எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அழகிரி, தயாநிதி, ராஜாவுக்கு கேபினட் – டி.ஆர். பாலு துணை சபாநாயகர்?

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர் லோக்சபா துணை சபாநாயகராக நியமிக்கப்படலாம்.

திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது. மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்

udaya_nanayakkara_brigediars.jpg விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு புதிய பாதுகாப்புத் தலைமையகங்கள், இரண்டு விமானப்படைத் தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கவிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய இராணுவக் கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை விமானப்படையினர் தமது ஓடுதளமாக மாற்றவுள்ளனர்.  வவுனியாவிலுள்ள வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்துக்கு மேலதிகமாகப் புதிய தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார ஆங்கில வார இதழொன்றுக்குத் தெரிவித்தார்.

அதேநேரம், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் அமைந்திருந்த பகுதி விரிவாக்கப்பட்டு விமானப்படையினரின் ஓடுதளம் அமைக்கப்படும் என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறியுள்ளார். தாக்குதல் விமானங்கள் இறங்கக்கூடியளவு விமானத்தளம் அமைக்கப்படும் எனவும், இரண்டாவது தளம் விமான ஒடுதளத்துடன் முல்லைத்தீவில் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மற்றும் வடதெற்குக் கரையோரங்களை மையமாகக்கொண்டு கடற்படையினரும் புதிய தளங்களை அமைக்கவுள்ளனர்.  புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் அமைப்பதற்கு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ் தலைமையகம் அமைக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்குலக நாடுகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரணை செய்துவிட்டு இலங்கை விடயங்கள் தொடர்பாக பேசவாருங்கள்

gotabaya1.jpgஇலங்கை இராணுவ வெற்றியின் பின்னால், போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பாக மேற்குலக நாடுகள் ஆராய இருக்கின்றன எனவும் என்.டி.வி நிருபர் நிட்டன் கோக்லி பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடனான நேர்காணலின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

உலகில் எல்லா நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடும் போது இலங்கை இராணுவம் ஆரம்பத்திலிருந்து இறுதிரை பொதுமக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மிகவும் சாதுர்யமான முறையில் அம்மக்களை காப்பாற்றியே இந்த வெற்றியை அடைந்துள்ளது என தெரிவித்த அவர் ஜக்கிய நாடுகள், மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழு என்பன இலங்கை இராணுவம் தொடர்பான போர் குற்றங்களை ஆராய முன்பு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் போர் குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து விட்டே இலங்கை விடயம் தொடர்பாக பேச வேண்டும் என தெரிவித்தார்.

ஏ-9 பாதையை திறப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி- அமைச்சர் பீ.பீ.ஏக்கநாயக்க

a9-road.jpgயாழ். கண்டி ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். பாதையைத் திறப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி இருப்பதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க மேலும் தெரிவித்ததாவது, ஏ ஒன்பது நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு விட்டது. தற்போது இராணுவ வாகனங்களும் உணவு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளும் இப்பாதை வழியாக பயணிக்கின்றன.

யாழ். குடாநாட்டு மக்கள், இப்பாதை மூடப்பட்டிருப்பதால் கடந்த பல வருடங்களாக பெரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக தென்பகுதிக்கு வருவோர் கப்பலையும் விமானத்தையும் நம்பி பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உள்ளது.  இம் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பாதையை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதை புனரமைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு கிடைத்தவுடன் பாதை திறக்கப்படும் எனத் தெரிவித்தார். 

மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர்

varatharaja.gifஇலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது.

யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய இந்த மருத்துவர்களான டி.சத்தியமூர்த்தி, டி.வரதராஜா, வி.சண்முகராஜா ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்கள் மூவரும் யுத்த பிரதேசத்திலிருந்து தப்பிவந்தபோது, இவர்களை இராணுவம் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் சரி இல்லாததால் தோற்று விட்டோம்: டோனி

ipl-2009-01.jpgஐ.பி.எல். 2 வது அரை இறுதி போட்டி சனிக்கிழமை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக் கெட்டு இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
 
தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:   நாங்கள் 160 ரன்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் 15 ல் இருந்து 20 ரன்கள் வரை குறைந்து விட்டது. இந்த கூடுதல் ரன்களை எடுத்து இருந்தால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம்.
 
ஆடுகளமும் சரியாக இல்லை. மந்தமான ஆடுகளமாக இருந்தால் எங்கள் பேட்டிங்கை பாதித்தது. அதே போல எங்கள் பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சை சரியாக செய்யவில்லை. இவற்றால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றார்.

மன்மோகனுடன் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து – தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி

pm-manmogan.jpg2வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவோம் எனவும் அவரிடம் தெரிவித்தார். இன்று காலை மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் , பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும், இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவை மேலும் வலுவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி கூறிக் கொண்டனர். இந்தப் பேச்சின்போது மன்மோகன் சிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காகவும், மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு கடைப்பிடித்த கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டே இந்த வெற்றி என்றும் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

எங்களது அமைதி சரணடைவதற்கு அல்ல – விடுதலைப் புலிகள்

எங்களது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என விடுதலைப் புலிகளின் யாழ் குடா படைப் பிரிவுத் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார் என இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் குடா பகுதியில் தலைமறைவாக இருக்கும் விடுதலைப் புலிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கையை புலிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து யாழ் குடா பகுதிக்கான புலிகள் படைப் பிரிவின் தளபதியான வெற்றிக்குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்.

எங்களது இயக்கப் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் சிங்கள ராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள். ராணுவம் இன்று பெரும் உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. எனவே மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பதகாகக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும் என்று அவர் கூறியுள்ளார்.

திமுகவுடன் பிரச்சனையில்லை:விரைவில் தீர்வு ஏற்படும் – குலாம்நபி ஆசாத்

gulam-azad_.jpgமத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியேற்க திமுக மறுத்து விட்டது.  காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு செய்தது. மத்திய மந்திரிசபையில் திமுக இடம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மந்திரிசபையில் சேர்வது தொடர்பாக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மந்திரி சபை விஸ்தரிப்புக்கு முன்பு திமுகவுடன் உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் நான் சென்னை செல்லவில்லை. மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வுடன் தீர்வு ஏற்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

டாக்டர்கள் மூவரையும் ஐ.சி.ஆர்.சியின் அதிகாரி வியாழன் சந்தித்துப் பேசினார்

varatharaja.gifவன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை  செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்னா தெரிவித்தார்.

ஐ.சி.ஆர்.சி. வியாழக்கிழமை மூன்று டாக்டர்களையும் நேரில் கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியது  என்று கூறிய அவர் வேறு விவரம் எதனையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.

கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் அவர்கள் தொடர்பாக முதற் கிடைத்த தகவல் இது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்துக்  கூறுவது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் கொள்கையல்ல என்று ஐ. சி. ஆர்.சியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு வல யத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி வெளியேறிய பின்னர் டாக்டர் தி.சத்திய மூர்த்தி, து.வரதராஜா, எஸ்.சண்முகராஜா ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தமை தெரிந்ததே.