::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இந்திய அணியில் மீண்டும் ட்ராவிட் – முதல் போட்டி இலங்கையில்

dravide-2222.jpgபிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் டிராவிட். இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளார். காயம் காரணமாக முன்னணி வீரர் செவாக், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாத ஓய்வுக்குப் பின்,  இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் செப். 8 ஆம் திகதி இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்குப் பின் செப். 22 ஆம் திகதி தென் ஆப்ரிக்காவில் ஆரம்பிக்க உள்ள சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.  இந்த இரு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி,  நேற்று தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் தேர்வு செய்யப் பட்டது. இந்திய கேப்டன் தோனி மற்றும் பலர் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அணியின் அதிரடி துவக்க வீரர் செவாக்,  தோள்பட்டை காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது இதற்கு சிகிச்சை பெற்று வரும் செவாக்,  முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செவாக் இல்லாத நிலையில்,  இந்திய அணியின் துடுப்பாட்டத்தை  பலப்படுத்தும் நோக்கில்,  முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார் டிராவிட். இவர் கடைசியாக கடந்த 2007 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தார். அதற்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த டிராவிட்,  தற்போது மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் காலடி வைக்க உள்ளார். 

100 மீ., ஓட்டம்- 9.58 வினாடிகளில் உசைன் போல்ட் சாதனை

17-husain-bolt222.jpg100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் 9.58 வினாடிகளில் வந்து தனது பழைய சாதனை முறியடித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் நடந்த ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் மின்னல் வீரர் என்று தடகள ரசிகர்களால் அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், அவரது போட்டியாளர்களாக கருதப்படும் ஜமைக்காவின் அசெபா பாவெல், அமெரிக்காவின் டைசன் கே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 9.69 வினாடிகளில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்ற போல்ட் நேற்றும் அசத்தினார். அவர் 9.58 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தனது உலக சாதனையை தானே முறியடித்தார்.

டைசன் கே (9.71 வினாடி) வெள்ளியும், அசெபா பாவெல் (9.84 வினாடி) வெண்கலமும் கைப்பற்றினர்.

194 ஓட்டங்கள்: உலக சாதனையை சமம் செய்த ஜிம்பாப்வே வீரர்

17-charles-coventry222.jpgபங்களா தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் உலக சாதனையை சமன் செய்தார். இப்போட்டியில் பங்களாதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

ஜிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று புலவாயோ நகரில் நடந்தது.

இதில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. ஆரம்ப வீரர் வெர்மூலன் 5 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாவது வீரராக சார்லஸ் கவன்ட்ரி வந்தார். அதிரடியாக துடுப்பாட்டம் செய்த இவர் வரிசையாக சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். இவருக்கு மட்சிகின்யெரி (37 ) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.

மற்ற வீரர்கள் சொல்லி கொள்ளும்படி துடுப்பெடுத்து ஆடவில்லை. என்றாலும் கவன்ட்ரி தொடர்ந்து துடுப்பெடுத்தாடி  7 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 156 பந்தில் 194 ஒட்டங்கள் எடுத்து,  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் 12 ஆண்டு கால சாதனையை சமன் செய்தார்.

இதையடுத்து ஜிம்பாப்வே 50 ஓவரி்ல் 8 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை நோக்கி துடுப்பாட்டம்  செய்த பங்களாதேச அணிக்கு தமிம் இக்பால் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். இவர் 154 ஒட்டங்கள்  எடுத்து அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றார். சித்திக் 38, ஹசன் 35, மகமூத்துல்லாஹ் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.

பங்களாதேசம் 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து பங்களாதேசம் 3-1 என தொடரை கைப்பற்றியது.

பாடசாலை மாணவர்களுக்கு சுழல் பந்து வீச்சு பயிற்சி முகாம் நேற்று திருமலையில் ஆரம்பிப்பு – முரளிதரன் பயிற்சி வழங்கினார்

murali.jpgகிழக்கு மாகாணத்தில் திறமைவாய்ந்த புதிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் மற்றும் சிறப்பாக பந்து வீசுவது தொர்பான யுக்தியை கற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் சுழற் பந்துவீச்சு பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாடசாலைகளின் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட 150 பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதற்கான ஒழுங்கை செலிங்கோ லைஃப் நிறுவனம் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக இந்தத்திட்டத்தை நடத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் இதுவாகும்.

இந்நிகழ்வில் முரளியின் முதலாவது பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பியால் விஜேதுங்க ஆகியோர் உதவியாகப் பணிபுரிந்தனர். இந்நிகழ்வில் செலிங்கோ லைஃப் பிரதித் தலைவர் ஆர். ரெங்கநாதன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நகர சபைத் தலைவர் கெளரி முகுந்தன் மற்றும் ஆயிரக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

உலக பட்மிண்டன் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் முதல் இந்தியப் பெண்

sainaafp222.jpgஉலக பட்மிண்டன் சாம்பியன் போட்டிகளின் கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை சைனா நெஃவால் என்ற வீராங்கனை பெற்றிருக்கிறார்.

