சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு: லாலு

laluprasat.jpgபீகார் மாநிலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அயோத்தியில் பழம் பெருமை வாய்ந்த பாபர் மசூதியை 1992ம் ஆண்டு பா.ஜ.க. இடித்தது. அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு. அந்த பழியில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்க முடியும். பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது சம்பந்தமாக நான் விவாதிக்க தயார். காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக முட்டாள்தனமாக எதுவும் உளறிக்கொண்டிருக்ககூடாது.
 
காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஏதாவது பேசினால் மேலும் பல ரகசியங்களை நான் வெளியிட வேண்டியது வரும். பாபர் மசூதி பற்றி காங்கிரசின் இரட்டை வேடத்தை நான் அம்பலப்படுத்த நேரிடும் என்றார். பாபர் மசூதி இடிப்புக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லல்லுவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

‘இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா’-சத்யராஜ்

sathyaraj.jpgஉலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ஞாபகங்கள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

ஐயா…நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க… உண்மையைப் பேசுறேன்… சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன். இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.

“வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர் எதிர்காலத்தில் வாக்குரிமையை இழக்கநேரிடும்’

வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர்கள் எதிர்காலத்திலே தமது வாக்குரிமையை இழக்கவேண்டிய ஒரு நிலைமை உருவாகும். கொழும்பிலே நிரந்தரமாக வாழ விரும்பும் தமிழர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வாக்குரிமை மிகவும் அவசியமாகும். வாக்குரிமையில் அக்கறை கொண்டு ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக எமது பெயர்களை வாக்காளர் பதிவேட்டிலே இடம்பெறச்செய்யவேண்டும். அதேபோல் தமது வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் வாக்காளர்கள் பயன்படுத்தவேண்டும். இந்த அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தாதவர்களை வரலாறு மன்னிக்காது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பு கொச்சிக்கடை செல்லையா தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் பணியாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

sri-lanka-police.jpgமேல் மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரது விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி மேல்மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான பத்து நாட்கள் மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாகப் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தக் கடமைக்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் மேல் மாகாணத்துக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.  தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றது. தேர்தல் தினத்தன்று தேவைப்பட்டால் படையினரின் உதவியைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது பாதணி வீச்சு

anwar-hussan.jpg அஸ்ஸாம் மாநிலம் தும்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது வாக்காளர்கள் காலணிகளை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. துப்ரி தொகுதியின் தற்போதைய எம்.பி. அன்வர் உசேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஜெயித்த பின்னர் தொகுதிப் பக்கம் செல்லமையினால் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

துப்ரி தொகுதியில் போட்டியிடும் அன்வர் உசேன். அத்தொகுதிக்குட்பட்ட கான்பாரி என்ற இடத்தில் காங்கிரஸ் சார்பில், தேர்தல் பிரசார நடைபெற்ற போது இதில் அன்வர் ஹூசேன் கலந்து கொண்டார். அப்போது அன்வர் மீது ஆத்திரத்தில் இருந்த வாக்காளர்கள், திடீரென பாதணிகளை, கழற்றி அவர் மீது எறிந்தனர். மேலும் கற்களையும் வீசினர்.பொலிஸார் அன்வர் உசேனை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது 

குருநாகலில் இருந்து ஹபரணை வரை புதிய ரயில் பாதை!

sri-lanka-railway.jpgகுருநாகல் நகரிலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணை வரை புதிதாக 85 கிலோ மீற்றர் தூரம்கொண்ட ரயில் பாதையொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ள நகரம் கடந்த 20 வருட காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நகரமாகவும் மாறியுள்ளது.

இங்குள்ள பொருளாதார அபிவிருத்தி மையத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் பொருளாதார அபிவிருத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் காய்கறிகள் உட்பட பல்வேறு உணவு வகைகள் தம்புள்ள நகருக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டின் நாலா பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. எனினும் தம்புள்ளைக்குச் செல்வதற்கு ரயில் மார்க்கம் ஒன்று இதுகாலவரை இருக்கவில்லை.

