ஜெயபாலன் த

ஜெயபாலன் த

தேசம்நெற் இன் நல்லதொரு நண்பன் தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதன் பேரின்பநாதன் காலமானார்!

Perinpanathan_EROSஈரோஸ் அமைப்பின் செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான பேரி என அறியப்பட்ட பேரின்பநாதன் இன்று அதிகாலை காலமானார். தேசம்நெற் ஏற்பாடு செய்த பல சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கிய பேரின்பநாதன் முரண்பட்ட கருத்துக்களை உடையவர்களுடனும் நட்புடன் தனது கருத்துக்களை பரிமாறும் தன்மையால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

இவருடைய மைத்துனர் பிரிஎப் இன் தலைவராக இருந்த சுரேன் சுரேந்திரன். அதுமட்டுமல்ல மற்றைய உறவுகளும் அவ்வாறான கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் பேரின்பநாதன் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர். எப்போதும் தனது கருத்துக்களுக்காக உறுதியுடன் இறுதிவரை நின்றவர்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேரின்பநாதன் லண்டனில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிளவுபட்ட போது அவற்றை மீண்டும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தவர். ஆயினும் அவை இணைந்து கொள்ளவில்லையானாலும் முரண்பாடுகளைத் தணிப்பதில் அவரது முயற்சி உதவியது.

இன்று அதிகாலை பேரின்பநாதனின் மறைவு அவரை அறிந்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பேரின்பநாதன் பிரித்தானியாவில் உருவான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக லண்டனில் வாழ்ந்த இவர் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த போதும் அம்மக்களின் அரசியலுடன் தன்னை தொடர்ந்தும் ஒன்றிணைத்தவர். லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு’ வில் முன்நின்று அக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் பேரின்பநாதன்.

தேசம்நெற் நல்லதொரு நண்பனை தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதனை இழந்துள்ளது. தேசம்நெற் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் பேரின்பநாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டு உள்ளார்.! : த ஜெயபாலன்

Prof_Hoole_at_Thesam_Meeting_27Aug10யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு உள்ளார்.  டிசம்பர் 16 பேராசிரியர் சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், பேராசிரியர் ஹூல் உத்தியோகபூர்வமாக நியமனப் பத்திரத்தைப் பெற்று பதவியேற்கும் வரை பேராசிரியர் என் சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக கடமையாற்றுவார். பேராசிரியர் ஹூல் அடுத்தவார நடுப்பகுதியில், அல்லது இடையே நீண்ட விடுமுறைகள் வருவதால் ஜனவரி முற்பகுதியில் பதவியேற்பார் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக தேசம்நெற், பேராசிரியர் ஹூல் உடன் தொடர்பு கொண்ட போது, ”ஜனாதிபதி கல்வித் திறமைக்கும் ஆளுமைக்கும் மதிப்பளித்து இந்த நியமனத்தை அளித்தமைக்கு நான் நன்றியாய் உள்ளேன். அவரது நம்பிக்கைக்கும் மற்றையவர்களது நம்பிக்கைக்கும் ஏற்ப யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறந்ததொரு பல்கலைக்கழகமாக கட்டியெழுப்புவேன்” எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனக்கு வாக்களித்த, ஆதரவளித்த, தமிழ் மக்களின் கல்வியில் அக்கறைகொண்ட, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஹூல் க்கு தேசம்நெற் ஆசிரியர் குழு சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்வதற்கான முதல் அடியாக பேராசிரியர் ஹூல் உடைய நியமனம் அமைந்துள்ளது.

கடந்த யூலை முதல் யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதத்தை தேசம்நெற் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

2006ல் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அவருக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல்களை மேற்கொண்டனர். அதன் காரணமாக அவர் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:

யாழ்ப்பாணக் கம்பஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக இருந்து 1979 ஜனவரி 1 முதல் யாழ்ப்பாணப் பல்லைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ் ஆக இயங்கிய காலப்பகுதியில் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கெ கைலாசபதி (01 ஓகஸ்ட் 1974 – 31 யூலை 1977). அவரைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் (01 ஓகஸ்ட் 1977 – 31 டிசம்பர் 1978) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறும்வரை யாழ்ப்பாணக் கம்பஸ் இன் அதிபராக இருந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர்கள்:

பேராசிரியர் எஸ் வித்தியானந்தன்   1979 ஜனவரி   – 1988 யூலை
பேராசிரியர் ஏ துரைராஜா   1988 செப்ரம்பர்  – 1994 ஏப்ரல்
பேராசிரியர் ஏ குணரட்னம்   1994 ஏப்ரல்  – 1997 பெப்ரவரி
பேராசிரியர் பி பாலசுந்தரம்பிள்ளை   1997 பெப்ரவரி  – 2003 ஏப்ரல்
பேராசிரியர் எஸ் மோகனதாஸ்   2003 ஏப்ரல்  – 2006
பேராசிரியர் ஜீவன் கூல்  2006 பதவியை பொறுப்பேற்கவில்லை.
பேராசிரியர் என் சண்முகலிங்கம்   2008 ஜனவரி – 2010 டிசம்பர்
பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்   2010 டிசம்பர்

இலங்கையின் மிகச் சிறந்த கல்விமான் ஆன பேராசிரியர் ஹூல் தனது கல்விச் சேவையை தனது மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பில் செப்ரம்பரில் இலங்கை திரும்பினார். அங்கு செல்லும் வழியில் லண்டன் வந்து தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பற்றிய சிறப்புரையை தேசம் ஏற்பாடு செய்த சந்திப்பில் வழங்கி இருந்தார்.

தற்போது யாழ் பல்கலைக்கழகம் கல்வி நிலையிலும் நிர்வாகத்திலும் மிகச் சீரழிந்த நிலையில் உள்ளது. பேராசிரியர் ஹூல் ஏற்றுள்ள பொறுப்பு மிகப் பாரியது. தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மக்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் முக்கிய பொறுப்பு பேராசிரியர் ஹூல் இடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியர் ஹூல் உடைய நியமனம் பலத்த அரசியல் இடையூறுகளுடன் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலரும் அவரிடம் நம்பிக்கையான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அவரிடம் வைத்துள்ள நம்பிக்கை அவரது பொறுப்பின் கடினத்தை தெரிவிப்பதாக உள்ளது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் இன்று பதவியேற்பார்! : த ஜெயபாலன்

புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் – புலி ஊடகங்கள் (1) ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Orupaper_Title

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந்த தகைமை யவர்
                       (குறள் 447)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சியும் அழிவும் பல்வேறு காலகட்டங்களில் நியாயமான விமர்சனங்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு வந்ததுடன் எவ்வாறான அணுகுறைகள் தவறானவை என்பதும் எவ்வாறான அணுகுமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மிகத் தெளிவாகவே சுட்டிகாட்டப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்களை எல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது என்றும் அவ்வாறான விமர்சனங்களை வைத்தவர்களை எல்லாம் துரோகிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் முன்நின்றன.

இந்த ஊடகங்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அவர்களிடம் கேள்வியோ விமர்சனமோ இல்லை என்பதல்ல. ஆனால் கேள்வியை எழுப்பினால், விமர்சனத்தை முன் வைத்தால், எங்கே தங்களை ‘கழற்றி’ விடுவார்கள், தங்கள் பிழைப்பு படுத்துவிடும் என்ற பயம். இந்த ஊடகங்களும் கட்டுரையாளர்களும் செய்தது முற்று முழுதான ஊடக விபச்சாரம். இந்த ஊடகங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வாழ்வை வளம்படுத்திக்கொண்ட இவர்கள், தாயக மக்களின் பெருமூச்சில் குளிர்காய்ந்தனர். அங்கு நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றையும் காசாக்கிக் கொண்டனர். அதற்காக தங்களை புலியாக்கிய பச்சோந்திகள் இவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதம் ஏந்தாத எந்தவொரு அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு எதிரான அல்ல ஆதரவு இல்லாத எந்தவொரு அமைப்பையும் அவர்கள் இயங்க அனுமதிக்கவில்லை. தங்களுக்கு ஆதரவான அமைப்புகளையும் அவர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கவில்லை. தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலை இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர்கள், ஆயுதம் தரிக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும். ஒரு பேப்பர், ஈழமுரசு, தமிழ் கார்டியன், ரிரிஎன் (ஜிரிவி), ஐபிசி (ஐஎல்சி) போன்றனவும் இணையங்களும் இதில் முன்னின்றன.

தங்களுக்கு எதிரானதும் ஆதரவு இல்லாததுமான அமைப்புகளை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளும் வெகுவிரைவிலேயே, அதே அமைப்பைச் சார்ந்தவர்களாலேயே வீழ்ச்சி அடைந்து. அதன் தலைமைகள் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட உடனேயே புலம்பெயர் நாடுகளில் 300 மில்லியன் டொலர்கள் வரை ஆண்டு வருமானத்தைக் கொண்ட 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்கள் மே 18 2009ல் காணாமல் போனது. இதற்கு மேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் எப்படியானவர்கள் இருந்தனர், உள்வாங்கப்பட்டனர் எனபதற்கு விளக்கம் அவசியமில்லை. (லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி விடயங்களுடன் தொடர்பு உடையவர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டு உள்ளது. மேலதிக தகவல் வைத்துள்ளவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும். வெகுவிரைவில் தேசம்நெற் இல் இப்பட்டியலைக் காணலாம்.)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சிக்கு மாத்தையா, கருணா பிளவு மட்டும் காரணமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுக்குப் புலம்பெயர்ந்த பல பச்சோந்திகள் தங்கள் சுயலாப நோக்கங்களுக்காக, புலித்தோல் அணிந்துகொண்டு உள்ளே சென்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளிலும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறான கட்டமைப்புகளில் இந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் முக்கியமானவை. இந்த ஊடக ஒட்டுண்ணிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான அத்தனை சிந்தனைகளையும் விவாதங்களையும் ஓரம்கட்டி ‘ஜிஞ்சா’ கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்து, உடுக்கடித்து உடுக்கடித்து புலியை முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டனர்.

இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் உணர்வாளர்களோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் உணர்வாளர்களோ அல்ல. தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்கள் சொந்த லாபங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியிலும், அழிவிலும், வன்னி மக்களுடைய அழிவிலும் இவர்களுடைய கரங்கள் இரத்தம் தோய்ந்தவை. இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய எதிரி. ஆனால் அவர்களுடன் கூட இருந்த புலித்தோல் போர்த்திய இப்பச்சோந்திகள் கூட இருந்தே குழி பறித்த மோசடியாளர்கள்.

இவர்களைப் பற்றி தொண்ணூறுக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.  கேணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதிலும் வேறுபல படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் நன்கு அறியப்பட்டவர். பெண்கள் தொடர்பில் அவருக்கு இருந்த பலவீனமே அவருடைய கால் கைக்குண்டில் பறிபோனதற்குக் காரணம். லண்டன் வந்திருந்த வேளையில் அவருடைய மரணத்துக்கு அண்மையாக சில மாற்றங்கள் அவரிடம் இருந்தது. கிட்டு லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் கூட்டி ஒரு கூட்டம் வைத்தார். அதற்கு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். கிட்டுவினால் சித்திரவதைக்கு உட்பட்டவர்களும் வந்திருந்தனர்.

கிட்டுவின் கவனத்தை ஈர்க்க பலர், சிலரை தமிழினத் துரோகிகள், புலிகளுக்கு எதிரானவர்கள் என முண்டியடித்துக் கொண்டு வசைபாடிக் கொண்டிருந்தனர். கிட்டு அனைத்தையும் செவிமடுத்துவிட்டுச் சொன்னார் “ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக எழுதினால் அதில் எமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்டவரின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று எமக்கு தெட்டத்தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை யார் ஆபத்தானவர்கள் என்றால் எம்மைத் துதிபாடிக்கொண்டு, எமக்கு விசுவாசமானவர்கள் போல் நடித்துக் கொண்டு தமது சொந்த அபிலாசைகளை எம்மை வைத்துக் கொண்டு நிறைவேற்றுபவர்கள் தான் எனக்கு கவலை அளிக்கின்றது” எனக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று கிட்டு கூறியது இன்றும் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது. புலி ஊடகங்களுக்கு குறிப்பாக ஒரு பேப்பர் கோஸ்டிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
                      (குறள் 448)

ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு இடித்துக் கூறும் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி வழிபடுத்துவோர் அவசியம். அவ்வாறான ஆலோசனையைப் பெற்று திருத்திக் கொள்ளும்போது அவர்கள் நல்லமுறையில் நிர்வாகத்தை ஆட்சியை நடத்த முடியும். ஆனால் அவ்வாறு இடித்துரைப்பவர்கள் இல்லையாயின் பகைவரின்றியே அரசு கெடும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலும் மேலேயும் குறிப்பிடப்பட்டுள்ள இரு குறள்களும் இதனையே விளக்குகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடிப்பாரையாக இருந்து குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் தாங்களும் இடிப்பாரையாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிப்படுத்தவில்லை. இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்திருந்தால் புலிகளுக்கு கசப்பான விடயங்களையும் சுட்டிக்காட்டி அவர்களை வழிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இவர்கள் அவ்வாறு வழிப்படுத்த முயன்றவர்களையும் அதனைச் செய்ய விடவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஊடகங்களால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாயைக்குள் சிக்கி வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கப்பட்டனர். இந்தப் புலி ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இருந்த உறவு ஊடக விபச்சாரமே.

11 – 17 டிசம்பர் ஈழமுரசு பத்திரிகையில் இருந்து: ”….. அண்மையில் பிரித்தானிய வெளியிட்ட காணொளி ஆவணத்தில் காணப்படும் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி ரமேஸ்க்கு கொடுக்கப்பட்ட பணியும் அதுதான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய உத்திகள் என்பது ஸ்ரீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்க வைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது…..

தான் அவமானப்படுத்தப்பட்டு கோரமாகக் கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார்.

….. நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப் போர் எனவும் அதில் 50000ற்கும் மேற்பட்ட மக்களை ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப் புலிகள் முன்னரே எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்புகள் இதுதான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை.”

ஈழமுரசு என்ன சொல்ல வருகிறது. தேசியத் தலைவரின் போரியல் வழிகாட்டலில் போரிட்டோம். தலைவரின் இராணுவத் தந்திரோபாய வழிகாட்டலில் பின்வாங்கினோம். தலைவரின் வியூகத்தில் உள்ளுக்கு விட்டு அடித்தோம். பிறகு தலைவனின் கட்டளையை ஏற்று கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றோம்.

ஈழமுரசு ஒரு பேப்பர் மற்றும் புலி மீடியா,
ஐயாமாரே அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே உந்தத் தலைவன் உதை ஒரு மாசத்துக்கு முதல் தன்னும் சொல்லி இருந்தா எத்தினை ஆயிரம் உயிர்கள் பிழைச்சு இருக்கும். நாங்கள் சொன்னம் துரோகிகள் நீங்கள் கேக்கமாட்டியல். நீங்கள் உங்கட மீடியாக்கள் எல்லாம் காவடி எடுத்தியளே சிவாஜிலிங்கம் அந்தாள் மூன்று மாதத்துக்கு முதல் சொல்லிச்சே. கேட்டியளோ. நாசமாய் போவாரே உங்கட சொந்தப் பிள்ளையளா இருந்தால் இப்பிடியா செய்வியல்? அந்த வன்னிச் சனம் எல்லாம் வெள்ளைக் கொடியோட புலிகளைத் தாண்டிப் போக சுட்டுக் கொன்றான்கள். தப்பிப் போக நிண்ட சனத்தை செல் அடிச்சு கொன்றியளே. அப்பிடிப் போன சனத்தை கூச்சமில்லாமல் துரோகி என்றியள். சிங்கள இராணுவத்தை எதிரிப்படை என்று சனத்துக்கு தெரியும். ஆனால் 300 000 வன்னி மக்களை மந்தைகளாக அடைத்து வைத்து எதிரியை வைச்சு 50 000 சனத்தை கொன்று அதை வைச்சு மனித உரிமை அரசியல் செய்கிறம் என்று சொல்லுறியளே இதைவிட ஒரு பொறுக்கி அரசியல் உலகத்தில எங்கேயும் நடகேல்லை.

தளபதி ரமேஸ் மட்டுமல்ல தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்.

இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி மாயைவலை கட்டமைத்து அவர்களே தங்கள் பலம், பலவீனங்களை அறிய முடியாத அளவுக்கு அவர்களை உசுப்பேத்திய ஜம்பவான்கள் இந்த ஒரு பேப்பர் மற்றும் புலித்தோல் போர்த்திய பச்சோந்திகள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அழிக்கவில்லை அவர்களுக்காக வன்னி மக்களையும் அழித்து, தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் மே 18 2009 வரை எழுதி வந்த பொய், புரட்டுக்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து, அவர்களுடைய ஒவ்வொரு செய்தியும் கட்டுரைகளுமே அம்மணமாகி உள்ளது. ஆனாலும் தங்கள் சுய இருப்பையும் எதிர்கால சுயலாபத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்து தொடர்ந்தும் மாயைகளையே கட்டமைக்கின்றனர்.

மற்றையவர்களை ‘பொறுக்கிகள்’, ‘நக்குபவர்கள்’ என்றும் விமர்சிக்கும் இவர்கள், தங்கள் ‘மேதகு தேசியத் தலைவர்’ இலங்கை இராணுவத்தின் பூட்ஸ்களை நக்குகின்ற நிலைக்கு தள்ளியவர்கள் என்பதனை வரலாறு குறித்துக் கொள்ளும்.

இன்னும் தொடரும்…..

(அடுத்த பாகத்தில்: ஒரு பேப்பர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் பார்த்தீபன் (பார்த்தீபன்), பொறுப்பாசிரியர் கோபால் தேவதாசஸன் கோபிரட்ணம் (கோபி), ஆசிரியர் குழு மன்மதக்குஞ்சு இரவி அருணாச்சலம், சாந்தி வவுனியன், சுகிர்தகலா கோபிரட்ணம், தமிழ் உணர்வாளரும் சீலை வியாபார நிபுணருமான சிவானந்த சோதி ஆகியோருடைய அரசியல் பற்றி அலசி ஆராயப்படும்.)

தேசம்நெற்லீக்ஸ்: சரணடைந்த பிரபாவின் இறுதி நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது!

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த பின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டமை ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவருகிறது. சம்பவத்தின் போது யுத்தப் பகுதியில் கடமையில் இருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இதனைப் பதிவு செய்ததுடன், ஆர்வ மேலீட்டினால் இதனை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுப்பி வைத்தும் உள்ளனர் எனத் தெரியவருகிறது. அண்மைக்காலமாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஒளிப்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் இன்னமும் முயற்சி எடுத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் இறுதி நிமிடங்களும் அவர்களுக்குக் கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சில நிமிடங்களே நீளமான இப்பதிவில் பிரபாகரன் சரணடைந்த இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் அங்கு அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. காட்சிகள் மிகக் கோரமானதாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிலர் இப்பதிவினைப் பார்வையிட்டு உள்ளனர்.

வே பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்ததும் அதன் பின்னரே கொல்லப்பட்டது பற்றியுமான தகவலை தேசம்நெற் மே 21 2009ல் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன் ஆனால் அச்சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சிலருடைய கணணிகளிலும் தொலைபேசிகளிலும் பாதுகாக்கப்பட்டு உள்ளமை இப்போது தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கும் இலங்கை அரசுத் தலைமைக்கு இடையேயான முரண்பாடுகளும் அதனை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி உடன் கூட்டமைத்துக் கொண்டதும் இப்பதிவுகள் பொதுத் தளத்திற்கு வருவதைத் துரிதப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளதாகக் கூறி கிழக்கு லண்டனில் உள்ள பிரியா உணவகத்தில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டும் சிறு வைபவம் நவம்பர் 26ல் இடம்பெற்றது. ரூட் ரவி என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டன் ஆதரவுத் தலைமைகளில் ஒருவரான இவர் கேக் யை வெட்ட முயற்சித்த போது, இலங்கை அரசினால் பிரச்சினை வரும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு சிறுமியைக் கொண்டு கேக் வெட்டப்பட்டு ‘தேசியத் தலைவர்’ இன் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது இறுதி நிமிடங்கள் அடங்கிய ஒளிப்பதிவு அதன் ஆதரவு அமைப்புகளுக்கோ அல்லது சனல் 4 தொலைக்காட்சிக்கோ ஏற்கனவே கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தும் அவர்கள் அதனை ஒளிபரப்பவில்லையா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்

LTTE LOGOஇன்று வெளியாகி வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலேயே தேசம்நெற் இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதி மனித அவலத்தை நிறுத்துமாறு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் வலியுறித்தி இருந்தது. பாரிய தோல்விகளைச் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளை இறுதிநேரம் வரை காத்திருந்து மனித அவலத்தை ஏற்படுத்தாமல் பல மாத்ங்களுக்கு முன்னதாகவே சரணடைய வேண்டும் என்றும் கேட்கப்பட் இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் காலம்கடந்தவையாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் புலம்பெயர் ஆதரவாளர்களினதும் அரசியல் எப்போதும் கண்கெட்ட பின் சூரிய நம்ஸ்காரமாகவே இருந்துள்ளது.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டு படுகொலை செய்யப்பட்ட பல தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் மே 17 2009ல் பதிவிடப்பட்ட இப்பதிவை மீண்டும் மீள்பதிவிடுகிறோம்.

._._._._._.

May 17 2009

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது?

புலிகளின் ‘பிளக் சற்றடே’ ஆக அமைந்த நேற்றைய தினம் (மே 16 2009) எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன், முதல் பல்வேறுபட்ட ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவலாக வெளிவருகின்றன. புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வெளியிட்ட வேண்டுகோளுக்கு அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் இதுவரை சாதகமான சமிஞைகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரின் வேண்டுகோள் வன்னியில் உள்ள தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடப்பட்ட வேண்டுகோள் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான முயற்சிக்கு இந்திய சம்மதித்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதி நேரத் திருப்பங்களில் மிகுந்த நம்பிக்கையுடைய புலிகள் அவ்வாறான திருப்பத்திற்கு காத்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

நேற்றைய இந்தியத் தேர்தல் முடிவுகளால் மிகுந்த ஏமாற்றமடைந்த புலிகள் தங்கள் தோல்வியை ஏதோ ஒரு வகையில் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சிகளில் இறங்கி உள்ளனர். அதன் இறுதி நடவடிக்கையாகவே ஒபாமா நிர்வாகத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்பாளர் விடுத்த வேண்டுகோள் அமைந்து உள்ளது. இலங்கை இராணுவத்திடம் புலிகளின் தலைமை சரணடைவது அவர்களுடைய கடந்த மூன்று தசாப்த போராட்டத்தையும் அர்த்மற்றதாக்கி அவர்களது வரலாறும் களங்கப்பட்டுவிடம் என்பதை சரியாகவே உணர்ந்து உள்ளனர். அதனால் இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்திடம் சரணடைவதன் மூலம் தங்கள் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார்கள்.

ஆனால் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் தனது வேண்டுகோளை இந்தியாவை நோக்கி விடுத்து இருந்தால் இந்த யுத்தத்தைப் பின்னணியில் இருந்து நடாத்தும் இந்தியா அதற்கு சம்மதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல் வந்து அதனிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. புலிகளுக்கு இந்தியாவிடம் சரணடைவதில் உள்ள முக்கிய பிரச்சினை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் இந்தியா விதிதத்து உள்ள பிடியாணை. இவ்விருவரும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பகுதியினுள் இருந்தால் இந்தியாவிடம் சரணடையும் முடிவை எடுத்திருக்க இயலாது. அவ்வாறு சரணடைந்து இந்தியாவை அரசியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வைக்கும் அரசியல் வல்லமை புலிகளிடம் இல்லை. அவர்களிடம் உள்ள முரட்டுத்தனமான ஈகோ அவர்களது உயிருக்கும் ஆபத்தாகி உள்ளது.

இன்று (மே 17 2009) அதிகாலை முள்ளிவாய்க்கால் களமுனையில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு தப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாரிய தாக்குதலில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆளில்லாத விமானங்கள் தாள்வாகப் பறந்து வேவு பார்த்ததில் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியினுள் இருப்பதாகவே இராணுவம் நம்புவதாக உறுதிப்படுத்த முடியாத மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து இராணுவம் சுற்றுவளைக்கப்பட்ட பகுதி தொடர்பாக இறுதியான சில முடிவுகளை எடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஏற்கனவே இராணுவம் தற்போது சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் இருந்து கடந்த 72 மணித்தியாலங்களில் 50 000 மக்கள் வெளியேறி உள்ளதாகவும் அப்பகுதியில் பொது மக்கள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. பொது மக்கள் அங்கு உள்ளார்களா? அல்லது அனைவரும் வெளியேறிவிட்டார்களா? என்பதனை சுயாதீனமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் பொதுமக்கள் யாவரும் வெளியேறிவிட்டார்கள் என்று இராணுவம் கூறி இருப்பது கடுமையான இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இராணுவம் தயாராகலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராணுவம் புலிகளின் தலைமையை உயிருடன் கைது செய்வதையோ அல்லது அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து தங்களிடம் சரணடைவதையோ பெரும்பாலும் விரும்புகின்றது. வெளியேறி வருகின்ற மக்களுக்கும் இடப்பெயர்வு முகாம்களுக்குமே சர்வதேச பொது ஸ்தாபனங்களை அனுமதிக்காத இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை அமெரிக்காவிடமோ அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றிடமோ ஒப்படைக்க அவ்வளவு இலகுவாக சம்மதித்து விடாது. அதற்கான நெருக்குதல்களே பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணின் ‘பின் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரும்’ என்பது போன்ற அச்சுறுத்தல்கள். இது சர்வதேச அமைப்புகள் மூலமும் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படலாம்.

ஆனால் மீண்டும் இந்தியாவின் பாத்திரம் இதில் மிகவும் முக்கியமானது. இந்தியா புலிகளை தன்னை நோக்கி மண்டியிட முயற்சிக்கும் என்றே நம்பலாம். அதனால் இலங்கை அமெரிக்காவினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்களுக்கு பணியாமல் இருப்பதற்கு இலங்கைக்கு பக்க பலமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

2002ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியா உங்களுக்கு பிடியாணை பிறப்பித்து உள்ளது பற்றி புலிகளின் தலைவர் வே பிரபாகரனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாகரன் அப்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துக்கூடாகக் கூறியது, ‘அண்ணை நடக்கிறதை கதைக்கச் சொல்லுங்கோ’ என்ற வகையில் பதிலளித்திருந்தார்.

ஆனால் புலிகள் அடுக்கடுக்காக விட்ட அரசியல் தவறுகள் இன்று அவர்களது மரணம் வரை அவர்களைத் துரத்துகின்றது. ‘அரசன் அன்று கொல்வான். இந்தியா நின்று கொல்லும்.’ என்பது பொருத்தமாகிவிட்டது.

இலங்கை அரசாங்கம் சரணடையும் தருவாயில் உள்ள புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதோ அல்லது அப்பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதோ மற்றுமொரு மனித அவலத்தை உருவாக்கும். மேலும் அது சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக அமையும். ஆகவே இந்த யுத்தத்தை மனிதாபிமான நோக்கில் சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக முடிவுக்கு கொண்டுவருவதே பொருத்தமானது. இராணுவத்தரப்பில் மக்கள் அங்கில்லை என்று கூறப்பட்டாலும் அது சுயாதீனமாக ஒறுதிப்பட்ட ஒன்றல்ல. அப்பகுதி மீது தாக்குதல் நடத்துவது மற்றுமொரு மனித அவலத்தை ஏற்படுத்தும்.

இன்று புலிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளையே அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். அதனால் அரசு வலிந்து தாக்குதல் நடத்தி மனித அவலத்தை ஏற்படுத்துவது அவர்கள் புலிகளாக இருந்தாலுமே பாரிய மனிதவிரோதச் செயலாகும். சுற்றி வளைக்கப்பட்டு உள்ள புலிகள் மனிதாபிமான முறையில் கௌரவமாக சரணடைவதற்கான வழிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பதே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கு வழியை ஏற்படுத்தும்.

அவர்கள் புலிகளாக இருந்தாலும் அவர்கள் போராடுவதற்கான சூழலை இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகளே ஏற்படுத்தின. அவர்களது போராட்டமுறை பயங்கரமானதாக இருந்துள்ளது. இன்று அவர்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டு உள்ளனர். அதற்கு மேல் அவர்களைக் கொன்றொழிப்பதை எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தமிழ் தாயுடைய பிள்ளைகள் சகோதரர்கள். அவர்கள் பிரதான சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட பூர்வமான அரசினுடைய முதற்கடமை.

தமிழ் மக்களை அரசின் மீது நம்பிக்கைகொள்ள வைப்பதற்கான மிக முக்கிய காலகட்டம் இது. சுமுகமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவும் உள்ள முதல் நிபந்தனை இன்று சுற்றிவளைக்கப்பட்டு உள்ள புலிகளை கௌரவமான முறையில் சரணடைய ஏற்பாடு செய்து அவர்களையும் வன்னி முகாம்களில் உள்ள மக்களையும் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவது.

இதனைவிடுத்து அவசர அவசரமாக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவர்களை அழிப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வன்மத்தை ஏற்படுத்தும்.  மேலும் ஏற்கனவே எல்லைப்புறக் கிராமங்களில் பதுங்கி உள்ள புலிகள் சிங்களக் கிராமங்கள் மீதும் தாக்குதளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. இது 1983யை மீண்டும் நிகழ்த்த வழிககுக்கலாம்.

