உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி: 

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி:

ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதாகவே காட்டி வந்தது. கடந்த மாதம் யாழில் தீயில் எரிந்து இறந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீஸ்க்காக குரல்கொடுத்து கட்டியெழுப்பிய விம்பம் படிப்படியாக உடைந்து வருகின்றது.

சமீபத்தில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி கையிலெடுத்துள்ள மூன்று பெண்களின் விவகாரமும் தமிழ் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்தினை அடக்குமுறை மனோபாவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அவர்கள் சட்டவிரோத அல்லது சமூகப் பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடும் பெரிய இடங்களில் இருக்கும் பெண்களில் கைவைக்கவில்லை. மாறாக பெரிய பின்புலம் இல்லாத ரிக்ரொக்கில் வீடியோ போடும், யூரியூப்பில் செய்தி வாசிக்கும் மற்றும் தனது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் தான் கண்ணில் பட்டுள்ளார்கள்.

ரிக்ரொக் சாளினி பற்றிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி வெளியிட்ட முதல்ச் செய்தியிலேயே எடுத்த எடுப்பிலேயே அவர் விபச்சாரத் தொழில் புரிகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்கு ஆதாரமாக சாளினியின் நிர்வாண புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. அப்படி பதிவேற்றப்பட்ட படங்களில் பெண்ணின் முகம் மறைக்கப்படவில்லை. அந்தப் படங்களில் தோன்றும் ஆணின் முகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது. முதலில் அந்தப் படங்களில் தோன்றிய பெண் சாளினி தானா? என்பதே உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த மெத்தப்படித்த மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாக சொல்லித திரியும் மேதாவி எம்பி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூட ஊரைக் கூட குறிப்பிட்டு சாளினி என்னும் பெண் விபச்சாரம் செய்வதாக உரையாற்றியிருந்தார். இதைவிட வேறு என்ன அறியாமை இருக்க முடியும். பொறுப்புள்ள ஒரு பதவியிலிருக்கிற ஒரு மக்கள் பிரதிநிதி தீர விசாரிக்காமல் ஒரு பெண்ணின் சுயமாரியாதை மற்றும் மாண்பை பாராளுமன்றத்தில் ஏலம் போட எம்பி அர்ச்சுனா இராமநாதனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

சாளினி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி இப்போது இந்த விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது. ரிக்ரொக்கில் தனக்கு ஆபாசமாக பேசி கொமன்ட் அடிப்பவர்களுக்கு அதேபாணியில் ஆபாசமாக பேசி பதிலழித்த வீடியோக்களையும் ஒரு சில நிர்வாண படங்களையும் வைத்துக் கொண்டு சாளினி பாலியல் தொழிலில் ஈடுபடும் விபச்சாரி என பிரச்சாரத்தில் ஈடுபட்டது சம்பந்தப்பட்ட முகநூல். தற்போது சாளினி தங்களை தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டதாகவும், அவர் இனிமேல் ஆபாசமாக பேச மாட்டார். அவர் தொடர்பில் வெளிவந்த படங்கள் போலியானவை. அவருடைய முன்னாள் காதலன் தான் அப்படங்களை எடுத்தவர் என்றும். அந்த காதலன் தற்சமயம் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சாளினி மன்னிப்புக் கேட்கும் காணொளி ஒன்றையும் பதிவேற்றியுள்ளனர்.

ஊழல் ஒழிப்பு வன்னி அணியும் அவர்களை முகநூலில் பின்தொடர்பவர்களும் சாளினிக்கு மன்னிப்பு கொடுத்து விட்டார்கள் என்றும் சாளினி திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இறுதியில் சாளினி என்ற அபலை பெண் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லுக்கு யாரும் மனம் வருந்தவில்லை. பாராளுமன்றம் வரை சாளினி பற்றிய கிசுகிசுவை பாராளுமன்ற கன்சேர்ட்டில் பதிவு செய்த எம்பி இராமநாதன் அரச்சுனாவும் வெட்கப்படவும் இல்லை.

சாளினி மீது நடந்தது அப்பட்டமான ஊடக அடக்குமுறை. சாளினியை விபச்சாரி என மிரட்டி அவரை அடிபணிய வைத்துள்ளார்கள். கலாச்சார மற்றும் பண்பாட்டு காவலர்கள் ஏன் ரிக்ரொக்கில் மணிக்கணக்கில் ஆபாசமாக பேசும் ஆண்களை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு வகுப்பு எடுக்கவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை தமிழ்ப் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டும். பெண்கள் எப்படி தமிழ்க் கலாச்சாரத்தை பேணுகிறார்கள் என்பதை தமிழ் ஆண்கள் கண்காணிப்பது மட்டும் தான் அவர்களின் தலையாய கடமை. அர்ச்சுனா மற்றும் அர்ச்சுனாவின் நண்பர்கள் ரிக்ரொக்கில் சமூக வலைத்தளங்களில் பாலியல் வக்கிரமாக பதிவுகளை மேற்கொண்டு வருபவர்கள். அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.

சாளினிக்கு ஆபாச கேள்விகளை அனுப்பிய ஆண்கள் தமிழர் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. அவர்கள் சமூக சீரழிவுக் காரணமாகவில்லை சாளினி நீ பெண். நீதான் பார்த்து பேச வேண்டும். உன்னுடைய எல்லை இவ்வளவு தான் என்று வரையறை செய்ய ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. எப்படியோ பெரிய பின்புலம் எதுவும் இல்லாவிடினும், சாளினி தானாகவே முன் வந்து எம்பி அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

 

பெண்கள் எப்படி வாழ வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்பதை கூட போலி முகவரியுடன் வரும் சமூக வலைத்தளங்கள் முடிவு செய்யத் தொடங்கிவிட்டன. எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுவார்கள். அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது. இவர்கள் சமீபகாலங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் அனைத்தும் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கின்றன.

பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும் !

பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும்

 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை விடுதியில் வைத்து பெண் வைத்தியரை கத்தி முனையில் பாலியல் துன்புறுத்தல் செய்த சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும், அவர் பௌத்த தேரராகவும் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளையும் கண்களையும் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் மருத்துவருக்கு நடந்த துஷ்பிரயோகத்தை கண்டித்து விரைந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இலங்கையின் பல வைத்தியசாலை வைத்தியர்களும் நேற்றைய தினம் முழுமையான பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேமாதிரியொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் ஊழியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய வைத்திய சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புலம்பெயர் தமிழர் ஒருவரும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த நபர் யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்கள் தொடர்பிலான சமூகத்தின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.

கல்வி கொள்கைகளை வகுப்பவர்கள் பாலின சமத்துவம், பாலியல் கல்வி மற்றும் மனிதாபிமான சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறும் விந்தன் !

பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறும் விந்தன் !

 

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னம் தென்னிலங்கைக்காக காசு பெற்று களமிறங்கியது என்கிறார் கட்சி தாவிய விந்தன். இவர் ஊரறிந்த இரகசியத்தை பரகசியமாக்கினார். இந்த விடயம் ஏற்கனவே தேசம்நெற்றில் பலதடவை வெளிவந்துள்ளது.

ரெலோ அமைப்பிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட விந்தன் கனகரட்ணம் என்பவர் அண்மையில் தமிழரசுக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாக பார்க்கப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு கை தூக்கி ஆதரவு கொடுத்ததை விந்தன் கடுமையாக விமர்சிக்கின்றார். என்பிபி அரசாங்கம் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. அப்படியிருக்க வெறுமனே வடக்குக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு கை தூக்கிய செல்வம் எம்பி தமிழ் மக்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டதாகவும் விந்தன் குற்றம் சாட்டினார்.

மேலும் விந்தன் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தை பயன்படுத்தி தேர்தல் அரசியலுக்காக பத்து கோடி வரை பிரபல தென்னிந்திய பட தயாரிப்பு நிறுவனமான லைக்‌கா சுபாஸ்கரனிடமிருந்து பெற்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். ரெலோவால் வெளியேற்றப்பட்ட விந்தன் கோபத்தில் கட்சியின் உள் இரகசியங்களை எல்லாம் பகிரங்கப்படுத்துகிறார் என ரெலோ வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

 

கொள்ளையை தடுக்க வந்த நபரின் கைவிரல் வெட்டிய சந்தேகத்திற்குரிய பிரதான வாள்வெட்டுக்காரர்கள் மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் கைபற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் தலைவனாக செயற்படும் நபரை சட்டத்தரணி சர்மினி பொலிஸில் தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து பாரப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வாள் வெட்டுக்குழுவின் வழக்குகளுக்கு சட்டத்தரணி சர்மினியே ஆஜராவதாகவும் தெரியவந்துள்ளது. வழமையாகவே சட்டத்தரணி சர்மினி பாலியல் குற்றவாளிகளுக்கும் , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளுக்குமே வழக்குகள் பேசுவதாக கூறப்படுகிறது.

இஞ்தேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்முடைய பண பலத்தை பயன்படுத்தி பிணையில் வெளியே வருவது வாடிக்கையாகி விட்டதாக மக்கள் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு பிணையில் வெளியே வருபவர்கள் மீண்டும் தமது வாள்வெட்டு தொடங்கி போதைப்பொருள் கடத்தல் வரையான சமூக சீரழிவு செயற்பாடுகளிலும் தைரியமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. காப்பாற்ற சட்டத்தரணி சர்மினி மற்றும் விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் போன்றோர் இருக்கும்வரை சமூக விரோத நடவடிக்கைகள் தொடரும் .

“என் கனவு யாழ் “அங்கஜன் இராமநாதன் எரிபொருளிலும் ஊழல் 

“என் கனவு யாழ் “அங்கஜன் இராமநாதன் எரிபொருளிலும் ஊழல்

தேவைக்கு அதிகமாக வாகனங்களையும் அதிகப்படியான எரிபொருளையும் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்த மூவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபகச மற்றும் குழுக்களின் முன்னாள் துணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதன்படி தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஜனவரி 1, 2024 முதல் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார், மேலும் எரிபொருளுக்காக 33 மில்லியன் செலவிட்டுள்ளார்.துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச 2024 இல் ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார், இதன் செலவு 13 மில்லியன் ஆகும். அப்போதைய குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் 2024 இல் எரிபொருளுக்காக 7 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய நான்கு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார்,” என்று ரத்நாயக்க கூறினார்.

 

கிருஷ்ணபுரம் கிராம அலுவலரை தாக்கிய பெண்கள் கைது !

கிருஷ்ணபுரம் கிராம அலுவலரை தாக்கிய பெண்கள் கைது !

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 8 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. விநாயக புரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் என கூறப்படும் பெண்ணின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பெற சென்றிருந்தார். அப்போது கிராம சேவகர் தாயின் தொழில் தொடர்பில் மகளிடம் சில கேள்விகள் கேட்டு நற்சான்றிதழ் வழங்குவதை இழுத்தடித்தால் ஏற்பட்ட முறுகல் நிலையே கிராம சேவகர் மீதான வன்முறை தாக்குதலாக முடிந்தது.

கைதான இரு பெண்களும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !

அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகளவிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் 332 முறைப்பாடுகளும், சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்படுவது தொடர்பில் 279 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு தெரிந்து கொண்டே அனுமதிக்கிறது குற்றம் சாட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர் !

இந்திய அரசு தெரிந்து கொண்டே அனுமதிக்கிறது குற்றம் சாட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர் !

 

கேரள, கர்நாடக கடற்பரப்புக்குள் நுழையாத தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே நமது எல்லைக்குள் நுழைந்து வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள் என்கிறார் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

இந்தியாவுக்கு இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். ஆனாலும் கூட இந்த சட்ட விரோத மீன்பிடி தொடர்கிறது நம் கடல் வளம் அழிக்கப்படுகிறது என பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக மீன் பிடிப்பதால் இலங்கையின் கடல் வளங்கள் நாசமாக்குகின்றது. இந்த விடயம் இந்திய அரசின் மறைமுக சம்மதத்துடன் நடப்பதாகவே கருத முடியும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர். இவ் விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி அநுர குமாரவோடு இன்னும் ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை.

தமிழக மீனவர்கள் அருகிலுள்ள கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளின் கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடிப்பதில்லை. திட்டமிட்ட வகையில் நமது நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து நமது வளத்தை அழிக்கிறார்கள். அத்துடன் நம்மை தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் என ஆதங்கப்பட்டார்.

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அத்துமீறினால் நமது சட்ட நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும் என அமைச்சர் தமிழக மீனவர்களுக்கு வேண்டுகோளாக எச்சரித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த போதும் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றார் ஓய்வுபெற்ற சட்டத்தரணியும் அரசியல் செயற்பாட்டாளருமான மொகமட் நிஸ்தார். இவர் தேசம்நெற்க்கு முஸ்லீம் விவாவகம் விவாகரத்து பற்றிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார். ஹிஸ்புல்லா அர்ச்சுனாவை பைத்தியம் என்றும் அவருக்கு வைத்தியம் செய்யப்பட வேண்டும் என்று சொல்வதும் அர்ச்சுனா ஹிஸ்-ஃபுல் என்றும் முளையில் எதுவுமில்லை என்று சொல்வதும் ஒன்பது வயதுப் பெண் பிள்ளையோடு உடலுறவுக்கு அனுமதிப்பவன் படித்தவனா நான் படித்தவனா என்றெல்லாம் பேசவது நாகரீகமாகத் தெரியவில்லை என்றார் மொகமட் நிஸ்தார்.

இலங்கையில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் என மூன்று தனிநபர் சட்டங்கள் உள்ளன எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் விவாவகம் – விவாகரத்து தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சலீம் மஸ்ரூப் அவர்கள் இந்த முஸ்லீம் சட்டத்தை திருத்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளார் அதே போல் தற்போது ரணிலின் கட்சியில் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்றுள்ள பைசர் முஸ்தபாவினுடைய தந்தையும் ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தார். இதில் எந்த பரிந்துரையை தெரிவு செய்வதென்பதில் முஸ்லீம் சமூகம் ஒரு முடிவுக்கு வரமுடியாதுள்ளனர் என்கிறார் மொகமட் நிஸ்தார்.

அன்றைய பாராளுமன்ற விவாதத்தில் அர்ச்சுனா பேசியது தவறல்ல எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் அவர் விடயத்தை புரியாமல் தெரியாமல் பேசியதே தவறு என்றார். மேலும் முஸ்லீம் சமூகம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை இதுவரை நடைமுறைக்கு கொண்டு வராதது தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.