எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

25michael_jackson.jpgஜாக்சனின் திடீர் மறைவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அட்டாப்சி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்தே முடிவுகள் தெரிய வரும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், சோதனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சலெஸ் கவுன்டி உதவி தலைமை தடயவியல் அதிகாரி எட்வின்டர் கூறுகையில், ஜாக்சனின் உடல் எங்களது அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அவரது குடும்பத்தினரின் கோரிக்கைப்படி அவரது உடல் பெயர் சொல்லப்படாத இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அரச பணிகளில் தமிழ்மொழி கட்டாயமாகின்றது : டியூ. குணசேகர

duegunasekara.jpgஅரச பணிகளில் தமிழ்மொழி கட்டாய மொழியாவதாக அரசியல் சாசன அமைச்சர் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் அரச பணிகளில் இணைந்து கொள்ளும் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் சித்தியடையாதோர் அரச பணிகளுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள்.

அரசசேவையில் உள்ளவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச காரியாலயங்களில் சிறுபான்மை மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது” என்றார்.

ஊடகங்களிடம் குடும்பத்தினர் விடுக்கும் வேண்டுகோள்

25michael_jackson.jpgபிரபல பாடகர் மைக்கேல் ஜக்சனின் திடீர் மரணத்தையிட்டு அவரின் நண்பர்களும் விசிறிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியிருக்கும் அதேசமயம், ஜக்சனின் சகோதரரான ஜரமின் ஜக்சன் இந்த நெருக்கடியான தருணத்தில் தமது குடும்பத்தினரின் கௌரவம், அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  ஜக்சனின் வரலாற்றுப் புகழ்பெற்ற அல்பத்தைத் தயாரித்தவரான குயின்ஸி ஜோஜ்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்;

இந்த துன்பகரமான, எதிர்பார்த்திராத செய்தியை கேள்விப்பட்டதும் நான் விரக்தியடைந்துள்ளேன். இந்த மாதிரியான இளம் வயதில் சடுதியாக ஜக்சன் எம்மத்தியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து விபரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எமது ஆன்மாக்களை கடவுள் ஒன்றிணைத்தார். 1980 களில் நாம் ஒன்று சேர்ந்து பணிகளை மேற்கொள்ள ஆண்டவனே அனுமதித்திருந்தார். இன்றுவரை நாம் ஒன்று சேர்ந்து இசையை உருவாக்கினோம். “திரில்லர், பாட்’ ஆகியன உலகின் சகல மூலை முடுக்கெங்கும் இசைக்கப்படுகின்றன. அவரின் திறமை, கருணை, தொழில்சார் சிறப்புத் தேர்ச்சி, அர்ப்பணிப்பு என்பனவற்றின் வெளிப்பாடு இதுவாகும். அவர் விட்டுச் சென்ற பங்களிப்புகள் எப்போதுமே உலகத்தவரால் உணரப்பட்டவையாக அமைந்திருக்கும். எனது சிறிய சகோதரரை இன்று நான் இழந்துவிட்டேன். எனது ஆன்மாவின் ஒரு பகுதி அவருடன் சென்றுவிட்டது.

கிழக்கு அபிவிருத்தியில் நானும் முதலமைச்சரும் ஒன்றுபடுவோம் வேலைவாய்ப்பு பணியக திறப்பு நிகழ்வில் அமைச்சர் முரளிதரன்

karuna-20.jpgநான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உப தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு ஒரு கட்சி தலைவராக இருந்து அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் கிழக்கின் அபிவிருத்திக்காக ஒன்று பட்டு செயற்படுவோம் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளைக் காரியாலயத்தை மட்டக்களப்பில் நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் முரளி தரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளையொன்று திறந்ததன் மூலம் இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணத்தில் எமது சகோதரர்கள் எதிர் நோக்கி வந்த சிக்கல்கள் திர்த்து வைக்கப்படும்.

நமது மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர். முதற்கட்டமாக இப்பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். கொழும்புக்கு சென்று வீண் அலைச்சலைத் தவிர்க்கும் பொருட்டும், முகவர்களின் ஏமாற்றத்திலிருந்து தடுக்கும் பொருட்டும் இப்பணியகம் சேவையாற்றவுள்ளது என அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் ஏ-9 வீதி திறப்பு

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஏ-9 வீதி நேற்று முதல் மக்களுடைய போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிடப் பட்டுள்ளது.

வவுனியா கண்டி வீதியில் பொலிஸ் விடுதிக்கு முன்னால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலையாளி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ் நிலைய பாதுகாப்பினை முன்னிட்டு வீதி மூடப்பட்டு இருந்தது.

ஊடக சுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது – அமைச்சர் நிமல்

26parliament.jpgஇலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் மூலம் மற்றைய தரப்பினர் மாத்திர மன்றி, ஊடகத் துறையினரும் நன்மையடையலாமென்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை விடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் காட்டுச் சட்டத்தையா அமுல்படுத்தச் சொல்கிறது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை மீள செயற்படு த்த வேண்டியது அவசியமில்லை என எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்த போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. முதலில் சபாநாயகர் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்த ஒரு கருத்துக்குத் திருத்தமொன்றை அறிவித்தார். 1997ஆம் ஆண்டு பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றம் ஊடகங்கள் தொடர்பில் ஒரு நீதிமன்றமாக செயற்படக் கூடிய அதிகாரங்கள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது தவறு என்றும் அது உண்மையில் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி மங்கள சமரவீர அமைச்சராக இருந்தபோதே நிகழ்ந்திருக்கின்றது என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின், நேற்றைய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு செய்தி குறித்து ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அமைய இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளாரென்றும், உண்மையில் தமது கட்சி அவ்வாறான ஒரு கோரிக்கையையோ, இணக்கத்தையோ தெரிவிக்கவில்லை என்றார். அதேநேரம், சபையிலிருந்து ரவூப் ஹக்கீம் எம்.பி. எழுந்து கருத்துக் கூறுகையில் :-

ஏற்கனவே உள்ள ஒரு சட்டத்தை மீளச் செயற்படுத்த வேண்டியது அவசியமில்லை என்றும், இவ்வாறான விடயங்களுக்கு பாராளுமன்ற குழுக் கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்படும் கருத்துககைளக் கருத்திற்கொள்ளக்கூடாது என்றதுடன் வத்தளையிலிருந்து ஒரு பெண் ஊடகவியலாளர் கண்டிக்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்’ என்றார்.

அவ்வேளையில் சபையிலிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ‘அவ்வாறான பிரச்சினைகளால்தான் சட்டம் அவசியமாகிறது. அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸ் காட்டுச் சட்டத்தையா அமுல்படுத்தச் சொல்கிறது. இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான சட்டம் உள்ளது. ஊடகச் சுசுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இங்கு எத்தனையோ பேர் பல முறைப்பாடுகளைச் செய்கிaர்கள். எல்லாவற்றுக்கும் இந்தச் சட்டத்தால் நன்மைதான் கிடைக்கும்’ என்றார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்கு உலக நாடுகள் நிதிஉதவி – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

11edu-min.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் பல தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.இந்த மாவட்டங்களில் பல நகர அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில் அதனை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். புதன்கிழமை மாலை வவுனியா நகரசபை தேர்தலுக்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.

நாம் நகரசபையை கைப்பற்றினால் மக்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான சகல தேவைகளையும் செய்வோம்.எங்களுடைய கட்சி சின்னத்தில் ஈ.பி.டி.பி.,ஈரோஸ், ரெலோ சிறி அணியினர் இணைந்து போட்டியிடுகின்றனர். அத்துடன் அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸு இணைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

யுத்தம் முடிந்துவிட்டது.அபிவிருத்தியே முக்கிய இலக்காகவுள்ளது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அபிவிருத்தி வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாட் பேசுகையில்; வடக்கே மூன்று சமூகங்களையும் சேர்ந்த மக்களை ஒரே அணியில் தேர்தலில் பங்கு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த இந்த அரசாங்கத்திற்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். தேவைகள் இனம்காணப்பட்டு வடக்கின் வசந்தம் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதற்காகவே ஒரு அணியில் போட்டியிடுகிறோம் என்றார்.

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – தோமஸ் எம்.பி.

26parliament.jpgதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் தங்கத்துரை வில்லியம் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை திருத்தச் சட்ட மூல விவாதத்தில் கன்னி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  இன்று இலங்கையில் தீவிரவாதம் என்ற சொல் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசு முயற்சிகளை முன்னெடுத்தால் அதற்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம். எனவே, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றபோதும் அவை மிகவும் மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்று புதிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு முதலீட்டுச் சபை அங்கீகாரம்!

26boi.jpgமூன்று  புதிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு இலங்கை முதலீட்டுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இம்மூன்று முதலீடுகளும் 171 மில்லியன் ரூபாவைக் கொண்டதாக உள்ளதுடன் இதில் ஒன்று ஆடை தயாரிக்கும தொழிற்சாலைக்கானதாக உள்ளது.

300 முதலீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 250 தொழில் வாய்ப்புகள் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இத்தொழிற்சாலை  மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இதேவேளை ஆடைஉற்பத்தி சார்ந்த மற்றுமொரு தொழிற்சாலை 57 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. போரளஸ்கமுவை பகுதியில் 69 மில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு தொழிற்சாலையை நிருவ இலங்கை முதலீட்டுச் சபை அனுமதியளித்துள்ளது. பொருட்கள் பொதி செய்யும் இதன் மூலம் மேலும் 100 பேருக்கு தொழில் வாய்ப்புக் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உருளைக் கிழங்கு வடிவத்தில் கொண்டுவரப்பட்ட 2.5 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது

ஒருகோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான 21/2 கிலோகிராம் ஹெரோயினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் உருளைக்கிழங்கு வடிவத்திலான 46 பெட்டிகளில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

இந்த உருளைக் கிழங்கு கொள்கலன் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திலிருந்து கடந்த ஞாயிறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சுங்கப்பகுதியின் உறுகொடவத்த புதிய பரிசோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே சுங்கப்பகுதியினரால்யினரால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இது தொடர்பில் போதைப் பொருள் ஒழிப்பு அத்தியட்சர் எம்.விக்கிரமரட்ண மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.