அரச பணிகளில் தமிழ்மொழி கட்டாயமாகின்றது : டியூ. குணசேகர

duegunasekara.jpgஅரச பணிகளில் தமிழ்மொழி கட்டாய மொழியாவதாக அரசியல் சாசன அமைச்சர் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் அரச பணிகளில் இணைந்து கொள்ளும் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் சித்தியடையாதோர் அரச பணிகளுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள்.

அரசசேவையில் உள்ளவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச காரியாலயங்களில் சிறுபான்மை மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *