செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஈழத்தமிழருக்காக இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்படவில்லை: கலைஞருக்கு ராமதாஸ் பதில்

26-ramsoss.jpgமுதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சனையால்தான் இரண்டு திமுக ஆட்சியையே பறிகொடுத்தது.   எங்களுக்கா ஈழத்தமிழர் நலனில் அக்கறை இல்லை என்று ராமதாசுக்கு கேள்வி கேட்டு அறிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்? நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.
 
இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.

நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம்சாற்றி ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம். அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.

37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார்.  அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.

எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை. எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் கலைஞர் முதல்வர்:ராமதாஸ்

jaya-ram.jpgபுதுச் சேரியில் இன்று டாக்டர் ராமதாஸ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திமுக கூட்டணியில் இருந்த நீங்கள் தற்போது அதிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சாரம் எப்படி இருக்கும்?

1967க்கு பிறகு மாநில கட்சிகள் தான் வளர்ந்து வருகின்றன. ஒரு கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள்  தொடர்ந்து அதே கூட்டணியில் இருப்பது இல்லை. மாறி மாறி தான் கூட்டணி ஏற்படும். மாநில பிரச்சனைகளை முன்வைத்து தான் பிரச்சாரம் செய்வோம்.

நீங்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு உங்களை முதல்வர் கருணாநிதி அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறாரே?

அரசியல் லாவணி பற்றி அவர் தான் அதிகமாக பேசுவார். அதே சமயம் அரசியலில் அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் முதல் அரசியல் தலைவரும் அவர்தான்.

மதுவிலக்கு பற்றி நீங்கள் கூறியிருப்பது புதுச்சேரிக்கும் பொருந்துமா?

புகையிலையை தேசிய அளவில் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டோம். அதேபோல மதுவிலக்கையும் தேசிய அளவில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோ னேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேஷியாவில் பாபுவா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெயபுராவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

பூமிக்கடியில் சுமார் 108 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை. 

வருண் காந்தி மீது மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு

india-varun.jpgபாஜக வேட்பாளர் வருண் காந்திக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. சனிக்கிழமை பிலிபித் சிறைக்கு முன்பு பாஜகவினர் நடத்திய பெரும் கலவரம் தொடர்பாக வருண் மீது கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், பொதுச் சொத்துக்களை அளித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருண் காந்தி கோர்ட்டுக்கு வந்து ஆஜராகும் நாடகம் நேற்று அரங்கேற்றப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பாஜகவினர் திரண்டு வந்தனர்.

கோர்ட்டுக்கு வெளியே அவர்கள் பெரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதேபோல, வருண் காந்தியை சிறைக்குக் கொண்டு சென்றபோதும் அவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறைக்கு வெளியே அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கும்பலைக் கலைத்தனர்.

இந்த வன்முறையில் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், வருண் காந்தி மீது, கலவரத்தைத் தூண்டியதாக போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருண் மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டுதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, முஸ்லீம் காவல்துறை அதிகாரி ஒருவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதை பிலிபித் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

“வணங்காமண்” 31 ஆம் திகதி இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படுகின்றது. வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை

vanangamanship.jpg வன்னியில் அவலப்படும் மக்களுக்கு அவசர உதவியாக 400 மெற்றிக் தொன் மருந்து மற்றும் உணவுப் பொருள்களுடன் “வணங்கா மண்” கப்பல் எதிர்வரும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வன்னி நோக்கிப் புறப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை அனுப்பும் அமைப்பான “ஏசிரி”யின் பணிப்பாளர் கிரஹாம் வில்லியம் சன்ஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி மத்திய இலண்டனில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வை அடுத்து “வணங்காமண்” முதலாவது பயணத்தை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஆரம்பிக்கும். இந்த நிகழ்வில் புலம் பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆண், பெண் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கப்பல் பயணத்தை ஆரம்பித்து வைப்பார்கள் எனத் தெரிய வருகிறது.

