முதுபெரும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் கௌரவிப்பு

batt.jpgமுதுபெரும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் கிழக்கிலங்கை மனித பொருளாதார அபிவிருத்தி(எகெட்) நிறுவனத்தின் 30 வருட நிறைவு தின வைபவத்தில் விருது வழங்கி கௌரவிக்கபப்ட்டுள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடை பெற்ற இவ் வைபவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை துணை ஆயர் வண. ஜோசப் பொன்னையா ஆண்டகை இந்த விருதை கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு வழங்கினார் .

இந்நிகழ்வில் செடெக் மற்றும் ஹரித்தாஸ் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளரான அருட் தந்தை டொமினியன் பெர்னான்டோவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருதை மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.வாசுதேவன் வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை ஆயர் வண.பொன்னையா ஜோசப் ஆண்டகை, “யுத்த சூழ்நிலை முடிந்தாலும் மக்களின் தேவைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை.மனிதாபிமான பணிகள் மேலும் தொடர் வேண்டும்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *