducted the war without anything approaching adequate regard for civilian lives. Instead, it focused single-mindedly on defeating the LTTE and paid scant attention to the thousands of civilians trapped in the fighting, and who lost their lives, limbs, and loved ones. The LTTE showed a similar disregard for the welfare of civilians, with consistent and credible accounts that they fired at civilians fleeing the conflict. Indeed, there are serious allegations of war crimes and other serious breaches of international law committed by both sides against civilians trapped by the fighting.

The Government’s disregard for Tamil civilians continued in the aftermath of the military defeat of the LTTE. The most shameful demonstration of this was the detention of hundreds of thousands of internally displaced persons (IDPs) in internment camps. Traumatised civilians who survived the final months of fighting were deprived of any freedom of movement, and were detained in extremely poor conditions. The Government claimed – throughout the months following the war, and in assurances to the UN and in a joint statement with India – that it will resettle the bulk of the IDPs by the end of 2009. The long awaited freedom of movement only came in December 2009. But, what is now amply clear is that the Government has no considered approach to the issue of resettlement of the IDPs. Sources working with IDPs claim that only about 40,000 people have begun the difficult process of resettlement in the Vanni. An estimated 80,000 IDPs are now living in Jaffna Peninsula to avoid the trauma of remaining in the places of their previous internment. Furthermore, close to 80,000 people continue to reside in the camps that the Government claims it wants to close by the end of January 2010.

In addition, approximately 12,000 individuals are being held in separate detention facilities on the basis of alleged ties to the LTTE. These detainees are being held in unidentified and irregular facilities to which even the ICRC has been denied access, in breach of international law, and without access to the judicial process required by Sri Lankan law. Sri Lanka’s worrying history of torture, extrajudicial detention and extrajudicial killings raises serious concerns about the conditions of the detained, regardless of their past role or affiliation to the LTTE.

The decades of war have seen multiple bouts of displacement and eviction of not only the Tamil community, but also the Muslim and Sinhala communities. The process of resettlement has to be open to addressing the concerns of all communities and has to be done in the spirit of reconciliation to foster inter-ethnic relations, where access to lands, waters and resources are bound to be fraught with local grievances.

Human Rights Concerns: Impunity and Attacks on Media

The decades of war have resulted in a climate of fear and impunity. Virulent rhetoric and threats have been used to silence any serious discussion about past and ongoing human rights abuses. Indeed, the inability of domestic mechanisms and local movements to address these human rights concerns has brought international attention on Sri Lanka’s troubling record of human rights.

If there is to be reconciliation, any society devastated by war needs to go through the difficult process of addressing past violations and must provide the space for people to speak about their suffering and the abuses they faced. The Government has consistently suppressed the truth and demonstrated its unwillingness to take human rights concerns seriously. This is evident from the Government’s interference in many of the commissions it has itself appointed, and their resulting failure, including the much internationalised Commission of Inquiry on sixteen grave human rights abuses. The extrajudicial killing of five youth in Trincomalee on 2 January 2006 and the massacre of seventeen ACF aid workers in Muttur on 4 August 2006 are cases in which, despite credible evidence pointing to specific perpetrators, no progress has been made due to state interference. The lack of credibility of Government-appointed commissions has prompted calls for international commissions including war crimes investigations, setting Sri Lanka further on a confrontational path with international actors and the United Nations.

In the context of the failures of domestic human rights mechanisms over the decades and with a view towards building a human rights culture in the country with justice towards all, there is a need for credible international investigations into grave human rights abuses and war crimes committed throughout the decades of war, including to address the thousands of civilians killed during the last months of the war. International investigations under the auspices of the United Nations will be far more impartial than any domestic process in the near future. It is imperative that these investigations be credible to all communities in Sri Lanka if they are to remedy the alienation and bitterness caused by the brutalities of war. However, past experience has shown
that international investigations can crowd out domestic processes and actors, to the detriment of fostering a domestic culture of human rights. Moreover, international investigations are themselves subject to the vagaries of the changing political interests and priorities of international actors. As such, international investigations should work with a range of actors inside Sri Lanka, including the state structures, the broader public and particularly those citizens of Sri Lanka whose kith and kin bore the brunt of the decades of war.

During various cycles of the past thirty years of war, criticism and dissent have ruthlessly been silenced by the Government, the LTTE, and other armed actors. One of the first casualties of the recent military campaign was – and remains – media freedom. The Government suppressed critical and balanced coverage of its war effort, keeping Southern constituencies ignorant of the costs of its campaign and preventing them from holding it to account. An open, critical, and vigilant media is necessary for the emergence of a democratic and pluralistic Sri Lanka. To this end, the Government should prioritize independent investigations into the killings and physical assaults on journalists. The Government should also ensure that state institutions, including the police, stop abusing their powers through the intimidation and harassment of journalists and dissenting opinion makers.

Reconstruction and Development

The Government’s approach to post-war reconciliation has been to emphasise solely the reconstruction of the North and East, in a centralised process which has been driven by Colombo. Any process of reconstruction that does not address human rights and political concerns, and allow for the participation of local communities, is bound to fail.

While the Government is focused on building infrastructure in a centralised manner, it must work with the UN in a transparent process that provides greater confidence and addresses the concerns of people of the North. The livelihoods of farming and fisher communities are being undermined by their need for better access to lands and seas in the North. Also, there is a prevalent feeling in the North that it is being treated merely as a passive market for Southern goods, that investment in Northern communities is lacking, and that there is no process for their participation in the reconstruction and development initiatives. Employment creation for those who lost their livelihoods due to the war is a priority, and it should not be subject to the vagaries of state patronage. Any centralised process of reconstruction without adequate local and minority representation is likely to be detrimental to inter-ethnic relations in the future.

Conclusion

The Government’s conduct during the final months of the war, and in its aftermath, has served only to alienate minorities from the Sri Lankan state. Indeed, the promise to make serious efforts towards reconciliation and the forging of a political solution has not been kept. The Government has demonstrated a lack of vision and resolve on fostering reconciliation among the different
communities of Sri Lanka, all of which have suffered during the twenty-five years of war.

Following the upcoming elections, and regardless of who is elected, the Government should move immediately on demilitarisation, address the concerns of the displaced, and put in place the necessary mechanisms to arrest impunity and the abuse of power. And, it should address urgent reconstruction and development needs with a view towards enhancing reconciliation, which
should also motivate its efforts at redressing impunity and repealing repressive legislation. Finally, the Government should embark on an agenda of major constitutional reform that devolves power to the regions and power-sharing at the centre and guarantees that all Sri Lankans, regardless of their ethnic or religious identity, are equal and free citizens.

SLDF is concerned that neither of the major candidates has addressed the two most pressing needs facing the country in their election campaigns: demilitarisation and a political settlement. The elections have opened up space for dissent and the raising of political issues, and this space has to be expanded through a process of democratization. Moreover, issues that are not being
raised by politicians have to be raised by others in the public sphere. In that context, civil society actors comprising academics, religious clergy, journalists and activists concerned about rights, pluralism and democratisation, have to take the lead in challenging those at the helm of state power to address these important issues. The suffering that the peoples of Sri Lanka have faced throughout the decades of war calls for such a national focus to ensure a sustainable and just peace.

Sri Lanka Democracy Forum
SLDF Statements are drafted by its twenty member Steering Committee
18 January 2010
e-mail: contact@lankademocracy.org
www.srilankademocracy.org

Read as PDF

வெற்றி பெறுபவர்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா?: வாசுதேவன்

பதவிக்கு வரும் ஒருவரை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தில் சிலவேளை ஒரு அரசியல் ஆதாயம் இருக்கலாம். ஆனால் ஒருவரை மீளவும் பதவிக்கு வரவைக்க கூடாது என்ற பழி வாங்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தர எடுத்திருக்கும் முடிவு சரியானதா என்ற விவாதமே தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள விவாதமாகும். ஆனால் 30 வருட காலமாக தமிழ் பேசும் மக்கள் எந்த அரசியல் உரிமைக்காக போராடினார்களோ அந்த போராட்டத்தை நிவர்த்தி செய்ய குறைந்த பட்சம் விரும்பும் பிரதிநிதிகளையாவது ஆதரித்திருக்கலாம் என்ற ஆதங்கமும் பலர் மனதில் தோன்றியுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்யிடும் 20 பேரில் மிகவும் புதிய திட்டங்களுடன் ஒரு உண்மையான மாற்றத்தை தேடி நிற்கும் ஒரு வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியலில் அக்கறையுள்ளவர்களிற்கு தெரியாமல் போனது மிகவும் வேதனையான ஒரு விடயம். இங்கே தான் தனியே வெற்றி பெறும் வேட்பாளர்கள் நோக்கிய ஒரு பார்வை புலனாகிறது.

கட்சியில்லா மக்கள் அரசியலதிகாரம் என்ற கோஷத்தின் அடிப்படையில் சுவராஜ்ய என்ற அமைப்பு அரசியல் அதிகாரம் மக்களாகிய நமக்கே என்ற மாற்றத்தினை கொண்டு வருவதினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை சுயேட்சையாக நியமனம் செய்துள்ளது. இன்று தேர்தலில் நிற்கும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் மீளவும் இனங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் பேச்சுகளை பேசி வருகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தை மிகவும் முனைப்போடு பேசும் அதேநேரம் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் சில சலுகைகளை இவர்கள் ஏலம் போடுகிறார்கள். ஆனால் மக்களின் உண்மையான விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்கள் வெல்ல முடியாதவர் என்ற ஒரு காரணத்திற்காக ஓதுக்கப்படுவதுடன் அவர்கள் சொல்ல வரும் செய்தியையும் இந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது மிகவும் வேதனையானது.

பிளவுகளை ஏற்படுத்தும் இந்த அரசியற் கட்சிகளுக்கு மாற்றாக சுதந்திரம் என்பது அடி மட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும், ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடையதாகவும் தனது விவகாரங்களை தானே கையாளக் கூடிய ஆற்றல் மிக்கதாக வளரவேண்டும் என்ற காந்திய கொள்கையை பின்பற்றும் சுவராஜ்ஜியவின் சார்பில் போட்டியிடும் திரு யு. பி விஜேகோன் தமிழ் பேசும் மக்களிற்கு மிகவும் அறிமுகமானவர். சுவராஜ்யாவின் அரசியல் அமைப்பு இனவாதத்தால் பிரிந்து போயுள்ள நாட்டை மீள இணைப்பதுடன் மக்கள் தமது சொந்த தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் புதிய திட்டம். இதில் அரசியல் கட்சிகள் கிடையாது! மாறாக 14500 கிராம சபைகளும் சுதந்திரமான சுயாட்சி அலகு முறைக்குள் உட்படுத்தப்படும். நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்புடைய ஒவ்வொரு படிமுறையும் இந்த கிராம சபைகளில் இருந்தே ஆரம்பிக்கும்!

இவ்வாறு மக்களிடம் மீள ஆதிகாரங்களை கையளிக்கும் வகையிலான திட்டங்களை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு 60வருட காலமாக காலனித்துவ ஆட்சியார்கள் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பை உதறித் தள்ளி விட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அரசியல் அமைப்பை மீள புதுப்பிக்க முனைகிறது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில் மக்களால் திருப்பியழைக்கும் உரிமையையும் இது உத்தரவாதம் செய்கிறது. இது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒரு அமைப்பு எனவே இதைப்பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என்பதே அனேகரின் வாதம். ஆனால் புதிய அரசில் மாற்றம் ஒன்றை ஆரம்பிக்க எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் என் இந்த மாற்றமாக இருக்க கூடாது?

அரசியல் அதிகாரங்கள் குவிந்து போயுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அல்ல யு பி விஜேக்கோனின் நோக்கம். அந்த புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாட்டும் முகமாக ஒரு செய்தியாளனாகவே இவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். யு பி விஜேக்கோன் வெறும் வார்தை ஜாலங்களுக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது ஒரு வேட்பாளரை தோற்க வைப்பதற்காகவோ இந்த தேர்தலில் நிற்கவில்லை. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை இவர் மந்திரியாக இருந்தபோதே சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தியவர். கிராம சபைகள் கூடிய அதிகாரங்களை பெற இவர் அதிகாரத்தில் இருந்தபோதே பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் இவர் கிராமசபைகளை மறு சீரமைத்ததுடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை வலுவூட்டினார். அரசியல் அதிகாரம் அடிமட்ட மக்களிடமிருந்து வரவேண்டும் என்ற தன் கொள்கையை யுஎன்பி ஆட்சிக்காலத்திலும் அறிமுகப்படுத்திய ஒருவர். யு பி விஜேக்கோன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 1980களில் யாழ் மாவட்ட அமைச்சராக பதவி வகித்தவர். அமரர் திரு அமிர்தலிங்கத்தாலேயே பாராட்டப்பட்ட ஒரு மனிதர். அவரின் மனித பண்புகளுக்காக யாழ் மக்கள் அவரை கௌரவித்தனர்.

இவ்வாறு இலங்கை அரசியலில் உண்மையான மாற்றத்தை தேடும் ஒரு நேர்மையான மனிதர் தமிழ் பேசும் கட்சிகளின் கண்களுக்கு தெரியமால் போனதன் காரணம் என்ன? விஜேக்கோன் விரும்பும் மாற்றத்தால் இந்த அரசியல்வாதிகளிற்கு ஒரு இலாபமும் இல்லாமல் போய்விடும் என்பதாலா? அல்லது கட்சிகள் இல்லாது போனால் தங்கள் இருப்பே போய்விடும் என்பதாலா? மக்களின் விடுதலையை நேசிக்கும் எந்த ஒரு சக்தியும் இந்த மாற்றத்தை விரும்பும். கடந்த முப்பது வருட காலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காக தமிழீழ தனியரசமைக்க முனைந்த தமிழ் தேசியம் கிராம ராஜ்யம் என்ற அமைப்பின் ஊடக அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதா? தேசிய விடுதலைப் போராட்டதில் புலிகளிற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தமது ஆதரவை செலுத்திய இந்தக் கூட்டமைப்பினர் கண்களுக்கு மாநில சுயாட்சி தான் தெரியுமா? அதைவிட மக்களிடம் அதிகாரங்களை வழங்க கூடிய கிராமிய சுயாட்சி இவர்களின் கண்களிற்குத் தெரியாது போனதன் மர்மம் என்ன?

இந்த உலகத்தில் நீங்கள் காண விரும்புகின்ற அந்த மாற்றம் நீங்களேயாக வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வாசகங்கள் பொறித்த சுவராஜ்ய அல்லது கிரமா ராஜ்ய என்ற அமைப்பின் தேர்தல் துண்டுப்பிரசுரம் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் இதை யாரும் கண்டு கொள்ளாது விட்டது நாம் தொடர்ந்தும் வெற்றிபெறக் கூடியவர்களை மட்டுமே ஆதரிப்பதாக முடிகிறது

”தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும்” – தேர்தல்கள் ஆணையாளர்

election-commisone.jpgஜனாதிபதி தேர்தலுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். மாவட்ட மட்டடங்களில் தேர்தல் அத்தாட்சி அலுவலர்களும் நாடாளாவிய ரீதியில் தனது உதவி ஆணையாளர்களும் தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தகால போரினால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,புத்தளம் கொழும்பு,களுத்துறை,கம்பஹா, குருணாகல்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் எனவும் தயானந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

ஆறாவது ஜனாதிபதியும் புலி(சிவா)ஜியும்: முகம்மது நிஸ்த்தார்.

mahinda ,sarath2010 ல் இலங்கையின் 6ம் ஜனதிபதிபதியை தெரிவதற்கான காலம் முன்னகர்த்தப்பட்டது ஒரே ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும். அதாவது நவீன துட்டகெமுனுவான இன்றைய ஜனாதிபதியின் புலி பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றி சிங்கள மக்கள் மனங்களில் இருந்து காய்வதற்குமுன் இரண்டாம் முறையும் இலகுவாக பதவிக்கு வரவேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் விடயங்கள் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்வதாகவும் ராஜபக்சவின் வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதிலும் இரண்டாம் சுற்று இல்லாமலே அந்த வெற்றி அமையுமானால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற கூற்றும் நிலவுகிறது. அதே நேரத்தில் சரத் பொன்சேகாவின் வருகை என்பது கடைசி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வந்த சாரா பெளின்னின் வருகைக்குச் சமனானதாகவும் அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் ஆனால் அது எப்படி மெக்கெய்ன்னின் வெற்றிக்கு வழி சமைக்கவில்லையோ அப்படியே சரத் பொன்சேகா(ரனில்) வெற்றி சலசலப்புடன் நின்று விடுமென்றே பேசப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜபக்ச தோல்வியடைவதை விட அவர் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் நிறையவே உள்ளன என்பதை நாம் மறக்க முடியாதுள்ளது. 30 வருட பயங்கரவாத நோய் குணமாக்கப்பட்டுள்ளதும், ஜனாதிபதி ஜே.ஆர் நாட்டை பிரிக்க போட்ட அத்திவாரம் சுக்குநூறாக்கப் பட்டுள்ளதும், நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டுக் குழுவினர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் சந்தோசப்படும் வேளையில் தமிழ் கற்று, தமிழருடன் தமிழில் கதைக்க ஆர்வம் கொண்டவராக இருப்பதும், நாட்டின் அபிவிருத்தியில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் கடந்தகால அனுபவங்களை மறந்து தமது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதிலேயே கவனம் செலுத்துவர் என்பதில் நம்பிக்கை கொண்டவராகவுள்ளதும், சர்வதேச பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்ப வழி தேடுபவராக இருப்பதும், 180 நாட்களுக்குள் அகதிகளை சொந்த இடங்களுக்கு அனுப்புவேன் என்று கூறி ஓரளவு வெற்றி கண்டதும், வடக்கு கிழக்கின் நிரந்தர இணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உண்மை கூறுவதும், சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திக்காவின் கூற்றை நிறைவேற்றியதும், சிங்களவர் மாத்திரம்தான் இலங்கையர் என்ற சரத்பொன்சேகாவின் யுத்தகால கூற்றுக்கப்பால் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற பேதமில்லை எல்லோரும் இலங்கையர்(?) என்று கூறுவது போன்ற பல்வேறு அடிப்படை காரணங்களுடன், திடீர் விலை குறைப்பு ஏற்பாடுகள், சம்பள உயர்வு அறிவிப்புகள் என்ற சில்லறை காரணங்கள் கூட மகிந்தாவின் வெற்றியை உறுதி செய்யப் போதுமானதாக பேசப்படுகின்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி த.தே.கூ ( TNA ) க்கும் சரத் பொன்சேக்காவிற்கும் இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் நாட்டை பிரிக்க எடுக்கும் பாரதுரமான தேசத்துரோகமாக சிங்கள மக்களிடையே சொல்லப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக த.தே.கூ யின் புலி ஆதரவு நிலைபாட்டை முன்னிறுத்துகின்றார் ராஜபக்ச. எனவே இவையெல்லாம் இவர் வெற்றி பெறுவார் என்றே கட்டியம் கூறுகின்றன.

இருப்பினும் ராஜபக்ச வெற்றி பெறுவார் அல்லது தோற்றுபோவார் என்பதற்கு அப்பால் இவரை வெற்றிபெறச் செய்ய வேண்டிய வலுவான காரணங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

sarath.jpgஅதற்கு இசைந்தாற்போல் முதலில் மற்றைய முக்கிய இரண்டு வேட்பாளர்களான சரத் பொன்சேகாவையும், சிவாஜிலிங்கத்தையும் சற்று தொட்டுச்செல்ல வேண்டியுள்ளது. பொன்சேகாவைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று ராஜபக்ச குடும்பத்துக்குப் பாடம்புகுத்தல், இரண்டு சிறுபான்மையினரை அவர்களின் இடத்தில் வைத்தல். ஆக இவருக்கு நாட்டின் அமைதியில், அபிவிருத்தியில் அக்கறை இல்லை. ரனில் விக்கிரமசிங்கவின் அரசியல் மதிஈனத்தால், தன்னால் என்றுமே ஜனாதிபதியாக வரமுடியாத நிலையில், தன்னால் முடிந்த ஆகக்கூடிய கைங்காரியத்தைச் செய்யும் முகமாக பொன்சேகாவைத் தன் கட்சியூடாக பொது வேட்பாளராக அமர்த்தியுள்ளார். தட்டில் வைத்துக் கொடுத்த பலகாரத்தை யார்தான் தட்டிக்கழிப்பர். தன் புதிய திட்டத்துக்குக் கனிந்து வந்த சந்தர்ப்பம் இது பொன்சேகாவிற்கு, சும்மா இருப்பாரா, ஆகவேதான் 13+ என்றும், ஜனநாயகத்தை கட்டிகாத்தல், மனித உரிமை, அது இது என்று தனக்குச் சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் பேசுகிறார். தற்போதய அரசியல் நகைச்சுவையாளர் இவரே. போதாக்குறைக்கு த.தே.கூ.யின் ஒத்துழைப்பு பொன்சேகாவை பொறுத்தவரை பழத்துடன் கூடிய பலகாரத்தட்டு. ஆனானப்பட்ட ரனிலுக்கே புத்தி பேதலித்துவிட்டதென்றால் சம்பந்தருக்குக் கேட்கவாவேண்டும். ஆள் மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தாங்கள் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்ட எடுக்கும் முயற்சியே இது என்பதைக்கூட விளங்கமுடியாத அளவுக்கு வயதாகிவிட்டது போலும்.

வாக்களிக்கும் உரிமை எமது ஜனநாயக உரிமை என்பதால் நிச்சயம் வாக்களித்தே ஆகவேண்டும் என்பதில்லை. வாக்கு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பதென்பதும் எமது ஜனநாயக உரிமையே. கடைசி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத போது உணரப்படாத இந்த உரிமை இப்போது மாத்திரம் உணரப்பட்டது விசித்திரம் மாத்திரமல்ல இது ஆபத்தானதும் கூட. மொத்தத் தமிழ் வாக்காளர்களும் இந்த தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டலாம். இரண்டு போர்க் குற்றவாளிகளில் யாருக்கு வாக்களித்தாலும் தம்மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே த.தே.கூ யின் பொன்சேகா சார்புநிலை என்பது அவர்கள் சுட்டும் ஒட்டுகுழுக்களின் நிலைக்கு ஒப்பானது. பொன்சேகா பொதுவாக சிறுபான்மையினருக்கு, குறிப்பாக தழிழருக்கு எதிரானவர் என்பதை விட முழு நாட்டையுமே ஒரு சிக்கல் நிலைக்கு கொண்டுசெல்வார். புதிய ஒரு மியான்மர் (பர்மா)ரை ஆசிய கண்டத்தில் ஏற்படுத்துவார், நாளடைவில் பாக்கிஸ்தான் மாதிரியான நாடாகவே இலங்கையைக் கட்டியெழுப்ப வழி சமைப்பார்.

நாடா அது எக்கேடும் கெடட்டும், அதன் பிரைஜைகளா அது அவர்கள் பாடு, தமிழரா அவர்கள் எப்போதும் ஏமாறியே பழக்கப்பட்டவர்கள் அது பெரிய விடயமே இல்லை. எமக்கு பழிவாங்கலே முக்கியம். அடுத்த பொதுத்தேர்தலே எமது குறிக்கோள் என்றால் த.தே.கூ யின் இந்த சந்தர்ப்பவாதத்தை நாம் குறை கூற முடியாது. ஆனால் இந்த சந்தர்ப்பவாதத்திற்கு ராஜ தந்திரம், தமிழர் தொடர்பான நீண்டகால நோக்குதல் அது இது என்றால் இதைவிட ஒரு அரசியல் கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. த.தே.கூ யின் நிலைப்பாடு சரியானதே என்று புலம்பெயர் தமிழ் (புலி) மக்கள் கூக்குரலிடுவது அவர்களும் நாட்டில் வாழும் தமிழரைப்பற்றி, தமது சொந்த பந்தங்களைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஆக பொன்சேகாவும், த. தே. கூயும் ஒரே மாதிரி சிந்திப்போர், ஒரே திசையில் செல்வோர்.

சிவாஜிலிங்கத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாடு சரியாயினும், தான் தனித்து நின்று தமிழ் மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்ப்பது சிங்கள அரசிற்கு ஒரு சவால் மாத்திரமல்ல அது தமிழர், சிங்கள இறையாண்மையை ஏற்க்கவில்லை என்பதை நிரூபிக்க கிடைக்கும் சந்தர்பம் என்றாலும், அவரின் கடந்தகால நடவடிக்கை அவரில் கட்டுக்கடங்காத சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

sivaji.jpgகடைசிக் கட்ட போராட்ட காலத்தில் இந்த ஜீ மேற்கு நாடுகளில் புயல் பயணம் செய்து, அனல் கக்கும் பேச்சுக்கள் பேசி தமிழ் (புலி) மக்களை சுயசிந்தனை இழக்கச் செய்தார். அவர் கைகளிலும் இரத்தக்கறை உள்ளதென நாம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டினோம். ஏனெனில் புலிகளால் மனிதக் கேடயமாக நிறுத்தப்பட்ட மக்கள்பற்றி அன்று இவர் வாய் திறக்கவில்லை. அதை விடவும் பின்வரும் சம்பவம் இந்த ஜீ எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மே 03, 2009. தமிழ் சட்டத்தரணிகளின் முதல் கட்ட உண்ணாவிரதம். பாராளுமன்ற சதுக்கத்தில், தீபம் தொலைக்காட்சிக்கு ஜீ பேட்டி கொடுத்து முடிந்த கையோடு அவரின் முதுகில் தட்டி, ‘மிஸ்டர்.சிவாஜிலிங்கம் நீங்கள் தானே புலிகளுடன் நெருக்கமானவர், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடன் பரிச்சையமானவர், மேற்குலக தமிழ் மக்களுக்கும் நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் உறவுப்பாலம் அமைப்பவர். ஏன் நீங்கள் புலிகளுடன் பேசி சர்வதேசத்தின் ஊடாக ஆயுதங்களை ஒரு பொதுவான நாட்டிடம் ஒப்படைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரக்கூடாது. அங்கே தமிழர் அல்லவா சாகடிக்கப்படுகிறார்கள்’ இப்படி நான் கேட்க, சிவாஜிலிங்கத்தின் பதில் ‘ஐயா, இப்போது நாம் தமிழீழம் காணாவிட்டால் நாம் எப்போதும் பெறவே முடியாது. புலிகள் இப்போது ஆயுதங்களை கைவிட்டால் அது தமிழரின் தற்கொலைக்குச் சமனாகும்’ என்றார். இது மாத்திரம் இல்லாமல் இவர் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே கோசம் எழுப்பினார், புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்ததை ஒருபோதும் கண்டிக்கவில்லை என்பது மாத்திரமல்ல அதை கண்டுகொள்ளவுமில்லை.

ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் தேசம்நெட்ருக்கு பேட்டி வழங்கும் போது புலிகள் ஆயுதங்களை சர்வதேச நாடொன்றில் ஒப்படைக்காமல் கடைசிச் சண்டையின் போது நடந்து கொண்டவிதம் பிழையானது என்ற பொருள்பட கூறியுள்ளார். எனவே என்னிடம் கூறியது சரியாயின் தேசத்திடம் கூறியது பிழை. தேசம்நெட்டிடம் கூறியது சரியாயின் என்னிடம் கூறியது பொய். ஆக இவர் ஒரு சந்தர்ப்பவாதி. நிரந்தர கொள்கை இல்லாதவர். இவரின் கவலை எல்லாம் இந்த ஜனாதிபதி தேர்தல் அல்ல. எதிர்வரும் பொதுத்தேர்தலே. இதை விடவும் நகைச்சுவை என்னவென்றால் இவரின் தேர்தல் பிரவேசம் நிபந்தனைகளுடன் கூடிய ஒன்று. அதாவது சிங்கள வோட்டுக்கள் இரண்டாக பிரிந்தால், முன்னிலை வேட்பாளர்கள் 50% ஓட்டுக்கள் எடுக்காவிட்டால், தனக்கு ஆகக்குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகள் கிடைத்தால், அதுவே இரண்டாம் கட்ட போட்டியை தீர்மானிக்குமாக இருந்தால், தன்னை யாரும் பேச அழைத்தால் என்று நீண்டு சென்று இறுதியில்தான் பேரம்பேசல் என்று முடிகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு. மேல் சொன்னவிதத்தில் எல்லாம் நடக்கும் என்பதற்கு எந்த விதத்திலும் உத்தரவாதமில்லை. மற்றயது இவர் என்ன பேரம் பேசப்போகிறார். கடந்த 60 வருடங்களாக பேசாத பேரம் என்ன இருக்கிறது. இவர் பேரம்பேசத் தகுதியானவர் என்றால் ஏன் மே 18 வரை புலிகள் இவரை பேரம் பேச அனுமதிக்கவில்லை என்ற நியாயமான கேள்விகளுக்கு சிவாஜிலிங்கம் பதில் தரவேண்டும். எனவே இதுவரை காலமும் புலிகளின் சேவகனாக இருந்து விட்டு, மக்களைப் பற்றி கவலைப்படாமல் திடீரென்று ராஜதந்திரம் என்றால் இது மக்களை ஏமாற்றும் நயவஞ்சகமே தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஆக சிவாஜிலிங்கத்தின் களமிறங்கல் நாட்டிலுள்ள தமிழரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. இவரும் கூடவே த.தே.கூ. யினரும் தங்கள் பாராளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்வார்களாயின் அதுவே தமிழர்களுக்கு அவர்கள் செய்யும் அரசியல் ரீதியிலான கைங்கரியம். இவர்கள் எவரும் தமிழ் அரசியலை சீவியகால குத்துகைக்கு எடுக்கவில்லையே. புதிய தலைவர்கள் நாட்டுக்குள்ளே இருக்கிறார்கள் அல்லது இனிமேல் பிறப்பார்கள். ஆகவே சிவாஜிலிங்கத்தை நிராகரிப்பதும் தமிழரின் ஜனநாயக கடமை.

ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு சர்வதேசமும் ஆயுத உதவி, பொருளாதார உதவி என்பவற்றோடு அவர்களுக்கு பக்கபலமாக நின்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடாத்தியும் வைத்தனர். இதற்கான ஒரே ஒரு நியாயம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் என்பதே. இப்போது இந்த சர்வதேசத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதை தமிழர் உணர்த்த விரும்பினால் அதை இரண்டு விதமாகவே செய்ய முடியும். ஓன்று ஜனாதிபதி தேர்தலை முற்றாக நிராகரித்தல். இதன் மூலம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதியை உரக்கக் கூறி சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஒரு கெளரவமான தீர்வை ஏற்று கொள்ள தயாராய் இருத்தல். இரண்டு இலங்கையின் இறையாண்மையை ஏற்று ராஜபக்சையை வெற்றி பெற செய்வதின் மூலம் அவரை சர்வதேச சமூகத்துடன் கட்டி போடல். ராஜபக்சேயுடன் இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருக்கு அழுத்தம் கொடுப்பதோடு வெளிநாடுகளிலும் இந்த அழுத்தம் மிகவும் அவதானமாகவும் செய்யப்படவேண்டும். இந்த நாடுகடந்த தமிழ் ஈழ அரசு திட்டத்தை( இது ஒரு கேலிக்கூத்து என்பது வேறு விடயம்) ஒரு பேச்சுவார்த்தைக்கான ஊக்குவிக்கும் கருவியாக பாவிக்கலாம்.

ராஜபக்ச தனது வெற்றியுடன் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று கனவு காணமுடியாது, ஆனால் ஆயுத குழுக்களை இல்லாமல் செய்வார் என்பதை நம்பலாம். இருப்பினும் ஜனாதிபதி முறை மாற்றப்படாமல் இலங்கையில் சிறுபான்மையினர் பிரச்சினைக்கு பரிகாரம் இல்லை என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாக இருக்க முடியாது. ஆக சிறுபான்மையினர் (தமிழர், சோனகர்) ஒன்றுபடாமலும், சிங்கள நேச சக்திகளை எம்முடன் சேர்க்காமலும், சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமலும் அவர்களின் பிரச்சினைக்கு இலங்கையில் பரிகாரம் இல்லை என்பதை உணராமல், பழிவாங்கல் ஒன்று மாத்திரமே இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரின் குறி என்றால் நாம் இன்னும் ஒரு 60 வருடங்களுக்கு பழி வாங்கிக்கொண்டு, நாமும் அழிந்து நம் நாட்டையும் அழித்த பெருமையை பெற்றோராவோம்.

நன்றி- முகம்மது நிஸ்த்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்னக் காவடி : எஸ் ஜெயராஜா (பிரான்ஸ்)

voteஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இதில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் அவர்களுடன் வாக்குகளை பிரிக்க என்றுமாக, 22 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.

ஜனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் அல்லது கட்சியற்ற பொன்சேகா பதவிக்கு வந்தாலும் தன்னந் தனியனாக நிர்வாகம் நடத்துவதில்லை. தனது கட்சி உறுப்பினர்கள், அல்லது தனக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்கள் என்று அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை வைத்தே நிர்வாகம் செய்யப்படும்.

இதில் மூன்றாம் நபராக உள்ள விக்கிரமபாகு கதைக்கின்ற சுயநிர்ணயம் கேட்க நல்லாகத்தான் இருக்கிறது.  சாத்தியமா என்பதற்கான விளக்கம் இல்லை. அத்தோடு இவர் சார்ந்த கட்சி ஒரு பலமான கட்டமைப்பை கொண்ட கட்சியுமல்ல. இவருக்கு வாக்களித்து எமது மக்களின் அடிப்படை, அத்தியாவசியமான பிரச்சினைகளை இவரால் தீர்க்க முடியாது.

இரண்டாம் நபர் சரத் பொன்சேகா. இவருக்கு கட்சி இல்லை. இவரை ஆதரிக்கின்ற இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தங்களுடைய இன்றைய தேவைகளுக்கே இவரை ஆதரிக்கின்றனர். இவரோ ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்கிறார். கட்சியும் இல்லை, ஜனாதிபதியும் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார். அன்னப்பறவையில் அன்னக் காவடியா?

மற்றையது இவர் ஒரு இராணுவ உயர் அதிகாரி. சீருடையைக் கழட்டியதால் மட்டும் இவரிடம் உள்ள இராணுவமாயை அகன்று விட்டது என்பது அல்ல.

இந்திய இராணுவம் வந்தபோதும் எமது மக்கள் கும்பம் வைத்து ஆலாத்தி எடுத்து தான் வரவேற்றார்கள். அதற்காக அவர்கள் கங்கையில் குளித்து விட்டு வந்த காந்திகள் அல்ல. அவர்களின் இயல்பான குணாம்சம் தானாகவே வந்து சேரும். பாக்கிஸ்தானைப் பார்த்த பின்புமா நாங்கள் திருந்தவில்லை. மகிந்தாவிற்கு சவாலாக ஒருவரை உருவாக்க சரத் என்ற தெரிவு விஷப்பரீட்சை. புலி ஆதரவாளர்கள், புலி ஊடகங்கள் ஏன் சரத்தை ஆதரிக்க வேண்டும். இவர்தானே அவர்களின் அழிவிலும் பங்காற்றியவர். மீண்டும் இலங்கையில் அமைதியின்மையை உருவாக்கி அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் கடைவிரிக்க ஆதரிக்கிறார்கள். மகிந்த கட்சிக்கு சவாலாக எதிர்க்கட்சி உருவாகலாம். அது ஆரோக்கியமானது. மீண்டும் ஒரு குண்டு வெடிப்போ ஆயுதக்கலாச்சாரமோ எங்கள் சந்ததிக்கு வேண்டவே வேண்டாம்.

இன்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை முகாம்களில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டியதும், வெளியே வந்தவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தலுமாகும். இது ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிற விடயம். இதை யாருமே குழப்பக் கூடாது. இன்று வட கிழக்கில் சிறுசிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு இயல்பு நிலை தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களைப் பின்னோக்கிப் பாருங்கள். 2008 2007 2006 …….. இப்படியே பின்னோக்கிப் போய் ஒவ்வொரு ஜனவரியிலும் நடந்த கொலைகளைப் பாருங்கள். இந்த ஜனவரியில் அவ்வாறு எத்தனை நடந்தள்ளது? குண்டு வெடிப்புகளும் இல்லை. குண்டுத் தாக்குதல்களும் இல்லை. செல் வீச்சுகளும் இல்லை. வெள்ளை வான் கடத்துவதில்லை. பொட்டு வைக்க பொட்டர் இல்லாததால் ஒரு ஜயரோ, பேராசிரியரோ, பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.

அதற்காக நிபந்தனை அற்ற ஆதரவு என்கிற பதத்தை நாம் தவிர்க்க வேண்டும். மக்களுடன் சேர்ந்து இயங்கும் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்தவின் முன் நிபந்தனைகளை வைத்து ஆதரவளிக்க வேண்டும். அதற்காக மதகு கட்டவும், வோட்டு போடவும் தான் நாங்கள் போராடப் புறப்பட்டோம் என்பதல்ல. 36 வருடமாக நன்றாக இருந்த மதகுக்கு குண்டுவைத்தும், ஒழுங்காக இருந்த ரோட்டில் கண்ணி வெடி வைத்தும் நாங்கள் கண்டதென்ன? அன்று நவீன சந்தை கட்டிய துரையப்பாவை போட்டுத்தள்ளாமல் இருந்திருந்தால் இன்று சீனப்பெருஞ்சுவரே கட்டியிருக்கலாம்.
பிரச்சினையும் தீர்வும் அந்த மக்களுக்கு தான். இங்கு ரிவி க்கு முன் கோட்டு போட்டு வந்து ஆய்வு செய்பவர்களுக்கோ, வெள்ளவத்தையிலும் பம்பலப்பிட்டியிலும் சொகுசாக வாழ்ந்து கொண்டு பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர்களுக்கோ அல்ல. எல்லாவற்றையும் தொலைத்துப்போட்டு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்குத்தான் தீர்வு.

அந்த மக்களுக்கு இன்று செய்ய வேண்டியது என்ன?. வன்னியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை ஓடி முகாம்களில் இருந்து சொல்லொணாத் துன்பங்களை தாங்கி நின்ற போது, அவர்களைக் காப்பாற்றாமல் புலிகளைக் காப்பாற்ற பாடுபட்ட கூட்டமைப்பு – தங்கள் தலைவர்களை கொன்றவர்களுடன் கை கோர்த்த கூட்டமைப்பு – மூன்று மாதமாக முடிவு எடுக்கத் தெரியாத கூட்டமைப்பு – இலங்கைத் தேர்தலில் லண்டன் வந்து விளக்கம் சொல்லும் கூட்டமைப்பு – எந்த முகத்துடன் வோட்டு கேட்க முடியும். இவர்களுடன் ஒப்பிட்டால் சிறீதரனும் சித்தார்த்தனும் எவ்வளவோ மேல்.

எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே வோட்டுப்போட்டு இந்த ஆறு மாதம் போல் இன்னும் 6 வருடம் கழிந்தால் அவர்களும் அத்தியாவசியப் பிரச்சினையிலிருந்து நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து வாழ்வார்களே! அதுதான் இன்றைய தேவை!!.

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க ஏற்பாடு

தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணை க்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 07- புன்னியாமீன்

sri-lanka-election-07.jpgதொடர்ச்சி…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த  ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையில் 3வது ஜனாதிபதித் தேர்தல் 1994.11.09ஆந் திகதி நடைபெற்றது.  இத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவின் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆந் திகதி முடிவடைவதற்கு இருந்தது.  இந்நிலையில்தான் 4வது ஜனாதிபதித் தேர்தலை 1999.12.21ஆந் திகதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கிணங்க முன்கூட்டியே நடத்தினார். இத்தேர்தலிலும் வெற்றியீட்டிய சந்திரிக்கா குமாரதுங்க 199.12.22ஆந் திகதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

2005ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க 4வது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்கூட்டி தேர்தலை நடாத்தியதால் தமது எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்படி சந்திரிக்கா குமாரதுங்கவின் முதலாவது பதவிக்காலம் 6 ஆண்டுகாலம் முடிவடையும் நேரத்திலும் (2000 நவம்பர்) அவர் மீளவும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக வெளிக்கிளம்பிய ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் 2006 இல் தேர்தல் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டு 2005 இலேயே இடம்பெற வேண்டியதாயிற்று. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழான கட்டளைத் தேர்தல்கள் ஆணையாளரால் 2005.09.19 ஆம் திகதிய 1411/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

21.11.1999 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 21.11.2005 இல் முடிவடையவிருந்ததால் அரசியலமைப்பின் உறுப்புரை 31(3) இற்கு அமைய வேட்பு மனுக்களைக் கையேற்றல், 07.10.2005 இல் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு 17.11.2005 இல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்ததினால் அரசியலமைப்பு விதிகளின்படி அவருக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பிரதான அரசாங்கக் கட்சியின் சார்பில் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்கினர். இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தமான சுனாமிப் பேரலை ஏற்பட்ட பின் ஓராண்டுக்குள் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்திருந்தது. இத்தேர்தல் சூழ்நிலையில் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பற்ற பகுதிகளின் வாக்கெடுப்பு மாவட்டங்கள் சார்பாக பாதுகாப்பான பகுதிகளில் நிறுவப்பட்ட 294 மொத்த வாக்கெடுப்பு நிலையங்களில் 102 வாக்கெடுப்பு நிலையங்கள் முகமாலையிலும் 88 வாக்கெடுப்பு நிலையங்கள் ஓமந்தையிலும் நிறுவப்பட்டன. அவ்வாக்கெடுப்பு நிலையங்களில் 1,89,918 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அவர்களில் ஒரு வாக்காளர் மாத்திரமே வாக்களித்தார் என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும். இத்தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருசதவீதமான வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இத்தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண வாக்காளர்கள் குறிப்பாக வட மாகாண வாக்காளர் இத்தேர்தலில் வாக்களிக்காத நிலையானது மஹிந்தவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. மொத்தமாக நாடெங்கிலும் அமைக்கப் பெற்றிருந்த 10,486 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பின்போது 98,26,908 பேர் வாக்களித்திருந்தனர். 10,9,869 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 73.77% வீதமானோர் வாக்குகளைப் பிரயோகித்திருந்தனர். இதன்படி செல்லுபடியான தொண்ணூற்றி ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து முப்பத்தொன்பது வாக்குகளும் மகிந்த ராஜபக்ஸ  பெற்றுக்கொண்ட வாக்குகள் 48,87,152. அதற்கிணங்க மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலதிகமாக 28,632 வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 1419/11 ஆம் இலக்க 2005.11.18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரமானது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந் திகதி பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதுடன் இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது. பலவிதமான சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும்கூட, மஹிந்த ராஜபக்ஸ விடாப்பிடியாக யுத்தத்தை இடைநிறுத்தாது வெற்றிகொண்டு இந்த யுத்தத்தின் வெற்றி நாயகனாக வரலாற்றில் பதிவானார். சிலநேரங்களில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குரிமை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய நிலைமையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். இந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஒரு தேர்தலாகவே இத்தேர்தல் அமைகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் 2005 –

மாவட்டத் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
534,431     (47.96%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   569,627(54.12%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,624  (0.21%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  2,057  (0.18 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.  2,174  (0.20 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 775  (0.07%)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  519  (0.05%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 422 (0.04%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   601  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  398  (0.14%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   410 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F    131     (0.01%)
திரு. எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U.N.A.F  74    (0.01%)

செல்லுபடியான வாக்குகள்  1,114,250 (96.86 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  12,879  (1.14 %)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,127,129 (76.75%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,468,537

கம்பஹா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  596,698   (51.78%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 481,764  (44.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2,790 (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2,371  (0.22 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.   1,983  (0.18 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 856 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   631  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  570 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   609 (0.06 %)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 418   (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   343  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)  157    (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )   8 (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  1,089,277  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  11,724  (1.06%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,101,001  (80.71%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,364,180

களுத்துறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  341,693 (55.48%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 266,013 (43.00 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,623  (0.43%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   1,921  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.          865  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 614  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  468 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  422  (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   424  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  339  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  215  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  165   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  68    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  615,860  (98.95%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,517   (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 622,377  (81.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 764,305 

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
315,672 (44.30%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  387,150  (54.33%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,775  (0.39%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,589  (0.36 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  1091 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  717  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  487 (0.07%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  584 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   529 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  372  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   307  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   219  (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   228   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  712,620  (98.64%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  9,817  (1.36%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 722,437  (79.65%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 907,038  

மாத்தளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
120,533 (48.09%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 125,937 (50.25%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1212 (0.48%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1217 (0.49 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) .     342  (0.14%)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 360  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  224  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  228 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   208  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  141  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   95  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  76   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   51  (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  250,620 (98.51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,785  (1.49%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 254,405  (79.04%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 311,876 

நுவரெலியா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
99,550 (27.97%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   250,428  (70.37%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,622  (0.74%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,465  (0.41 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  376  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  202  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  199 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   215  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  164  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   146  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F   137     (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   84   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  355,825  (98.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,410   (1.50%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 361,285  (80.78%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 447,225

தென்மாகாணம்

காலி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  317,233  (58.11%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 239,320 (40.26%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2244  (0.38%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  173  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  892 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 517  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 469(0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   388 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  305  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P  ) 221  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  136   (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  65   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  594,468  (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,540    (0.92%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 600,008  (81.94%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 732,289

மாத்தறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)   279,411   (61.85%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 165,837  (36.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1687 (0.37%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1877 (0.42 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   554  (0.12 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  451  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   451  (0.10%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   207  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).    320  (0.07%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  140  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   119     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   74   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  451,722  (99.11%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,077  (0.89%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 455,799  (80.96%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 562,987

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  202,918 (63.43%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 112,712  (35.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1066  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1217  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  430  (0.13 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 370 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  352  (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  290  (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   162  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  196  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   84  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  100   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   28   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  319,925  (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,928   (0.91%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 322,853  (81.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396,595

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
1967  (25.00%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  5523  (70.20 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 72  (0.92%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  34  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   120  (1.53 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 24  (0.31 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  12  (0.15%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   15  (0.19%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   21  (0.27%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 
31  (0.39%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   29  (0.37%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  16    (0.20 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   4   (0.05 %)

செல்லுபடியான வாக்குகள்  7,868   (92.30%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  656   (7.70%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,524  (1.21%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 701,968

வன்னி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
17,197  (20.36%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   65,798   (77.89%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 520  (0.62%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  286  (0.34 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).          115  (0.14 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)
133  (0.16 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  71  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   68  (0.08%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி  (U.L.F)   62  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. ) 107  (0.13%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   69  (0.08%)
திரு. நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  27     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  23    (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  84,476   (98.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,388   (1.63%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 85,874  (34.30%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 250,386

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
28,836  (18.87%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   121,514  (79.51%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 892  (0.58%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 578  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   225  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 149  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  124  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  43  (0.03%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   142  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  153  (0.10%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  104  (0.07%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  59  (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  18   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  152,837  (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,778   (1.15%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 145,615  (48.51%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 348,728 

திகாமடுல்லை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
122,329 (42.88%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  159,198  (55.81 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,091  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,072  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   331  (0.38 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 188  (0.07 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   297  (0.07%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  134  (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)  203  (0.03%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  215  (0.08%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   82  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   89      (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   38    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  285,267  (98.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,941   (1.02%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 288,208  (72.70%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396453

திருகோணமலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
55,680  (37.04%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,197  (61.33 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 792  (0.53%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  588  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   276  (0.18 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 157  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  157 (0.10%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  71 (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   132  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  165  (0.11%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   67  (0.04%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    56      (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F  ) 26    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  150,334  (98.63%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,094   (1.37%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 152,428  (63.84%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 238,755

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  468,597  (52.26%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 418,809 (46.72 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2357  (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2369  (0.26 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   1142  (0.13 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 695  (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  613  (0.07%)
திரு. விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   566(0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)    524 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  363  (0.04%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   255  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   187      (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)  110    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  896,497   (99.07%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  8,458    (1.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 904,955  (80.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,124,076

புத்தளம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
160,686 (48.14%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 169,264 (50.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1063  (0.32%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 811  (0.02 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   502  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   292  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  203 (0.06%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   214  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  183  (0.05%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  175  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    72    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   31    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  333,883  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,536  (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 337,319  (71.68%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 470,604

வடமத்திய மாகாணம்

அநுராதபுரம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  231,040 (55.08%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 182,956 (43.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,378  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,448  (0.35 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  478  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 569  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 128  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  367 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   261 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. )207  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   115  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   115   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   72    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  419,434  (98.92%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,563  (1.08%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 423,997  (78.98%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 536,808

பொலநறுவை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  110,499 (52.61%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  97,142  (46.25 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  589  (0.28%) அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  683  (0.33 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   226  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  226 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  221 (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   119  (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   141 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  81  (0.04%)   
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   31  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   48    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  24   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  210,030  (99.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,002  (0.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 21,232  (80.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 263,609

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
192,734  (45.18%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   226,582  (53.11%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)
2,327  (0.55%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,990  (0.47 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 614  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 468 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  101 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  322  (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   363  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).  239 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  224  (0.05%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி  (S.P.F )  217     (0.05 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  118   (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  426,599  (98.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,825   (1.57%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 433,424  981.29%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 533,163

மொனராகலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  126,094 (56.94%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,244  (41.65 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 673  (0.30%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  943  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   239  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 295  (0.13 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  286 (0.13%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  200 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   133 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  124  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   102  (0.05%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   73   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  44   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  241,450  (98.82%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,636  (1.18%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 224,086  (81.46%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 276,109 

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  294,260 (53.01%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 252,838 (45.55 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2220  (0.10%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2122  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  795  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  645  (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  557 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  496 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   393 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 
330  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   334  (0.02%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    206 (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   78  (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  555,074  (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,510   (0.98%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 560,584  (83.89%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 668,217

கேகாலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  293,184 (51.02%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 223,483 (47.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  1804  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1457  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  707  (0.15 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  437 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  375 (0.08%)
விமல் கீகனகே ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  400 (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   355  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 231   (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   152     (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    117  (0.07 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   71    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  468,773  (98.99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,795   (1.01%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 473,564  (81.19%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 583,282

ஜனாதிபதித் தேர்தல் 2005

இறுதித் தேர்தல் முடிவுகள்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  4,887,152     (50.29%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 4,706,366 (48.43 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 35,425   (0.36%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  31,238    (0.32 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 14,458   (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  9,296   (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  7,685   (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 6,639    (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   6,357   (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  5,082  (0.05%) விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  3,500   (0.04%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   2,525 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   1,316    (0.01%)

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 13,327,160 
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,826,778
செல்லுபடியான வாக்குகள் 9,717,039
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 109,739

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   4,858,520

குறைந்தபட்ச வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    
28,632

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
180,786

மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpg‘மஸ்ஜி துகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என  நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ‘மஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL

இன்று ஹைட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgநில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

haitibuidling-pd.jpgஅதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.