இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸலிம்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

வடக்கில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரம் வீடுகளை முஸ்லிம் மக்களுக்கு வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடமும், மீள்குடியேற்ற அமைச்சிடமும் மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பலர் வடபகுதிக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் வடபகுதியிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை 10 வீதமாகும். எனவே, இந்திய அரசு வடபகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய. இலங்கை அரசுகளை மன்னார் மீள்குடியேற்ற அமைப்பு கோரியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *