செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் முன்னிலையில் மார்ச் 10 ஆம் திகதி தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.

ரெலோக்குள் நிலவிய உட்பூசல்கள் காரணமாகவே விந்தன் வெளியேறி தமிழரசுக் கட்சிக்குள் சரணடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மார்ச் 23 இல் 2024 இல் வவனியாவில் நடந்த ரொலோவின் பொதுக்குழு கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் தலைவராகவும் விந்தன் நிர்வாகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட உட்கட்சி முறுகல்களை தொடர்ந்து விந்தன் கனகரட்ணம் பாராளுமன்றத் தேர்தலின் போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். நிதிச் செயலாளர் சுரேன் குருசாமியையும் விமர்சித்து யாழ் ஊடக அமையத்தில் பேட்டியளித்திருந்தார். விந்தன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்த போதும் அவருடைய பெயர் ரெலோவின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேநேரம் ரெலோ கட்சி விந்தன் கனகரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து விலக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

 

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை மறைமுக இந்தித் திணிப்பாக கருதும் தமிழ்நாட்டு மக்கள் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அந்தவகையில் மொழித் திணிப்பை எதிர்க்கும் கதைக்களத்தைக் கொண்ட பராசக்தி படம் இலங்கையிலும் படமாக்கப்படவுள்ளது.

‘சூரரைப் போற்று’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ திரைப் படத்தையும் இயக்குகிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது. இதில் யாழ் நூலக எரிப்பை மையப்படுத்திய காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

 

கள்ள உறுதி எழுதும் 10 யாழ் சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையில் எஸ். கே. கிருஷ்ணாவை பிணை எடுக்க மல்லாகம் நீதிமன்றில் மல்லுக்கட்டினர். பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி பிரேமானந்தாவின் சிஷ்யன் சி.வி. விக்னேஷ்வரன் கட்சி, விஸ்வலிங்கம் மணிவண்ணனின் சகோதரனே திருக்குமரன்.

மணிவண்ணன் முன்னாள் யாழ் மேயர். அவருடைய அரசியல் குருவான சி. வி. விக்னேஷ்வரன் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பார் லைசன்ஸ் கொடுத்த பெருந்தகை. எனவே மணிவண்ணனின் அண்ணாவிற்கு அபலை மக்களின் வறுமையை மலினமாக படம் பிடித்து வீடியோ போட்டு சம்பாதிக்கும் எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்கள் கதாநாயகனாக தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சமூக அக்கறையுடைய சட்டத்தரணிகள் பணத்திற்காக சமூகச் சீரழிவுகளுக்கு துணை போக மாட்டார்கள். எஸ். கே. கிருஷ்ணா விவகாரத்தில் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தனிநபர் அந்தரங்கங்களை பொதுவெளியில் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டி பணம் சம்பாதித்த ஒரு நபரை பணத்திற்காக காப்பற்ற நீதிமன்றம் வந்த சட்டத்தரணிகளை பொதுமக்கள் கண்டிக்கின்றனர்.

எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்களால் போடப்படும் ஹெல்ப்பிங் வீடியோக்கள் நவீன வகையான சுரண்டல். உதவி கோரும் காணொளிகள் தோன்றும் பெரும்பாலான அப்பாவிகளுக்கு தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம், சுரண்டப்படுகிறோம் மற்றும் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதே தெரிவது இல்லை. எஸ். கே. கிருஷ்ணாவால் பதிவேற்றப்பட்ட அனைத்து காணொளிகளும் யுரீயூப் தளத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இளவாலை பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிகின்றன. சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான 10 கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளுக்கு ஈடுகொடுத்து மல்லாகம் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவன் திறமையாக வாதாடியிருந்தார்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் வாள்வெட்டுக்குழு, போதைப் பொருள் மாபியா, மண் மற்றும் மரக் கொள்ளை மாபியா மற்றும் மருத்துவ மாபியா என அனைத்து மாபியாக்களின் பின்னாலும் நிற்கின்றார்கள். இதிலும் தமிழ்த் தேசியம் பேசி அரசியலில் ஈடுபடும் சட்டத்தரணிகள், தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். சட்டத்தரணி சையிக்கிள் கட்சி சுகாஷ் வட்டுக்கோட்டை குருவி வாள்வெட்டுக்குழுவை காப்பாற்றி வருகிறார். குருவி குழு வெள்ளாள சாதியின் பெயரால் வட்டுக்கோட்டையில் நிகழ்த்தும் வன்முறைகளின் பின்னால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது சுகாஷ் சட்டத்தரணியே என்பது ஊரறிந்த ரகசியம்.

யாழ்ப்பாணத்தில் கிளீன் செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை வாள்வெட்டு மற்றும் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு கட்டுவது தான். என்பிபி அரசாங்கத்தின் கவனத்திற்கு.

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

உளறுவாயனாகிய பா உ அர்ச்சுனா நுனிப்புல் மேய்ந்த கூகிள் அறிவாளியாக வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் – முஸ்லீம் உறவுநிலையை மிகக் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நேற்று முன் தினம் தன்னுடைய இஸ்லாமோபோபியா கருத்துக்களைத் தெரிவித்து விட்டு இறுதியில் முஸ்லீம்களை எங்களின் இரத்தம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

நேற்று அதே அர்ச்சுனா முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக் குரோதத்தை த் தூண்டும் வகையில் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுள்ளார். பா உ அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சமூகத்தில் உள்ள மலினமான உணர்வுகளைத் தூண்டி மூன்றாம் தர அரசியல் செய்வதாகவே உள்ளது. அதன் உச்சகட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடந்தேறியது.

பா உ அர்ச்சுனா ஒடுக்கப்பட்ட மக்களோடு இல்லை. அவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார். தன்னை யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கத்தின் பிரதிநிதியாகவே இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றார். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கவில்லை, கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை மதிப்பதில்லை, பிரதேச ரீதியில் யாழ் மீதான அதித மேலாதிக்க கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !

கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராம சேவகர் மீது பெண்ணொருவர் படுமோசமாக கெட்டவார்த்ததைகளால் பேசித் தாக்கிய சம்பவம் மகளீர் தினமான மார்ச் 8இல் நடைபெற்றுள்ளது. தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண் விநாயகபுரம் பகுதியில் நன்கு அறியப்பட்ட வசந்தா என்றும் இவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் என்றும் தெரியவருகின்றது. அண்மையில் கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 வயதுச் சிறுமியையும் இவரே இத்தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிருஷ்ணபுரம் கிராம சேவகர் அண்மையிலேயே பணிக்கு பொறுப்பேற்று வந்துள்ளார். அன்றைய தினம் வசந்தாவின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பத்திரம் பெற வந்துள்ளார். ஆனால் காலை முதல் பலமணி நேரம்வரை கிராம சேவகர் அப்பெண் பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த வசந்தா பாலியல் வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி எறிந்து கிராம சேவகரை தாக்கினார்.

தாயுடைய தொழிலை வைத்து மகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்க மறுத்ததையடுத்தே இப்பிரச்சினை இந்நிலைக்குச் சென்றது. நற்சான்றிதழ் பெறவந்த பெண் கொழும்பில் ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கே மாலை மூன்று மணிக்கு முன் நற்சான்றிதழ் பெற வேண்டி வந்துள்ளார். அதனை வழங்க மறுத்தாலும் பரவாயில்லை ஆனால் தாயின் தொழிலை வைத்து அவருக்கு நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்க மறுக்கப்பட்டதே பிரச்சினையானது.

பாலியல் தொழிலில் பயன்பெறும் ஆண்கள் பொதுவாக எவ்வித பிரச்சினைக்கும் உள்ளாவதில்லை. ஆனால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் அனைத்துப் பழியையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களைப் பாதுகாக்கும் சமூகம் பெண்களை போட்டு மிதிக்கின்ற நிலையே தொடர்கின்றது. இந்தப் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடாவிட்டால் நாட்டில் பாலியல் வன்முறைகள் மிக மோசமாகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதற்கிடையே பா உ அர்ச்சுனா தன்னுடைய அதிகப் பிரசங்கித் தனத்தால் ரிக்ரொக்கில் பொழுதுபோக்காக இரட்டை அர்த்தத்தில் பதிவுகளையிடும் கிளிநொச்சிப் பெண்ணை பாலியல் தொழிலாளி என்று முத்திரைகுத்தி அவருடைய பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். பா உ அர்சுனாவே பாலியல் வக்கிரம் கொண்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். தன்னுடைய தங்கை என்று சொல்லும் பெண் தொடர்பிலும் இவர் முறையாகப் பேசவில்லை. அர்ச்சுனாவின் ரிக்ரொக் நண்பர்கள் பலரும் கூட மிக மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட சொல்லாடல்களை பயன்படுத்துகின்றனர். அது பற்றி எந்தவொரு ஆணும் பாராளுமன்றத்தில் அல்ல வெளியேயும் வாய் திறப்பதில்லை. குரலற்ற பெண்கள் என்றதும் தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள்.

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

இலங்கைக்கு வெளியே தமிழ் மக்கள் அதிகம் வாழும் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம் கனடாவை தங்களுடைய 51வது மாநிலம் என்று குறிப்பிட்டதும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத இறக்குமதி வரியை அறிவித்ததும் தெரிந்ததே. இந்நிலையில் புதிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வர்த்தக போரில் பெறுவோம் எனச் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்கர்கள் எங்களை தவறாக எடைபோடக்கூடாது ஹொக்கியை போல வர்த்தகப்போரிலும் அமெரிக்காவை தோற்கடிப்போம் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் வரிகளை விதிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2007 இல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பொருளாதார வீழ்ச்சி அலை உலகைத் தாக்கிய காலகட்டத்தில்இ மார்க் கார்னி கனடாவின் மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஒப் இங்கிலன்டின் தலைவராகவும் இருந்தவர். உலகின் இரு செல்வந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைவராக இருந்த ஒரேயொருவர் மார்க் கார்னி.

இவருடைய ஆட்சியின் கீழ் கனடா பொருளாதார ரீதியில் மீட்சிபெற நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரமின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை எல்லை நாடாகக் கொண்ட கனடாவை மிகப் பாரிய அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. மார்க் கார்னியின் ஆட்சி எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகின்றது என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள்.

மார்க் கார்னி குடிவரவாளர் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை இலங்கைத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வன்னிப் பெருநிலப்பரப்பில்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையிலும் பார்க்க அதிகமான தமிழர்கள் ரொறன்ரோ ஸ்காபரோவில் வாழ்கின்றனர். இவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.

 

சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !

சர்வதேச நாணயநிதியம் தேசிய மக்கள் சக்தி அரசை வரவேற்கின்றது! உதய கம்பன்பில கரித்துக் கொண்டுகிறார் !

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கட்டியெழுப்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அடுத்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் நாட்டில் ஏற்ப்ட்டு வரும் பொருளாதார மீட்சியை தடுக்கும் வகையிலான வேலைநிறுத்தங்கள் போராட்டங்களை தவிர்க்குமாறும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐந்தரை மாதங்களில் பெற்றுள்ள கடன் தொகை 5,156 பில்லியன் ரூபாய் என்றும், இந்தப் பணத்தில் அது என்ன செய்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிவிதுர ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில கூறுகிறார்.

உதய கம்மன்பில இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த போது, நம் நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது அனைவரும் அறிந்த உண்மை. அப்படியானால், இந்த ஆண்டு பட்ஜெட் உரையை முன்வைக்கும்போது, அரசாங்கம் எவ்வளவு கடனைச் சந்தித்துள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டிற்கு வெளிப்படுத்துவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் உரையில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. எனவே, எதுவாக இருந்தாலும், மிக உயர்ந்த மட்டத்தில் கடனை எடுத்துள்ளது என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்துவது நமது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !

ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !

 

புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், அதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்கள் ஐந்து முக்கிய தூண்களின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொது மக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் சரியான மதிப்பீடு ஆகிய முக்கிய தூண்களின் கீழ் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்யுள்ளார்.

இந்த நிலையில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !

யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !

வடக்கு – கிழக்கில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால் வன்னியில், மலையகத்தில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிரப்ப தென்னிந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என்கிறார் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன். இதே கருத்தை பத்து ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தோட்டத்துறை பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை நான் முன்வைத்தேன். அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால் அந்த நேரத்தில் ஜே.வி.பி இந்த நடவடிக்கையை எதிர்த்தது. தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். தோட்டத் துறை பள்ளிகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மொழி பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக செயலாற்றிய எம்.பிய இராதாகிருஷ்ணன் இந்தியாவில் இருந்து தமிழ்மொழி ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பதானது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகின்றது.

யாழ்ப்பாணத்தில் போராடும் வேலையில்லாப் பட்டதாரிகள் ஏன் வன்னியில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தைக் கூட முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் ஏன் மலையகம் சென்று பணியாற்றத் தயாராக இல்லை என்ற கேள்விகள் எழுகின்றது. மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலும் கலைப்பாடங்களை மட்டுமே கற்பிக்கக் கூடியவர்களாகவும் ஏனைய அடிப்படைப் பாடங்களான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் பாடங்களை கற்பிக்கக்கூடியவர்கள் இல்லை என்றும் தெரியவருகின்றது.

அது மட்டுமல்ல கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மலையகத்துக்கு கற்பிக்கச் சென்றவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பிரதி அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் தென்னிந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவேற்க முனைகின்றாரா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை எழுத்தறவற்றவர் கைநாட்டு கள்ளத் தோணி என்றெல்லாம் இழிவுபடுத்தி இருந்தார். அதேபோல் மற்றுமொரு பா உ எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை வடக்கத்தையான் என விழித்திருந்தார். இவ்வாறான தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள் தமிழ் சமூகங்களை தொடர்ந்தும் கூறுபடுத்தி வருகின்றது.

மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகளும் அரச வேலை கிடைத்ததும் தாங்கள் செல்கின்ற இடங்களில் மனப்பூர்வமாக பணியாற்றுவது இல்லை என்ற கருத்துக்களும் மேலோங்கியுள்ளது. மலையகத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலும் வைத்திருப்பார்கள். திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் பாடசாலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை மதியத்தோடு யாழ்ப்பாணம் திரும்பிவிடுவார்கள். இவர்கள் தாங்கள் கற்பிக்கின்ற மாணவர்களை முன்னேற்றுவதில் அவ்வளவு அக்கறைகொள்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் இன்றும் உள்ளது.

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

 

அனுரகுமார திசநாயக்க அதிகாரத்திற்கு வந்ததை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதை ஒரு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றமாக கருத முடியாது என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நூல் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. அனுரகுமார திசநாயக்க ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒரு வர்க்க மாற்றம் ஏற்படும் என்ற அனுமானத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. இடதுசாரி நட்சத்திரம் என ஏகேடியை குறிப்பிட்டுள்ளார்கள்.மாவோ குறித்து ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சீன வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார். அனுரகுமார திசநாயக்க ஒரு வர்க்கரீதியான புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றவில்லை.

அரகலயவின் போது பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும், காணாமல்போனோர் விவகாரம் உட்பட பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் ஊடாக ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தது, அந்த சமூக மாற்றத்தை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

அனுரகுமாரதிசநாயக்க தன்னை ஒரு இடதுசாரியாக எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தவில்லை, தேசிய மக்கள் சக்தி ஒரு இடதுசாரி கட்சி என எந்த மேடையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டினார்.