இந்தோ னேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேஷியாவில் பாபுவா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெயபுராவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
பூமிக்கடியில் சுமார் 108 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை.