சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இன்று மாலை ஜோன் ஹோல்ம்ஸ் – ஜனாதிபதி சந்திப்பு

john_holmes.jpgஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின்,  மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலாளர்  ஜோன் ஹோல்ம்ஸ் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடவுள்ளார். இன்று காலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்த ஜோன் ஹோல்ம்ஸ் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றிக் கலந்துறையாடியுள்ளார்.

இதேவேளை,  இவர் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களைச் சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானம்

nimalsiripaladasilva.jpg தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் மாணவர்களோ பெற்றோரோ ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தேசிய நோய்த் தடுப்பு வேலைத் திட்டத்திற்கமைய ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் 350 பேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

ஜப்பான் உதவியில் அநுராதபுர போதனா வைத்தியசாலையை மேம்படுத்த திட்டம்!

nimalsiripaladasilva.jpgஅநுராத புரத்தில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான வசதிகளை மேம்மபடுத்த ஜப்பான் நாட்டின் உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். இத்திட்டத்தில் இர்ண்டாம் கட்ட நடவடிக்கைக்கு 390 மில்லியன் ஜப்பான் யென் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரி

anura.jpgதேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரியொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்திருந்தார்.

அரசாங்க திரைப்படப் பிரிவுடன் இணைந்தாக இது இயங்கும். இதன் இயக்குணநராக பேராசிரியர் தர்மசேன பதிராஜ நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியால் நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை இவருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா அரச நிதியத்திலிருந்து சம்பளமாக வழங்கப்படும்.

உணவுகளை பொதி செய்வதில் மாணவர்கள்…..

vavu-stu.jpgயுத்த சூனிய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுக்கு பொது அமைப்புக்கள் சமய நிறுவனங்கள், பொதுமக்கள் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர். கோவில்குளம் சிவன் கோவில் மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை பொதி செய்வதில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

vavu-stu.jpg

இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு

Wanni_War_Boat_Refugeesவன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம்கள் இன்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை, ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்கள் இன்று வன்னிக்கு சென்றனர். இரண்டு பஸ் வண்டிகளிலும், ஒரு லொறியிலும் சமையல் பாத்திரங்களுடன் காத்தான்குடிப்பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு முன்பாக இருந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எஸ். எச். அஸ்பர் தலைமையில் இவர்கள் வன்னிக்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் லிபிய ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

mahi-kadabi.jpgலிபிய ஜனாதிபதி கேர்னல் முஅம்மர் கடாபி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிய அவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு லிபியா உதவி வழங்குமென மீண்டும் உறுதியளித்தார்.

நமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவுங்கள்…

cvili.jpgஇடம் பெயர்ந்துவரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது அணிந்த பழைய ஆடைகளை வழங்க வேண்டாம். அவர்களுக்கு புதிய ஆடைகளையே வழங்குங்கள் என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது எவ்வாறு நாம் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி னோமோ அதேபோன்று தென் பகுதி மக்களின் மனிதாபிமான உணர்வுகளை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுனாமியின் போது நாம் பழைய அணிந்த ஆடைக ளையே அவசர தேவைக்காக வழங்கினோம். ஆனால் வன்னியிலுள்ள எமது சகோதர தமிழ் மக்களுக்கு அப்படி வழங்காமல் புதிய ஆடைகளையே வழங்குவோம். அவர்கள் எமது மக்கள் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலர் உணவு பொருட்கள், பிஸ்கட்வகைகள், குடிநீர் போத்தல்கள், பால்மா, திரவப்பால் பக்கற், குழந்தைகள் பால்மா, குழந்தைகளுக்கான பால் போத்தல், பற்பொடி, பற்பசை, பிரஷ்கள், டவல்கள், பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள்,  பெண்களின் உள்ளாடைகள், நுளம்பு வலை, சவர்க்காரம், சமையல் பாத்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்க முன்வாருங்கள் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பிரதான சேகரிப்பு நிலையமாக பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபமும் இயங்குகிறது.

உதவ விரும்பும் அமைப்புகள், தனி மனிதர்கள், நலன் விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை தமது பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திலோ, மாவட்ட செயலகத்திலோ, உதவி பிரதேச செயலகத்திலோ ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.நாட்டிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளையும் அழைத்து அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா மனிதாபிமான உதவி குறித்து விளக்கமளித்தார்.

பிரபல எழுத்தாளர் ரூபராணி ஜோசப் காலமானார்

இலங்கையின் பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ரூபராணி ஜோசப் நேற்று முன்தினம் காலமானார். இவர் இறக்கும் போது வயது 79.

50 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய சமூக, நாடக, அரசியல் தொழிற்சங்கத்துறைகளில் சேவையாற்றிய இவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்துப்பணிகளுக்காக வடகிழக்கு மத்திய மாகாண மற்றும் தேசிய சாகித்திய விழாக்களில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுமுள்ளார். இவருக்கு சொல்லின் செவ்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி, கலாபூஷணம் போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏணியும் தோணியும், இல்லை இல்லை, ஒரு வித்தியாசமான விளம்பரம், ஒரு தாயின் மடியில் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் கால்நூற்றாண்டு காலமாக ஆசிரியராக கடமையாற்றி தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு-ராகுல்

rahul.jpgஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.

இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா. இலங்கை தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை.