::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பிரான்சில் இன்று “அடங்காப்பற்று” மாபெரும் பேரணி

adangappattu-2.jpg37 நாட்களாக பிரான்சின் வரலாற்றுப் பேரெழுச்சியும் உண்ணா நிலைப்போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதேவேளை இன்று அடங்காப்ற்றுப் பேரணி பேரெழுச்சியோடு நடைபெறவுள்ளது. தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள அரசை எதிர்த்தும் அதற்குத் துணைபோகும் நாடுகளை எதிர்த்தும் பிரான்சில் அடங்காப்பற்றுப் பேரணி இன்று பேரெழுச்சியோடு பி.ப.2.30மணிக்கு ஒபேரா எனும் இடத்தில் ஆரம்பமாகவிருக்கிறது. 

35 நாடகளாக உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொள்ளும் இளைஞர்களை நோக்கி நகரவுள்ள இப்பேரணியில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பை விடுத்துள்ளனர்.மேலும் மக்களின் பேரெழுச்சியும் பெரு வரவும்தான் இநதப்போராட்டத்தின் மாபெரும் மாற்றத்திற்க்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக மக்கள் அனைவரும் விரைந்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்க பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். – எஸ்.பத்மநாதன்

pathmanathan.jpgகடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சினைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல் : பொதுமக்களை வெளியேற்றுவதில் பாரிய சிரமம்

waroooo.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் வடகடலோரப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் அண்மையில் புதிய பாதுகாப்பு வலயப் பகுதியை அறிவித்திருந்தது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களைக் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வருவதற்காக நேற்று மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் இருந்து ஆழ் கடலில் நிறுத்தப்படும் ஐசிஆர்சி கப்பலுக்கு நோயாளர்களை படகுகளில் ஏற்றிய இடத்தைச் சூழ்ந்த பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதனால் நோயாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி பாதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு இதுவரை 10,191 பொதுமக்கள் அழைத்து வருகை – இவர்களில் 42 பேர் உயிரிழப்பு

doctor.jpgமுல்லைத் தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட 525 பொதுமக்களில், கள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கிஷோர்குமார் (வயது 30) யாழ்ப்பாண மாவட்டம் வேலணை மேற்கைச் சேர்ந்தவர் என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் (திங்கட்கிழமை) கள நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 16 இலிருந்து மே 9 ஆம் திகதி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை 10,191 ஆகும். 21 தடவைகள் கப்பல் மூலம் இவர்கள் புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்டனர். இக்காலப்பகுதியில் புல்மோட்டையில் வைத்து உயிரிழந்த முல்லைத்தீவு பொதுமக்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிறு புல்மோட்டைக்குக் கூட்டிவரப்பட்ட முல்லைத்தீவு பொதுமக்களில் 174 பேருக்கு கள வைத்தியசாலையில் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. பதவியா ஆஸ்பத்திரிக்கு 403 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு 121 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சர்வதேச ரீதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க அரசு தயார் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

defence_press-2009-05-12.jpgபுலிகளின் பொய்ப் பிரசாரங்கள் காரணமாக சர்வதேச ரீதியில் தோற்றுவிக்கப்படும் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்க அரசு தாயாராக இருக்கிறது என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகளுக்கு தம்மைக் காப்பாற்றிக்கொள்ள உள்ள ஒரே வழி சர்வதேச கவனத்தை ஈர்த்து இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ஐ.நா. வுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். அதற்காகவே புலிகள் சிவிலியன்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு பழியை படையினர் மீது  போடுகின்றனர். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் 1000 சிவிலியன்கள் பலியானதாகவும் 1600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் புலிகள் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்ட பொய்த்தகவலை சர்வதேச முன்னணி ஊடகங்கள் உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்காமல் வெளியிட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அவ்வாறானதொரு தாக்குதலை படையினர் அப்பாவிச் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளவில்லை என்பதை அரசின் சார்பில் மிகவும் உறுதிபடக் கூறுகிறேன்.

டொக்டர் சத்தியமூர்த்தி என்பவரே இந்தத் தகவலை வழயங்கியதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அந்தப் பெயரில் சுகாதார அமைச்சில் எந்தவொரு நபரும் பதியப்படவில்லை. புலிகளைக் காப்பாற்ற சர்வதேச ரீதியில் பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் முக்கிய பங்காளராக எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார்.

அவர் நோர்வேக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமான சுற்றுப் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அதற்கான விளக்கம் இலங்கையிடம் கோரப்பட வேண்டும் என்றும் அதற்கான  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதே அவரது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

கடந்த 48 மணிநேரத்தில் புலிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி சர்வதேச ஊடகங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம். எனினும் சர்வதேச ரீதியில் புலிகளால் தோற்றுவிக்கப்படும் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் தயாரா இருக்கின்றது என்றும் அமைச்சர் மேலும் ;கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்

fily-ap.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு மட்டக்களப்பு சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஏ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துறை நீலாவணை தொடக்கம் வெருகல் வரை வாகன பவனி மூலம் வன்னி மக்களுக்காக பொருட்களை சேகரிக்கும் பணியினை எதிர்வரும் 16 ஆம், 17 ஆம், 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – அமைச்சர் டளஸ்

dalas.jpgஇந்த நாடு ஒரு இனக்குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று (11) மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம். இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பிக்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்கள் இறந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிந்தவூரிலிருந்து உணவுப் பொருட்கள்

islam.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென நிந்தவூர் பிரதேச செயலகமும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இளைஞர்களின் உதவியோடு நிந்தவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மனிதாபிமான முறையில் சேகரிக்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பலதரப்பட்ட உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா தெரிவித்தார்.

இலங்கையில் ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் கவலை

20090424063601srilanka4.jpgஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் வைஸ் பீபீஸி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மெனிக்பாமில் தயார் நிலையில் இரு தீயணைப்பு படை வாகனங்கள்

international-firefighters-day.jpgசெட்டி குளம் மெனிக்பாம் பகுதியில் இரண்டு தீயணைப்புப் படை வாகனங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலேயே தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பகுதியிலிருந்து இரு தீயணைக்கும் படைப் பிரிவும், பாவனைக்குரிய அம்புலன்ஸ் வண்டிகளும் பணியாளர்களும் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.