என்னதான் புலிகள் மக்களைக் கேடயங்களாக பயன்படுத்தி இருந்தாலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களை அழிக்க முற்படுவது அரச பயங்கரவாதமாகவே அமையும். ஏற்கனவே ஏற்பட்ட மனித அவலங்களுக்கு அரச படைகளும் சம பொறுப்புடையவர்கள். இன்று அரசு இராணுவ நகர்வில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதால் மற்றுமொரு மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு அரசினுடையது.

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழக உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

Vasanthy_Arasaratnam_Prof_UoJஅண்மைக் காலமாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் நவம்பர் 27ல் இடம்பெற்ற பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களின் தெரிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அதற்கு மாறாக பேராசிரியர் ஹுல் 2006ல் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை அச்சுறுத்தலை மேற்கொண்டு பேராசிரியர் ஹுல் ஐ தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். தற்போது பல்கலைக்கழகக் கவுன்சிலால் மூவர் (பேராசிரியர்கள் வசந்தி அரசரட்ணம் ரட்னஜீவன் ஹூல் என் சண்முகலிங்கம்) தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அவர்களுடைய பெயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அண்மைக்காலமாக தேசம்நெற் யாழ் பல்கலைக்கழகத்தின் திரைமறைவில் இடம்பெற்ற நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றை வெளிக்கொண்டு வந்ததன் பயனாக என் சண்முகலிங்கம் தவிர்ந்த ஏனைய தகுதியற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தருக்கான தெரிவில் ஆரம்பத்தில் முன்னணி வேட்பாளர்களாகக் கருதப்பட்ட பேராசிரியர் எஸ் சத்தியசீலன், பேராசிரியர் என் ஞர்னகுமாரன் ஆகியோர் நவம்பர் 27ல் முதல் மூவருக்குள் தெரிவு செய்யப்படவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றுக்கு காரணமானவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகள் உப வேந்தராக இருந்த பேராசிரியர் என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக உள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணிப் பேராசிரியர்களின் திருவிளையாடல்கள் அம்பலத்திற்கு வந்ததால் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஒப்பீட்டளவில் தகுதியான ஒரே வேட்பாளர் ஆனார். அதனால் தேசம்நெற் இன் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததுடன் அரசியல் ரீதியான ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

உப வேந்தருக்கான தகமை அடிப்படையில், கல்வித் தகமையாக இருந்தாலென்ன நிர்வாக – முகாமைத்துவத் திறனாக இருந்தாலென்ன பேராசிரியர் ஹுல் ஏனைய அனையவர்களைக் காட்டிலும் மிக உச்சத்திலேயே உள்ளார். ஆனால் அவருக்கான அரசியல் ஆதரவு மிகக்கீழ் நிலையிலேயே உள்ளது. ஆனால் கல்வித் தகமை, நிர்வாக – முகாமைத்துவத் திறன் அடிப்படையில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கீழ் நிலையில் (பேராசிரியர் ஹுல் உடன் ஒப்பிடுகையில்) இருந்தபோதும் அவருக்கான அரசியல் ஆதரவு மேல்நிலையில் உள்ளது. அதனால் அவரை யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஆக்குவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் இருந்து போட்டியிட்டவர்களில் அப்பதவிக்கான தகமையைக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டு உள்ள, ஆவணங்கள் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் கரங்களும் கறைபடிந்தவை என்பதனை நிரூபிக்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் மூடி மறைக்கப்படுகின்றன. பல்கலைகழகத்தின் பெயருக்கு நல்லதல்ல என்று கூறி மோசடிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழகம் மிகச் சீரழிவுக்கு சென்றுள்ளது. பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்கள் மோசடியில் ஈடுபட்டு அவை மூடிமறைக்கப்படும் போது அவர்கள் உயர்நிலைக்குச் செல்லும் போது மேலும் மேலும் மோசடிகளில் ஈடுபட்டு அவற்றை பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாதுகாப்பதாகக் கூறி மூடிமறைக்கின்றனர். அதனால் பல்கலைக்கழகம் பற்றி தேசம்நெற் இல் வெளிக்கொண்டு வரப்பட்ட விடயங்கள் மிகச்சொற்பமானவையே எனவும் மோசடியும் ஊழல்களும் குவிந்துள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2003ல் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கணணி வலையமைப்பு மற்றும் பாகங்களை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டார். இவ்வாறான பெரும்தொகைக் கொள்வனவுகள் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையிலுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பேராசிரயர் வசந்தி அரசரட்ணம் இந்த விதிமுறைகளை மீறி நேரடியாக M/S Delvon Computers (Pvt) Ltd, என்ற நிறுவனத்துக்கு கொள்வனவுக் கட்டளையை வழங்கி உள்ளார். இந்நிறுவனம் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர தளபதி ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்வனவு பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையினூடாகவும் மேற்கொள்ளப்படாமையினால் இக்கொள்வனவுக்கான நிதியினை வழங்க நிதிக்குழு தாமதித்தது. அவர்கள் குறிப்பிட்ட கொள்வனவு தொடர்பான கணக்கியல் பதிவுகளில் கேள்விகளை எழுப்பினர். அப்போதைய உப வேந்தர் மோகனதாஸ் இவ்விடயத்தை நிதிக்குழுவிற்கு குறிப்பிட்டு இருந்தார். அதன் பின்னர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் முன்னர் வழங்கிய தொகையைக் குறைத்து புதிய தொகையை வழங்கியதாக தெரியவருகிறது.

மருத்துவ பீடத்திற்கான கணணி வலையமைப்பு மற்றும் அதற்கான பாகங்களைக் கொள்வனவு செய்ய WHO, 963400.00 ரூபாய்களை மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால் பேராசிரியர் வசந்தி அரசரடணம் தனக்கு வழங்கப்பட்ட நிதி வரையறைக்கு பலமடங்கு அதிகமாக கொள்வனவு விதிகளை மீறி நேரடியாக கொள்வனவுக் கட்டளையை வழங்கி இருந்தார். ஆனால் இது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது கொள்வனவுத் தொகை குறைக்கப்பட்டது. அப்படி இருந்துமே அப்போதைய சந்தை நிலையிலும் பார்க்க அதிகமாகவே இருந்தது.
 
இது தொடர்பாக நிதிக்குழுவின் ஒக்ரோபர் 25 2004ல் இடம்பெற்ற 247வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 2003ல் 1163550.60 ரூபாய்க்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக விதிமுறைகளையும், ரென்டர்முறைகளையும் மீறி கொள்வனவை மேற்கொண்டதாக அப்போதைய உபவேந்தர் மோகனதாஸ் 247வது நிதிக் குழு கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
 
நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கிய குறிப்பில் வேலைத்திட்டத்திற்கு ஆன செலவீனம் ரூபாய் 2,080,839.18 ஆல் அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது மொத்த செலவீனம் ரூபாய் 2,080,839.18 + 963,400.00  = 3 044 239.18.  வழங்கப்பட்ட நிதிவரையறைக்கு (963400.00 ரூபாய்) அதிகமாகவே பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் செலவீனத்தை மேற்கொண்டார்.

இந்த அதீத செலவீனத்தை மருத்துவ பீடத்தின் தகவல்தொழில் நுட்பத்திற்கு யுனிவசிற்றி கிறான்ட் கொமிசனால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் கேட்டு இருந்தார்.

Delvon நிறுவனம் கேட்டுக்கொண்ட நிதியை வழங்காமல் ஓராண்டுவரை கூட்டங்களில் விவாதித்து ஒக்ரோபர் 30 2004 ல் இடம்பெற்ற நிதிக் குழுவின் 291வது கூட்டத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் (Council Memo 277/17(e)) இது தொடர்பாக பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை கண்டித்து இருந்தது. எதிர்காலத்தில் இது தொடர்பான அனைத்து விடயங்களும் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் (through Bursar) ரென்டர் முறையினூடாகவுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழகத்தின் சார்பில் Delvon  நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் பல்கலைக்கழக நிதிக் குழு பல்வேறு அழுத்தங்களாலும் குறைக்கப்பட்ட ஆனாலும் சந்தை நிலையிலும் அதிகமான கட்டணத்தை நிறுவனத்திற்கு வழங்கியது.

இவ்வாறான மோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் வளாகங்களிலும் மலிந்து காணப்படுகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்ற போது ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற வரைவிலக்கணம் இழக்கப்பட்டுவிடுகின்றது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்குதல்!

Wikramabahu Karunaratnaநவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

”நானும் தெருவில் நின்று போராடியவன்! இன்று உள்ளே இருக்கின்றேன்.” ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்

MR_at_UK_Empassy”நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று (டிசம்பர் 02) பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில் ”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்.

”ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் உங்களைச் சந்தித்த போது நான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனைச் செய்து முடித்திருக்கிறேன். இனிமேல் இலங்கையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். சமாதானம் நிலைநாட்டப்படும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வார்கள். அடுத்த தடவை மீண்டும் உங்களைச் சந்திக்கும் போது அவற்றைச் செய்து முடித்திருப்பேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்கள் ஜி எல் பீரிஸ் எஸ் பி திஸ்ஸநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த தமிழ் முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்வு பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இச்சந்திப்பில் மூவின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று மொழிகளையும் பேசக்கூடியவராக இருந்த போதும் இலங்கைத் தூதரகம் இக்கூட்டம் பற்றிய ஏற்பாடுகளை சீராக ஒழுங்கமைத்து இருக்கவில்லை.

கூட்ட ஏற்பாடுகள் எவ்வித ஒழுங்கும் இன்றி சீரற்றதாகவே காணப்பட்டது. ஒரு நாட்டின் ஜனாதிபதி உடனான சந்திப்பு என்று எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இச்சந்திப்பு அமைந்தது. அரசியல் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை.

ஒக்ஸ்போர் யூனியனில் இடம்பெற இருந்த ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை இலங்கை அரசுக்கு ஏற்பட்ட வெளிப்படையான அவமானமே. இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் முடுக்கி விடப்படும் என்பதை இலங்கைத் தூதரகம் கணித்து தகுந்த ஆலோசணை வழங்கத் தவறிவிட்டதாக தற்போது இலங்கை இராஜாங்க வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஜனாதிபதியின் உரை ஒக்ஸ்போர்ட் யூனியனில் ரத்து செய்யப்பட்டமை அரசியல் ரீதியில் பலவீனமாகிக் கொண்டிருந்த பிரிஎப் ரிவைஓ போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு  அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் நோக்கிய ஆர்ப்பாட்டம் அதன் பின்னர் ஜனாதிபதி தங்கியிருந்த ஹொட்டலை நோக்கியும் பின்னர் இலங்கைத் தூதரகத்தை நோக்கியும் நகர்ந்தது.

இலங்கைத் தூதரகத்தில் இன்று மாலை ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளை தூதரகம் உள்ள வீதியின் இரு அந்தங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தன. பெரும்பாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. ஆனால் புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்த சிலர் ஜனாதிபதியின் சந்திப்பிற்கு வந்து சென்றவர்களை நோக்கி மோசமான தூசண வார்த்தைகளை தமிழிலும் சிங்களத்திலும் கோசமாக எழுப்பினர்.

இச்சந்திப்பையொட்டி ஏரானமான பொலிசார் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிசார் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கும் லிற்றில் எய்ட்

Mannar_Children_Projectலிற்றில் எய்ட் இரண்டாவது ஆண்டாகத் தனது உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தற்போது லிற்றில் எய்ட் உடன் குளோபல் மெடிகல் எய்ட் டென்மார்க் மெடிகல் சென் புரொன்ரியர்ஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளும் அகிலன் பவுண்டேசன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் லண்டனில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் டி லா சலே பிரதேர்ஸ், சிந்தனை வட்டம், சென் அந்தோனிஸ் கல்லூரி, புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கம், அகம், வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றன.

Eluvaitheevu_Well_Project1.
2010 யூலையில் எழுவை தீவில் 130000 நிதியில் அப்பகுதி மக்களுக்கு நன்னீர் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி சார்பில் சீறிபதி சிவனடியார் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து சேகரித்த நிதியை லிற்றில் எயட்க்கு கையளித்தார்.

ஒக்ரோபர் 19 நன்னீர் கிணறு அமைக்கும் திட்டம் முற்றுப்பெற்று மக்களுடைய பாவனைக்கு விடப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தங்கள் உழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை நிறைவு செய்து கையளிக்கும் நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் லிற்றில் எயட் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் உதயனன் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரி செல்வதாஸ் துனைச் செயலாளர் ஜஸ்ரின் பெர்னான்டோ நிர்வாகஸ்தர் எம் ஜே ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mannar_Children_Project2.
லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் ஏற்பாட்டில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறுவர் போராளிகளை டி லா சலே பிரதேர்ஸ் இன் மேற்பாவையில் பராமரித்து வருகின்றனர். இவ்வாண்டு ஜனவரியில் அகிலன் பவுண்டேசன் உத்தியோகபூர்வமாக இச்சிறுவர் போராளிகளை பொறுப்பேற்று அருட்சகோதரர்களின் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர். அருட் சகோதரர் கே எஸ் யோகநாதன் இவர்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர்கள் சென் எக்சேவியர் கல்லூரியில் தங்கள் கல்வியையும் தொடர்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதி இன்மையால் இவர்களுக்கு ஒரு கட்டிடதை அமைத்து ஒரு தொகுதியினரை அங்கு தங்க வைப்பதற்கு அகிலன் பவுண்டேசன் முன் வந்தது. 3000000 செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடம் ஒக்ரோபர் 20ல் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இக்கட்டிடத்தை அகிலன் பவுண்டேசன் நிறுவனர் கோபால கிருஸ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பிர் ரி கொன்ஸ்ரன்ரைன் கலந்துகொண்டார். சென் எக்செவியர் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ஸ்ரெயின்ஸ்லஸ உம் கலந்துகொண்டார்.

Kayts_St_Anthonys_College_Project3.
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் லற்றில் எய்ட் ஊர்காவற்துறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மற்றுமொரு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சென் அந்தோனிஸ் கல்லூரியில் தங்கியுள்ள மாணவர்களை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பொறுப்பேற்று அருட் தந்தை ரொபின்சன் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர்.

பெரும்பாலும் சைவ சமயத்தவர்களான இந்த மாணவர்கள் தங்கள் சமய வழக்கங்களை சுயாதீனமாகப் பின்பற்றி வருகின்றனர். மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒக்ரோபர் 19ல் அருட்தந்தை ரொபின் யையும் நிர்வாகஸ்தர் வின்சன் நடராஜாவையும் லிற்றில் எய்ட் குழுவினர் சந்தித்து உரையாடினர். அச்சமயம் இம்மாணவர்கள் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியுடன் விளையாட்டு போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NavaJeevan_N_and_Puniyameen_PM4.
கல்முணை மற்றும் திருகோணமலையில் மாணவ மாணவிகளுக்கு கணணிப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ அமைப்பிற்கு 7 கணணிகள் ஒக்ரோபர் 30 2010ல் கையளிக்கப்பட்டது. லிற்றில் எயட் சிந்தனை வட்டம் சார்பில் பிஎம் புன்னியாமீன் கணணிகளை ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ முகாமையாளர் நவஜீவனிடம் கையளித்தார்.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கேசரித்த பயன்படுத்தப்பட்ட கணணிகளை லிற்றில் இலங்கைக்கு அனுப்பி சிந்தனைவட்டம் பி எம் புன்னியாமீன் ஒருங்கிணைப்பில் திருத்த வேலைகளையும் மேற்கொண்டது. இவற்றுக்கான செலவுகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு கணணிகள் வழங்கும் ஒரு நீண்ட திட்டத்தை லிற்றில் எய்ட் ஆரம்பித்து வைத்துள்ளது. இத்திட்டம் முதலில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவற்றினால் நடாத்தப்படுகின்ற இல்லங்களில் உள்ள 1000 வரையான மாணவர்களுக்கு கணணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.

Katpaga_RiceMill_Satchi_Gopal5.
ஒக்ரோபர் 16 2010 மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Related Article:

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

தமிழீழ விடுதலைப் போராட்ட கால ஊடகவியலாளர் எஸ் சிவநாயகம் காலமானார்.

Sivanayagam_S_Journalistஊடக வியலாளர் எஸ் சிவநாயகம் தனது 80வது வயதில் நேற்று (நவம்பர் 29) கொழும்பில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் ஊடகவியலாளராகச் செயற்பட்ட இவர் 1982ல்  யாழ்ப்பாணத்தில் வெளியாகிய சற்றடே ரிவியூ பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியவர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டு அதனுடன் வாழ்ந்தவர். அதன் பின்னர் சென்னையில் தமிழர் தகவல் நடுவத்திற்கு பொறுப்பாகச் செயற்பட்டவர்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது இறுதிக்காலப் பகுதியில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டவர்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்த எஸ் சிவநாயகம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 1993ல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய இவர் லண்டனிலும் நீண்டகாலம் வாழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பு சென்ற இவர் இறுதி யுத்தத்தின் போதும் அங்கேயே வாழ்ந்தவர்.

the_Pen_and_the_Gunஇவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது அனுபவத் தொகுப்பான ‘தி பென் அன் தி கன்’ என்ற நூலை வெளியிட்டு இருந்தார். மேலும் அதற்கு முன்பாக ‘ஸ்ரீலங்கா: விற்னஸ் ரு ஹிஸ்ரி’ என்ற நூலையும் எழுதி இருந்தார்.

இவருடைய இறுதி நிகழ்வு டிசம்பர் 02 கொழும்பில் நடைபெற உள்ளது.