95 நோயாளர்கள் திருமலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

trico.gif
திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மேலும் 95 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் இவர்கள் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அழைத்துவரப்பட்டவரப்பட்டவர்களிற்கான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேகொண்டு வருகின்றன. இதுவரையில் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 822 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *