கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளுக்கு தடை – பேச்சுகளுக்கான கதவை ஒருபோதும் மூடவில்லை -அரசாங்கம் அறிவிப்பு.

pre-con.jpgவிடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு (07) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) இது தொடர்பில் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து உடனடியாக அவ்வியக்கம் தடை செய்யப்பட்டதாக அரசாங்கம் நேற்றிரவு அறிவித்தது.

இத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுப் புலிகள் இயக்கம் பேச்சுக்கு வரமுடியுமென அறிவித்துள்ள அரசாங்கம் மீதான இத்தடை அரசியல் ரீதியான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எவ்விதத்திலும் தடையாக அமையாதெனவும் தெரிவித்தது. அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை ஊடகவியலாளர்களுக்கு அறிவிககும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றிரவு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மைத்திரி பாலசிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஏ. எல். எம். அதாவுல்லா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், விடுதலைப் புலிகளை இலங்கையில் ஒழித்து விடலாம். எனினும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் சகல செயற்பாடுகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இத்தடை உறுதுணையாக அமையுமென தெரிவித்தனர்.

உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிராக மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் 24 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்நாடுகளோடு இணைத்து செயற்படவும் இந்தடை பெரும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் 2009/1 ஆம் இலக்க சரத்துக் கிணங்கவே புலிகள் மீதான இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

maithiri-pala.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான பிரதான காரணம் குறித்து அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன  கூறுகையில்;  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அப்பாவிப் பொதுமக்களை வரையறுக்கப்பட்டதொரு பிரதேசத்திற்குள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி பலவந்தமாக பிடித்து வைத்துக் கொண்டு அம் மக்களின் உயிர்களையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அவசர நிவாரணங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் தடங்கல்களை விளைவிக்க வேண்டாமென்றும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தன.

விடுதலைப் புலிகளால் சட்ட விரோதமாக நிர்வகிக்கப்படும் பிரதேசத்தினுள் சிறை பிடித்தோ அல்லது ஏதாவது இடத்திற்குள் மட்டுப்படுத்தியோ வைத்திருக்கும் பொது மக்களை, அப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களுக்கு செல்ல இடமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை அலட்சியம் செய்துள்ளனர்.

அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை சட்ட விரோதமாக சட்ட விரோதமான முறையில் அந்த அமைப்பின் போராளிகளாக பலவந்தமாக இணைத்துக் கொண்டதன் மூலம் அம் மக்களின் உயிர்களுக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றின் அடிப்படையிலேயே இந்த தடை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று (நேற்று) முதல் புலிகள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படுகிறது’ என்றும் அமைச்சர் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

anura-priyatharsana.jpgஇதேநேரம், இங்கு விளக்கமளித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்; “இந்த ஒழுங்கு விதியானது 2009 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யும்) ஒழுங்கு விதியென அடையாளம் காட்டப்படும். இதன் மூலம் “தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற பெயரும் அதனைப் பெயராகக் கொண்டிருக்கும் அமைப்பும் தடைசெய்யப்படுகிறது. எனவே, இலங்கையிலோ அல்லது அதற்கு வெளியிலோ எவராவது ஒருவர் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது அந்த அமைப்புக்காக செயற்படும் நிறுவனத்திலோ உறுப்பினர் அல்லது சிப்பாயாவது அல்லது தலைமைத்துவம் வழங்குவது, சீருடை, அடையாளம், இலட்சினை, கொடி போன்றவற்றை அணிதல், காட்சிப்படுத்தல், உயர்த்துதல் அல்லது தன்வசம் வைத்திருத்தல்; கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்வது, கூட்டம் கூட்டுவது அல்லது அதில் கலந்துகொள்வது; அங்கத்துவம் பெறுவது அல்லது இணைவது; உறுப்பினருக்கோ, சிப்பாய்க்கோ அல்லது வேறு நெருங்கியவருக்கோ புகலிடம் வழங்குதல், அவரை பாதுகாத்து வைத்திருத்தல், அவருக்கு உதவியளித்தல்; ஊக்குவித்தல், மேம்படுத்தல், உதவியளித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அதற்காக செயற்படுதல் போன்ற ஏதாவதொரு செயற்பாட்டையோ அல்லது நிகழ்வை ஏற்பாடு செய்தல் அல்லது அதில் கலந்து கொள்ளல்; பணம் அல்லது பொருள் அன்பளிப்பு செய்தல் அல்லது அதற்கு பங்களிப்பு செய்தல்; பொருட்களை விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்தில் ஈடுபடுத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்; ஆதாரத்துக்கோ அல்லது பிரதிநிதித்துவத்துக்கோ உதவியளித்தல் போன்ற ஏதாவதொரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதல்; அதற்காக தகவல்களை பிரசாரப்படுத்தக்கூடாது.

இந்த விதிகளை மீறி செயற்படுவோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கொழும்பில் செயற்படும் மேல் மாகாண மேல் நீதி மன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், இந்த விதிகளுக்கு அமைய தவறிழைத்தல், தவறிழைக்க முயற்சித்தல், அதற்கான உதவி உபகாரங்களை வழங்குதல் அல்லது அதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுவோர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 10 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எவராவது ஒருவர் இந்த விதிகளின் கீழ் ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில் அதன்போது தவறை இழைக்க நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவருக்கு அப்பால் சம்பந்தப்பட்ட நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவரும் குறித்த தவறுக்கான குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் ஏதாவது நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ எவரது பொறுப்பிலும் இருக்கும் பட்சத்தில் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அமைச்சரின் எழுத்துமூல நியமத்தினூடாக அவரது பொறுப்பிலுள்ள மற்றும் நியமத்தின் பின்னர் பொறுப்பின் கீழ் வரவிருக்கும் நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ மற்றும் அந்த அமைப்பிற்குரிய வேறு ஏதேனும் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் அரச உடமையாக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிகள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதேநேரம், சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கையில்; புலிகள் சமாதான பேச்சுகளுக்கு வருவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி புலிகளுக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்தார். எனினும், அவர்கள் அதைப் புறக்கணித்து செயற்பட்டமையாலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி நேர்ந்தது. புலிகளுக்கு வாய்ப்புகள் பல வழங்கியும் அவர்கள் அதற்கு செவிமடுக்காததாலேயே வேறு மாற்று வழியின்றி அரசாங்கம் இந்த கடுமையான நடவடிக்கைக்குள் சென்றது.

மனிதாபிமான உதவிகளுக்கு பாதிப்பில்லை

இதேநேரம், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினால் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவசர வைத்திய சிகிச்சை வசதிகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படாது.

பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை

எவ்வாறிருப்பினும் பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை. பேச்சுகளுக்கு புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வர வேண்டும். ஜனாதிபதியும் ஏற்கனவே பேச்சுகள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே, இப்போதும் எந்த தாமதமும் இல்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுகளுக்கு வரலாம்’ என்று கூறினார்.

0301-ltte.jpgவிடுதலைப் புலிகள் 1998 ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகை மீது மேற்கொண்ட வாகனக் குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதுடன், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியும் மக்கள் விரோதிகளும் : சபா நாவலன்

SL_Army_in_Killinochieபிரித்தானியர்கள் இலங்கைத் தீவைத் தமது சிங்கள-தமிழ் பிரதிநிதிகளிடம் கையளித்த நாளிலிருந்து அவர்களாலேயே உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரின வாதம் மகிந்த ராஜபக்ஷ என்ற பௌத்த சிங்கள அடிப்படை வாதியின் கரங்களில் தலைவிரித்தாடுகின்றது. “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு, இங்கே ஏனைய இனங்களும் சமாதானமாக வாழ முடியும்” – இதுதான் மகிந்த சிந்தனையவின் சாராம்சம். “சிங்கள-பௌத்த பெறுமானங்களைப் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பதே எமது கடமை” – இது தான் மகிந்தவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. 80 களுக்குப் பின்னதாக உருவான எந்த தேசிய விடுதலை இயக்கங்களுமே “வன்முறை மீது காதல் கொண்ட” மனநோயாளிகளால் கட்டமைக்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்களின் அர்ப்பணங்களும், தியாகங்களும், போராட்டங்களும், தமிழ்ப் பேசும் மக்களும் மனிதர்களுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான போராட்டமேயன்றி அர்த்தமின்றிச் செத்துப் போவதற்கான சடங்குகளல்ல! அரை நூற்றாண்டு காலமாக, சரி பிழை, நியாயம் அநியாயம், நேர்வழி குறுக்குவழி, என்பவற்றிற்கெல்லாம் அப்பால், இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளுடன் தமிழ் பேசும் மக்களும் வாழ்வத்ற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பாசிச வடிவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள்! தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும், தனிமனிதனும், ஜனநாயகவாதியும், தேசிய வாதியும், மார்க்சியவாதியும், இந்தப் புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலிகளின் அழிவிலிருந்து உதிக்கும் பெருந்தேசியப் பாசிசத்தையும், தமிழ் பேசும் மக்கட் கூட்டம் ஜனநாயகத்தின் பேரால் சிதைத்துச் சின்னாபினப்படுத்தப் படுவதையும் “மகிந்த புரத்தின்” சிம்மhசனத்திலிருந்து நியாயம் கற்பிப்பதையும் புலியெதிர்ப்பு அரசியல் வியாபாரிகள் எந்தக் கூச்சமுமில்லாம் நிறைவேற்றி முடிக்கிறார்கள். இலங்கை இனப்பிரச்னைக்கான வேர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பது ஆயிரம் தடவைகள் அலசப்பட்டுச் சலித்துப் போன விடயங்கள்.

1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்.

2. தமிழ்ப் பேசும் உயர்தர வர்க்கத்தை வளர்த்தெடுத்துஇ சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை உருவாக்கியதும் இதே பிரித்தானிய ஆதிக்கம்.

3. சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அச்ச உணர்வைத் தோற்றுவித்த இந்த அடிப்படைகள், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பின்னரும் தொடர்ந்தது மட்டுமன்றி தமது வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு தமிழ் பேசும் மக்களே அடிப்படைக் காரணம் என்ற உணர்வும் உருவாக வழிவகுத்தது.

4. தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் சிங்களத் தலைவர்களே சிங்கள மக்களை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாக உருவாக, சிங்கள மக்கள மத்தியில் அமைப்பு மயப்பட்ட பேரினவாதம் உருவானது.

5. ஆக, இந்த அமைப்பு மயப்ப்பட்ட பேரின வாதம் சிங்களத் தலைவர்களின் வாக்கு வங்கியாகத் திகழ, சிங்கள மக்கள் மத்தியிலான அரசியற் கட்சிகள் பேரின வாதத்தையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

6. இப்பேரின வாத அடக்கு முறையை உணரத் தொடங்கிய தமிழ் பேசும் சிறுபான்மையினர், சிங்களத் தலைமைகளுக்கெதிராக அமைபியல் ரீதியாக ஒன்றுபடவாரம்பித்தனர்.

7. தமிழ் அரசியற் கட்சிகளின் வாக்கு வங்கியாக தமிழ்த் தேசியவாதக் கருத்துக்கள் வளரவாரம்பிக்க, தமிழ் மக்கள மத்தியிலான அரசியற்கட்சிகள், தமிழ்த் தேசிய வெறியையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

8. இதனால் இரு தேசிய இனங்களின் வளர்ச்சியும், அவற்றிடையேயன அமைப்பு மயப்பட்ட பிளவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையை அதிகப்படுத்த, இவ்வொடுக்குமுறைக்கு முகம் கொடுக்கமுடியாத அரசியற் கட்சிகளை தமிழ்பேசும் மக்கள் நிராகரிக்கவாரம்பித்த சூழலில், “பேச்சுவார்த்தை அரசியல்” என்பது “ஆயுத அரசியல்” என்ற தளத்திற்கு மாறியது. இங்குதான் புலிகள் உள்ளிட்ட தேசிய விடுதலைக்கான ஆயுதக் குழுக்கள் உருவாகின.

பெருந்தேசிய அடக்குமுறையானது அரசியல், பொருளாதர, சமூக அடக்குமுறையாக எல்லாத்துறைகளிலும் வியாபித்தது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெருக்களில் அனாதைகள் போல் கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிடவில்லை. ஒருபுறத்தில் இரத்தம் தோய்ந்த கொலைக்கரங்களும், மறுபுறத்தில் பௌத்த போதனைகளும் இலங்கையின் தேசிய அரசியலாக மாறிய நிலையில் தான் பெரும்பாலான தமிழ்பேசும் மக்களின் மானசீக ஆதரவுடன், ஆயுதக்குழுக்கள் வேர்விட்டு வளரவாரம்பித்தன.

உரிமைக்காகப் போராடும் ஒரே நோக்கோடு புத்தகங்களுக்குப் பதிலாகத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தெருவுக்குவந்த பல இளைஞர்களை உயிரோடு தகனம் செய்த பாதகர்கள்தான் புலிகள் என்பது வேறு விடயம்.

எந்தெந்தக் காரணங்களுக்காக பேச்சுவார்த்தை அரசியல் என்பது ஆயுத அரசியலாக மாறியதோ அதே காரணங்கள் இன்னும் வலுவாக இருக்க, புலிகளின் அழிவில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாக்கப்படுவதாக ஆனந்தக்கூத்தாடும் அரசியல் வியாபாரிகள் மகிந்த அரசின் இன அழிப்பிற்கு ஆதாரவுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.

1. புலிகளும் அதன் ஆதரவு சக்திகளும்.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

3. இந்திய அரசு

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

மக்கள் மீது நம்பிக்கையற்ற இவர்கள், மக்களின் அழிவிலிருந்து தான் தமது அரசியலையே கட்டமைக்கிறார்கள்.

1. புலிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும்.

இவர்கள் எப்போதுமே மக்களைப் பற்றிச் சிந்தித்ததில்லை. தேசிய விடுதலைப் போராளிகள் என்ற முகமூடியை அணிந்திருக்கும் இவர்கள், தேசிய விடுதலைக்கான அனைத்து ஆதரவுத் தளத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியவர்கள். 1983 ஜூலை இன அழிப்பு நடந்தேறிய காலகட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது. மொத்தத் தமிழகமுமே ஒரேகுரலில் பேரின வாதத்திற்காகக் குரலெழுப்பிற்று. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் வாக்குத் திரட்ட முடியாத நிலைக்குத் தமிழக அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்காளர்கள் உயிரையும் விலையாக வைத்து உரக்கக் குரல் கொடுத்தனர். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகள் பேரின வாதிகளின் இன அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பினர். முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இரவோடிரவக அனாதைகளாக விரட்டியடித்த விடுதலைப் புலிகள்இ கிழக்கில் தமது பாணியிலான குரூரமான படுகொலைகளை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகத் திசைதிருப்பினர். நூற்றுக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர். தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கெதிராகவே தமது இராணுவ தர்பாரை நடாத்திக்காட்டினர். தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை என்ற ஒரே கோஷ்த்தின் கீழ் அமைப்பாகிக் கொண்ட எல்லா விடுதலை இயக்கங்களையும் ஆயுத பலம் கொண்டு அழித்தொழித்தனர். நூற்றுக்கணக்கான தமிழ் இழைஞ்ர்களை குழுக்கள் குழுக்களாகக் கொன்றொழித்தனர்.

தேசிய இன அடக்கு முறைக்கெதிரான அனைத்து ஆதரவு சக்திகளையும் அன்னியப்படுத்தி, ஒரு நியாயமான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்தனர். இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் போராட்டத்திற்கான நியாயம், சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சாராத்திற்குட்படுத்த இயலாதவொன்றாகிப் போனது. இறுதியில், தேசிய இன அடக்கு முறைக்கெதிரான ஒரே குரலாகத் தம்மை முன்நிறுத்திக் கொண்ட புலிகள், பாசிஸ்டுக்களாக வளர்ந்து அழிந்து போயினர். அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள், இந்த நிலையிலும் கூட தம்மைச் சுயவிமரிசனத்திற்கு உட்படுத்தத் தயாராகவில்லை. குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையில் கூட இவ்வாறான சுயவிமர்சனத்தை முன்வைக்கத் தயாராகவில்லை. 2008ம் ஆண்டு மாவீரர் உரையில், இந்திய எதிர்ப்பாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியாவிடம் அரசியல் பிச்சை கேட்ட நிலையில் தனது சொந்த மக்களிடம் தான் தலைமைதாங்கி நடாத்திமுடித்த கோரக் கொலைகளுக்குக் கூட மன்னிபுக் கேட்கத் தயாராயிருக்கவில்லை. தன்னால் அன்னியப்படுத்தப்பட்ட, சொந்த மண்ணிலிருந்து புலிகளால் அகதிகளாக விரட்டப்பட்ட, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளிடம் தன்னை, குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையிலாவது சுய விமர்சனத்திற்குட்படுத்தி, மறுபடி அவர்களை அணிதிரட்டத் தயாராகவில்லை. ஆயுதங்களையும், அதிகாரத்தையும் எந்த அளவிற்குப் புலிகள் நம்புகிறார்கள் என்பதையும், மக்கள் மீதான நம்பிக்கையற்ற, மக்கள் விரோதிகள் என்பதையும் புலிகள் மறுபடி மறுபடி வலியுறுத்துவதாகவே இது அமைகிறது.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

புலிகளின் இருப்பின் அடிப்படையே, தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வானது ஆயுதப்போராட்டம் என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணமே பேரின வாத்த்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் தான். புலிகளின் இருப்பிற்கான காரணத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், மக்கள் மத்தியில் போரற்ற நிலையை உருவாக்க வேண்டுமாயின், பேரினவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பேரின வாதத்திற்கெதிரான, அது உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கும் அரச பாசிசத்திற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். இதற்கெதிரான போராட்டங்கள், எல்லாச் சமூகச் செயற்ப்பாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனல் பெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் இந்தப் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிகளின் பாசிசத்தையும் தான். மக்கள் சார்பில் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் கருத்தாடியது கிடையாது. மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.

இவர்கள் செய்து முடித்த கைங்கரியங்கள் வாழும் உரிமைக்காகாகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியுள்ளது.

1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.

3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.

4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.

5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 80 களில் தீவிர தேசிய வாதம்பேசிய இவர்களில் பெரும் பகுதியினர், தாம் சார்ந்த அமைப்புகளில் வலது சாரிப் போக்கை முன்நிறுத்தியவர்கள். இடது சாரிப் போக்குடையவர்களை அன்னியப்படுத்தி தீவிர தேசியவாதப் போக்கு மேலோங்க வழிசெய்தவர்கள். இன்று இலங்கை அரசின் பாசிசக் கொடுமைகளுக்கெதிராகப் பேச முற்பட்டால் தேசியவாதம் பேசுகிறோம் என்று தெருச்சண்டைக்கு அழைக்கிறார்கள். புலிகள் புலி – எதிர்ப்பாளர்களிடையேன இந்த முரண்பாடென்பது, அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்க அணிகளிடையேயான செயற்தள மட்டத்திலான உள் முரண்பாடேயன்றி சமூக உணர்வி அடிப்படையில் எழுந்த போராட்டமல்ல. இவ்வாறான புலியெதிர்ப்பை முன்வைத்து இலங்கையில் செயற்படும் முன்னாள் தேசிய விடுத்லை இயக்கங்களோ அல்லது அவற்றோடு ஒட்டிக்கொள்ளும் புகலிட ஆதரவாளர்களோ, அரசின் நேரடிக்கைக் கூலிகளோ அபாயகரமானவர்கள். மக்களின் விரோதிகள்.

3. இந்திய அரசு.

இந்தியாவில் தலித் அமைப்புகள் நடாத்திய போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இலங்கையில் இதே போராட்டங்கள் குறித்த வெற்றியைச் சம்பாதித்திருக்கின்றன. சண்முகதாசன் தலைமையிலான மாவோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய போராட்டங்களின் வெற்றியும், சூர்ய மல் இயக்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்களும், ஏனைய இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சியும் இலங்கைக்கு தெற்காசியாவிலேயெ ஒரு இடது சாரிப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்திருந்தது. கம்யூனிசத்தின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றும் எல்லைவரை ஜே.வீ.பீ தனது போராட்டத்தை நகர்த்த முடிந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தேசிய இன ஒடுக்கு முறைகெதிரான போராட்டங்களில் இடது சாரித் தன்மையுள்ள வேலைத்திட்டங்களுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் குறித்த வெற்றியுடன் மக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது. என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் இடது சாரிக் கோஷங்களுடன் வெளிவர முடிந்தது. 80களில் ஆரோக்கியமான மார்க்சியக் கருத்தாடல்கள் தமிழ் பகுதிகள் வியாபித்தது. சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தம்மை அடையாளப்படுத்த முன்வந்தனர். எல்லோர் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட்டது.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அரசு தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி, அவ்வமைப்புக்களை அவர்கள் சார்ந்திருந்த மக்களை விட பலமானதாக வளர்த்தெடுத்தது. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை விட அவர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டோர் பலமானவர்களாயினர். தேசிய விடுதலை இயக்கங்கள் வேறு இராணுவக் குழுக்களாக மாறி இந்த இராணுவ பலப் பரீட்சையின் உச்ச பகுதியாக புலிகள் ஏனைய இயக்கங்களை நிர்மூலமாக்கினர். இவ்வாறு இராணுவ ரீதியாக இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்திய தான் விரும்பியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டது.

1. இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக உருவாகக் கூடியதாகவிருந்த அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் பண்புரிதியாக மாற்றியதுடன் இந்திய முற்போக்கு சக்திகளுடனனான அவர்களின் இணைவையும் சாத்தியமற்றதாக்கியது.

2. தமிழகத்திலிருக்ககூடிய அனைத்துப் பிரிவினை சக்திகளுடனான இணைவையும் சாத்தியமற்றதாக்கிற்று.

3. இலங்கையில் யுத்த சூழல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துதல்.

80 களின் சர்வதேச அரசியல் நிலையும் உலக அரசியற் தளத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பான போக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பிரதான பங்கு வகித்ததெனலாம். இன்று நிலமை முற்றாக மாறிவிட்டது. 80 களின் வல்லரசுப் பனிப்போர் இல்லை. இலங்கையின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அருகிப்போய்விட்டது. உலகமயமாகிவிட்ட பொருளாதாரம் இந்தியாவில் பெரும் பண முதலைகளையும், வியாபாரத்தில் வெற்றிகண்ட மேல் மத்தியதர வர்க்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியாயில் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகார வர்க்கமும் ஆட்சியதிகாரமும் தமது மூலதனத்தினதும், முதலீடுகளினதும் எல்லையை இந்தியாவிற்கப்பாலும் விரிவு படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவினுள்ளேயே அதன் சிறப்புப் பொருளாதார வலையங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுவடைகிறது. டாடாவின் நானோ கார் உற்பத்திக்காக அழிக்கப்பட்ட அப்பாவிகளைக் கண்ட இந்திய விழிப்படைந்து வருகிறது.

போரின் மரணத்துள் வாழும் இலங்கை மக்களின் பிரதேசங்களை இந்தியா தனது வியாபார நலனுக்காகப் எதிர்ப்பில்லாமலே பாவித்துக்கொள்ளலாம். போர் ஓய்ந்துவிட முன்னமே இந்தியப் பெரு முதலாளிகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.

இலங்கையின் அதிகார வர்க்கமும் “வியாபாரத்திற்கான அமைதியை” எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. ஆக, போரைவிட அப்பாவி மக்களின் அழிவிலாயினும் தனது முதலாளிகளின் முதலீடுகளுக்காக முந்திக்கொள்ளும் இந்திய அரசானது, புலியழிப்பின் பெயரால் இலங்கை அரசிற்கு எல்லா இராணுவ உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளது. தவிர, தெற்காசியாவிற்கான சந்தைப் போட்டியில் இந்தியாவைக் குறிவைக்கும் மேற்கு ஏகாதிபத்தியங்கள், இந்தியா மீதான அழுத்தங்களை அதன் அண்டை நாடுகளூடாகப் பிரயோகிக்கும் இன்றைய அரசியற் சூழலில், இலங்கையைப் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்தியா, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

காஸாப் பகுதிகளில் மேற்கு ஊடகங்களின் கணக்குப்படி, குழந்தைகள் முதியோருட்பட 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகள், இஸ்ரேலிய அரசின் குண்டு மழைக்குப் பலியாகிவிட்டனர். மனித இரத்தம் பாயும் பலஸ்தீன அப்பாவி மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் வருத்தமடையாமல் இஸ்ரேலின் கொலைகளை வெளிப்படையாகவே ஆதரிக்கும் அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், மேற்கும் ஐக்கிய நாடுகள் சபையும் தான் இன்றைய ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான முகங்கள். திரை மறைவில் நடாத்திமுடித்த அரச பயங்கர வாதத்தை வெளிப்படையாகவே நிறைவேற்ற உலகத்தை மறு ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார்கள்.

மேற்கின் பொருளாதார நேருக்கடிக்குப் பின்னதாக எதிர்பார்க்கப்படும் போராட்டங்களுகெதிரான அரச பயங்கரவாதத்திற்கு உலகத்தைத் தயார்படுத்தும் ஒத்திகைகளே இவைகள். உலகின் ஒவ்வொரு மூலைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது சுரண்டலை வலுப்படுத்துக் கொள்ளத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள் தென்னாசியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உள்ளேயும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலேயும் தனது ஆதரவுத் தளத்தை விரிவாகும் அமரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அணி, இலங்கை அரசைக் கையாளவும் அதனை முழுமையாக இந்திய சார்புனிலைக்கு தள்ளிவிடாமல் பாதுகாக்கவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதிருக்கின்றன. இந்தியாவோடு போட்டி போடுக்கொண்டு இலங்கை அரசிற்கு இராணுவ உதவி வழங்க தனது தெற்காசிய நேச அணிகளைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

ராஜபக்ஷ குடும்பம்இ அது ஆட்சி நடத்தும் இலங்கையைப் பொறுத்தவரை தான் எதை விரும்புகிறது அது அனைத்தையும் செய்து முடிக்கலாம். பயங்கர வாதிகளுக்கெதிரான போரை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாகவே இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். தொலைதூரக் கிராமங்களில் வேலையிலாத் திண்டாட்டத்தை நிவர்த்திசெய்ய “தேசபக்தியுள்ள” இராணுவத்திற்குப் படைகள் திரட்டப்படுகின்றன. இலங்கையின் பிரதான தொழில்களில் இராணுவமும் ஒன்றாகிவிட்டதைச் சுட்டிக்காட்டும் நீரா விக்ரமசிங்க போன்ற ஆய்வாளர்கள், போரற்ற சூழல் இலங்கையில் ஏற்படுமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். மேற்குறித்த நான்கு மக்கள் விரோத சக்திகளும், போரை உரமூட்டி வளர்த்தெடுக்க, இலங்கை மக்களின் வாழ் நிலை என்பது போரோடு பிணைக்கப்பட்டுவிட்டது. ஒரு புறத்தில் பௌத்த சிங்களப் பெறுமானங்களைப் பாதுகாக்க போர் நடாத்துவதாக அப்பாவி மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மகிந்த குடும்ப அரசு, மறுபுறத்தில் கிராமங்களை போரோடு பிணைத்து வருகிறது. ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதமானது, அவர்களின் நாளாந்த வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டு பாசிசமாக வளர்ந்துள்ளது. இலங்கையின் தமிழ் பேசும் ஊட்கவியளாளர்களில் பெரும்பாலானோர், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோ கொல்லப்பட்டோ விட்டனர். அரசிற்கெதிரான சக்திகள் சிதைக்கப்பட்டோ, அரசால் உள்வாங்கப்பட்டோ சீரழிக்கப்பட்டுவிட்டனர். தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள், புலியெதிர்ப்புக் குழுக்கள், புலிகள், சிங்கள பெருந்தேசிய வாதிகள், இந்திய அரசு, ஏகாதிபத்தியங்கள், போன்ற எல்லா மக்கள் விரோத சக்திகளும் இலங்கை அரசின் பாசிசத்தை தமது சொந்த வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தமிழ் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

மக்களின் மறுதலையான ஆதரவையும் கூட இழந்து போன புலிகள், மக்களிலிருந்து அன்னியப்பட்டு நிரந்தர பாசிச இராணுவப் படையாக மாற்றமடைந்து, குறுகிய பிரதேசங்களில் முடக்கப்பட்டு அழிந்து போகிறார்கள். இவர்களின் அழிவின் எச்சங்களிலிருந்து அரச பாசிசம் வளர்ந்து இலங்கை மக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவிலேயே அரச பயங்கர வாதத்தின் இன்னொரு ஆய்வுகூடம் தான் இலங்கை. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதற்காக சமூக உணர்வுள்ள யாரும் துயர்கொள்ள மாட்டார்கள். ஆனால் அழிவின் நெருப்பிற்குத் தீக்கிரையாகும் அப்பாவி இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுக்க இனியொரு போராட்டம் தேவையாகிறது.

காஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை

israeli-aircraft.jpg
யுத்தத்தை நிறுத்தும் படியான சர்வதேச உத்தரவுகளை உதாசீனம் செய்துள்ள இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ரொக்கட் தாக்குதலை நிறுத்துதல், சர்வதேச மேற்பார்வையின் கீழ் உடன்படிக்கை செய்யப்படல், மீண்டும் ஹமாஸ் ஆயுதத் தாக்குதலை நடாத்துவதில்லை என உறுதியளித்தல் என்பவையே அவையாகும்.

இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என சூளுரைத்துள்ள ஹமாஸ் தலைமையகம் இஸ்ரேல் முற்றுகைகள் அகற்றப்பட்டு எல்லைகள் திறக்கப்படுவதுடன் தாக்குதல்களையும் நிறுத்தும் பட்சத்தில் யுத்தநிறுத்தம் சாத்தியமென ஹமாஸ் அறிவித்துள்ளது.  காஸாவில் கடந்த இரு வாரங்களாக இடம்பெறும் மோதல்கள் மிகப் பெரிய பிராந்திய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலியாவோரின் தொகை உயர்ந்தவண்ணமுள்ளன. காஸாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ள இஸ்ரேல் இன்னும் தங்கள் இலக்குகளை அடையவில்லை.

ஹமாஸின் ரொக்கட் தளங்களை தகர்ப்பதே நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதாயின் பொதுமக்களை கேடயங்களாகப் பாவிப்பதை ஹமாஸ் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தது.  ஹமாஸின் தலைமையகம் ஸியோனிஸ்டுகளை எதிர்த்து மூர்க்கமாகப் போராடும்படி தனது உறுப்பினர்களைக் கேட்டுள்ளது.  காஸாவில் எமது குழந்தைகளைக் கொலை செய்யும் சியோனிஸ்ட் வெறியர்கள் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய எண்ணியுள்ளதாகவும் ஹமாஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல இஸ்ரேல் தடையாக உள்ளதாக ஐ. சி. ஆர். சி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு இட‌ம் இ‌ல்லை: ‌சித‌ம்பர‌ம்

cidam.jpgஇ‌ந்‌தியா‌வி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர். அ‌ஸ்ஸா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌த்து இர‌ண்டாவது நாளாக (06) ஆலோசனை நட‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் குவஹா‌ட்டி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அமை‌தி‌க்கு‌ம் அ‌ச்சுறு‌த்த‌ல் ‌விளை‌வி‌க்கு‌ம் யாரு‌க்கு‌ம் இ‌ங்கு இட‌‌மி‌ல்லை எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

“நா‌ன் பேசுவதை இ‌ப்போது கே‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ல்லது நாளை ஊடக‌ங்க‌‌ளி‌‌ல் படி‌க்க‌ப்போகு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள், உடனடியாக‌த் த‌ங்க‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு பே‌ச்சு நட‌த்த மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்” எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், இராணுவ‌‌த்‌தின‌ர், துணை இராணுவ‌த்‌தின‌ர், மா‌நில‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ஆ‌கியோரு‌க்கு, அமை‌தி‌க்கு‌ம் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் தேவையான உ‌த்தரவுகளு‌ம் அ‌றிவுறு‌த்த‌ல்க‌ளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர். 
 

காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன்

Attack on School in Gazaகிளிநொச்சியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியதாக ஜனவரி 2ல் அறிவிக்க அதற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மத்திய கிழக்கில் காஸாவிற்கு ஜனவரி 3 அன்று இஸ்ரேலியப் படைகள் அனுப்பப்பட்டு காஸா முற்றுகைக்கு உள்ளானது. காஸாவாக இருந்தாலென்ன கிளிநொச்சியாக இருந்தாலென்ன யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவையாக அதிகார வேட்கை குன்றாததாக அப்படியே இருக்கின்றது. ஆனால் காஸாவிலும் சரி கிளிநொச்சியிலும் சரி பொதுமக்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையாகத் தொடர்கிறது.

‘சுதந்திரக் காற்றை சுவாசிக்க வன்னி மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்கு ஆரம்பித்து வைத்த யுத்தம் ஒரு குறியீட்டு வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்து உள்ளது. அதே பாணியில் பெப்ரவரி 10ல் வரவுள்ள தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரப்ப இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மட் தனது துருப்புக்களை காஸாவிற்கு அனுப்பி உள்ளார். ‘இது பாலஸ்தினியர்களுக்கு எதிரான யுத்தமல்ல ஹமாஸின் ஏவுகணைகளை அழிப்பதற்கான யுத்தம்’ என்று விளக்கம் அளிக்கும் எகுட் ஒல்மட் அங்கு சில தினங்களுக்கு உள்ளாக கொல்லப்பட்ட பல நூற்றுக் கணக்கான பாலஸ்தீனிய பொது மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அந்த மரணங்களுக்கு ஹமாஸே பொறுப்பு என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கிறார்.

கிளிநொச்சியினதும் காஸாவினதும் புவியியல் அமைவுதான் மாறுபட்டு உள்ளதே அல்லாமல் இந்தப் பிரதேசங்களின் யுத்தப் பின்னணியும் அதில் ஈடுபடுபவர்களின் பின்னணியும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே. பிரித்தானிய காலனியாதிக்கத்துக்குள் இருந்தது உட்பட, இலங்கை – இஸ்ரேல் உள்நாட்டு யுத்தங்களில் ஒத்த புள்ளிகள் நிறையவே உள்ளன. மேலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பிடம் பயிற்சி எடுத்ததும், இலங்கை இராணுவம் மொசாட்டிடம் பயிற்சி எடுத்ததும் தெரிந்ததே. பிற்காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஒரே காலப்பகுதியில் பயிற்சிகளை வழங்கியதும் அம்பலமாகி இருந்தது.

இலங்கை, இஸ்ரேலிய அரசுகளின் ஒடுக்குமுறையும் கட்டற்ற இராணுவப் போக்கும் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரு அரசுகளுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாகக் கூறிக்கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இராணுவ இயந்திரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தன்னால் வளர்க்கப்பட்ட பின்லாடனால் (அல்கைடா) செப்ரம்பர் 11, 2001ல் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை வைத்துக் கொண்டு உலகின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த முத்திரை விடுதலைப் புலிகளுக்கும் ஹமாஸிற்கும் சேர்த்துக் குத்தப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த பயங்கரவாத முத்திரையைக் குத்தவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது. இன்று இலங்கை இஸ்ரேல் உட்பட அரச பயங்கரவாதங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறது அமெரிக்கா. ‘இஸ்ரேல் தனது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை (காஸா மீது தாக்குதல் நடத்துவதை) எடுப்பது தவிர்க்க முடியாது’ என்று ஜோர்ஜ் புஸ் காஸா மீதான தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். உலக சமாதானத்தைச் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, காஸா பற்றி மௌனமாகவே இருக்கிறார். இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ள அவர் இஸ்ரேல் விடயத்தில் ஜோர்ஜ் புஸ்ஸின் தடங்களையே தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து அரசுகள் மட்டும் தான் அதிகார வேட்கையுடன் நடந்துகொள்கின்றன என்று கூறிவிட முடியாத அளவுக்கு அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களும் அதிகார வேட்கையுடனேயே இயங்குகின்றனர். இதில் விடுதலைப் புலிகளும் ஹமாஸ்ம் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள். தங்களுடன் உடன்படாதவர்களை தீர்த்துக் கட்டும் இவர்களின் அரசியல் இவர்களின் அமைப்புகளில் ஸ்தாபனப்படுத்தப்பட்டு உள்ளது. ஹமாஸ்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வேறுபாடு, முன்னையது மத அடிப்படைவாத அமைப்பு பின்னையது இன அடிப்படைவாத அமைப்பு. இரு அமைப்புகளுமே மக்கள் விடுதலை என்ற பெயரில் அவர்களை மந்தைகளாகவே நடத்துகின்றனர்.

யசீர் அரபாத்தின் ‘பற்றா’ இயக்கத்தைசச் சேர்ந்த பாலஸ்தீனிய ஜனாதிபதி மொகமட் அப்பாஸ், ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பலம் அழிக்கப்படுவதை மறைமுகமாக விரும்புகிறார். ஹமாஸ் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளது. ‘பற்றா’ வெஸ்ற் பாங் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்த உள்ளது. இந்த ‘ஹமாஸ் – பற்றா’ முரண்பாட்டில் ‘பற்றா’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலரை ஹமஸ் இந்த போர்ச் சூழலிலும் படுகொலை செய்து உள்ளது. ஆனால் பாலஸ்தீனிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுவதால் குறைந்த பட்சம் மொகமட் அப்பாஸ் இஸ்ரேலுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டு உள்ளார்.

ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தங்கள் அதிகார  ஆசையை தக்க வைத்துக் கொண்டால் சரி என்று புலி எதிர்ப்பு அணிகள் எல்லாம் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் தொங்கிக்கொண்டு உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் வன்னி யுத்தத்தில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி மூச்சுக் கூடவிடவில்லை. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்று அர்த்தமில்லை. ‘புலிக்கு இறைத்த நீர் வாய்கால் வழியோடி மக்களுக்கும் பொசிந்து உள்ளது.’

இலங்கையில் உள்ள புலியெதிர்ப்பு தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கை அரசின் தயவில் தங்கி இருப்பதாலும் புலிகள் பலமிழந்து போகும் பொது ஏற்படும் வெற்றிடத்திற்கு தாங்கள் தெரிவு செய்யப்படுவோம் என்ற கனவிலும் மறந்துபோயும் மகிந்தவின் மனம் கோணாமல் நடந்தகொள்ள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ‘அதிகாரத்தை தகர்கிறோம் பார்’ என்று இஸங்கள் பேசியவர்களும் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் ஒரு துண்டைப் பிடித்தவிட வேண்டும் என்று உன்னி உன்னிப் பார்க்கிறார்கள். மக்களின் பக்கத்தில் நின்று பிரச்சினையை நோக்க இவர்கள் தயாரில்லை. இவர்களது புலியெதிர்ப்பு ‘கட்ராக்’ நோயினால் இவர்களுக்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு வலது – இடது என்று விதிவிலக்கு எதுவும் இல்லை.

இவ்விடத்தில் கட்டுரையாளர் நஜிமில்லாஹி தேசம்நெற்றில் எழுதிய கட்டுரையின் ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ”இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.”

கட்டுரையாளர் நஜிமில்லாஹியின் அச்சம் (முழுமையாக அவருடைய கட்டுரையைப் படிக்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்: பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி : http://thesamnet.co.uk/?p=6137) மிகவும் நியாயபூர்வமானது.

கிழக்கை வெற்றி கொண்ட மகிந்த அரசு முற்றிலும் ஒரு பொம்மை மாகாணசபையொன்றை கிழக்கில் உருவாக்கி உள்ளது. மகிந்த மாத்தையாவின் பஸ்ஸில் எங்கு போகிறோம் என்று கேட்காமலேயே தொங்கிக்கொண்டு ஏறியவர்கள் கருணா – பிள்iளையான் அணியினர். மகிந்த மாத்தையாவின் உண்மையான ‘கோளயாக்கள்’. அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபைக்கு குறைந்தபட்சம் 13வது திருத்தத்தைக் கூட முழுமையாக கொடுக்க ஜனாதிபதி தயாராகவில்லை.

இப்போது வடக்கை விடுவிக்கிறேன் சுதந்திரக் காற்றை வீசச் செய்கிறேன் என்று கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இராணுவம் புறப்பட்டு உள்ளது. வடக்குக்கான உள்ளுராட்சித் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசு ஜனவரி 6ல் அறிவித்து உள்ளது. கிழக்கு போன்று வடக்கிலும் டக்ளஸ் மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஆதரவுடன் தேர்தல் இடம்பெற்று ஒரு பொம்மை அரசு உருவாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளே நிறைய உள்ளது. அந்த பொம்மை அரசுகளில் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் புலத்தில் இருந்தும் சிலர் ஓடிச்சென்று தங்கள் முன்னாள் அமைப்புகளுடன் ஒட்டிக்கொள்ளலாம். சின்னமாஸ்ரர், பிரபாகரன், ஜெகநாதன், குமாரதுரை என்று இந்தப் பட்டியல் இன்னும் இன்னும் நீளலாம்.

ஆனால் இந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசுகள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைத் தன்னும் தீர்க்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

இன்று மக்களுக்கு அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க அவர்கள் சுவாசித்து தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உண்மை. அந்த வெளி எதிர்காலத்தில் நிரந்தரமாக பிரச்சினையைத் தீர்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இவ்விடயத்திலேயே மகிந்தவின் அரசு மீதான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. பொங்கல் பரிசாக குடாநாட்டு மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம், கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி என்ற கதையாடல்கள் மூலம் அடிப்படைப் பிரச்சினையை அரசு ஓரம்கட்டப் பார்க்கிறது. கிளிநொச்சி பிடிக்கப்பட்டதை தனது கட்சி அலுவலகங்களுடாக வெடிகொழுத்திக் கொண்டாடிய அரசு, கொழுத்திய வெடியில் இலங்கை மக்களின் பால்மா பிரச்சினை அடிபட்டுப்போனது.

இலங்கை – சிங்கள, தமிழ், முஸ்லீம் ,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி குறுகிய சுயநல அரசியல் நோக்குடன் செயற்பட்ட காலம்காலமாக பதவிக்கு வந்த அரசுகள், நாட்டை இந்த யுத்தச் சூழலுக்குள் தள்ளி சிரழித்து உள்ளன. இந்த நச்சுச் சூழலில் இருந்து உடைத்து வெளியே வந்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் கவனம்கொள்ளும் என்ற சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும் எவ்வித சமிஞ்சையையும் அவர்கள் காட்டவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது என்ற பாடத்தை இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளன.

ஹமாஸ் – புலிகள் வானத்தில் இருந்து பூமியில் தற்கொலைப் போராளிகளாகக் குதிக்கவில்லை. அங்கிருந்த அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த அரசியல் சூழலில் அடிப்படை மாற்றம் ஏற்படும்வரை ஹமாஸை – புலிகளை அழிக்க முடியாது. ஹமாஸ்க்கும் புலிகளுக்குமான தேவை இருக்கும் வரை சேக் அமட் யசின் – பிரபாகரன் போன்றவர்கள் தங்கள் பயங்கரவாத அரசியலை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை.

