செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். குடா நாட்டு மக்களுக்கு ‘புரோட் பேண்ட்’ இணைய சேவை

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே புரோட் பேண்ட் அதி நவீன இணையத்தள வசதிகளை குடாநாட்டிலுள்ள மக்களுக்கும் வேண்டியளவு பயன்படுத்தக் கூடிய விதத் தில் தரைமார்க்கமான ‘ஒப்டிகல் பைபர்’ இணைப்பை ஸ்ரீலங்கா டெலிகொம் வழங்கியுள்ளது.

ஏ-9 பாதையூடாக இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குடா நாட்டை இணைக்கும் பிரதான ஒப்டிகல் பைபர் இணைப்பை கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பாடல் மத்திய நிலையத்தை கிளி நொச்சியில் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் நிறைவேற்று அதிகாரி கிரேக் யங் திறந்து வைத்தார். குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா டெலிகொம் தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

குடாநாட்டு மக்கள் இனிமேல் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி புரோட் பேண்ட் இணையத் தளம், தொலைபேசி இணைப்புகள் பெற முடியும். அத்துடன் ஏனைய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தமது சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் தெரிவிக்கிறது. மன்னார், வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் புரோட்பேண்ட் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

சிறுவனைக் கடத்திய சந்தேக நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி

கப்பம் பெறும் நோக்கில் 9 வயது சிறுவன் ஒருவரைக் கடத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரண மாகியுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி கைக்குண்டொன்றை எறிய முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி 9 வயது சிறுவன் ஒருவனைக் கடத்தி கப்பம் கோரிய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை பொலிஸார் திட்டமிட்டு கைது செய்தனர். சிறுவனை கடத்தி வைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு பணத்தைக் கொண்டு வருமாறு கோரியுள்ளனர். அதற்கிடையே சிறுவனின் கழுத்தை நெறித்து நீர்த் தேக்கப்பகுதிக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.

சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பி யதுடன், பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். கப்பப் பணத்தை பெறுவதற்காக தலாத்துஓயா பகுதிக்கு சந்தேக நபர்கள் வந்தபோது பொலிஸார் கைது செய்துள்ள ஒருவர் தப்பியோடியுள்ளார். கைது செய் யப்பட்ட நபர் கடவத்தை பகுதியில் கைக் குண்டு இருப்பதாக பொலிஸாரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற வேளை கைக்குண்டை பொலிஸார் மீது எறிய எத்தணித்துள்ளர்.

இச்சமயத்தில் பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகை

india.jpgஐந்து நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை வருகிறார்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.

இதேவேளை உயிர்நீத்த, இந்திய சமா தானப் படையினருக்காக பத்தரமுல்லை யில் அமைக்கப்பட்டிருக்கும் ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்து வாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் விஜயகுமார் சிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டும். இதனைத் தொடர்ந்து அவர் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூஸிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிச்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கிறது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு, ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக் கின்றனர். கிறிஸ்ட்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் நிலத்துக் கடியில் சுமார் 16.1 கிலோ மீற்றர் ஆழத் தில் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிர்வினால் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும், பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் அத்தகவல்கள் மேலும் தெரி விக்கின்றன.

நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நீர்வேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிழந்தார். நீர்வேலி இராசபாதையில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றது. யாழ். நகரிலிருந்து சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தோடு மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரான அனலைதீவைச் சேர்ந்த கு. நிர்மலன் (வயது-25) என்பவரே உயிழந்தார். அவரோடு பயணித்த இன்னொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸலிம்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

வடக்கில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரம் வீடுகளை முஸ்லிம் மக்களுக்கு வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடமும், மீள்குடியேற்ற அமைச்சிடமும் மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பலர் வடபகுதிக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் வடபகுதியிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை 10 வீதமாகும். எனவே, இந்திய அரசு வடபகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய. இலங்கை அரசுகளை மன்னார் மீள்குடியேற்ற அமைப்பு கோரியுள்ளது.

கிழக்கு மாகாண காடுகளில் களவாக புதையல் தோண்டப்படுகின்றன!

கிழக்கு மாகாணத்திலுள்ள அடர்ந்த காடுகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளும், கஞ்சா செடிகளை உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளும் மற்றும், மரங்களை வெட்டிக் கடத்துகின்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கன்றன.

கிழக்குக் காடுகளுக்குள் காணப்படும் புராதன சின்னங்களைத் களவாகத் தோண்டியெடுத்து விற்பனை செய்வதைத் தடுக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடபட்டு வருகின்றனர். அதேவேளை, தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சில உள்ளுர்வாசிகளின் உதவியுடன் காட்டுப் பகுதிகளுக்குள் சென்று சதாதிஸ்ஸ என்ற மன்னனின் ஆட்சிகால தொல்பொருள் சின்னங்களைத் தோண்டி எடுத்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குழுவினர் அண்மையில் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.  காடுகளுக்குள் கஞ்சா உற்பத்தி செய்து பதப்படுத்தி அக்கரைப்பற்று வழியாக கொழும்பிற்கு கடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச் செயல்களையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட காட்டுப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிக்காட்டுவான் இறங்குதுறையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை! உள்ளுர் பயணிகள் புறக்கணிப்பு!

யாழ்.குறிகாட்டுவான் இறங்குதுறையில் நயினாதீவிற்குச் செல்வதற்காக வரும் தென்பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸாரும் இருர்ணுவத்தினரும் தனிப்பட்டவகையில் சலுகை அளிப்பதாகவும் நெடுந்தீவு, நைனாதீவு பயணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் நெடுந்தீவு, நயினாதீவு பயணிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து குறிக்காட்டுவான் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படயினர் ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர். இவ்வாறு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் படையினர் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தாமதமின்றி செல்வதற்கு முன்னுரிமை வழங்கி வருவதோடு, அவை குறிக்காட்டுவான் வரை செல்வதற்கும் அனுமதிக்கின்றனர். நயினாதீவு, நெடுந்தீவு செல்லும் பயணிகள் பஸ்கள் இறங்குதுறை வரை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தீவுப்பகுதிகளிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய செல்பவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்பவர்களும் இதனால் பெரிதும பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளில் சகல மக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை படையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் – சு.க. மாநாட்டில் ஜனாதிபதி

slfp.jpgஎனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான் தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல் யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசியல் யாப்பு மாற வேண்டும்.

இந்த அரசியல் யாப்பின் ஊடாக மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் தேவையான பலத்தை பெற்று வலுவான அரசை அமைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எமது பொறுப்பு என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.

நாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக்கின்றோம். அது மக்கள் மயமான அரசியல் யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக்காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்கக் கூடியதல்ல.

தற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது ஷரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களின் பட்டியல் உள்ளது. அதில் மன நோயாளர்கள், லஞ்சம் பெற்றவர்கள், வங்குரோத்துகாரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கின்றது. இதற்கு மாற்றமாக பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர்.

மக்கள் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்றனர். அதனையே நாம் செய்கின்றோம். அதனால் மக்களுக்கு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமாராவுடன் பேச்சு

nerupama.jpgதமிழ்க் கட்சிகள் அரங்கம் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை சந்தித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தது. இந்திய இல்லத்தில் நேற்றுக்காலை சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் அரங்கப்பிரதிநிதிகள் இந்திய வெளிவிகார செயலாளரிடம் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீள்கட்டுமானம், உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் இராணுவ முகாம் ளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அதன் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர், இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவும். இதற்காக 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவிருப்பதாகவும் மலையக மக்களுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் கூறினார்.