இதேவேளை, மனிதாபிமான உதவிப் பொருள்களை எடுத்து வரும் கப்பல் முல்லைத்தீவுக்குச் செல்ல வசதியாக அது சென்றடையும் நாளில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் (சர்வதேச மட்டத்திலான) கோரிக்கை ஒன்று விடுக்கப்படும். கப்பல் பிரிட்டனிலிருந்து புறப்படும் வேளையில் அந்தச் சர்வதேசக் கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதுபெரும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் கௌரவிப்பு

batt.jpgமுதுபெரும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் கிழக்கிலங்கை மனித பொருளாதார அபிவிருத்தி(எகெட்) நிறுவனத்தின் 30 வருட நிறைவு தின வைபவத்தில் விருது வழங்கி கௌரவிக்கபப்ட்டுள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடை பெற்ற இவ் வைபவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை துணை ஆயர் வண. ஜோசப் பொன்னையா ஆண்டகை இந்த விருதை கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு வழங்கினார் .

இந்நிகழ்வில் செடெக் மற்றும் ஹரித்தாஸ் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளரான அருட் தந்தை டொமினியன் பெர்னான்டோவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருதை மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.வாசுதேவன் வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை ஆயர் வண.பொன்னையா ஜோசப் ஆண்டகை, “யுத்த சூழ்நிலை முடிந்தாலும் மக்களின் தேவைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை.மனிதாபிமான பணிகள் மேலும் தொடர் வேண்டும்” என்றார்.

இந்தோனேஷியா – இலங்கை நாளை விசா தவிர்ப்பு ஒப்பந்தம்

hasan.jpgஇந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜுதா இன்று இலங்கை வருகிறார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இவர், அமைச்சர் ரோஹித போகொல்லா கமவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரை நாளை 30 ஆம் திகதி இவர் சந்தித்துப் பேசவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விசா தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.

இதேவேளை, இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், “இந்தோனேஷிய வெளிவிவகாரக் கொள்கையும் ஏசியானும், “எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்துவார். கொழும்பு, சர்வதேச உறவுகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இந்த சொற்பொழிவு இடம்பெறும்.

புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடும் மோதல்; புலிகளின் பாரிய மண்அணை படை வசம்

srilanka_army1.jpg முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

கரியமுல்லைவாய்க்கால் பகுதியில் புலிகளின் மண்ணனையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். புலிகளிடமுள்ள மிகச் சிறிய பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 53, 57, 58ஆம் படைப்பிரிவின் இரண்டாம் தாக்குதல் படையணியுடனான மோதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணு வத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதில் மூன்று சடலங்கள் பழுதடைந்திருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேநேரம், பல ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை வன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 381 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

சாளைப் பகுதிக்கு ஆறுபேரும், புதுக்குடியிருப்புக்கு 340 பேரும், முல்லைத்தீவுக்கு 35 பேரும் வந்துசேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர்  தெரிவித்தார். அவ்வாறு தப்பி வந்தபோது பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்ததாகவும், இரண்டு ஆண்கள் காயமடைந்திருப்பதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

நேட்டோ படைகளின் 12 வாகனங்கள் தலிபான்களால் நேற்று தாக்கி அழிப்பு

நேட்டோ படைகளின் 12 ட்டிரக் வண்டிகள் பாகிஸ்தானில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானிலுள்ள படைகளுக்கான விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்டிரக் வண்டிகள் மீதே தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆப்கான் எல்லைகளிலுள்ள வெளிநாட்டு படைகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் போதே வடமேற்கு நகரான பெசாவார் என்ற இடத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆயினும், தாக்குதலுக்கு இலக்கான 12 வாகனங்களும் எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் மேலும் கூறினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, “பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழிக்க அந்த நாட்டு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” எனக் கேட்டுள்ளார். பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு சில பகுதிகளில் சீரழிந்து கிடக்கிறது. என்றாலும் இந்தத் தாக்குதலையடுத்து மேற்படி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தேடுதல் நடத்தினரென ஏ. எப். பி. செய்தி ஸ்தாபனம் அறிவித்தது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

karunanidhi_sonia.jpg எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 16 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடத்திலும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.