சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ரமழான் தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (21) வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நியூஸிலாந்துடனான டெஸ்ட் இலங்கை வலுவான நிலையில்

thilakarathna-dilshan.jpgஇலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணித் தலைவர் டேனியல் விட்டோரி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று தனது அணி களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

இப்போட்டி நேற்று காலி சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமானது. அதற்கு இணங்க முதலில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டில்சான், தரங்க பரணவித்தான ஆகியோர் களமிறங்கினர்.

தரங்க பரணவித்தான இரண்டு பந்துகளை எதிர்கொண்டு எதுவித ஓட்டமும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார். அப்போது இலங்கை அணி எதுவித ஓட்டமும் பெறவில்லை.

பின்னர் வந்த இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார, 8 ஓட்டங்கள் பெற்ற போது மாட்டினின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்து சென்றார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 16 ஓட்டங்கள் பெற்றிருந்தனர்.

பின்னர் டில்சானுடன் ஜோடி சேர்ந்த ஜயவர்தன நிதானமாக ஆடி இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்த அடித்தளமிட்டார்.

சிறப்பாகவும் நிதானமாகவும் ஆடிக்கொண்டிருந்த டில்சான் 30 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் டில்சான் 92 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஆட்டமிழந்து சென்றார்.

ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் அவருடன் இணைந்த டிலான் சமரவீர 82 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வந்தார்.

இதேவேளை இப்போட்டியில் மலிந்த வர்ணபுரவிற்கு பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டில்சான் களமிறங்கினார்.  முரளிதரன் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அத்துடன் இலங்கை அணியின் டெஸ்ட் விக்கெட் காப்பாளராக பிரசன்ன ஜயவர்தன மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

SCORECARD
SRI LANKA 1st innings
T. Paranavitana c McCullum b Martin   00
T. Dilshan b O’Brien     92
K. Sangakkara c Flynn b Martin    08
M. Jayawardene not out   108
T. Samaraweera not out   82
Extras: (b1, lb1, w1)     03
TOTAL (for 3 wkts, 78 overs)   293

To bat: Angelo Mathews, Prasanna Jayawardene, Muttiah Muralitharan, Ajantha Mendis, Thilan Thushara, Nuwan Kulasekara.

Fall of wickets: 1-0 (Paranavitana), 2-16 (Sangakkara), 3-134 (Dilshan). Bowling: Martin 15-2-59-2, O’Brien 14-1-90-1 (w1), Oram 7-1-25-0, Vettori 24-5-48-0, Patel 15-1-60-0, Ryder 3-1-9-0.

சாதனை படைத்த திலக்கரத்ன டில்ஷான் – 30 பந்துக்களில் 50 ஓட்டங்கள்

thilakarathna-dilshan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட விரரான திலக்கரத்ன டில்ஷான் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் இன்று காலை குறைந்த பந்துகளுக்கு அரைச்சதம் அடித்து சாதனை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கும் நியுஸிலாந்துக்கும் இடையில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே டில்ஷான் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 30 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் முன்னால் தலைவர் அர்ஜூன ரனதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அர்ஜூன இந்திய அணியுடனான போட்டி ஒன்றின் போது 31 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார். ஆட்ட முடிவின் போது இலங்கை கிரிக்கெட் அணி 3 விக்கட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

இந்திய அணியில் மீண்டும் ட்ராவிட் – முதல் போட்டி இலங்கையில்

dravide-2222.jpgபிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் டிராவிட். இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளார். காயம் காரணமாக முன்னணி வீரர் செவாக், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாத ஓய்வுக்குப் பின்,  இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் செப். 8 ஆம் திகதி இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்குப் பின் செப். 22 ஆம் திகதி தென் ஆப்ரிக்காவில் ஆரம்பிக்க உள்ள சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.  இந்த இரு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி,  நேற்று தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் தேர்வு செய்யப் பட்டது. இந்திய கேப்டன் தோனி மற்றும் பலர் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அணியின் அதிரடி துவக்க வீரர் செவாக்,  தோள்பட்டை காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது இதற்கு சிகிச்சை பெற்று வரும் செவாக்,  முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செவாக் இல்லாத நிலையில்,  இந்திய அணியின் துடுப்பாட்டத்தை  பலப்படுத்தும் நோக்கில்,  முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார் டிராவிட். இவர் கடைசியாக கடந்த 2007 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தார். அதற்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த டிராவிட்,  தற்போது மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் காலடி வைக்க உள்ளார். 

“தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 – 6 வரை

muslim-prayer.jpgதென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தனது 1 ஆவது உலக ஆய்வு மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. “தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ எனும் தலைப்பில் நடத்தவுள்ள இந்த உலக ஆய்வு மாநாடு நம்நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துகளைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேற்படி உலக ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்களுள் ஒருவரும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கே.ரகுபரன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தெரிவித்துள்ளது.

மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல்பண்பாடு, சமூகம்’ எனும் கருப்பொருளுக்குட்பட்டு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி எனும் ஏதாவது தலைப்பில் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையையும் சமர்ப்பிக்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் மாநாட்டு ஒழுங்கமைப்பு செயலாளர்களான கே.ரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்),ஜனாபா எம்.ஏ.எஸ்.எப். சாதியா (விரிவுரையாளர்) ஆகியோருடன் 0094718218177,0094718035182 எனும் கைத்தொலை பேசிகளுக்குகோ,மொழித்துறை,தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

100 மீ., ஓட்டம்- 9.58 வினாடிகளில் உசைன் போல்ட் சாதனை

17-husain-bolt222.jpg100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் 9.58 வினாடிகளில் வந்து தனது பழைய சாதனை முறியடித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் நடந்த ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் மின்னல் வீரர் என்று தடகள ரசிகர்களால் அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், அவரது போட்டியாளர்களாக கருதப்படும் ஜமைக்காவின் அசெபா பாவெல், அமெரிக்காவின் டைசன் கே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 9.69 வினாடிகளில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்ற போல்ட் நேற்றும் அசத்தினார். அவர் 9.58 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தனது உலக சாதனையை தானே முறியடித்தார்.

டைசன் கே (9.71 வினாடி) வெள்ளியும், அசெபா பாவெல் (9.84 வினாடி) வெண்கலமும் கைப்பற்றினர்.

194 ஓட்டங்கள்: உலக சாதனையை சமம் செய்த ஜிம்பாப்வே வீரர்

17-charles-coventry222.jpgபங்களா தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் உலக சாதனையை சமன் செய்தார். இப்போட்டியில் பங்களாதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

ஜிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று புலவாயோ நகரில் நடந்தது.

இதில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. ஆரம்ப வீரர் வெர்மூலன் 5 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாவது வீரராக சார்லஸ் கவன்ட்ரி வந்தார். அதிரடியாக துடுப்பாட்டம் செய்த இவர் வரிசையாக சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். இவருக்கு மட்சிகின்யெரி (37 ) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.

மற்ற வீரர்கள் சொல்லி கொள்ளும்படி துடுப்பெடுத்து ஆடவில்லை. என்றாலும் கவன்ட்ரி தொடர்ந்து துடுப்பெடுத்தாடி  7 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 156 பந்தில் 194 ஒட்டங்கள் எடுத்து,  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் 12 ஆண்டு கால சாதனையை சமன் செய்தார்.

இதையடுத்து ஜிம்பாப்வே 50 ஓவரி்ல் 8 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை நோக்கி துடுப்பாட்டம்  செய்த பங்களாதேச அணிக்கு தமிம் இக்பால் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். இவர் 154 ஒட்டங்கள்  எடுத்து அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றார். சித்திக் 38, ஹசன் 35, மகமூத்துல்லாஹ் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.

பங்களாதேசம் 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து பங்களாதேசம் 3-1 என தொடரை கைப்பற்றியது.

பாடசாலை மாணவர்களுக்கு சுழல் பந்து வீச்சு பயிற்சி முகாம் நேற்று திருமலையில் ஆரம்பிப்பு – முரளிதரன் பயிற்சி வழங்கினார்

murali.jpgகிழக்கு மாகாணத்தில் திறமைவாய்ந்த புதிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் மற்றும் சிறப்பாக பந்து வீசுவது தொர்பான யுக்தியை கற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் சுழற் பந்துவீச்சு பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாடசாலைகளின் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட 150 பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதற்கான ஒழுங்கை செலிங்கோ லைஃப் நிறுவனம் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக இந்தத்திட்டத்தை நடத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் இதுவாகும்.

இந்நிகழ்வில் முரளியின் முதலாவது பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பியால் விஜேதுங்க ஆகியோர் உதவியாகப் பணிபுரிந்தனர். இந்நிகழ்வில் செலிங்கோ லைஃப் பிரதித் தலைவர் ஆர். ரெங்கநாதன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நகர சபைத் தலைவர் கெளரி முகுந்தன் மற்றும் ஆயிரக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பன்றிக் காய்ச்சல் காரணமாக ஹஜ் கடமைக்கு புதிய கட்டுப்பாடு

haji.jpgஉலக நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருகை தரும் யாத்திரிகர் தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கம் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதன்படி 12 வயதுக்குக் குறைவானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது ஏற்றதாகும் என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் புதிய இன்புலுவன்சா ஏ (எச்-1, என்-1) வைரஸ் காய்ச்சல் காரணமாகவே சவூதி அரேபிய சுகாதார அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இது கட்டுப்பாடோ தடையோ அல்ல எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இது தவிர இருதய நோயாளிகள்,  சிறுநீரக கோளாறு உடையோர், நீரிளிவு நோயாளிகள் போன்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவதை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்கள் குறித்து இலங்கையிலுள்ள சகல ஹஜ் முகவர் நிலையங்களையும் அழைத்து அறிவூட்ட உள்ளதாகவும் நவவி கூறினார்.

இதேவேளை இந்த வருடம் சர்வதேச கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரிகை செல்ல அனுமதி வழங்கவும் சவூதி அரேபியா அரசு தீர்மானித்துள்ளது. முன்னர் மத்திய கிழக்கு கடவுச்சீட்டு மற்றும் ஹஜ்ஜுக்கான விசேட கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

உலக பட்மிண்டன் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் முதல் இந்தியப் பெண்

sainaafp222.jpgஉலக பட்மிண்டன் சாம்பியன் போட்டிகளின் கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை சைனா நெஃவால் என்ற வீராங்கனை பெற்றிருக்கிறார்.

19 வயதான இந்த இந்திய யுவதி, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராவார். பல்கேரிய நாட்டுப் பெண்ணுடன் விளையாடி வெற்றிபெற்ற அவர் கால் இறுதியை எட்டியிருக்கிறார். சீன நாட்டின் வாங் லின்னுடன் இனி அவர் போட்டியிடவுள்ளார்