நியூ ஸிலாந்துக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்வதற்கு முயன்ற 32 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீதுவ பகுதியிலிருந்து மீன்பிடிப் படகு மூலம் இவர்கள் செல்வதற்கு முயற்சித்த போது புதன் கிழமை பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
முகவர் ஒருவருக்கு தலா 3 இலட்ச ரூபாவை இவர்கள் கொடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டவிரோதமான பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் கைதாகவில்லை.