இன்று (ஜனவரி 6) இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் காஸாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  30 மாணவ மாணவியர் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற கோரச் செய்தி வெளிவந்தது. செஞ்சோலையில் கடந்த ஆண்டு 64 மாணவிகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. தவறான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எப்படி விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்? ஹமாஸ் – புலிகள் பொறுப்பற்று நடந்தால் அவைசார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படித் தண்டிக்க முடியும்? இவ்வாறான தாக்குதலை நடத்துகின்ற இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் பொறுப்பென்ன?

சேக் அசாத் யசின் – பிரபாகரன் ஆகியோரின் விளைநிலங்களே இந்த இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் அரச பயங்கரவாதம் என்றால் மிகையல்ல.

இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது பற்றியது அல்ல எமது ஆதங்கம். அந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவிப் பொது மக்களும், பலாத்காரமாகவும் பொருளாதார நெருக்குதலாலும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு சிறிய பயிற்சியுடன் முன்னரங்க காவல்நிலைகளில் விடப்படும் இளம் போராளிகளின் இழப்புமே. மேலும் பொருளாதார அடிமட்டத்தில் இருந்து தள்ளப்பட்ட இராணுவ வீரர்களதும் இழப்பும். இந்த இழப்புகளின் மீது பெறப்பட்டது தான் இந்த கிளிநொச்சி நகர் மீதான வெற்றி.  இது ஒரு குறியீட்டு வெற்றியே அல்லாமல் வேறொன்றுமல்ல.

அந்த வெற்றியின் மீது காதல் கொண்டு அறிக்கைகளும் கருத்துகளும் தூள் பறக்கின்றன. அதில் புலம்பெயர் தீவிர புலி எதிர்ப்பு அணியும் பின்நிற்கவில்லை. மகிந்த அரசு ஏதோ தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் போடும் கூத்து தாங்க முடியவில்லை. ‘புலிகள் அங்கு தாக்கி விட்டார்கள். இங்கு தாக்கிவிட்டார்கள். தமிழீழத்தை அண்மித்துவிட்டோம்’ என்று புலம்பெயர் புலி அதரவு வாலாக்கள் போட்ட கூத்திற்கு எவ்வித குறைவில்லாமல் புலம்பெயர் மகிந்த ஆதரவு வாலாக்கள் கூத்தடிக்கிறார்கள்.

காஸா மீதான இஸ்ரெலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஜனநாயகம் – மாற்றுக் கருத்து பேசுபவர்கள் முரண்நகையாக இலங்கை அரசு வன்னி மீது மேற்கொள்ளும் முற்றுகையை வரவேற்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டாலேயே தமிழ் மக்களுக்கு விமோசனம் என்றும் இலங்கை அரசபடைகளின் வன்னி யுத்தம் தவிர்க்க முடியாதது என்று விளக்கம் வேறு. யுத்தம் என்பது புனிதமானது அல்ல. ஹமாஸ் நடத்தும் யுத்தமும் புனிதமானதல்ல. ஹமாஸ், விடுதலைப் புலிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களுமல்ல. சளைத்தவர்களுமல்ல. எதிலும். இஸ்ரேலினுடைய இராணுவ நடவடிக்கை எவ்வளவு மோசமானதோ அதேயளவு இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளும் அடிப்படையில் மோசமானதே. ஹமாஸ் விடுதலைப் புலிகள் இரண்டுமே ஒரே அடிப்படைவாத அரசியலையும் ஒரே மாதிரியான அரசியல் மற்றும் இராணுவ தந்திரோபாயங்களைக் கொண்ட அமைப்புகளே. இவற்றில் ஏற்ற இறக்கங்கள் பார்ப்பதில் அர்த்தமில்லை.

அடிப்படை அரசியல் பிரச்சினைக்கான தீர்வை கொண்டிராத இராணுவ நடவடிக்கைகளும், வெற்றிகளும் இஸ்ரேல் – இலங்கையில் மட்டுமல்ல உலகின் எப்பாகத்திலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை. இதந்தப் பாடம் இஸ்ரேலுக்கோ இலங்கைக்கோ புதிதல்ல. 2006ல் இஸ்ரேல் லெபனானில் இதைக் கற்றுக்கொண்டது. ஆனால் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கஸாவில் அதே தவறைச் செய்கிறது. யாழ்ப்பாணத்தை, கிழக்கை இலங்கை அரசு வெற்றி கொண்டது. ஆனால் அங்கு வன்முறைகள் தொடர்கிறது. இன்றுள்ள இராணுவச் சமநிலை மாற்றப்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதில் இந்தியா உட்பட சர்வதேச அரசியல் மாற்றங்கள் அரசியல் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது இராணுவச் சமநிலையை மாற்றமடையச் செய்யலாம். இவை தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஹமாஸ் – விடுதலைப் புலிகள் போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாது. ஆனால் மட்டற்ற அரச பயங்கரவாதம் அவர்களின் பயங்கரவாதத்திற்கு விளைநிலமாக உள்ளது. முன்னையதற்கு முற்றுப் புள்ளி வைத்து அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அதுவே ஹமாஸ் – புலிகளின் அடிப்படைவாத அரசியலின் முடிவின் ஆரம்பமாக இருக்கும். அடிப்படை அரசியல் மாற்றம் இல்லாத இந்த இராணுவ நடவடிக்கைகளும் வெற்றிகளும் அடிப்படைவாத பயங்கரவாத அரசியலுக்கான விளைநிலங்களாக மாறுவது தவிர்க்க முடியாது. இந்தப் அடிப்படைப் பாடத்தை திரும்பத் திரும்பக் கற்றுக்கொண்டும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இஸ்ரேலிய அரசு – இலங்கை அரசு – ஹமாஸ் – புலிகள் புரிந்துகொள்ள மறுக்கும் அரசியலுக்கு பாலஸ்தீனியர்களும் தமிழர்களும் செலுத்தும்விலை மிக மிக அதிகம்.

பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி

Sri lanka Mapமனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அவதானங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் இலங்கை மனித உரிமைகளை மீறும் விடயத்தில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளதை நாம் அறிவோம். இன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் உச்சகட்டமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (Responsibility to protect-R2P)  என்றொரு கருத்தாக்கம் சர்வதேச அரசியல் அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிக் குழு ( International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் கொழும்பில் நடந்த மாநாடொன்றில் இலங்கைக்கும் இவ்வெண்ணக்கருவின் பொருத்தப்பாடு பற்றி விளக்கினார். “ ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்கமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது”. கரீத் இவான்ஸ் இங்கு மேலும் கூறுகையில் “கம்போடியா ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவோ பாணியிலான பாரியளவிலான கொடூர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது உடனடியாக அப்படியான ஒரு நிலமை தோன்றும் ஒரு சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கு இருக்கிறது. எனவே அது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின், இந்த நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது”.  கரீத் இவான்ஸின் இந்தக் கருத்து சில சிங்கள அறிவுஜீவிகளாலும் அரசியல் வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
 
எனினும் இலங்கையின் சமகால அரசியல் போக்குகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இலங்கையை இத்தகையதொரு நிலைமைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன என சொல்லத் தோன்றுகிறது. உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார்  வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை வரலாரற்றவர்கள் வந்தேறுகுடிகள் நாட்டுரிமம் அற்றவர்கள் போன்ற  மெகா கதையாடல்களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஹெல உறுமய இதனைச்சாதித்து வருகிறது. வெகுசன மக்கள் பரப்பில் இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். மஹிந்த அரசாங்கம் இந்த இனவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதாக இல்லை. இராணுவத்தளபதி கூட நாட்டுரிமம் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தும் சிறுபான்மை நலனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.
 
இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டிவளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.
 
அப்படியானால் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பயங்கரமானவை என்பதையே சமகால அரசியல் நடப்புகள் காட்டுகின்றன. ஏனவே R2P போன்ற கருத்தாக்கங்கள் இலங்கைக்கும் பொருந்தி வருகிறது. இக்கருத்தாக்கத்தை மக்கள் மயப்படுத்துவதும் இலங்கைக்க்ன அதன் பொருத்தப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு எடுத்தக்காட்டுவதும் சமூக சக்திகளின் தலையாயப் பொறுப்பாகும்.
 
இப்போது கருத்தியல் வடிவில் முன்வைக்கப்படும் இந்த வன்முறைகள் பின்னர் மக்களை உணர்ச்சியூட்டி சமூக மோதல்களாக திட்டமிட்டு மாற்றப்படலாம். அதன் பின் ஏற்படப்போகும் அழிவுகள் மோசமானவை. எனவே இந்த விவகாரம் சிறுபான்மை சமூக சக்திகளாலும் பெரும்பான்மையின மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிறந்தமுறையில் அணுகப்பட்டு முடிவுகள் கண்டடையப்பட வேண்டும். எனவே சிறுபான்மை சமூகங்கள் தங்களது அரசியல் களத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு வந்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபான்மை அரசியல் களம் வடிவமைக்கப்பட வேண்டும். பௌத்த அடிப்படைவாதக்குழுவொன்று இப்போது பாரிய திட்டமொன்றுடன் இயங்கத் தொடங்கயுள்ளது.

நடைமுறையிலிருக்கம் இந்த அரசாங்கத்தின் துணையுடன் இலங்கையை பௌத்தமயப்படுத்தம் திட்டமொன்றை வகுத்தள்ளனர். இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதில் முதலில் முன்னுள்ள தடைகளை அடையாளங்கண்டு அவைகளை அழித்தாக வேண்டும். புலிகள் இதற்குப்பாரிய தடையாக இருந்தனர் இராணுவ ரீதியான வெற்றிகள் இத்தடையையும் விரைவில் முற்றாக நீக்கிவிடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
 
அரசியலன்றி சமயமே இந்த அரசியல் பௌத்தவாதிகளின் முக்கிய இயங்கு தளமாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களும் பௌத்தர்களும் சமய ரீதியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. இனம் சார்ந்த அரசியல் முரண்பாடுகளே இரு சமூகங்களுக்குமிடையில் நிகழ்ந்தது. சமய அடிப்படையில் இந்து சமயமும் பௌத்தமும் இந்தியாவில் தோற்றம் பெற்றன. இப்போதுள்ள நிலையில் இந்து சமயம் பௌத்தத்தை உள்வாங்கிக் கொண்டு விட்டது. இலங்கையிலும் இவ்விரு மதங்களும் தங்களுக்கிடையில் இடையூடாட்டத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வணக்க ஸ்தலங்களில் வழிபடுமளவுக்கு சமய நெருக்கத்தினைக் கொண்டுள்ளனர்.

இந்நெருக்கம் அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை அவர்களுக்கிடையில் ஏற்படுத்தும். எனவே ஹெல உருமயவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசத்துடன் நேரடியான மோதுகை உறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அரசியல் தளங்களில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையே தேசிய அரசியல் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே சிங்கள தேசத்தின் அதிகார அரசியலுக்கு சவால் விடுக்கக் கூடிய சக்திகள் இல்லாத இலங்கையில் சிறுபான்மைக் காப்பீடென்பது இனி சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும். எனவே R2P போன்ற கருத்தாக்கங்களை உரையாடல் மயப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களாகிய நமது பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.   

காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் தீக்கிரை; ஐ. நா அலுவலகங்கள் மீது கல்வீச்சு

ag-gasa.jpgகாஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐ. நா. வின் முயற்சிகள் தோல்வியுற்று இஸ்ரேல் தரை மார்க்கமான தாக்குதலை காஸாமீது ஆரம்பித்துள்ளதால் மிக மோசமான நெருக்கடிகளுக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கின்றனர். பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் தஞ்சமடைந்த அப்பாவிகளையும் இஸ்ரேல் இராணுவம் தாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலில் அறுபது பேர் உயிரிழந்தனர். காஸாவில் இதுவரை ஐநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்தும் இரண்டாயிரம் பேர் காயமடைந்துமுள்ளனர். தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நான்கு பக்கங்களிலும் காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலின் தாக்குதலால் அங்கு பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே பலியாகியும், காயமடைந்துமுள்ளனர். இவ்வாரான நிலைமைக்கு காரணமான இஸ்ரேலைக் கண்டித்து அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பெருந்தொகையானோர் இதில் பங்கேற்பதால் பொலிஸார் திணறுகின்றனர். எகிப்து, லெபனான், மொரோக்கோ, நோர்வே, பிரான்ஸ், கிரேக்கம், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. எகிப்தில் இடம்பெற்ற காஸாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அறுபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். தலைநகர் ஸ்தான்புல் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்ததால் அன்றைய தினம் வழமையான அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன. அரபு ஆட்சியாளர்களையும் எகிப்து ஜனாதிபதியையும் மிக மோசமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

இஸ்ரேலைக் கண்டிக்கும் மிக மோசமான வார்த்தை கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெனர்கள், போஸ்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நோர்வே, கனடா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இவர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டதால் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முடியவில்லை. நிலைமை மோசம டையவே கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் இஸ்ரேல், அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, இஸ்ரேல் தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில நாடுகளில் இருந்த ஐ. நா. அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன. ஈராக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புஷ்ஷ¤க்கு காலணிகளை வீசிய ஊடகவியலாளரின் புகைப் படமும் ஏந்திச் செல்லப்பட்டது. கர்பவாவில் இது நடந்தது.

பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு

haseena.jpgபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார்.  தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர்.  பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.

இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.

ஆனையிறவின் தென்பகுதி படையினரால் முற்றாக மீட்பு ஒட்டுசுட்டான் பிரதேசமும் முழுமையாக வீழ்ந்தது

lanka-map.jpgபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனையிறவை நோக்கி முன்னேறி வந்தனர். பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.

ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரையோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழுமையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதேசமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடுமையான தாக்குதல்களில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற்கனவே மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆனையிறவு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வருகின்றனர். முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப்பாதைகளின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலிகள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர்வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
 

பரந்தனில் மும்முனைகளில் படையினரின் முன்நகர்வை முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு

0301-ltte.jpgபரந்தன் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 60க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், நூறு படையினர் வரை காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து “புதினம்’ இணையத்தளம் கூறுகையில்;

பரந்தனிலிருந்து இரண்டாம் கட்டை நோக்கி படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவே இரு தரப்புக்கும் இடையே சமர் நடைபெற்றது. கடும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். எனினும், பிற்பகல் வரை புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். இந்த முறியடிப்புச் சமரில் 60 படையினர் கொல்லப்பட்டதுடன், நூறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இதன் போது படையினரின் சடலங்களும் இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பி.கே.எல். எம்.ஜி.1, ஏ.கே.எல்.எம்.ஜி.1, ஆர்.பி.ஜி1, ரி. 56 ரகத் துப்பாக்கிகள்4 உட்பட பல ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்