நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கு யாழ்.மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் – அர்ஜுன ரணதுங்க தகவல்

arjuna-ranatunga.jpgயாழ். மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கு ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விளையாட்டு துறையினருடனான சந்திப்பில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பாடசாலைகளின் விளையாட்டு துறை ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற இச்சந்திப்பு யாழ்ப்பாணம் புளுஹவன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது இச்சந்திப்புக்கு மின்சக்தி பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமைதாங்கினார்.

பிரதி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கு தொடர்ந்தும் கூறுகையில்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான நிதியினை விளையாட்டு அமைச்சு ஒதுக்கவுள்ளது இதற்கான இடம், வரைபடம், திட்டவரைவுகளை விளையாட்டுத்திணைக்களம் உடனடியாக வழங்க வேண்டுமென வேண்டுகிறேன். பாதுகாப்புக்காரணங்களுக்காக பருத்தித்துறை காட்லிக்கல்லூரி தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி, யூனியன் கல்லூரிகளின் விளையாட்டுமைதானங்கள் பாவனையில் இல்லாமல் உள்ளது. இவற்றை மீண்டும் மாணவர் பயன்படுத்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்படுமென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • kumarathasan
    kumarathasan

    its very good news.we all pray that all our colleges back to normal and our college grounds in our hands.and kampan thiruviza

    Reply