இங்குள்ள வர்த்தக முயற்சிகளை மேலும் விரிவு படுத்தும் நோக்கிலேயே குருநாகலில் இருந்து கலேவெல, மற்றும் தம்புள்ள ஊடாக ஹபரணை வரை ரயில் பாதையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு 60 கோடி ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இப்புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் குருநாகலுக்கும் தம்புள்ளைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 20 ரயில் நிலையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். போட்டி அட்டவணை

images-ipl.jpgஏப்18:  சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மாலை 4 மணி

ஏப்18: ராஜஸ்தான்ராயல்ஸ்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டவுன் இரவு 8 மண

ஏப்19: டெல்லி டேர்டெவில்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டவுன் மாலை 4 மணி

ஏப்19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்20: ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர்கிங்ஸ் போர்ட் எலிசபெத் இரவு 8 மணி

ஏப்21: நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் மாலை 4 மணி

ஏப்21: ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் டர்பன் இரவு 8 மணி

ஏப்:22: ராயல் சேலஞ்சர்ஸ்  டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்23: டெல்லி டேர்டெவில்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்23: நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்24: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ், டர்பன் இரவு 8 மணி

ஏப்25: டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இந்தியன்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்25: நைட் ரைடர்ஸ்  சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்26: ராயல் சேலஞ்சர்ஸ்  டெல்லி டேர்டெவில்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4 மணி

ஏப்26: ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டவுன் இரவு 8 மணி

ஏப்27: சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்27: நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் இரவு 8 மணி

ஏப்28: டெல்லி டேர்டெவில்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

ஏப்29: நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் டர்பன் மாலை 4 மணி

ஏப்29: மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் இரவு 8 மணி

ஏப்30: டெல்லி டேர்டெவில்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

ஏப்30: ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே1: மும்பை இந்தியன்ஸ் நைட் ரைடர்ஸ் ஈஸ்ட் லண்டன் மாலை 4மணி

மே1: ராயல் சேலஞ்சர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் இரவு 8 மணி

மே2: ராஜஸ்தான் ராயல்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4மணி

மே2: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே3: கிங்ஸ் லெவன் பஞ்சாப் நைட் ரைடர்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4 மணி

மே3: மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே4: டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஈஸ்ட் லண்டன் இரவு 8 மணி

மே5: கிங்ஸ் லெவன் பஞ்சாப்  ராஜஸ்தான் ராயல்ஸ் டர்பன் மாலை 4 மணி

மே5: டெல்லி டேர்டெவில்ஸ் நைட் ரைடர்ஸ் டர்பன் இரவு 8 மணி

மே6: மும்பை இந்தியன்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே7: ராயல் சேலஞ்சர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

மே7: கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே8: டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஈஸ்ட் லண்டன் இரவு 8 மணி

மே9: டெக்கான் சார்ஜர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிம்பெர்லி மாலை 4 மணி

மே9: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கிம்பெர்லி இரவு 8 மணி

மே10: ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4 மணி

மே10: நைட் ரைடர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே11: டெக்கான் சார்ஜர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கிம்பெர்லி இரவு 8 மணி

மே12: ராயல் சேலஞ்சர்ஸ் நைட் ரைடர்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

மே12: கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே13: டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் டர்பன் இரவு 8 மணி

மே14: சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் டர்பன் மாலை 4 மணி

மே14: மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் டர்பன் இரவு 8 மணி

மே15: கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி டேர்டெவில்ஸ் புளோம்பாண்டீன் இரவு 8 மணி

மே16: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் மாலை 4மணி

மே16: டெக்கான் சார்ஜர்ஸ்  நைட் ரைடர்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே17: கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெக்கான் சார்ஜர்ஸ் ஜோகனஸ்பர்க் மாலை 4 மணி

மே17: ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லிடேர்டெவில்ஸ் புளோம்பாண்டீன் இரவு 8 மணி

மே18: சென்னை சூப்பர் கிங்ஸ் நைட் ரைடர்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே19: டெல்லிடேர்டெவில்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே20: ராஜஸ்தான் ராயல்ஸ் நைட் ரைடர்ஸ் டர்பன் மாலை 4 மணி

மே20: சென்னை சூப்பர்கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டர்பன் இரவு 8 மணி

மே21: மும்பை இந்தியன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் செஞ்சூரியன் மாலை 4 மணி

மே21: டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் செஞ்சூரியன் இரவு 8 மணி

மே22: முதலாவது அரைஇறுதி செஞ்சூரியன் இரவு 8 மணி

மே23: 2 வது அரைஇறுதி ஜோகனஸ்பர்க் இரவு 8 மணி

மே24: இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க், இரவு 8 மணி

தென்ஆபிரிக்காவில் ஐபிஎல் இன்று தொடக்கம்

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆபிரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மே 24 ந்தேதி வரை 37 நாட்கள் நடக்கிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

18 ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 22 ந்தேதி முதல் அரை இறுதியும், 23 ந்தேதி 2 வது அரை இறுதியும், இறுதிப்போட்டி மே 24 ந்தேதியும் நடைபெறும்.

கேப்டவுடன், போர்ட் எலிசபெத், டர்பன், பிரிடோரியா, சிம்பொலி, ஜோகன்ஸ்பர்க், செஞ்சூரியன், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வது இடத்தை பிடித்தது. ஷேவாக்கின் டெல்லிடேர் டெவிலஸ் அணியும், யுவராஜ் சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் அரை இறுதியில் தோற்றன.

கடந்த முறை ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு கொடுக்க இயலாததால் இந்தப் போட்டி தென்ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஐ.பி.எல். போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பு இருக்கிறது. சோனி செட்மேக்ஸ் டெலிவிஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய நேரடிப்படி மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ஆட்டங்கள் தொடங்குகிறது.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு விசேட திட்டம்!

schools_stu.jpgஅடுத்த ஆண்டு முதல் பாடசாலை நாட்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் தவறாது 210 தினங்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. அதற்கேற்ப பரீட்சை தினங்களிலும் பாடசாலைகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

210 தினங்கள் அரசாங்க பாடசாலைகள் நடைபெறும் விதத்தில் க. பொ. த. சாதாரண தரம்,  உயர் தரம் பரீட்சைகள் நடைபெறும் தினங்களிலும் வகுப்புக்களை நடத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அரசாங்க பாடசாலைகள் சரியாக 210 தினங்கள் நடைபெற வேண்டும் எனினும் எந்த வருடத்திலும் குறிப்பிடப்பட்ட 210 தினங்கள் பாடசாலைகளை நடத்த முடிவதில்லை. பிரதானமாக க. பொ. த. சாதாரண தர,  உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் நீடிப்பதாலேயே இவ்வாறு நடத்த முடிவதில்லை. குறிப்பிட்ட 210 தினங்கள் பாடசாலைகள் நடத்தப்படாமையால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை  சரிவர பூர்த்தி செய்ய முடியாத நில ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்

இவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் 1000 மினி கோப் சிட்டிகள்!

bandula_gunawardena.jpgஇவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் ஆயிரம் மினி கோப் சிட்டிகள் அமைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 500 மினி கோப் சிட்டிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறினார். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் பாரிய மாற்றங்களையும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் எமது அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மூவாயிரம் இலட்சம் ரூபா செலவில் 104 லக் சதோச, 300 இலட்சம் ரூபா செலவில் 363 கோப் சிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 1000 மினி கோப் சிட்டிகள் நிறுவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களும்; நிறுவப்பட்டு வருகின்றன.

பருப்பு,  சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்; புத்தாண்டு காலங்களில்; லக் சதோச வண்டிகள் மூலம் பொருட்கள்; விற்பனை செய்யும் நடமாடும் சேவையையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுளளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.