செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முசலி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம்

07resettle.jpgவடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முசலி பிராந்தியத்திற்கான இரண்டாம் கட்ட மீள் குடியேற்ற நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு அபிவிருத்தி செயலணித் தலைவர் பஸில் ராஜபக்ஷ்வின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரிப்பு,சிலாபத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2216 பேர் உள்ளடங்கிய 515 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.இந்நிகழ்விற்கு மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.அதேவேளை அரச திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவில். நீடிக்கும் அட்டகாசம் – இந்தியர் கார் எரிப்பு

sea.jpgஇந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் இன்னும் நிற்கவில்லை ஆஸ்திரேலியாவில். மெல்போர்ன் நகரில், இந்திய மாணவரின் கார் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. 22 வயதான விக்ராந்த் ராஜேஷ் ரத்தன் என்பவர் அங்கு படித்து வருகிறார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வரும் அவர், தனது சம்பளத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியிருந்தார். இந்த காரைத்தான் நேற்று இனவெறியர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்தக் கார் தவிர அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களுக்குச் சொந்தமான வேறு இரு கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரத்தன் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அபாய மணி ஒலித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

போதைக் கும்பல் செய்த வேலையாக இது இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவர்கள் அந்தப் பகுதியில்தான் உட்கார்ந்திருப்பது வழக்கம். காரைத் திறக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை திறக்க முடியாததால், பெட்ரோலை ஊற்றி காரை தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார். லூதியானாவைச் சேர்ந்த ரத்தன், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆட்டோமோட்டிவ் என்ஜீனியரிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார்.

சில நாட்களுக்கு முன்புதான் தனது காரை 2500 டாலர் கொடுத்து வாங்கினார். காரை இன்னும் இன்சூரன்ஸ் கூட பண்ணவில்லையாம். விக்டோரியா போலீஸில் இதுகுறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கை விஜயம்

06bankimoon.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம், அபிவிருத்தி,  புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இடம்பெயர்ந்தவர்களின் விவரம் திரட்டும் பணிகள் அடுத்த வாரம் பூர்த்தி

civiling_fleeng3.jpg26 சமூக நலன்புரி மத்திய நிலையங்களில் தங்கியுள்ள  மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தி அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விபரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. பிரிந்து. குடும்ப அங்கத்தவர்களை  ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதன் 50 வீதப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன

இனப்பகைமைகளை வளர்க்கும் செய்திகள் வெளியிடுவதை தவிருங்கள் ஊடகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

he_speech_ranaviru_.jpgஇனங் களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகை யில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டுமென்றும் பகைமையையும், குரோதத்தையும் வளர்க்கும் விதத்தில் செயற்பட கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் எதனையும் எழுதவோ, ஒலிபரப்பவோ வேண்டாமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிய ஒரு சம்பவம் கூட ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நிதானமாக செய்திகளை வெளியிட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராம ங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதே நேரம், மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்தவென 180 நாள் வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு

meera-jasmine.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.

58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். “சிவப்பு மழை’ என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

யாழ்.மாநகரசபைத் தேர்தலில் பெண்கள் போட்டியிட வேண்டும்

பெண்களுக்கான அரசியல் களத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் பெண்களை முன்வருமாறு மகளிர் அபிவிருத்தி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பொருளாதார, சமூக மேம்பாடு என்று பல துறைகளிலும் தமது திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டி தமது அரசியல் நிபுணத்துவத்தினூடாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் சேவையை வலுவூட்டுவது அவசியம்.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் மிக இலகுவாக 59 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். எமது பிரதேசத்திலும் அரசியல் ஆர்வம் கொண்ட பெண்கள் இத் தேர்தல் களத்தில் பங்குபற்றி எமது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அறிவூட்டல்கள், ஆலோசனைகளை வழங்க மகளிர் அபிவிருத்தி நிலையம் தயாராகவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எமது நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டாம் கட்ட மீள் குடியேற்றம் – பசில் எம்.பி தலைமையில் 9ஆம் திகதி வைபவம்

basil.jpgவடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டாம் கட்டமாக 561 குடும்ப ங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் மீள்குடியேற்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பர்னாண்டோ தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மீள் குடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வார்.

மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டார வெளி, கூலான்குளம், சின்னபுலச்சி பொட் கேணி, அரிப்பு மேற்கு, அரிப்பு கிழக்கு பகுதிகளில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

இப்பகுதியில் கிராமசேவகர் அலுவலகம், பாடசாலைகள், கூட்டுறவு கடைகள், தபாலகம், டிஸ்பென்சரி, கிராமிய ஆஸ்பத்திரி, போக்குவரத்து அனைத்தும் அன்றைய தினமே வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருதமடு பகுதியில் 63 குடும்பங்களும், பூநொச்சிகுளம் பகுதியில் 16 குடும்பங்களும், உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரே தினத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக இம் மக்கள் தமது சொந்த இடங்களை சென்று பார்வையிட்டு மீளக் குடியேற வசதிகள் உள்ளனவா என்று உறுதி செய்துகொண்டனர்.

வடக்கில் வசந்தம்; தெற்கில் டெங்கு அரசு மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு

நாட்டில் பயங்கரவாதம் போல் டெங்கு பாரிய பிரச்சினையாகியுள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றச்சாட்டினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாட்டில் வடக்கில் வசந்தம் இடம்பெறுகின்ற அதேநேரம், தெற்கில் டெங்கு நோய் பரவுகின்றது. அதாவது இன்று டெங்கு பிரச்சினை பயங்கரவாதம் போன்று பெரிய பிரச்சினையாக நாடு பூராவுமுள்ளது. இந்நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதத்தில் 90 பேர் பலியாகி 7,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரமான சூழ்நிலையாகும். கேகாலை மாவட்டத்தில் அதிகளவானவர்கள் இறந்துள்ளனர். இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் டெங்கினால் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.

எமது சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவுள்ள நிலையில் நாட்டில் டெங்கினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவரது தலைமைத்துவத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. டெங்கினை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உருவாக்கப்பட்டுள்ள போதும் இது எந்தளவு சாத்தியப்படுமென்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்கள் சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

இதேவேளை, டெங்கிற்குரிய சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் போதியளவு இல்லை. அத்துடன் இதற்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை வசதியில்லை. இத்தகைய கஷ்டமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு இன்று எதுவித மருத்துவ வசதியுமின்றி செயற்படுகின்றது.

அங்கு 60 மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய நிலையில் 176 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உரிய வசதிகளை அம்மணவர்கள் பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இவர்களது பட்டத்தின் மீதே அச்சம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே எமது கட்சி ஆரம்பித்த இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் முற்படவேண்டுமென்றார்.

இன்று புனித பொசன் தினம்: மிஹிந்தலையில் ஆலோக பூஜை

poson_s.jpgஇன்று புனித பொசன் தினமாகும். மஹிந்த தேரர் இலங்கையில் பெளத்த மதத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வு இன்றைய தினத்திலேயே இடம்பெற்றது.

இதனை நினைவுகூரும் பொசன் பண்டிகையை முன் னிட்டு லேக் ஹவுஸ் நிறுவ னம், மிஹிந்தலையில் 47வது தடவையாகவும் ஆலோக பூஜை (மின்னொளி ஏற்றல் பூசை) நடத்துகின்றது.

இந்தப் பூஜை நேற்று சனிக்கிழமை ஆறாந் திகதி முதல் திங்கட்கிழமை எட்டாந் திகதி வரை நடை பெறுகின்றது. இன்றைய தினம் இந்து ஆலயங்களில் வைகாசிப் பெளர்ணமி விசேடபூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.