::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

முல்லையில் தொடர்கிறது சமர் இரு தரப்பிலும் பெரும் இழப்பு

sl-army.jpgமுல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடுஞ்சமர் இடம் பெற்று வருகின்றது என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரு தரப்புகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரை விடுதலைப் புலிகளில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 50 சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விசுவமடுப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் 57ஆவது படைப்பிரிவின் மீது விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும் பிற்பகல் 2.30 மணியளவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதலின்போது இராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் விடுதலைப் புலிகளில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் கூறியுள்ளது.அதேவேளை, 58 ஆவது படைப் பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் (சனியன்று) அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கடுஞ் சண்டை இடம்பெற்றிருக்கிறது
இந்த மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது விடுதலைப் புலிகளின் 19 சடலங்கள் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது.அதேசமயம், சாளைப் பகுதியிலும் கடுஞ் சண்டை இடம்பெற்று வருகின்றது என படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் பலி புதுக்குடியிருப்பில் மும்முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் நான்கு டிவிசன்கள் மீது தாம் நடத்திய தாக்குதலில் சுமார் 450 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படையினரின் 53 ஆம், 58 ஆம் படைப்பிரிவுககளின் மூன்றாம் எட்டாம் விசேட படையணிகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இதன்போது படையினரின் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களையும் சடலங்களையும் புலிகள் கைப்பற்றினர் என அச்செய்திகள் தெரிவித்தன.

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

army-help.jpg(நேற்றைய தொடர்ச்சி)

266. டி. சரஸ்வதி, மாத்தளன், (வயது 30),

267. டி. குயிலினி, (வயது 07),

268. பி. டயஸ், மாத்தளன், (வயது 31),

269. பி. கலைவேந்தன், (வயது 04),

270. கே. மணியன், கிளிநொச்சி, (வயது 52),

271. ஏ. மங்கையற்கரசி, அடம்பன், (வயது 67),

272. கே. மாணிக்கம், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 66),

273. எஸ். ராமச்சந்திரன், யாழ்நகர், (வயது 62),

274. ராசையா, கிளிநொச்சி, (வயது 74),

275. ஏ.சின்னத்துரை, கிளிநொச்சி, (வயது 75),

276. டி.தக்ஷன், புதுக்குடியிருப்பு, (வயது 25),

277. துலியா, மாத்தளன், (வயது 07),

278. கே.ரஞ்சிதமலர், மாங்குளம், (வயது 64),

279. கே. கனகரத்னம், மாத்தளன், (வயது 54),

280. கே. கைலாயபிள்ளை, பூநகரி, (வயது 61),

281. கே. தனலட்சுமி, மாங்குளம், (வயது 50),

282. ஜே. இந்திரராணி, புதுக்குடியிருப்பு, (வயது 65),

283. கே. கௌதினி, முள்ளியவளை, (வயது 33),

284. கே. நந்துஷன், முள்ளியவளை, (வயது 1),

285. எஸ். கோபிராஜ், புதுக்குடியிருப்பு, (வயது 07),

286. ஜே. ஜயந்த, புதுக்குடியிருப்பு, (வயது 36),

287. எம். குகன், முல்லைத்தீவு, (வயது 30),

288. எஸ். சிவநேசன், கிளிநொச்சி, (வயது 43),

289. பி. கண்மணிப்பிள்ளை, மல்லாவி, (வயது 68),

290. பி. கேதுஷன், மல்லாவி, (வயது 07),

291. கே. புஷ்பராணி, மல்லாவி, (வயது 74),

292. எஸ். நாகரட்ணம், பொக்கணை, (வயது 86),

293. ஜே. டயனா கொலின், இரணைப்பாலை, (வயது 22),

294. வை.சிந்துஜா, இரணைப்பாலை, (வயது 09 மாதம்)

295. எஸ். சுந்தரம், பரந்தன், (வயது 72),

296. கே. ரவி, மலையமடு, (வயது 15),

297. எஸ்.பரமலிங்கம், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 59),

298. எஸ். இராசம்மா, உருத்திரபுரம், (வயது 68),

299. எம். மாணிக்கம், பொக்கணை, (வயது 68),

300. எஸ். சிதம்பரம், பொக்கணை, (வயது 75),

301. ஏ. குஞ்சியம்மா, கிளிநொச்சி, (வயது 58),

302. யு.கருப்பசாமி, முரசுமோட்டை, (வயது 75),

303. எஸ். ராசமணி, முரசுமோட்டை, (வயது 69),

304. பி. திருஞானசோதி, புளியங்குளம், (வயது 52),

305. ஆர்.செல்லையா, தர்மபுரம், (வயது 68),

306. ஆர். விக்னராஜா, முள்ளியவளை, (வயது 69),

307. என். செந்தூரன், முள்ளியவளை, (வயது 41),

308. எல்.சிவனேஸ்வரியம்மா, காங்கேசன்துறை, (வயது 63),

309. ஏ. லோகேஸ்வரன், காங்கேசன்துறை, (வயது 67),

310. கே. அன்னலட்சுமி, யாழ்ப்பாணம், (வயது 72),

311. எம்.கந்தசாமி, காங்கேசன்துறை, (வயது 76),

312. ஆர். சுகந்தினி, அடம்பன், (வயது 27),

313. ஆர்.ரேகா, அடம்பன், (வயது 08),

314. ஆர். பிரதீபா, அடம்பன், (வயது 09),

315. ஆர். பானுஷன், அடம்பன், (வயது 04),

316. கே.தங்கராசா, பூநகரி, (வயது 54),

317.எஸ். கனகசபை, மல்லாவி, (வயது 62),

318. ஆர். தணிகாசலம், யாழ்நகர், (வயது 70),

319. எம். மாரியப்பன், ஹொரண, (வயது 60),

320. கே. வேலாயுபிள்ளை, முல்லைத்தீவு, (வயது 60),

321. டி. சிரோன்மணி, பேசாலை, (வயது 23),

322. டி. சந்தோஷ், பேசாலை, (வயது 02),

323. கே. பூமாதேவி, முல்லைத்தீவு, (வயது 39),

324. மேனகாந்த், முல்லைத்தீவு, (வயது 11),

325. எஸ். புஷ்பராணி, வவுனியா, நெடுங்கேணி,

326. எஸ். கலையரசன், வவுனியா,

327. எஸ். கலைமாது, வவுனியா, நெடுங்கேணி, (வயது 06),

328. எஸ். யோகம்மா, இராமநாதபுரம், (வயது 60),

329. சி. சாமுவல், அடம்பன், (வயது 78),

330. ஏ.சிறிஸ்கந்தராஜா, இராமநாதபுரம், (வயது 69),

331. எஸ். வேலாயுதம், நீர்வேலி, (வயது 60),

332. எஎஸ். சபரிமுத்து, வட்டக்கச்சி, (வயது 77),

333. எஸ்.ராஜதுரை, ஸ்கந்தபுரம், (வயது 64),

334. எஸ்.ராஜா, உருத்திரபுரம், (வயது 73),

335. எஸ். சண்முகம், சிவநகர், (வயது 79),

336. எஸ். மல்லிகாதேவி, சிவநகர், (வயது 71),

337. எஸ். புவனேந்திரன், வட்டக்கச்சி, (வயது 38),

338. பி. ஆரிகா, வட்டக்கச்சி, (வயது 02),

339. பி. லோகிகா, வட்டக்கச்சி, (வயது 04),

340. பி. பாமினி, கிளிநொச்சி, (வயது 36),

341. ரி. ஷகிலா, பொக்கணை, (வயது 24),

342. ஆர். சரஸ்வதி, பொக்கணை, (வயது 62),

343. பேபி ஷகிலா, (ஒரு நாள் குழந்தை),

344. ரி.சுகந்தினி, முள்ளியவளை, (வயது 26),

345. ரி. திருத்திகா, குமுழமுனை, (வயது 03),

346. ரி. திலக்ஷன், குமுழமுனை, (வயது 04),

347. ஆர். தமிழ்வேந்தினி, மயலிட்டி, (வயது 02),

348. ஆர்.ரஜீவன், மயிலிட்டி, (வயது 02),

349. ஆர். சந்திரரூபகலா, கிளிநொச்சி, (வயது 19),

350. ஆர். ராமானுஜம், கிளிநொச்சி, (வயது 58),

351. எஸ். சபரிமுத்து, மடு, (வயது 62),

352. கே. புவனேஸ்வரி, குமுழமுனை, (வயது 60),

353. வை. ஜெயரூபன், மல்லாவி, (வயது 30),

354. ஆர்.ஜெயகலா, பளை, (வயது 30),

355. ஆர். முகிலன், பளை, (வயது 2 மாதம்),

356. ஆர்.ராகுலன், பளை, (வயது 06),

357. ஆர்.கோகுலன், பளை, (வயது 08),

358. எம். நீலகாந்தி, கிளிநொச்சி, (வது 54),

359. ஜெயதர்ஷினி, மல்லாவி, (வயது 28),

360. யதுர்ஷிகா, மல்லாவி, (வயது 02),

361. ஏ.சிவானந்தரூபி, பொக்கணை (வயது 36),

362. எஸ்.லோகிதன், பொக்கணை (வயது 01),

363. கே.செந்தமிழ்ச் செல்வன், பொக்கணை (வயது 34),

364. எம்.ரவீந்திரன், பளை (வயது 31),

365. ராமலிங்கம், வட்டக்கச்சி (வயது 76),

366. ரி.பூமணி, யாழ்நகர் (வயது 90).

367. பரமேஸ்வரி, உடையார்கட்டு (வயது 75),

368. கே.யது, உடையார்கட்டு, (வயது 4)

369. கே.சுகந்தினி, மாத்தளன் (வயது 27),

370. கே.கோவலன், மாத்தளன், (வயது 5),

371. கே.தமிழ்ச்செல்வி, மாத்தளன் (வயது 2),

372. எஸ்.கோணேஸ்வரன், கைவேலி (வயது 35),

373. கே.ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 62),

374. கோபாலபிள்ளை, உதயநகர் (வயது 70),

375. ஏ.தர்மன், பூநகரி (வயது 63),

376. பி.திலகவதி, கண்டாவளை (வயது 66),

377. கே.தோமஸ், சுண்ணவெளி (வயது 60),

378. எஸ்.அருணாகலன், வடமராட்சி, (வயது 80),

379. வி.பாக்கியம், அரியவலி (வயது 73),

380. எம்.வேலுவிநாயகம், அரியவலி (வயது 77),

381. எம்.சின்னப்பிள்ளை, வெற்றிலைக்கேணி (வயது 72),

382. கே.ஈஸ்வரன், கண்டாவளை (வயது 45),

383. எஸ்.சாவித்திரி, உடையார்கட்டு (வயது 66),

384. ஏ.தேவகுமார், யாழ்நகர் (வயது 49),

385. பி.கணபதிப்பிள்ளை, குமுழமுனை (வயது 76),

386. ரி.மயில்வாகனம், பூநகரி (வயது 70),

387. வண.எஸ்.ஏ.எல்.பிகாராடோ, மன்னார் (வயது 32),

388. ஆர்.வள்ளியம்மா, மாத்தளன் (வயது 73),

389. வண.எஸ்.சத்தியராஜா, மன்னார் (வயது 34),

390. வண.ஏ.ஆரோக்கியம், மன்னார் (வயது 32),

391. வண.பீற்றர் அருள்நாதன், மன்னார் (வயது 61),

392. எஸ்.ஆறுமுகம், உடுப்பிட்டி (வயது 74),

393. ஜி.தங்கப்பதுமை, புதுக்குடியிருப்பு (வயது 47),

394. வி.சண்முகம், பொக்கணை (வயது 73),

395. ரி.தேவராணி, புதுக்குடியிருப்பு (வயது 52),

396. என்.துரைசிங்கம், புதுக்குடியிருப்பு (வயது 62),

397. உயிரிழந்தவர், பெயர் தரப்படவில்லை.

398. பி.முரளி, மாத்தளன் (வயது 32),

399. எம்.திலக்ஷணா, மாத்தளன் (வயது 02),

400. ஜுட்நிஷாந்தன், மாத்தளன் (வயது 12),

401. ஜுட்ராஜினி, மாத்தளன் (வயது 40),

402. என்.சின்னம்மா, மளிகைக்காடு (வயது 77),

403.எம்.திலுக்ஷி, யாழ்நகர் (வயது 04),

404. எம்.சசியா, யாழ்ப்பாணம் (வயது 28),

405. எஸ்.மீனாட்சி, கிளிநொச்சி (வயது 76),

406. எஸ்.திருப்பதி, யாழ்ப்பாணம் (வயது 65).
 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 773 சிவிலியன்கள் வருகை

Wanni_Warபுலிகளின் பிடியிலியிலிருந்து தப்பி 773 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக களமுனையிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்குள்ளேயே மேற்படி தொகையினர் அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புதுமாத்தளனிலிருந்து 112 சிவிலியன்கள் விஸ்வமடு நோக்கி தப்பி வந்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பி வந்த மேற்படி சிவிலியன்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக 60 பேர் பலத்த சூட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காயங்களுடன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இவர்கள் படையினரைத் தேடி வந்துள்ளனர். படையினர் உடனடியாக வைத்தியர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கிய பின்னர் காயமடைந்த 60 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விஸ்வமடு நோக்கி நேற்று வந்த 112 சிவிலியன்களும் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டவர்களென்றும் மோதல்கள் காரணமாகவே முல்லைத்தீவு நோக்கி சென்றி ருந்ததாகவும் விஸ்வமடுவிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் 661 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர். மேற்படி சிவிலியன்களுள் 621 பேர் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள படையினரிடம் வந்து சேர்ந்துள்ளனர்.

ஏனைய 40 பேரும் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை வந்தடைந்திருப்பதாகவும் பிரிகேடியர் கூறினார். முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருப்போர் வவுனியாவிலுள்ள நலன்புரி கிராமங்களுக்கும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளோர் அங்கிருக்கும் நலன்புரி கிராமங்களிலும் குடியமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவில் பல்வேறு முனைகளினூடாகவும் முன்னேறி வரும் படையினர் புலிகளை ஒழிப்பதற்காக கடும் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக கூறிய பிரிகேடியர் நேற்று வரை 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

95 நோயாளர்கள் திருமலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

trico.gif
திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மேலும் 95 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் இவர்கள் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அழைத்துவரப்பட்டவரப்பட்டவர்களிற்கான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேகொண்டு வருகின்றன. இதுவரையில் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 822 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட 406 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு;

1.அடையாளம் காணப்படவில்லை,

2. ரி.மகேந்திரன், விஸ்வமடு (வயது 52),

3.கே.சசிகலா, முள்ளியவளை (வயது 20),

4. ஏ.ரோஸ்மலர், முல்லைத்தீவு (வயது 48),

5. ஏ.அபிஸன், முல்லைத்தீவு (6 மாதம்),

6. ஏ.நிக்ஸன் முல்லைத்தீவு (வயது7),

7.எஸ்.கோமதி, முல்லைத்தீவு (வயது 31),

8.பி.சுப்பிரமணியம், வவுனியா (வயது 64),

9. ஏ.பரஞ்சோதி, கிளிநொச்சி, உட்டுக்குளம் (வயது 30),

10. எஸ்.யசோதா, கிளிநொச்சி,அக்கராயன் குளம் (வயது 27),

11. எஸ்.யோகேஸ்வரி, கிளிநொச்சி (வயது 52),

12. எம்.வேலாயுதம், அல்பிட்டியா (வயது 67),

13. டபிள்யூ.செல்வரத்னம், மாங்குளம் (வயது50),

14. ஐ.மனோன்மணி, யாழ்ப்பாணம், வேலணை (வயது 85),

15. ஏ.வசந்தகுமாரி, கிளிநொச்சி (வயது 57),

16.எஸ்.நிஷா, முல்லைத்தீவு, மாத்தளன் (வயது 10),

17. ஏ.செல்வரூபன், முல்லைத்தீவு, மாத்தளன் (வயது 33),

18. எஸ்.லலிதாதேவி, யாழ்ப்பாணம், வேலணை (வயது 57),

19. ஏ.தெய்வானை, கல்முனை, துறைநீலாவணை (வயது 65),

20. ஜே.அனுஷாதேவி, மாத்தளன் (வயது 29),

21.ஜே.மதுஷன், மாத்தளன் (வயது 7),

22. ஏ.தயாபரி, மன்னார் (வயது 39),

23. வி.சரஸ்வதி, பொக்கணை (வயது 83),

24. திரேஸம்மா, வட்டக்கண்டல், (வயது 57),

25. அந்தனியம்மா, அடம்பன் (வயது 83),

26. வினாசித்தம்பி, பளை, (வயது 68),

27. ஏ.கவாரியல், மன்னார் (வயது 61),

28. வீ.செல்லத்துரை, வவு/புதுமன்காடு, (வயது 71),

29.டி.இராஜேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 31),

30. பி.சலானி, கிளிநொச்சி, (வயது 9),

31. பி.நிருஜா, கிளிநொச்சி, (வயது 2),

32. பி.ஜாலினி, கிளிநொச்சி, (வயது 8),

33. கே.சாவித்திரி, மாத்தளன் (வயது 30),

34.கே.சுபிஜான், மாத்தளன் (வயது8),

35. கே.வனிதா, மாத்தளன், (வயது 5),

36. கே.தனுஷன், மாத்தளன், (வயது 2),

37. எஸ்.முருகமூர்த்தி, சாவகச்சேரி, (வயது 61),

38. எஸ்.ராசன், மாத்தளன், (வயது 28),

39. வி.ராசேந்திரன், புதுக்குடியிருப்பு (வயது 78),

40. எஸ்.நிர்மலாதேவி, நாகர்கோவில் (வயது 30),

1.டி.லொறன்ஸ், மாத்தளன் (வயது 36),

42. ஏ.வசந்தி, யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 31),

43. விஜயரோகினி, முல்லைத்தீவு, சுந்தரபுரம் (வயது 26),

44. ஏ.விதுஷா, யாழ்ப்பாணம், மானிப்பாய், (வயது 4),

45. ஏ.லக்ஷிகா, யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 9),

46. ஏ.விதுஷன், யாழ்ப்பாணம், மானிப்பாய் (9 மாதம்),

47. ரத்தம், யாழ்ப்பாணம், தெல்லிப்பழை (வயது 57),

48. ரி.செல்வராசா, யாழ்ப்பாணம் (வயது 72),

49.ஜே.நவேந்திரன், பரந்தன் (வயது 15),

50. வி.இராஜேஸ்வரி, பரந்தன் (வயது 19),

51. எம்.ஜயந்தன், பரந்தன் (வயது 23),

52. பி.திருஷணா, விஸ்வமடு (வயது 45),

53. எஸ். சிவயோகம், மாத்தளன் (வயது 73),

54. ஆர்.ஜசீமா, மாத்தளன் (வயது8),

55. ஆர்.விதுஷா, மாத்தளன் (வயது2),

56. குணசேகரம், யாழ்ப்பாணம் (வயது28),

57.ரி.தேவிசரோஜா, புதுக்குடியிருப்பு (வயது 63),

58. கே.திருசெல்வராஜா, புதுக்குடியிருப்பு (வயது65),

59. வி.செல்வராஜா, கிளிநொச்சி (வயது 58),

60. எஸ்.கமலம், வட்டக்கச்சி (வயது 70),

61. ஆர்.நிரோஜன், சுந்தரபுரம் (வயது 14),

62.எம்.மதுர்ஷினி, மாங்குளம் (வயது 9),

63. எம்.ஜபசாந்தன், மாங்குளம், (8 மாதம்),

64. எம்.ரவீந்திரா, மாங்குளம், (வயது 19),

65. எம்.ஜபதர்ஷன், மாங்குளம் (வயது 2),

66. ஆர்.பத்மலதா, பொக்கணை (வயது 31),

67. ஆர்.முத்தாச்சி, பொக்கணை (வயது 71),

68. ஆர்.கந்தவனம், கண்டாவளை (வயது 69),

69. ஐ.தெய்வானைப்பிள்ளை, கண்டாவளை (வயது 68),

70. எம்.அழகன், ராமநாதபுரம் (வயது 69),

71. ஆர்.விஜயரத்னம், நாகர்கோவில் (வயது 60),

72. எஸ்.நிரேதிகா, பருத்தித்துறை, நாகர்கோவில் (வயது 2),

73. கே.கிருஷ்ணபிள்ளை, பளை (வயது 62),

74. கே.விவேகானந்தன், பளை (வயது 40),

75. கே.முனியம்மா, சுந்தரபுரம் (வயது 76),

76. ஆர்.லட்சுமி, புதுக்குடியிருப்பு (வயது 67),

77. தங்கரத்தினம் மயில்வாகனம், வவுனியா (வயது 85),

78. ஏ.சந்தனம், ஆண்டாங்குளம் (வயது 69),

79.ரி.சிவமாலை, ஆண்டாங்குளம் (வயது 70),

80.எல்.அமுதா, பூநகரி (வயது 33),

81. எல்.மேரி லவனிதா, பூநகரி (வயது 13),

82. எல்.டனிஸ்வரன், பூநகரி (வயது 9),

83. எல்.ஜோதிகா, பூநகரி (வயது 6).

84. எஸ். விகஸ்டன், (வயது 10),

85. அருந்தவமலர், முள்ளியவளை, (வயது 46),

86. வி. சின்னாச்சி, முள்ளியவளை, (வயது70),

87. கே. பாமினி, பேராறு, கற்சிரமடு, (வயது 28),

88. கே.பானுஷன், பேராறு, கற்சிரமடு, (வயது 04),

89. வை. சிவனு, முல்லைத்தீவு, (வயது 74),

90. ஏ. அனுஷா, பரந்தன், (வயது 25),

91. ஆர். கார்த்திகேசு, விஸ்வமடு, (வயது 67),

92. ஜே. ஜாலினி, பரந்தன், (வயது 06),

93. ஆர். பூங்கோதை, வவுனியா, (வயது 31),

94. ஆர். கீர்த்திகா, வவுனியா, (வயது 01),

95. கீர்த்தனா, வவுனியா, (வயது 05),

96. கே. டிஷாலினி, பரந்தன், (வயது 2.5),

97. ஆர். செல்வநாயகம், ஒட்டுசுட்டான், (வயது 50),

98. கே. கிசோபன், பரந்தன், (வயது 08),

99. கலாமதி, சாவகச்சேரி, (வயது 32), 100. இ. அபிராமி, சாவகச்சேரி, (வயது 04),

101. எஸ். அமிர்தம், மாத்தளன், (வயது 84),

102. எம். இராமநாதன், மாத்தளன், (வயது 71),

103. பி. தெய்வராணி, கிளிநொச்சி, (வயது 78),

104. எஸ். கந்தசாமி, கிளிநொச்சி, கணேசபுரம், (வயது 67),

105. ரி. மீனாட்சி, பொக்கணை, (வயது 66),

106. ஏ. கிருஷ்ணமூர்த்தி, மல்லாவி, (வயது 55),

107. எம். தங்கன், யாழ்ப்பாணம், (வயது 59),

108. எம். சின்னமணி, யாழ்ப்பாணம், (வயது 70),

109. என். அன்னமலர், மல்லாவி, (வயது 65),

110. ஆர். தவராணி, யாழ்ப்பாணம், (வயது 61),

111. எஸ். ராதாகிருஷ்ணன், யாழ்ப்பாணம், (வயது 61),

112. எஸ்.பிரதீபன், உடையார்கட்டு, (வயது 25)

113. எஸ். கந்தையா, பரந்தன், (வயது 70),

114. ஆர். மல்லிகா, ஸ்கந்தபுரம், (வயது 34),

115. வி. சண்முகலிங்கம், பூநகரி, (வயது 69),

116. கே. கிருஷ்ணமூர்த்தி, முள்ளியங்காடு, (வயது 53),

117. எஸ். அங்கம்மா, மாத்தளன், (வயது 76),

118. எஸ். ராசமணி, பூநகரி, (வயது 65),

119. எஸ். ஏ. விமலநாதன், இரணைப்பாளை, (வயது 39),

120. எஸ்.செல்வபாக்கியம், பரந்தன், (வயது 75),

121. எஸ்.ரத்தினம், வவுனிக்குளம், (வயது 57),

122. எஸ். தொம்மாசி, ஆலங்குளம், (வயது 67),

123. வி. கிருஷ்ணபிள்ளை, வற்றாப்பளை, (வயது 70),

124. கே. தங்கம்மா, வற்றாப்பளை, (வயது 69),

125. அடையாளம் தெரியவில்லை.

126. வி. நாகராஜா, யாழ்நகர், (வயது 64),

127. எஸ். சுப்பிரமணியம், வட்டக்கச்சி, (வயது 70),

128. எஸ். ராஜலட்சுமி, பரந்தன், (வயது 63),

129. ரி. றோஷ், கொய்யாத்தோட்டம், (வயது 62),

130. ஆர். ரவீந்திரன், பொக்கணை, (வயது 42),

131. கலையரசி, வட்டக்கச்சி, (வயது 4 மாதம்),

132. நாகேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 23),

133. திருபா, வட்டக்கச்சி, (வயது 02),

134. எம். சிந்துஜன், மாத்தளன், (வயது 23),

135. என். தவக்கொழுந்து, புதுக்குடியிருப்பு, (வயது 62),

136. எஸ். கனகையா, வவுனியா, (வயது 72),

137. ஆர். பிரதீப், பொக்கணை, (வயது 13),

138. எம். மேகடரி, கொய்யாத்தோட்டம், (வயது 64),

139. ஐ. செல்லம்மா, தெல்லிப்பழை, (வயது 63),

140. என். நவமணி, மாத்தளன், (வயது 70),

141. ஆர். சிறிரங்கன், விஸ்வமடு, (வயது 90),

142. ஜே.ஜே.ரோஜர்ஸ், கிளிநொச்சி, கருணைநிலையம், (வயது 79),

143. பி.பி. சிசிலியா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 65),

144. ரி. லஷ்மி, யாழ்ப்பாணம், பளை, (வயது 67),

145. ரி. திலுக்ஷன், புதுக்குடியிருப்பு, (வயது 09),

146. எம்.பத்மாவதி, புதுக்குடியிருப்பு, (வயது 72),

147. ஜே.பிலிப்பையா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 69),

148. இருதயம், அடம்பன், (வயது 80),

149. எஸ். நிருஷா, மாத்தளன், (வயது 08),

150. கே. தமயந்தி, பருத்தித்துறை, (வயது 29),

151. ஆர். ஆர்த்திகா, பருத்தித்துறை, (4 நாள் குழந்தை),

152. ஆர். ஆர்த்தி, (4 நாள் குழந்தை),

153. கே.கே. ஈஸ்வரதேவி, பருத்தித்துறை, (வயது 67),

154. எஸ். வினோதராஜா, முள்ளியவளை, (வயது 23),

155. கே. தங்கராணி, மல்லாவி, (வயது 52),

156. எஸ்.எம். சிவக்குமார், இராமநாதபுரம், (வயது 45),

157. எஸ். விதுர்ஷா, இராமநாதபுரம், (வயது 06),

158. தெய்வானைப்பிள்ளை, அரியாலை, (வயது 62),

159. கே. ராசமணி, உருத்திரபுரம், (வயது 75),

160. ஜே. அருள்மதி, மாத்தளன், (வயது 32),

161. எஸ். ஜெயநந்தன், மாத்தளன், (வயது 32),

162. ஜே. கனிஸ்டா, மாத்தளன், (வயது 10),

163. ஜே. கனிஸ்டன், மாத்தளன், (வயது 12),

164. ஜே. கஜன், மாத்தளன், (வயது 02),

165. எஸ். ஜெயலட்சுமி, மாத்தளன், (வயது 45),

166. எஸ். விக்ஸன், மாத்தளன், (வயது 05),

167. இ. சிவராஜா, முள்ளியவளை, (வயது 67),

168. ரி. அன்னலெட்சுமி, யாழ்ப்பாணம், அளவெட்டி, (வயது 66),

169. ஏ.மேரிமட்டன்டா, மன்னார், மடுக்கோவில், (வயது 60),

170. எஸ். விஜயந்தி, கிளிநொச்சி, (வயது 30),

171. எஸ். பிரவின், கிளிநொச்சி (வயது 02).

172. கே.நாகராஜா, வட்டக்கச்சி, (வயது 93),

173. ஜனனி, மாத்தளன், (வயது 5),

174. எஸ். கமலாவதி, இரணைப்பாளை, (வயது 52),

175. என். அருளம்மா, வவுனியா, நெடுங்கேணி, (வயது 63),

176. செல்வராணி, கிளிநொச்சி, (வயது 29),

177. வி. தாமோதரம்பிள்ளை, முள்ளியவளை, (வயது 71),

178. ஆர். ராகதீஸ்வரி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 32),

179. ஆர். கஸ்மினி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 2.5),

180. ஆர். பிரவீன்குமார், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 5),

181. ரி. சிவபாக்கியம், முள்ளியவளை, (வயது 68),

182. எஸ். வேலாயுதன், மாத்தளன், (வயது 69),

183. யு. யேசுதா, மாத்தளன், (வயது 32),

184. யு.நிலானி, மாத்தளன், (வயது 4),

185. ராமர்கிருஷ்ணபிள்ளை, இராமநாதபுரம், (வயது 60),

186. எஸ்.மயில்வாகனம், புதுக்குடியிருப்பு, (வயது 70),

187. எஸ். விருஷித்தம்மா, மடுக்கோவில், மன்னார், (வயது 84),

188. கே. பரமேஸ்வரி, குமுழமுனை, (வயது 66),

189. எஸ். தம்பு, அக்கராயன்குளம், (வயது 67),

190. எம். நேசம், தெல்லிப்பழை, (வயது 69),

191. எஸ். வீரசிங்கம், பூநகரி, (வயது 72),

192. வி. கந்தையா, புதுக்குடியிருப்பு, (வயது 70),

193. டபிள்யூ. மனோன்மணி, பூநகரி, (வயது 59),

194. ஏ.நாகராஜா, பரந்தன், (வயது 68),

195. கே.செல்லையா, புதுக்குடியிருப்பு, (வயது 70),

196. கே. சோமசுந்தரம், மாங்குளம், (வயது 71),

197. கே.சேதுப்பிள்ளை, புதுக்குடியிருப்பு, (வயது 72),

198. கனகபூரணேஸ்வரி, முள்ளியவளை, (வயது 71),

199. எஸ். கணபதிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 76),

200. வி. சிவசுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு, (வயது 72),

201. ஏ.சீனியன், யாழ்ப்பாணம், பளை, (வயது 78),

202. எஸ். சீனியாபவளம், யாழ்ப்பாணம், பளை, (வயது 73),

203. கே. கலைவாணி, மாத்தளன், (வயது 30),

204. கே.தெய்வானை, மாத்தளன், (வயது 69),

205. வி. கண்னையா, இரணைப்பாளை, (வயது 70),

206. பிரணவன், முள்ளியவளை, (வயது 11),

207. ஆர். நவநீதராணி, முள்ளியவளை, (வயது 42),

208. ஐ.பிரதீஷன் முள்ளியவளை, (வயது 8),

209. சரோஜினி, தம்பளகாமம், (வயது 53),

210. கே. வீரசிங்கம், துணுக்காய், (வயது 70),

211. கே. மகேஸ்வரி, துணுக்காய், (வயது 71),

212. வி. சண்முகராசா, பரந்தன், (வயது 69),

213. எம். தம்பிராஜா, தயாகம, (வயது 80),

214. எஸ். சுதாகரன், மாத்தளன், (வயது 7),

215. எஸ். கௌரி, (வயது 48),

216. அக்ஸயா, (வயது 6),

217. தேவதாஸ்நவரட்ணம், மாத்தளன், (வயது 59),

218. ஏ. சந்திரகுமார், மல்லாவி, (வயது 51),

219. எஸ். சிவராஜா, ஒட்டுசுட்டான், (வயது 53),

220. என். ரத்னசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 76),

221. கே. ஈஸ்வரி, மந்துவில், (வயது 65),

222. கே. கந்தையா, முள்ளியவளை, (வயது 77),

223. கே. மலர், யாழ்நகர், (வயது 68),

224. எப். ஜெயபாலன், வல்வெட்டித்துறை, (வயது 52),

225. ஜே. பிரேமா, வல்வெட்டித்துறை, (வயது 48),

226. எஸ். சுதர்ஸன், ஒட்டுசுட்டான், (வயது 28),

227. எஸ். ஜெயந்தினி, ஒட்டுசுட்டான், (வயது 24),

228. திருப்பாகரை, முல்லத்தீவு, (வயது 20),

229. வி. பரமேஸ்வரி, முத்தையன்கட்டு, (வயது 40),

230. ஏ. சிவபாக்கியம், புதுக்குடியிருப்பு, (வயது 71),

231. ஏ. மீனாட்சி, கிளிநொச்சி, (வயது 70),

232. கே. சிவாஜனம், பூநகரி, (வயது 52),

233. எம். சிவமழகு, மாத்தளன், (வயது 75),

234. என். பாலசிங்கம், பொக்கனை, (வயது 67),

235. ஜே. செல்லக்கண்மணி, யாழ்ப்பாணம், (வயது53),

236. எஸ். கந்தையா, மாத்தளன், (வயது 70),

237. ஜே. கனகம்மா, மாத்தளன், (வயது 69),

238. ஆர். கிருபாகரன், மாத்தளன், (வயது 06),

239. ஆர். லக்சிகா, மாத்தளன், (வயது 08),

240. எம். நாச்சியார், கிளிநொச்சி, (வயது 75),

241. என். சுப்பிரமணியம், பரந்தன், (வயது 65),

242. எஸ். தவசிங்கம், நெடுங்கேணி, (வயது 67),

243. ரி. கங்காதேவி, நெடுங்கேணி, (வயது 57),

244. பி. வெள்ளைச்சாமி, வவுனியா, நெடுங்கேணி, (வயது 64),

245. எஸ். தர்ஷினி, வற்றாப்பளை, (வயது 31),

246. வீரசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 70),

247. என். யோகமலர், வற்றாப்பளை, (வயது 45),

248. எஸ். சியாம் வற்றாப்பளை, (வயது 02),

249. எஸ். ரவீந்திரன், முள்ளியவளை, (வயது 60),

250. வி.சோதிலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 64),

251. வி. அன்னலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 74),

252. எஸ். சின்னம்மா, முருங்கன், மடுக்கரை, (வயது 74),

253. பி. சரோஜா, மடுக்கரை, மன்னார், (வயது 52),

254. என். முனுசாமி, கிளிநொச்சி, (வயது 83),

255. பி.போறோஜனி, கிளிநொச்சி, (வயது 17),

256. பி. ஜமுனாராணி, கிளிநொச்சி, (வயது58),

257. ஆர். செல்லம்மா, ஸ்கந்தபுரம், (வயது 63),

258. எஸ். வள்ளியம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 69),

259. ஏ. கோணேஸ்வரி, ஸ்கந்தபுரம், (வயது 65),

260. ஐ. அருணாசலம், மாத்தளன், (வயது 72),

261. என். திருநாவுக்கரசு, கிளிநொச்சி, (வயது 70),

262. எஸ். சோமசுந்தரம், புதுக்குடியிருப்பு, (வயது 71),

263. எஸ். வி.ராஜேந்திரன், கொக்குவில், (வயது 73),

264. ஆர். ராஜலட்சுமி, கொக்குவில், (வயது 72),

265. எஸ். வெற்றிவேல், முள்ளியவளை, (வயது 55),

விடுதலைப் புலிகளை 45 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

sl-army.jpgஇலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

புதுமாத்தளனில் பட்டினிச்சாவு என்ற செய்தி முல்லை மருத்துவரின் அடிப்படையற்ற கருத்து – சுகாதார அமைச்சின் செயலர் விளக்கம்

logo_health.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.

எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.

எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.

எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.

புதுமாத்தளன் பகுதிக்கு 500 மெ. தொன் உணவு – இன்று தரையிறக்கம்

ship.jpgபுதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

மேலும் 406 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ship.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒன்பதாவது தடைவையாக 406 பேர் நேற்று (06.03.2009) இரவு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 கிறீன் ஓசன் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளவர்களில் நோயாளர்கள் காயமடைந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 2700 பேருக்கு மேற்பட்டோரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுமாத்தளன் பகுதியில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதில் புலிகள் திட்டமிட்ட செயற்பாடு

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளே திட்டமிட்டு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனூடாக பட்டினிச் சாவை மக்கள் எதிர் கொள்வதாகக் கூறி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சிக்கின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

இதுவரை இப்பகுதிக்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியிலும் கப்பல் மூலமாக 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை நாம் அனுப்பிவைத்துள்ளோம். இன்றும் சுமார் 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கடல்மார்க்கமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. திருமலை துறைமுகத்திலிருந்து இது புறப்படும்.

இவ்வாறு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் புலிகளேதான். நாம் அனுப்பும் உணவுப் பொருட்களில் 50 வீதத்தை புலிகளே எடுக்கின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரியும். புலிகளுக்கு எதிராக போர் புரிந்து கொண்டு புலிகளுக்கும் சேர்த்த உணவு அனுப்பும் ஒரே அரசாங்கம் எமது அரசுதான்.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக முன்பு அனுப்பிய உணவுப் பொருட்கள் கூட இப்போதும் போதுமானதாக இருக்கக் கூடியவாறுதான் அனுப்பினோம். உணவு லொறிகள் மேல் தாக்குதல் நடத்தியதாலேயே தரை மார்க்கமாகவும் அனுப்ப இயலாமல் போனது.

மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையோடு சிரமங்களுக்கு மத்தியிலும் கடல்மார்க்கமாக உணவை அனுப்புகிறோம். இந்நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார்களென சர்வதேசத்துக்குக் காட்டி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில்தான் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

உணவின்றி மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்கிறார்கள் என்று கூறும் சில ஊடகங்கள் ஏன் மக்களுக்கு அனுப்பும் உணவை புலிகள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதை கூற முன்வருவதில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.