19 வயதான இந்த இந்திய யுவதி, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராவார். பல்கேரிய நாட்டுப் பெண்ணுடன் விளையாடி வெற்றிபெற்ற அவர் கால் இறுதியை எட்டியிருக்கிறார். சீன நாட்டின் வாங் லின்னுடன் இனி அவர் போட்டியிடவுள்ளார்

டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார் முரளி

murali.jpgநியூஸி லாந்துடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முரளிக்கு பதிலாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இது தவிர, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாடாத விக்கெட் காப்பாளர் பிரஸன்ன ஜயவர்தன மற்றும் காயத்தினால் அவதிப்பட்டு வந்த டி.எம். டில்ஷான் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்புகின்றனர்.  இதில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்த சுரேவ் ரன்திவ், சுரங்க லக்மால் மற்றும் கௌஷல்ய சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 18 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்

குமார் சங்கக்கார (தலைவர்), மலிந்த வர்ணபுர, தரங்க பரணவிதான, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, திலகரத்ன டில்ஷா, அன்ஜலோ மத்தியூஸ், சாமர கபுகெதர, முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ், திலான் துஷார, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், பிரஸன்ன ஜயவர்தன (வி.கா.), ரங்கன ஹேரத்.

தரவரிசையில் சானியா முன்னேற்றம்

sania-mirza.jpgலெக் சின்டன் டென்னிஸ் பட்டம், வான்கூவர் டென்னிஸ் தொடரில் இறுதி வரை வந்தது ஆகியவற்றால் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 74-வது இடம் பிடித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் உலக தரவரிசைகளில் சானியா மிர்சா 49-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 140-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லெக் மேசன் டென்னிஸ் தொடரில் உயர் தரவரிசையில் உள்ள மாரின் சிலிச்சை வென்றதன் மூலம் சோம்தேவ் தேவ்வர்மன் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மலுக்கு அபராதம்

saeedajmal.jpgநேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சங்கக்காராவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் அவரை வசை பாடியபடி பெவிலியன் நோக்கி செல்லுமாறு செய்கை செய்ததால் அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு ஆட்ட நடுவர்கள் உத்தரவிட்டனர்.

இலங்கை விளையாடும் போது 14-வது ஓவரில் இது நடந்தது. இந்த மோசமான நடத்தையை நடுவர்களான அஷோக டிசில்வா, விஜேவர்தனே ஆகியோர் கண்டித்தனர்.

இதனால் உடனேயே தவறை உணர்ந்த சயீத் அஜ்மல் இருவரிடம் மன்னிப்பு கேட்டதோடு, ஆட்டம் முடிந்த பின்பு சங்கக்கராவிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.

இலங்கையுடனான 20க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் வெற்றி

afridi.jpgபாகிஸ் தானுடனான முதல் 20க்கு 20 போட்டியில் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் 20க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியிட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைமை தாங்கினார் அவர் தலைமை தாங்கிய முதல் 20க்கு 20 போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இம்ரான் 28 பந்துகளை எதிர் கொண்டு 40 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய உமர் அக்மல் 20 பந்துகளை எதிர் கொண்டு 30 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் துஷாரா 2 விக்கெட்டையும், குல சேகர, மெத்திவ், மலிங்க தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 6.1 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி 100 ஓட்டங்களை 12.1 பந்துகளில் பெற்றது. இதேவேளை 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டது. அப்போது அப்ரிடி 21 ஓட்டங்களையும், உமல் அக்மல் 28 ஓட்டங்களையும் உதிரியாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டிருந்தது.பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களை 17.5 பந்து களில் பெற்றது. 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

173 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் சங்கக்கார 38 ஓட்டங்களையும் ஜயசூரிய 23 ஓட்டங்களையும் பெற்றனர். எனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

பந்து வீச்சில் நவிட் 3 விக்கெட்டையும் அஜ்மல் 3 விக்கெட்டையும் அப்ரிடி, ஆமிர், அன்ஜும் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதேவேளை பாகிஸ்தான் அணி நாங்கள் தான் 20க்கு 20 உலக சம்பியன் என்பதை மிண்டும் நிரூபித்துவிட்டது மட்டுமல்லாமல் இப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவானார்.

இலங்கை பாகிஸ்தான் இருபது 20 போட்டி இன்று

0308mahela.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது 20 சர்வதேச போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இதில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஷஹீட் அப்ரிடி தலைவராக செயல்படவுள்ளார்.

அத்துடன் அண்மையில் நடந்த இருபது20 உலகக் கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, கடைசியக நடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியீட்டியது. எனவே, இன்றைய தினம் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த பழியை தீர்ப்பதற்கு இன்று முயற்சிக்கும்.  நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி இருபது20 போட்டியையும் இலகுவில் விட்டுக்கொடுக்காது என்பது நிச்சயம்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

சனத் ஜயசூரியவுடன் ஆரம்ப துடுப்பட்ட வீரராக மஹேல உடவத்த களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே இருபது20 போட்டியாக நடைபெறும் ஆட்டம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.