வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஏ-9 வீதி நேற்று முதல் மக்களுடைய போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிடப் பட்டுள்ளது.
வவுனியா கண்டி வீதியில் பொலிஸ் விடுதிக்கு முன்னால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலையாளி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ் நிலைய பாதுகாப்பினை முன்னிட்டு வீதி மூடப்பட்டு இருந்தது.