விஸ்வா

விஸ்வா

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம்!

Dry_Rationகிளி நொச்சியில் மீள்குடியமாத்தப்பட்ட மக்களுக்கு நிவாரண உணவப் பொருட்கள் வழங்குவதில் தாமதங்கள் எற்படுவதாக மீள்குடிடியற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் படையினராலும் கிராம அலுவலர்களாலும் பதிவுகளுக்குட்படுத்துப்பட்டு குடும்ப அட்டை. நிவாரண உணவுப் பங்கிட்டு அட்டை என்பனவும் உடனடியாக வழங்கப்படுகின்றன.

ஆனால், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் அவர்களுக்கான உலருணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் எற்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 4ம் திகதி பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலருக்கு இன்னமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, கிளிநொச்சி அறிவியல் நகரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக் மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றப்படும் மக்கள் எவ்விதத் தொழில் வாய்ப்புக்களுமற்ற நிலையில் நிவாரண உணவுப்பொருட்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நகரில் வியாபார நிலையங்கள் அதிகரித்து வருகின்ற போதும் அவற்றில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை.

Murukandi_Kovilகிளிநொச்சி நகரில் பலதரப்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள்  தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி நகரில் ஏற்கனவே வியாபாரம் செய்த வர்த்தகர்கள் மட்டுமல்லாது தென்னிலங்கையிலுள்ள புதிய வர்த்தகர்களும் வந்து வியாபார நிலையங்களை ஆரம்பித்துள்ளனர். கொழும்பிலுள்ள பெரிய வியாபார நிறுவனங்களும் அவற்றின் கிளைகளை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ளன.

Murukandi_Kovil மக்கள் கட்டம் கட்டமா மீள் குடியமர்த்தப்பட்டு வருகின்ற போதும், அவர்களின் வீடுகள் அழிவடைந்த நிலையில் கூடாரங்கள் அமைத்தே வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் போதே அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும். எனவே, அதுவரை வியாபார நிலையங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பூனகரி மீனவர்களுக்கு உதவி வழங்க ‘வேள்ட் விசன்’ நிறுவனம் முன்வந்துள்ளது.

World_Vision_SLகிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள பள்ளிக்குடா பிரதேசத்தில் உள்ள இரண்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு கண்ணாடி இழைப் படகுகளும், அவற்றிற்குரிய இயந்திரங்களும் ‘வேள்ட் விசன்’ நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளன.

வளர்மதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு படகுகளும், பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நான்கு படகுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனையிறவுத் தடைமுகாமில் சகல வாகனங்களும் பதிவுக்குட்படுத்தப்படுகின்றன.

Elephant_Passகுற்றச்செயல்கள் மற்றும் கடத்தல்களைத் தடுக்கும் வகையில்  ஆனையிறவு தடைமுகாமில் சகல வாகனங்களும் பதிவிற்குட்படுத்தப்படுகின்றன. வெளியிடங்களிலிருந்து யாழ்ப்பாணம் வரும் வாகனங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் என அனைத்தும் இவ்வாறு பதிவுகளுக்குட்படுத்தப்படுகின்றன.

வாகனங்களின் பதிவிலக்கம், அவற்றின் வகை மற்றும். வாகனச்சாரதியின் பெயர் என்பன ஆனையிறவுத் தடைமுகாம் படையினரால் பதிவுக்குட்படுத்தப்படுகின்றது. பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றமையும் குறிப்பிடத்க்கது.

கிளிநொச்சியில் பாம்புக் கடியினால் சிறுவன் மரணம்!

images-snakes.jpgகிளி நொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டு தரப்பாள் கூடாரத்தில் உறங்கிய சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீள்குடியேற்றப்பட்ட இச்சிறுவனின் குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட தரப்பாள் கூடாரத்தில் வசித்து வந்தனர். கடந்த 26ம் திகதி இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில், கூடாரத்திற்குள் நுழைந்த பாம்பு இச்சிறுவனைத் தீண்டியுள்ளது. உருத்திரபுரம் வடக்கைச்சேர்ந்த ஞானசீலன் நிலக்சன் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு பாம்பினால் கடியுண்டு உயிரிழந்துள்ளான்.

பாம்பினால் கடியுண்ட சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு  பின்னர். யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு வைத்து மரணமானான்.

Related News:

பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் யாழ்ப்பாணத்தில் கடலுணவின் விலைகள் அதிகரிப்பு!

Fishing_in_Jaffnaயாழ் குடா நாட்டில் கடலுணவு வகைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் குடாநாட்டு மக்கள் கடலுணவுகளை நுகர்வதில் பல சிரமங்களை எதி;ர்கொண்’டு வருகின்றனர். சாதாரணமாக ஒரு கிலோ 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மீனின் விலை தற்போது 600 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

தென்னிலங்கையிலிருந்து அதிகளவு சுற்றுலாப்பயணிகள் குடாநாட்டிற்கு வருகை தருவதாலேயே  கடலுணவகளின் விலை  அதிகரித்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.. தெற்கிலிருந்து வரும் மக்கள் அதிகளவு யாழ்ப்பாண கடலுணவுகளை விரும்பி உண்கின்றனர். அத்துடன் அவர்கள் திரும்பிச்செல்லும் போது அதிகளவான கடலுணுவுப் பொருட்களை கொள்வனவு செய்தும் கொண்டு செல்கின்றனர்.

யாழ்ப்பாண மீனவர்கள் தற்போதும் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படுமானால் கடலுணவுப் பொருட்களின் தொகை அதிகரிப்பதோடு அவற்றின் விலைகளும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  (வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க விரைவில் அனுமதி. )

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்து!

LandMine_Signவன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்டப் பின்னரே மக்கள் மீளக்குடியமாத்தபட்டு வருகின்ற போதும் சில வெடிபொருட்கள் கண்களுக்குப் புலப்படாத வகையிலுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

மரங்களிலும், நிலத்திலும் புகுந்த நிலையில் வெடிக்காத நிலையில் சில எறிகணைகள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை வெடிபொருட்கள் என அறியாத சிறுவர்கள் இவற்றைப் பரிசோதிக்க முயலும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன் இதனால் பெற்றோர் மிக அவதானமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில விடுகளின் சுவர்களில் பெரிய சுடுகலன்களின் தோட்டாக்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகின்றன. வீட்டு முற்றங்கள,; காணிகளை துப்புரவாக்கி தீமூட்டுகின்றபோது அதற்குளிளிருந்தும் வெடிபொருட்கள் வெடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில்  மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தருமபுரம், கட்டைக்காடு, விசுவமடு முதலான பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையிலும் பொதுமக்களால் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர படைத்தளபதி அனுமதி!

Mahinda_Hathrusinge_Major_Genவடமராட்சி மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர யாழ்.மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அனுமதியளித்துள்ளார். நேற்று மாலை பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடம் இடம் பெற்ற சந்திப்பில் அவர் இவ்வனுமதியை  வழங்கினார்.

போர் நடவடிக்கைகளால் சில வருடங்களுக்கு முன்னர் டமராட்சிக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுதல் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று பலாலி படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது இம்மக்களில் வாழ்வாதார பிரச்சினைகள் உட்பட்ட அம்மக்கள் அவர்களின் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுவதன் அவசியம் குறித்தும் யாழ்.அரசாங்க அதிபர் படைத்தளபதிக்கு விளக்கிக் கூறினார். இதனயடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இதனடிப்படையில் முதற்கட்டமாக நாளை திங்கள் கிழமை வடமராட்சிக்கிழக்கின் அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த அம்பன் பகுதியில் 81 குடும்பங்கள்  மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன.  அத்துடன் செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2அயிரத்து 455 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேர் மீளக்குடியமர்வதற்கான அனுமதி நேற்று படைத்தளபதியால் வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை யாழ். மாவட்டச்செயலகம் மேற்கொள்ளவுள்ளது.

பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்!

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 10ம் திகதி மேற்படி மருத்துவமனையில் பிறந்த குந்தையை கைவிட்டு விட்டு அதன் தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அக்குழந்தையை அம்மருத்துவமனையின் வைத்தியர்கள். தாதிகள் பராமறித்து வருகின்றனர். இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், குறித்த பெண் போலியான  பெயர் விபரங்களை மருத்துவமனையில் கொடுத்துள்ளதால் அப்பெணணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 வறுமை மற்றும், தவறான உறவுகள் காரணமாக தென்னிலங்கைப் பகுதிகளில், பெற்ற குழந்தைகளை கைவிட்டு விட்டு தலைமறைவாகும் பெண்கள் தொடர்பான செய்திகளை அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருந்த நிலையில் தற்போது போரின் பின்னான சூழலில் வன்னியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது

இந்தியாவினால் 50 ஆயிரம் வீடுகளைக்கட்டும் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றே பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை இந்திய நிறவனம் ஒன்றே பொறுப்பேற்று அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா வடக்கில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான நிதி நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பது தொடர்பான சாச்சைசகள் இந்திய அரசியல் வட்டாரங்களிலிருந்தும் தமிழக வட்டாரங்களிலிருந்தும் வெளியாகியிருந்த நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வீடமைப்பு குறித்து ஆராய குறித்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.   யாழ்ப்பாணத்தில் வீடுகள் அமைக்கவிருக்கும் இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் ஆயிரம் வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் மேலும் ஆயிரம் வீடுகள் கட்டுவதெனவும்,அடுத்ததாக ஏனைய வீடுகளைக் கட்டம் கட்டமாக கட்டுவதெனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இவ்வீடமைப்புக்காக இந்தியா வழங்கும் நிதியைக் கையாளவதற்காக இந்திய வங்கியின் கிளை ஒன்று யாழ்ப்பாணத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.