கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஹெல உறுமய இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த முயல்வதுடன் வாக்கும் கேட்கின்றனர்

sri-lanka-election.jpgஹெல உறுமய போன்ற கட்சிகள் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முயலுகின்றன. மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான யோசப் மைக்கல் பெரேரா நீர்கொழும்பில் நடைபெற்ற ஐ.தே.க.பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது கேள்வி எழுப்பினார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் நாட்டில் ஒரு முக்கிய தேர்தல் மக்களின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகரித்துவருகிறது என்றார்.

சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தமது உரையில் (உண்மையான சம்பவங்களை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பல ஊடக வியலாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மேல் மாகாண சபைத்தேர்தலில் நீர்கொழும்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்: மாகாண சபையின் மூலம் நீர்கொழும்பில் ஆளும் கட்சியினர் என்ன செய்தனர் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பில் எத்தனைபேர் சித்திபெற்றனர். ஐ.தே.க.ஆட்சியின் போது தனியார் கத்தோலிக்க பாடசாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசு அடிப்படைவாதத்துடன் செயற்படுகிறது.

மேல்மாகாண சபைத்தேர்தலில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். ஊழல் மோசடியற்ற ஒரு அரசை விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் நீர்கொழும்பு தொகுதியில் இருந்து முவரும் வெற்றிபெறுவார்கள் என்றார்.

முஸ்லிம் சமூகத்தின் கண்ணீரைத் துடைக்கவே தேர்தலில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது – அஸ்லம் தாலிப்

election.jpgமுஸ்லிம் சமுதாயத்தின் கண்ணீரைத் துடைக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்தேன். என் போன்ற இளைஞர்கள் நம் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள இன்னல்களை இனம் கண்டு சேவை செய்ய முன்வர வேண்டுமென கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அஸ்லம் தாலிப் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அஸ்லம் தாலிப் மேலும் தெரிவிக்கையில்; பல்வேறு கோணங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்ற மூத்த அரசியல் வாதிகள், முஸ்லிம் சமூகத்தின் இளம் சமுதாயத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் பிதற்றிப் பேசி வருகின்றனர்.

கொழும்பில் சீரான நீர் வடிகாலமைப்பு இல்லை. சேரிப் புறங்களில் சிறு வீதிகள் சிதைந்து காணப்படுகின்றன. வீடுகள் ஒழுகிக் கரைகின்றன. இவற்றில் கவனமெடுத்து சமுதாய ஏழை எளிய மக்களின் துயரங்கள் துடைக்கப்படவே நான் இத் தேர்தலில் களமிறங்கினேன். இதேபோல கொழும்பு முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஏன் இந்த அவல நிலை. வேறு மாவட்டங்களில் எமது முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வெற்றிக் கம்பங்களை எட்ட முடியுமானால் ஏன் எம்மால் முடியாமலுள்ளது. யார் சிந்திக்கின்றார்… நான் கூறிய உண்மைகளை என்னால் கூட நம்ப முடியவில்லை தான். ஆயினும் நாம் எல்லோரும் ஜீரணித்துத் தான் ஆக வேண்டும் என்றார்.

இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். எரிக்சொல்ஹேம்.

eric-solheim.jpgஇலங்கை நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹேம் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற இருதரப்பினரும் யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காணமுடியும் என நம்பினர். ஆனால் இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இடம்பெற்றுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும்.

மேலும் புலிகள், தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர், அவ்வாறாயின் யுத்த சூனியப் பிதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்து அவர்களது விருப்பிற்கேற்ப வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20 மில்லியன் நோர்வேஜியன் குரோண்களை இலங்கை அரசிற்கு ஒதுக்கியுள்ளாதாகவும் இருதரப்பினரும் சமாதான மேசைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றிற்கான வழியைத் திறந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனோவுக்கு அல்லது விக்ரமபாகுவுக்கே மேல் மாகாணத் தேர்தலில் வாக்களியுங்கள்- கூட்டமைப்பு கோரிக்கை

election.jpgஜனநாயக மக்கள் முன்னணி அல்லது இடதுசாரி ஐக்கிய முன்னணி சார்பான வேட்பாளர்களே மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான என். ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளிட்டிருக்கும் ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்திருப்பதாவது; எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தத்தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்களின் முன்பாக இருக்கும் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

எனவே, ஒன்றில் மனோ கணேசன் எம்.பி.யினால் (ஜனநாயக மக்கள் முன்னணி) நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த 2 அணிகளில் எதனை தெரிவு செய்வதென்பது அவரவரைப் பொறுத்தது. இந்த 2 அணிகளுமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளோடு இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவசர வேண்டுகோள்

cvili.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு கடந்த சிலதினங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கிராம மட்டத்திலான அமைப்புக்களிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலைநிறுத்தம்: பஸ்களை நிறுத்திய அதிகாரிகள், கடைகளை மூடிய போலீஸ்

23-bandh-tamilnadu.jpgதிமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். திமுக பந்த்தால் மக்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலைநிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார். இருப்பினும் நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர்ப் பேருந்துகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போக்கள் மூடப்பட்டு விட்டன. பஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்துக் கழக விசாரணை அறைகளும் மூடப்பட்டு விட்டன.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளே, டிப்போக்களை மூடியதால், பஸ்களை இயக்க வந்த அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த கடைகளையும் திமுகவினர், போலீஸாரோடு வந்து மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பெரும் கும்பலாக வந்து கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸாரும் கடைகளை மூடுமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல்: 60 சதவீத ஓட்டுபதிவு

india-election.jpg மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 60 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த அதிமுக தொண்டர் சுப்பிரமணி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). அதிமுக தொண்டரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு வலயத்திலிருந்து 90 மணித்தியாலங்களில் 103,143 பொதுமக்கள் வருகை

cvili.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் இன்று காலை வரை 103,143 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் பாதுகாப்பு கருதி வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் நேற்று இரவு வரை 83,429 பொதுமக்கள் இராணுவத்தின் 58 ஆம் படையணியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 31,017 சிறுவர்களும், 27,990 பெண்களும், 24,422 ஆண்களும் அடங்குவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்களைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

cvili.jpg

பூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் கண்டுபிடிப்பு

new_world.pngபூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் ஒன்றை எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக சிலி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.

“கிளியஸ் 581′ நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைநோக்கி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்துள்ளார்.