செய்திகள்

செய்திகள்

செய்திகள்

படகில் நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 32 பேர் கைது

ranjith-gunasekara.jpgநியூ ஸிலாந்துக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்வதற்கு முயன்ற 32 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சீதுவ பகுதியிலிருந்து மீன்பிடிப் படகு மூலம் இவர்கள் செல்வதற்கு முயற்சித்த போது புதன் கிழமை பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

முகவர் ஒருவருக்கு தலா 3 இலட்ச ரூபாவை இவர்கள் கொடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டவிரோதமான பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் கைதாகவில்லை.

கியூபா மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம்

mosquitfora.jpgடெங்கு காச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. என்கின்ற பக்ரியா நுண்ணங்கியை பாவிப்பதற்குரிய கியூப மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபாவில் பயன்படுத்தப்படும் பி.ரி.ஐ. என்கிற பக்ரியா நுண்ணங்கியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இந்த நுண்ணங்கியை பயன்படுத்துவதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை பெற்றுக் கொடுக்கவும் கியூபா முன்வந்துள்ளதுடன் இரு மருத்துவ நிபுணர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.

இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பி.ரி.ஐ.யை பாவிப்பது தொடர்பான கள ஆய்வை பூர்த்தி செய்ததும் தங்களது சிபார்சுகளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு சமர்ப்பிப்பர் என்றும் டாக்டர் மஹீபால கூறினார்.

இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வை ஏற்கனவே மேற்கொண்டனர். கண்டி மாவட்டத்தில் தங்கி இருந்து மேற்கொண்ட கள ஆய்வை முடித்துக் கொண்டு இன்று கொழும்புக்கு வருகை தரும் இவர்கள் அடுத்துவரும் ஐந்து நாட்கள் கொழும்பு மாவட்டத்தில் ஆய்வை மேற்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் கைத்தொழில் ஊக்குவிப்பு: குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க நடவடிக்கை

உள்ளூர் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க வங்கிகளின் உயரதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தொழிலை காத்திரமானதாக முன்னெடுத்துச் செல்ல இது பெரிதும் உதவுமெனவும் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். தற்போது லங்கா புத்ர வங்கியின் மூலம் சில பகுதிகளில் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெறக்கூடியதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கைத்தொழில் துறைகளை மீள்கட்டியெழுப்பும் வகையில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு 1154 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்

ah1n1.jpgஉலகம் முழுவதும் 168 நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி இருப்பதாகவும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 1154 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்து உள்ளது.

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 1008 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு பரிசோதனைக் கூட ஆய்வின் மூலம் மட்டும் உலகம் முழுவதும் 1 இலட்சத்து 62 ஆயிரத்து 380 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருப்பதாகவும் கூறி உள்ளது.

வட கிழக்கு ஆசியாவில் 65 பேரும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 39 பேரும், ஐரோப்பாவில் 41 பேரும் பன்றி காய்ச் சலால் உயிர் இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் உலக தமிழர் ஒற்றுமை மாநாடு

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் அமைப்பாளர் வா.மு.சேதுராமன் சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது, உலக தமிழுறவு மன்றத்தின் சார்பில் 6வது உலக தமிழர் மாநாட்டை உலக தமிழர் ஒற்றுமை மாநாடு என்ற பெயரில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

ஈழம் மற்றும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அண்ணா கவி அரங்கம், உலகளவில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முன்னாள் மலேசிய மந்திரி டத்தோ சாமிவேலு மற்றும் மலேசிய மந்திரிகள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழக துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி, மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோருக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு வா.மு. சேதுராமன் கூறினார்.

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே. திருவள்ளுவர், காப்பாளர் மாம்பலம் சந்திரசேகர், வழிகாட்டும் குழுவினர் செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா. கணேசன் உட்பட மன்றத்தின் நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

குடும்பிமலையில் தங்க நகைகள், பெருமளவு பணம் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg குடும்பி மலை (தொப்பிகல) நரகமுல்லை பிரதேசத்திலிருந்து 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு, புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 1.5 மில்லியன் ரொக்கப் பணம், தங்க மோதிரங்கள் – 2, தோடு – 2, வளையல் மற்றும் மாலைகளையே மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, சினைப்பர் துப்பாக்கி – 01, கிளேமோர் குண்டுகள் – 03 மற்றும் பல்வேறு வகையான ரவைகளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க உதவிபுரிய கூடாது’

r-b0000.jpgநாட்டில் இனியொரு போதும் இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு மீள்குடியேறும் மக்கள் உதவிபுரிந்துவிடக் கூடாது என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அடக்கி ஆளும் நிலைக்கு இனியும் நாம் இடமளிக்கக் கூடாது என்று வவுனியாவில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்து முகமாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிசாட், “இடம்பெயர்ந்த மக்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட பிரசாரம் செய்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர் ஒருவர் முன்பே இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டு உயிர்கள் அழிந்திருக்கா! புலிகளின் தளபதிகள் இன்று ஜனநாயக வழிக்கு வந்து மக்களுக்கு சேவைசெய்வதற்கு ஜனாதிபதியின் செயற்பாடுகள்தான் காரணம்.

இந்த நாட்டில் இனவாதத்தைப் பூண்டோடு இல்லாது அழிக்கவேண்டும். அது தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதமாக இருந்தாலும் சரி இனியொருபோதும் இடமளிக்கக்கூடாது ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஒரு சிறந்த நிர்வாகி. நாட்டின் விபரங்களை விரல் நுனியில் வைத்துச் செயற்படுகிறார். கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் எத்தனை குளங்கள் உள்ளனவென்பதை அவர் ஆராய்ந்து வைத்து அவர் செயற்படுகிறார். ஓர் அரசாங்க அதிபரைவிட பசில் ராஜபக்ஷவுக்குத் தகவல்கள் தெரியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“பஸ் கட்டணம் குறித்து அடுத்தவாரம் தீர்மானம்’

bussss.jpgதனியார் பஸ் சங்கங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் சந்திப்பை அடுத்து பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு கூறினார்.

“”பஸ் கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தச் சங்கத்திற்கும் பஸ் கட்டணம் பற்றி தீர்மானம் எடுக்க முடியாது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே இது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

அடுத்தவாரம் தனியார் பஸ் சங்கங்களுடன் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. அதன் பின்னர் பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்படும்’ என்றும் அவர் இதன்போது கூறினார்.

இலங்கை-பாகிஸ்தான் மோதும் 4வது போட்டி இன்று கொழும்பில்

0308mahela.jpgஇலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகல்-இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் முதல் வெற்றியைப் பதிவாக்கும்.

தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 4 போட்டிகளிலும் வென்று சாதனை படைக்கும். இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் களத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

‘மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது’ – அமைச்சர் முரளிதரன்

karuna000.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த போலிப் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வவுனியாவில் தெரிவித்தார். மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் முரளிதரன் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ,“மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது.  அவசரப்பட்டு மக்களைக் குடியமர்த்தியிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர்களை இழப்பதைத் தவிர வேறு நன்மை கிடைக்காது என ஐந்து வருடங்களுக்கு முன்பே கூறினோம். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை.

இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும்” என்றார்.