குடும்பிமலையில் தங்க நகைகள், பெருமளவு பணம் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg குடும்பி மலை (தொப்பிகல) நரகமுல்லை பிரதேசத்திலிருந்து 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு, புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 1.5 மில்லியன் ரொக்கப் பணம், தங்க மோதிரங்கள் – 2, தோடு – 2, வளையல் மற்றும் மாலைகளையே மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, சினைப்பர் துப்பாக்கி – 01, கிளேமோர் குண்டுகள் – 03 மற்றும் பல்வேறு வகையான ரவைகளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *